Reviews for ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை
14 reviews total
user_15755
★ 5/5 Feb 02, 2026மயில் இறகால் வருடுவதைப் போன்று மனத்திற்கு இதம் அளிக்கும் எளிய எளிமையான நாவல். உட்பொருள், உணர்ச்சிமயம், மனப்போராட்டம், வரலாற்றுப் பின்னணி எதுவும் இன்றி இன்றைய இளைய சமூகத்தின் பெருந்தன்மையான மனதை மிக நுட்பமாக அடிக்கோடிடுகிறது. உலகில் எளிமை என்றுமே அழகுதானே.
user_15754
★ 4/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் நம்மை நம் கடந்தகால நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிறது. அதே கோடைக்கால மயக்கத்தை அனுபவிக்க விரும்புவோர்க்கு இது ஒரு நல்ல தேர்வு.
user_15753
★ 5/5 Feb 02, 2026சில்வியா - அழகான கதையின் அழகான கதாநாயகி. அவளைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்: 'அன்பு செலுத்துவதற்கு அடையாளங்கள் எதற்கும்?' என்று சொல்லும் ஒரு மனிதர். 💐
user_15752
★ 4/5 Feb 02, 2026மனத்தை இதமாக்கும் காதல் கதை. கதாபாத்திரங்களின் சிறு வயது நினைவுகள் நம்மையும் நம் சொந்த நினைவுகளுக்கு அழைத்துச் செல்கின்றன. எஸ்.ரா. அவர்களின் எழுத்து ஒருபோதும் தோற்பதே இல்லை.
user_15751
★ 5/5 Feb 02, 2026ஆணும் பெண்ணும் இறுதிவரை நண்பர்களாக இருக்க முடியுமா; முடியாதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் புத்தகம். கோடைவிடுமுறையில் உருவான நட்பு கோடையோடு போய்விட வேண்டுமா என்ன... 'எந்தப் பெயரில் அழைத்தாலும் உறவு என்பது அன்பு காட்டுதல் தானே...' சிறு வயதில் கோடைக்கால நினைவுகளை அசைப்போட வைத்தமைக்கு நன்றி.
user_15750
★ 3/5 Feb 02, 2026இதுவரை எஸ்.ரா. எழுதிய பலவும் மிகத் தீவிரமான கதைக்களம் கொண்டவை, ஆனால் இதுவோ மிகச் சிறிய, எளிய காதல் கதை. கோடைக்கும் குளிருக்குமான வித்தியாசமே நாம் வாழ நினைப்பதும் வாழ்வதும். பதின்வயதில் தோன்றிய காதல், வாழ்க்கையின் பல திருப்பங்களுக்குள் அகப்பட்டு நாம் வாழ்வது வேறொன்றாகவே இருக்கிறது. முற்றிலும் புது கதைக்களமோ இலக்கியமோ இல்லை, எனினும் ஒரு விடுமுறை நாளில் எளிதாகப் படித்து முடிக்கக்கூடிய ஒன்று.
user_15749
Feb 02, 2026இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே மூச்சில் முழுதும் படித்து முடித்த முதல் நூல் இந்த 'ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை'. இதைப் படிக்கும் போது நான் ரசித்த சில சொற்றொடர்களும் உவமைகளும் இதோ: 'மறதி - தானாக மலரும் மலரைப் போன்றது. விரும்பும் போதும் வராது.' 'மரத்தின் இலை புலியைக் கண்டு அஞ்சுவதில்லை. புயல் காற்றைக் கண்டே அஞ்சுகிறது.' 'நீ பார்க்காத ஒரு விண்மீன் உன் வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே நானிருந்தேன்.' 'மழைத்துளி கன்னத்தில் படுவது போல...' 'எதை ஒரு வயசுல செய்ய மாட்டேன்னு சொல்றோமோ அதை இன்னொரு வயசு செய்ய வச்சுருதுல்ல.' 'சில்வியாவிடம் பிரார்த்தனை செய்யும் என்னைப் போன்றவன் இருக்கும் போது சில்வியா கடவுளிடம் என்ன பிரார்த்தனை செய்வாள்.' 'ஆலங்கட்டி மழை பெய்தது. தன் மீது கல் எறிந்தது யார் என்பது போல ஏறிட்டுப் பார்த்தது தெரு நாய்.' 'எந்தப் பெயரில் அழைத்தாலும் உறவு என்பது அன்பு காட்டுதல் தானே.' மனதை லேசாக்கிய ஒரு காதல் கதை. நேரம் கிடைத்தால் படிச்சு பாருங்க நண்பர்களே. நன்றி.
user_15747
★ 4/5 Feb 02, 2026எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா.) அவர்களின் பத்தாவது நாவல். 'இடக்கை', 'யாமம்', 'சஞ்சாரம்' பிறகு இது நான்காவது. எஸ்.ரா. அவரிடம் கரிசலையும் கோடை வெயிலையும் அவர் கொண்டாடும் அழகு. வெயிலின் நினைவுகள் பிரகாசமாய் இருக்கும். இந்த நாவலிலும் அந்தக் கோடை வெயில் முக்கியப் பங்காற்றுகிறது. கோடையில் உருவாகும் காதலின் இளநீலத் தினங்களை முன்னே காட்சிப்படுத்துகிறது. அழகான பதின்வயது காதல் கதையாக மட்டுமில்லாமல், வானவில் போன்று பல பரிணாமமாய் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு பெயரில்லா அன்பை எளிமையான கதையாடல் வழியாக முற்போக்கான சிந்தனையுடன் கூறியது சிறப்பு.
user_15746
★ 3/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தின் தலைப்பே புத்தகத்தைப் பற்றி போதுமானதைச் சொல்கிறது. அத்தியாயங்கள் நேர்கோட்டில் அல்லாமல் வெவ்வேறு திசைகளில் நகர்வது ஒரு விதமான சுவாரஸ்யத்தைத் தருகிறது. சில அத்தியாயங்கள் மனதை ஆழமாக வருடிச் செல்கின்றன.
user_15745
★ 5/5 Feb 02, 2026மனத்தைக் கம்பீரமாகக் கூட்டும் ஒரு வாசிப்பு! தேவையான சாக்லேட்டைப் போல் உருகி மகிழ்ச்சி அளிக்கிறது இந்தக் கதை. நன்றி 💖