காந்தளூர் வசந்தகுமாரன் கதை
Kanthalur Vasanthakumaran Kathai
Select a cover image
Searching for images...
Saving cover image...
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
Kanthalur Vasanthakumaran Kathai
- பக்கங்கள்
- 216
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Uyirmmai Pathippakam
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788189912727
- ASIN
- 8189912720
ராஜராஜ சோழன் பெருவுடையார் கோவில் கட்டும் காலகட்டம். சபலமும் குறும்புத்தனமும் கொண்ட இளைஞன் வசந்தகுமாரன், அவனது புத்திசாலியான ஆசான் கணேச பட்டருடன் தஞ்சை நகரத்தில் வலம் வருகிறான். பட்டமகிஷியின் புதல்வி அபிமதியைப் பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறான் வசந்தன் — ஆனால் அரசியல் நிர்ப்பந்தங்களால் அபிமதியை சாளுக்கிய விமலாதித்தனுக்குத் திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. சேர ஒற்றன் என்ற முத்தி…
user_14980
★ 3/5சுஜாதாவின் தரத்திற்கு ஏற்ற நாவல் அல்ல.
user_14979
★ 3/5ஐந்தாறு கதாபாத்திரங்கள்தான், அவற்றைச் சுற்றியே கதை நகர்கிறது. அதிலும் கணேஷ் பட்டரும் வசந்தகுமாரனும் கணேஷ்-வசந்த் சாயலில் இருப்பதாக ஆசிரியரே புத்தகத்தின் பின் அட்டையில் பதிவிட்டிருக்கிறார்.
சுஜாதா அவர்களின் தனித்துவமான வசனங்களைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
user_14978
★ 3/5ரத்தம் ஒரே நிறத்திற்குப் பிறகு சுஜாதாவின் இரண்டாவது வரலாற்றுப் பின்னணி நாவல். தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமானது. தனக்குப் பிடித்த கணேஷ்-வசந்த் இரட்டையரை கணேச பட்டர் மற்றும் வசந்தகுமாரன் என்ற பெயரில் சோழர் கால கதையில் கொண்டு வந்துள்ளார்.
தஞ்சை கோவில் கட்டும் காலத்தில் சோழ மக்களிடையே எழுந்த கசப்பான அலையைப் பற்றிய தகவல்களும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
user_14977
★ 4/5முதலிலேயே சொல்லிவிடுகிறேன் — எப்போதும் நமக்குப் பிடித்தவர்கள் செய்யும் காரியங்களில் குறை கண்டுபிடிக்க இயலாது. சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும், எனவே இது ஒரு ஒருதலைப்பட்சமான விமர்சனம் என்றே வைத்துக்கொள்வோம்.
வாலிபன் வசந்தகுமாரன், ஆசான் கணேச பட்டர் — இவ்விரு பெயர்களும் சுஜாதாவின் கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்களை நினைவூட்டுகின்றன. ஆங்காங்கே சுஜாதாவின் புரியாத வசனங்கள் எட்டிப் பார்க்கின்றன.
குக்கன், சுவான தோன்றல்களே, ஞமலி போன்ற வார்த்தைகள் அடிக்கடி தோன்றுகின்றன. தேடிப் பார்த்ததில் அனைத்திற்கும் ஒரே அர்த்தம் — நாய்!
user_14976
★ 3/5காந்தளூர் செல்லாத வசந்தகுமாரன்... கதையின் தலைப்புக்கும் முடிவுக்கும் இடையிலான முரண் இதுதான்.
Shelves
More like this
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
ராஜமுத்திரை
வரலாற்றுப் புனைவு இலக்கியத்தின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், பாண்டியப் பேரரசின் பின்னணியில் அமைந்த ஒரு விறுவிறுப்பான சாகசப் பயணமாகும். கொற்கை கோட்டை மற்றும் அதனைச் சுற்…
யவன ராணி - இரண்டாம் பாகம்
சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும்…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
என் இனிய இயந்திரா
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
பிரிவோம் சந்திப்போம்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…
மீண்டும் ஜீனோ
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
நில்லுங்கள் ராஜாவே
தன் அடையாளத்தையே சமூகம் கேள்விக்குள்ளாக்கினால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களே கூட த…
கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]
Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling f…
ரத்தம் ஒரே நிறம்
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் 1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் புதினம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பக்கங்களில் உறைந்து க…