புறப்பாடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புறப்பாடு

Purapaadu

Author: Jeyamohan
4.47/5 · 100+ ratings

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது.

அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச்சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன…

Reviews

user_15615

Travelog

user_15614

★ 1/5
முதல் 50 பக்கங்கள் அட நல்லா போகுது அப்படினு நினைச்சுகிட்டு இருக்கும் போதே ஜெ மோ சுய தம்பட்டம் நாயர் பெருமைன்னு துக்கி கிட்டு வறாரு.. எனக்கு புடிக்கல

user_15613

★ 5/5
A writers early life is not as usual. Jeyamohan proves it in his own words

user_15612

★ 4/5
Read it in Jeyamohan's blog. Would like to purchase the book and read it again. This autobiographical book about his struggle during his early twenties is fascinating...

user_15611

★ 5/5
One deepest and the best bookI have ever read. Just wow❤️

user_15610

★ 3/5
புறப்படுவதற்கு காரணம் அவசியமா ? ஆம் இல்லை இரண்டையுமே சொல்லலாம்! அப்பா திட்டிவிட்டார் என்று வீட்டை விட்டு சென்ற ஜெமோ, நன்பனின் தற்கொலை ஒரு வியாஜம், இது இரண்டாவது புறப்பாடு ! புறப்படுவத��� ஒரு காரியம் என்றால், அதற்கு ஒரு காரணம் அவசியம். உண்மையில் அந்த காரணம் ஒரு கல்பனையே. ஏன் என்றால் புறப்பட வேண்டுமென்பவனுக்கு பபுறப்பாடு என்பதே காரணம் மற்றும் காரியம்!

user_15609

★ 4/5
இப்படியே சென்றால் deaddiction centre கு தான் நான் செல்ல வேண்டும். ஜெமோ விடமிருந்து மீள…. சில இடங்களில் சோதிப்பு தான். இறுதி பக்கங்களில் அந்த சக ரயில் பயணியிடம் தன் அனுபவங்களை கூறும் இடங்களைப் போல. ஆனால் என்ன ஒரு படைப்பு? ஒரு வாழ்க்கையா இது? பல கோடி ஜென்மங்கள் அல்லவா? ராதாகிருஷ்ணன் என்பவனின் குணங்களும் அவனின் மரணமும் அவனை ஜெமோ மரணத்தருவாயில் மடியில் ஏந்தி செய்யும் அந்த பயணம். அப்படியே அடித்து உட்காரவைத்துவிடும். அங்கு அவன் எடுக்கும் ஓட்டம் நம்மையும் சூறாவளியாய் சுருட்டி எடுத்தபடி எங்கெல்லாம் நீள்கிறது சாக்கடைகள், மலம் திப்பி திப்பியாய் ஊரும் அந்த மும்பை வீடு, சென்னை சேரியின் கொசுக்கடி, காசி - அந்த ரத்தம் ஊரும் பலிபீடங்கள், ரயில் பயணத்தின் புளி சாதமும் எம் ஜி ஆர் பாடல்களும் - எதற்காக அந்த பயணங்கள்? விடை இல்லை. ஆனால் தேடினால் அது தரும் தரிசனங்கள் ஆச்சர்யம்!!! என்ன எல்லாம் செய்து ஒரு ஜெமோ ஆக முடிந்திருக்கிறது? காமக் கதைகள் எழுதுவது முதற்கொண்டு. எத்தனை மனிதர்கள் சேர்ந்து ஒரு ஜெமோ வை உருவாக்கி இருக்கிறார்கள் - அருளப்பனான அந்த அமானுஷ்ய மனிதன், கடைசி அத்தியாயத்தில் வரும் அவரின் பாட்டியும், தந்தையும், சித்தப்பாவும், ஒழுக்கமற்ற அந்த பிரின்டிங் பிரஸ் பெண்ணும் பின்பு அவளுடன் சந்தோஷமாக வாழும் அவளின் கணவன் முதற்கொண்டு. வெண்மை கொண்டு பிரகாசிக்க வேண்டுமெனில் அடித்து துவைக்கப்படவேண்டியது மனிதனும் தானே!!!

user_15608

★ 5/5
Purappadu chronicles the two occasions when as a young man writer Jeyamohan left his home to lead a life away. It is structured like a short story, each chapter reads organically espousing varied themes like the love of the poor people he encounters, the incredible affection shown by his friends etc.

user_15607

★ 3/5
ஜெயமோகனின் கிட்டத்தட்ட சுயசரிதையான் நிகழ்வுகள் தொகுக்கப்பட்ட புத்தகம். இரண்டு முறை அவர் வீட்டை விட்டு ஓடிச்சென்ற அனுபவங்களை எழுதுகிறார். முதல் முறை அவர் நாகர்கோவிலை தாண்டவில்லை. அங்கே ஒரு மாணவர் விடுதியில் அவரது அனுபவங்களும், மறுமுறை இந்தியாவை சுற்றிய அவரது அனுபவங்களும் இருக்கின்றது. ஜெமோவின் எழுத்து வன்மையில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. சாதாரண நிகழ்வையும் மிகுந்த சுவாரசியத்துடன், ஆழ்ந்த சிந்தனைகளுடன் எழுதுவதில் அவருக்கு நிகர் எவருமில்லை. அவரது எழுத்துக்களில் இருந்து இந்த நிகழ்வுகள் 1970கலில் நிகழ்வதாக புரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த காலகட்டத்தின் வாழ்வு எங்கும் இல்லை. மாறாக நாம் காலத்தை கடந்த ஜெமோவின் வாழ்வு மட்டுமே இருக்கிறது. அபூர்வமாக சில இடங்களில் அவரது நண்பர்களின் வாழ்வை பதிகிறார். ஆனால் அவ்வளவு துயரமும், துன்பமும் சூழ்ந்திருக்கும் நிலையிலும் அவரால் அது குறித்து எதுவும் எழுத முடியவில்லை என்பது விநோதமாகவே இருக்கிறது. தன்னுடைய சிரமங்களை, பெருமைகளை எழுதும் அளவிற்கு அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை அவதானிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அவர் சென்னை வரும் காலம் வரை தன்னுடைய நாயர் சாதி குறித்தும், மலையாள தோற்றம் குறித்தும் தொடர்ந்து எழுதுகிறார். (சென்னை வரும் வரை ஒரு பொருட்டாக இருந்த அவரது சாதி, சென்னையில் ஏன் எவராலும் கவனிக்கப்படவில்லை என்று அவர் யோசித்தாரா என்று தெரியவில்லை) அவருடன் இருந்த மனிதர்களின் கதையும் அவரது ‘தன்’ பார்வையிலேயே விரிகிறது. இது ஓரளவிற்கு சரி என்றாலும், தன்னை சுற்றிய வாழ்வை, தன்னுடன் ஒரே அறையில் இருந்தவர்களின் துயரங்களைக் கூட அவர் பதியவில்லை . பயணமாக பார்க்காமல் ஜெமோவின் வாழ்வின் நிகழ்வுகளாக பார்த்தாலும் முழுவதுமாக இல்லாமல் பல துண்டுகளாகவே நிகழ்வுகள் கொடுக்கப்படுகிறது. நினைவின் சுருட்டில் அப்படியாகவே இருக்கிறது என்று அதற்கு காரணம் கொடுக்கப்படுகிறது. ஜெமோவின் சுயதம்பட்டம் சற்று குறைவாகவே இருந்தாலும், புத்தகத்திற்குள் முழுவதுமாக நுழையவிடாமல் அதுவே தடுக்கிறது. இந்தக் குறைகளை தாண்டி ஒரு முறையாவது வாசிக்க வேண்டிய புத்தகம்.

user_15606

★ 5/5
கடைசி அத்தியாயத்தில் கண்ணீர் வந்துவிட்டது.

user_15605

★ 4/5
தனித்துவமான அனுபவங்களை தன்னகத்தே கொண்ட படைப்பாளிகளின் படைப்புகளும் தனித்துவம் பெற்றவையாகவே இருக்கும் சிலருக்கு வாழ்க்கையே அப்படிப்பட்ட அனுபவங்களை வழங்குகிறது சிலர் தாங்களே தேடி பெறுகின்றனர். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன் கல்லூரி காலத்தில் வீட்டை விட்டு வெளியேறியபின் ஒரு விடுதியில் தங்கி படிக்கிறார், ஊரை விட்டு வடமாநிலத்தில் சிறிதுநாள் கூலி வேலை செய்கிறார், பின் காசி சென்று தமிழ்நாட்டை சேர்ந்த பெண் சாமியார் வீட்டில் தங்குகிறார் பின் சென்னை வந்து அச்சகத்தில் வேலை பார்க்கிறார் நன்கு வியாபாரம் ஆகும் மருத்துவ குறிப்புகள், வர்மக்கலை, ஆபாச கதை புத்தங்களை எழுதுகிறார் அவற்றை பற்றி முழுதாக எதுவும் தெரியாமலேயே பணத்திற்காக அதை செய்கிறார், பின்னர் எதுவும் வேண்டாம் என்று ஒரு சாமியாருடன் வடலூர் செல்கிறார் . ஆனால் இத்தனை இடங்களிலும் அவரால் ஒன்றிவிட முடியவில்லை தனது இடம் உயர்ந்தது தனக்கான இடம் இதுவல்ல பெறும் அனுபவமெல்லாம் பிற்காலத்தில் தான் எழுதும் நாவல்களுக்கு பயன்படும் போன்ற எண்ணங்கள் எப்போதும் இருக்க எந்த இடத்திலும் பிடிப்பின்றி ஓடி மீண்டும் ஊருக்கே செல்வது போல் முடிகிறது புத்தகம். ஜெயமோகன் இதுபோன்று பலநாட்கள் அலைந்து திரிந்திருக்கிறார் என்றும் திருவண்ணாமலையில் சாமியாராகவும் இருந்திருக்கிறார் அப்போது இவருடன் உடன் இருந்த சக துறவி விசிறி சாமியார் என்று அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் அவை ஏதும் இந்த புத்தகத்தில் இடம்பெறவில்லை. பெரும்பாலானோர் புத்தகத்தின் விலையை அதன் பக்கங்களின் அளவு வடிவமைப்பு போன்றவற்றை கொண்டே அளக்கின்றனர் சிறந்த எழுத்தாளர்கள் தங்களின் விலைமதிப்பற்ற அனுபவங்களையும் அறிவையையுமே புத்தகமாக தருகின்றனர் நிஜத்தில் அது வாசகனுக்கு அவர்கள் தரும் எதனுடனும் ஒப்பிட முடியா பெரும்பரிசாகும்.

user_15604

★ 5/5
Must read
Shelves
book Jeyamohan

More like this


வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

Author: Jeyamohan

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.47/5 · 100+ ratings

தன்மீட்சி

Author: Jeyamohan

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.47/5 · 100+ ratings

தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]

Author: Jeyamohan

இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை…

4.47/5 · 100+ ratings

பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

Author: Jeyamohan

ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவ…

4.47/5 · 100+ ratings

ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.47/5 · 100+ ratings

ஊமைச்செந்நாய்

Author: Jeyamohan

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகி…

4.47/5 · 100+ ratings

பனி மனிதன்

Author: Jeyamohan

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.47/5 · 100+ ratings

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

Author: Jeyamohan

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.47/5 · 100+ ratings

விசும்பு

Author: Jeyamohan

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.47/5 · 100+ ratings

உடையாள் [Udaiyal]

Author: Jeyamohan

இது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல்கொள்கைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக நிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்…

4.47/5 · 100+ ratings

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

Author: Jeyamohan

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.47/5 · 100+ ratings