சேத்துமான் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சேத்துமான் கதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.28/5 · 18 ratings

தென் தமிழகத்தில் புழங்கும் சாதியின் தீவிரம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு எல்லா விதங்களிலும் உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு அதில் பெரும் பங்கு உண்டு. கொங்கு மண்டலத்தின் யதார்த்தம் திரைப்படங்களில் வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நிலவும் சாதியின் கோரத்தன்மையை அதன் யதார்த்தத்துடன் பெருமாள் முருகனின் கதைகள் வழியாகவே நான் அதிகம் புரிந்துகொண்டேன்.‘வறுகறி', 'மாப்பு குடுக்கோ…

Reviews

user_15698

★ 5/5
புத்தகம் முடிச்ச பிறகு வரும் அந்த மூச்சு அடங்காத மௌனம்,“என்ன தான் மனிதர்கள்?”னு கேக்க வைக்கும்.-உணவு அரசியல்,ஆதிக்கம்

user_15697

★ 5/5
பேராசிரியர் பெருமாள் முருகனின் "வறுகறி" மற்றும் "மாப்பு குடுகோணுஞ் சாமீ" என்னும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு "சேத்துமான் கதைகள்" இவ்விரு சிறுகதைகளும் உணவரசியல், கொங்குப் பகுதி வாழ்வியல், அந்த வாழ்வியலில் ஒட்டிகிடக்கும் சாதியப் படிநிலைகளைப் பற்றி நமக்கு காட்டுகின்றது.வறுகறி - தொம்பர் சமூகத்தினர் மற்றும் ஆதிக்கச்சாதியனர் இடையில் இருக்கும் உறவு பற்றி பன்றிக்கறி மூலம் சொல்கிறார்.மாப்புக் கொடடுகோணுஞ் சாமீ - அருந்ததியினர் சமூகத்தினர் பற்றியும் மாட்டுக்கறி பற்றியும் அதை அவர்கள் உண்பதாலேயே அம்மக்களுக்கு ஏற்பட்ட கொடூரம் பற்றியுமே இக்கதை.மிகுந்த வலி மற்றும் கோபம் ஏற்படுத்திய கதை. இவ்விரண்டு கதைகளையும் பெரும்பாலும் வறுகறியை தழுவியே "சேத்துமான்" என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.மேலும் பேராசிரியர் பெருமாள் முருகன் மற்றும் இயக்குனர் தமிழ் இவ்விரு கதைகள் பற்றியும், திரைப்படம் உருவானது பற்றியும் பகிர்ந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது.

user_15696

★ 5/5
பேராசிரியர் பெருமாள் முருகன் படைப்புகளில் முக்கியமானது மாதொருபாகன். தரமான தமிழ் படைப்புகள் என்ற வகையில் அந்நாவல் எனக்கு அறிமுகம் என்றாலும் இதுவரை வாசிக்காமல் எனது புத்தக அலமாரியில் உறங்க வைத்துள்ளேன். ஆனால் எனக்கு அவர் அறிமுகமானதும், நான் படித்த முதல் படைப்பும் அவரின் "சாதியும் நானும்" எனும் கட்டுரை தொகுப்பே. தற்பொழுது அவரின் மற்றுமொரு படைப்பை படித்துள்ளேன். அதுவே "சேத்துமான் கதைகள்". இதில் இரண்டு சிறுகதைகள் அடக்கம். 1. வறுகறி : பன்றிக்கறியையும், தொம்பர் சாதியினரையும் மையமாக கொண்ட சிறுகதை. 2. மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ : மாட்டுக்கறியையும், அருந்ததியரையும் மையமாக கொண்ட சிறுகதை இவ்விரு கதைகளும் உணவு அரசியலையும், சாதி ஏற்ற தாழ்வையும், கொங்கு பகுதி வாழ்வியலையும், புலால் உணவு பழக்கத்தால் நடக்கும் வன்முறையையும் களமாக கொண்டது. சாதிக்கும் - உணவு பழக்கத்துக்கும் உள்ள பிரச்னையை பேசுகிறது இந்த சிறுகதைகள்.

user_15695

★ 4/5
சேத்துமான் கதைகள் ❤️ • சாதிகளுக்கிடையிலான உணவு அரசியலை மையமாகக் கொண்டு பெருமாள் முருகனால் எழுதப்பட்ட இரு சிறுகதைகளின் தொகுப்பே இந்த சேத்துமான் கதைகள். முதல் சிறுகதை ‘வறுகறி’, சேத்து மான் ஆகிய பன்றியையும் அதன் கறியையும் கருவாகக் கொண்டும், மற்றைய சிறுகதை ‘மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ’, மாட்டுக்கறியை கருவாகக் கொண்டும் எழுதப்பட்டுள்ளது. வழமை போல பெருமாள் முருகனின் எழுத்து சமநிலைத் தவறலையும், சமூக கட்டமைப்புக்களையும், வலிகளையும் பதிவு செய்து செல்கிறது. • இதே இரு கதைகளை வைத்து பெருமாள் முருகனின் வசனத்திலும், தமிழ் என்பவரின் இயக்கத்திலும், பா. இரஞ்சித்தின் தயாரிப்பில் திரைப்படம் ஒன்றும் “சேத்துமான்” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. அதன் பின்னரே இப்புத்தகம் பா. இரஞ்சித்தின் அணிந்துரையுடனும் இயக்குனர் தமிழின் முன்னுரையையும் இணைத்து தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. • “இரு கதைகளிலும் இருக்கும் புலால் உணவுதான் இக்கதைகளைப் பொருட்படுத்தத் தக்கவையாக ஆக்கியிருக்கின்றன. வாழ்வியல் சூழல் காரணமாக உணவுப் பழக்கம் அமைகிறது. உணவில் என்ன ஏற்றத்தாழ்வு இருக்கிறது? குறிப்பிட்ட ஒருவர் உண்பதால் அவ்வுணவு உயர்வானதாகவோ தாழ்வானதாகவோ கருதப்படுவதை எப்படிப் புரிந்துகொள்வது?” - பெருமாள் முருகன்
Shelves
book Perumal Murugan

More like this


சாதியும் நானும் [ Saadhiyum Naanum]

சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…

4.28/5 · 18 ratings

கெட்ட வார்த்தை பேசுவோம்

சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதை…

4.28/5 · 18 ratings

A Lonely Harvest

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

4.28/5 · 18 ratings

Current Show

Ill-paid and always tired, Sathi, a young soda-seller, finds relief from the tedium of the everyday in marijuana and his friends—-vulnerable, desp…

4.28/5 · 18 ratings

Estuary

N/A

4.28/5 · 18 ratings

Black Coffee in a Coconut Shell: Caste as Lived Experience

Caste, as it is experienced in everyday life, is the pièce de résistance of this book. Thirty-two voices narrate how from childhood to adulthood, …

4.28/5 · 18 ratings

Aalavayan

Perumal Murugan has created the novels 'Arthanari' and 'Alavayan' from two different angles following 'Mathorubagan'. These are not successive par…

4.28/5 · 18 ratings
4.8/5 - Amazon.com

Students Etched In Memory

Students Etched in Memory is a remarkable collection of forty essays by Perumal Murugan, translated with sensitivity and grace by V. Iswarya. Whil…

4.28/5 · 18 ratings

The Goat Thief

Perumal Murugan is one of the best Indian writers today. He trains his unsentimental eye on men and women who live in the margins of our society. …

4.28/5 · 18 ratings

Seasons of the Palm

Translated from the Tamil, Seasons of the Palm tells the story of an "untouchable" lad in bondage to a paternal yet powerful landlord. He struggle…

4.28/5 · 18 ratings

பீக்கதைகள்

No description added

4.28/5 · 18 ratings

PerumalMurugan Sirukathaigal (1988-2015)

மார்ச் - ஏப்ரல், 1988 ‘கணையாழி’யில் வெளியான ‘நிகழ்வு’ என்னும் மிகச்சிறு கதையே ஓர் இதழில் வெளியான எனது முதல் சிறுகதை. அப்போது முதல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்திர…

4.28/5 · 18 ratings