ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை

None

4.24/5 · 54 ratings

இந்நாவல் கோடைகாலம் உருவாக்கிய காதல் கதை ஒன்றை சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் கண் முன்னே காட்சிப்படுத்துகிறது.

ஒரு சமயம் தனிமை என் வீடாக இருந்தது. இன்று நான் அதன் வீடாகி விட்டேன் என்கிறது கமலாதாஸின் கவிதை வரி. அதுவே இந்நாவலுக்கு பொருத்தமான உதாரணம்.

உலகின் நிரந்தர மகிழ்ச்சியாக இருப்பது காதலே. இந்தத் தேசத்திலும் எந்தச் சூழலிலும் காதல் மனிதர்களை சந்தோஷப்படுத்தவே செய்கிறது. காதலுற்றவர்கள் கனவு …

Reviews

user_15755

★ 5/5
மயில் இறகால் வருடுவதைப் போன்று மனத்திற்கு இதம் அளிக்கும் எளிய எளிமையான நாவல். உட்பொருள், உணர்ச்சிமயம், மனப்போராட்டம், வரலாற்றுப் பின்னனி எதுவும் இன்றி இன்றைய இளைய சமூகத்தின் பெருந்தன்மையான மனதை மிக நுட்பமாக அடிக்கோடிடுகிறது. உலகில் எளிமை என்றுமே அழகுதானே.

user_15754

★ 4/5
It helps me wander myself to past.... If want to the same, just try it.

user_15753

★ 5/5
Silvia❤️

user_15752

★ 4/5
A soothing love story, the childhood memories of the characters takes us back to our memories. Sra never fails

user_15751

★ 5/5
ஆணும் பெண்ணும் இறுதிவரை நண்பர்களாக இருக்க முடியுமா; முடியாதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் புத்தகம். கோடைவிடுமுறையில் உருவான நட்பு கோடையோடு போய்விட வேண்டுமா என்ன... எந்த பெயரில் அழைத்தாலும் உறவு என்பது அன்பு காட்டுதல் தானே... சிறு வயதில் கோடைக்கால நினைவுகளை அசைப்போட வைத்தமைக்கு நன்றி

user_15750

★ 3/5
இதுவரை எஸ்.ரா எழுதிய பலவும் மிக தீவிரமான கதைகளம் கொண்டவை , ஆனால் இதுவோ , மிக சிறிய , எளிய காதல் கதை . கோடைக்கும் , குளிருக்குமான வித்யாசமே நாம் வாழ நினைப்பதும் , வாழ்வதும். பதின் வயதில் தோன்றிய காதல் , வாழ்க்கையின் , பல திருப்பங்களுக்குள் அகப்பட்டு , நாம் வாழ்வது வேறொன்றாகவே இருக்கிறது. முற்றிலும் , புது கதைக்களமோ , இலக்கியமோ இல்லை, எனினும் ஒரு விடுமுறை நாளில் எளிதாக படித்து முடிக்கக்கூடிய ஒன்று .

user_15749

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே மூச்சில் முழுதும் படித்து முடித்த முதல் நூல் இந்த “ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை” இதைப் படிக்கும் பொழுது நான் ரசித்த சில சொற்றொடர்களும் உவமைகளும் இதோ, 1. மறதி - தானாக மலரும் மலரைப�� போன்றது. விரும்பும் பொழுது வராது. 2. மரத்தின் இலை புலியைக் கண்டு அஞ்சுவதில்லை. புயல் காற்றைக் கண்டு தான் அஞ்சுகிறது. 3. நீ பார்க்காத ஒரு விண்மீன் உன் வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே நானிருந்தேன். 4. மழைத்துளி கன்னத்தில் படுவது போல... 5. அவன்: கனவை எப்படித் திருட முடியும் அவள்: முடியும். என் கனவை உன்னால் திருட முடியும். திருட்டுப் பயல் நீ. 6. எதை ஒரு வயசுல செய்ய மாட்டேன்னு சொல்றோமோ அத இன்னொரு வயசு செய்ய வச்சுருதுல்ல 7. சில்வியாவிடம் பிரார்த்தனை செய்யும் என்னைப் போன்றவன் இருக்கும் போது சில்வியா கடவுளிடம் என்ன பிரார்த்தனை செய்வாள். 8. போட்டோ செடி 9. ரோஸ்மில்க் கிணறு 10. ஆலங்கட்டி மழை பெய்தது. தன் மீது கல் எறிந்தது யார் என்பது போல ஏறிட்டுப் பார்த்தது தெரு நாய் 11. எந்த பெயரில் அழைத்தாலும் உறவு என்பது அன்பு காட்டுதல் தானே. இப்படி இன்னும் சில சொற்றொடர் இந்த நூலில் கிடைத்தன... மனதை லேசாக்கிய ஒரு காதல் கதை. நேரங் கெடச்சா படிச்சு பாருங்க நண்பர்களே. நன்றி

user_15748

★ 3/5
கதைக்கு ஏற்ற தலைப்பு மிக எளிமையான காதல் என்னுடைய இந்த புத்தகத்துகான விமர்சனத்தை பார்க்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள் http://tamilvasagasaalai.blogspot.com...

user_15747

★ 4/5
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ் ராமகிருஷ்ணன் (எஸ்.ரா), 2019 எஸ்.ரா அவர்களின் பத்தாவது நாவல். எனக்கு உறுபசி, யாமம், சஞ்சாரம் பிறகு நான்காவது. எஸ்.ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரிடம் பிடித்து கரிசலையும் கோடை வெயிலையும் அவர் கொண்டாடும் அழகு. வெயிலின் நினைவுகள் பிராகாசமாய் இருக்கும். இந்த நாவலிலும் அந்த கோடை வெயில் முக்கிய பங்காற்றுகிறது. கோடையில் உருவாகும் காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது. அழகான பதின்வயது காதல் கதையாக மட்டுமில்லாமல், வானவில் போன்று பல பரிணாமமாய் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு பெயரில்லா அன்பை எளிமையான கதையாடல் வழியாக முற்போக்கான சிந்தனையுடன் கூறியது சிறப்பு. நிறைய இடங்களில் வெகுளியான சிரிப்பு, வெட்கம், மனதின் ஊடே கண்ணாடி கீறல் போன்ற கனத்த உணர்வுகள், ஆனந்தமான அழுகைகள் என்று உணர்ச்சிகளை கிளரும் தருணங்கள் நிரம்பிய ஒரு நாவலாக தோன்றியது. சிறு வயது கோடை சூரியனின் உக்கிரமும், அதை விரும்பி ஏற்று விடுமுறையின் வெக்கையின் வாசமும் நாவல் முழுதும் வீசியபடியே..... பிடித்த வரிகள்: "எல்லாம் இந்த உடம்பு படுத்திற பாடு. உலகத்துக்கு யாரு யாருகூட படுக்கிறாங்கிறதுதான் கவலை." "பகலில் ஹாக்கியோ, கால்பந்தோ, கபடியோ விளையாடும் பையன்கள் வெயிலை அண்ணாந்து கூடப் பார்ப்பதில்லை. பந்தோடு வெயிலையும் சேர்த்து உதைத்தார்கள்." "(சில்வியா) தேங்க்ஸ் என்றால். அந்த நன்றியை சிரிப்பில் தோய்த்து எடுத்துக் கொடுத்தாள்." "ஒரு பெண் நம்மிடம் நமக்கே தெரியாத நற்குணங்களைக் கண்டு கொள்கிறாள். அதை நமக்கும் அடையாளம் காட்டித் தருகிறாள்." 💐

user_15746

★ 3/5
இந்த புத்தகத்தின் தலைப்பே போதுமானது இந்த புத்தகத்தை பற்றி சொல்ல. அத்தியாயங்கள் non-linearயாக நகர்வது ஒருவிதமான சுவாரஸ்யத்தை தரும். சில அத்தியாயங்கள் நம் மனதை ஆழமாக வருடிச் செல்லும்.

user_15745

★ 5/5
A heart-warming read! Just like your favorite chocolate melting in your mouth. Thank you💖

user_15744

★ 5/5
அன்பு செலுத்துவதற்கு அடையாளங்கள் எதற்கு. - எஸ். ரா.😊

user_15743

★ 5/5
நாவல் போன்று ஒரு கவிதை. கவிதை போன்றொரு நாவல். காதலில் கவிதை இல்லாமல் எவ்வாறு பக்கங்கள் பயணிக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு, மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது இந்த புத்தகம். சில்வியாவும் சுப்பியும் கடக்கும் ஒவ்வொரு கோடையும் மனதை பாரமாக்கி வெளி செல்கின்றன. எஸ்.ரா அவர்களின் மொழி நடையும் சரி, பதின் வயதின் மாற்றங்களில் சிக்கி தவிக்கும் சுப்பியும் சரி, வயதில் குறைவாக இருப்பினும் இந்த உலகத்தை எளிமையாக, விசித்திரமாக, யதார்த்தமாக நோக்கும் சில்வியாவாக இருந்தாலும் சரி, மனதில் மெல்ல ஒரு சாரல் பட்டும் படாமலும் கடந்து செல்கிறது. எல்லோர் வாழ்விலும் சஞ்சரித்து, மெல்ல எப்போதும் நகர்ந்து சென்ற கோடை காலத்தின் மறு வாசிப்பே இந்த ஒரு சிறிய விடுமுறைக் கால காதல்கதை. இதற்கு மேல் விளக்கங்கள் சொன்னால் முழு கதையையும் இங்கே சொல்ல வேண்டி வரும். சில மணி துளிகள் மட்டுமே கதையில் பேசும் நான்சி பற்றி நீங்கள் படிக்கும் பொழுதினில் உவகை கொள்வீர்கள். பொதுவா சொல்லனும்னா எல்லாரும் ஒரு முறை படிச்சே ஆகணும். நன்றி எஸ்.ரா அவர்களே.

user_15742

★ 5/5
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் நாவல்களில் இடக்கை, யாமம் இரண்டையும் வாசித்திருக்கிறேன். இரண்டுமே இந்திய வரலாற்றின் சில நிகழ்வுகளை மையமாக கொண்டு எழுதப்பட்ட தீவிர கதைக்களங்களைக் கொண்டவை. எப்போதும் காதலைப் பற்றி, பெண்களின் அகவுலகம் பற்றி மேன்மையான கருத்துக்களை கொண்டது எஸ்.ரா. வின் எழுத்துக்கள். அத்தகைய எழுத்தாளர் காதலை மையமாகக் கொண்டு படைத்திருக்கும் ஒரு நாவல் இது‌. கோடைக்காலத்தில் இருவரிடையே உருவாகும் காதலை, காதலின் உன்மத்தத்தை தம்மையும் உணரச் செய்து விடுகிறது. சில தருணங்களில் கவிதைப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்து விடுகிறது. எந்த அடையாளங்கள் இல்லாமலும் மனிதர்கள் பரஸ்பரம் அன்பு காட்ட முடியும், சில உறவுகள் நம் வாழ்நாள் முழுவதற்குமானது என்பது போன்ற நல்உணர்வுகளை வாசிப்பவர்களிடம் விதைக்கிறது இந்நாவல். தனது எழுத்துலகம் ரஷ்ய இலக்கியங்களிடமிருந்து உத்வேகம் பெற்று உருப்பெற தொடங்கியதாக தனது பல்வேறு உரைகளிலும், கட்டுரைகளிலும் எஸ்.ரா. கூறியிருக்கிறார். அந்த வகையில் தஸ்தயேவ்ஸ்கி, துர்கனேவ் போன்ற ரஷ்ய இலக்கியவாதிகளுக்கு தமிழ் எழுத்தாளன் ஒருவன் செலுத்தியிருக்கும் அஞ்சலியாகவும் இந்த நாவலை எடுத்துக் கொள்ளலாம். வாசித்து முடிக்கையில் கோடைக்காலத்தில் கருவான உங்கள் முதல் காதல் நினைவுக்கு வரக்கூடும். ஒரு மழை நாளின், ஜன்னலோர பேருந்து பயணத்தை அழகாக்குவதற்கு அந்த நினைவுகள் மட்டும் போதும் தானே.

user_15741

★ 5/5
எஸ். ரா. வின் எழுத்து, கரிசல் நிலத்தோட தன்மையும், பதின் பருவ காதல் அரும்புறதையும், கோடைவிடுமுறையும், புழுத்தில விளையாண்டதையும், இன்னும் பலவற்றையும் பற்றி படிக்க படிக்க அப்படியே என்னை இந்த நாவல் கட்டிப்போட்டுருச்சு, அவ்வளவு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. பருவகால நினைவுகள் வந்து போனது. நிறைய தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. 'சில்வியா' இந்த பெயர நான் மறக்கமாட்டேன்.
Shelves
book S. Ramakrishnan

More like this


இடக்கை [Idakkkai ]

With new possibilities in storytelling. The Final Solitude exposes the injustice that prevailed during Emperor Aurangazeb's rule in a fictional sm…

4.24/5 · 54 ratings

எலியின் பாஸ்வேர்டு

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை. பாஸ்வேர்ட் கொடு…

4.24/5 · 54 ratings

நீரிலும் நடக்கலாம்

நீரிலும் நடக்கலாம் என்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பில் பதினைந்து கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆண் மழை கற்பனைச் சேவல்

4.24/5 · 54 ratings

நெடுங்குருதி [Nedum Kuruthi]

வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக் கனவை கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலை கொள்ள முட…

4.24/5 · 54 ratings

அவளது வீடு

தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்

4.24/5 · 54 ratings

100 சிறந்த சிறுகதைகள்

ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்ப…

4.24/5 · 54 ratings

மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India]

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…

4.24/5 · 54 ratings

கோடுகள் இல்லாத வரைபடம்

திசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வண…

4.24/5 · 54 ratings

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் [Pather Panjali nidharsantthin pathivugal]

ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்த பதிவுகள் அமைந்திருக்கின்றன. பதேர் பாஞ்சாலி படம் வ…

4.24/5 · 54 ratings

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் [Thanimaiyin veetirku Nooru Jannalgal]

எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் நுண்ணோவியங்களை போன்றவை, நுட்பமான சித்தரிப்பே அதன் ஆதாரம், இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளையும் அதை மீறி உன்னதங்களை தொட முயலும் மனிதர்களின் எ…

4.24/5 · 54 ratings

எனது இந்தியா [Enadhu India]

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

4.24/5 · 54 ratings

நிமித்தம்

நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து…

4.24/5 · 54 ratings