குருபீடம் [Gurupeedam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குருபீடம் [Gurupeedam]

None

4.37/5 · 68 ratings

நானும் எனது கதைகளும் வாசகர்களுக்கு அறிமுகமானதே பத்திரிகைகளின் மூலம் தான். கிட்டத்தட்ட பதினைந்து வருஷ காலமாக இந்தப் பத்திரிகைகளுடன் எனக்கு நட்பு உண்டு. தமிழ் நாட்டிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் இலக்கிய உத்தாரணம் செய்கின்றனவாஇல்லையா என்பது வேறு விஷயம். அவர்கள் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று வாதிட எனக்கு அதிகாரம் இல்லை. என் கதைகளை அவர்கள் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கிறார்கள். அவர்கள் பிரசுரிப்பதால் ந…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_14884

★ 5/5
🍂 யார் எந்த நிலையில் இருந்தாலும் கற்பவன் சிஷ்யன் கற்றுக் கொடுப்பவன் குரு என்பதை மறக்கக்கூடாது. 🍂 சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா - விவசாயத்தை மறக்கக்கூடாது 🍂 பெண்ணின் நிலை சமுதாயத்தில் எவ்வாறு உள்ளது - தேவை என வந்துவிட்டால் சாதி பொருளாதார நிலை போன்றவற்றை பார்ப்பதில்லை. 🍂 வாழ்க்கை கணிக்க இயலாத ஒன்று எப்பொழுது என்ன வேண்டும் என்றாலும் நிகழும். 🍂 எப்பொழுதும் உறுதியுடன் போராட வேண்டும். முயற்சி திருவினையாக்கும். 🍂 தவறு செய்பவருக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். 🍂 உறவுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை பொறுமையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். போன்ற கருத்துக்களை குருபீடத்தின் 9 சிறுகதைகள் தொகுப்புகளாக திரு ஜெயகாந்தன் அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்

user_14883

★ 5/5
seriously the last story hit me lot 😔

user_14882

★ 5/5
Jeyakantha - oru maha kalaingan, avarin sindhaiyil irundhu silla mani thuligal. Thanks to Kurinji Malar - Podcast in Spotify. i was able to experience these four different stories. each one of them is so unique, i am short of words to explain the experience i underwent listening to these stories. each one of the stories has different dimension to explore, with my limited knowledge/vocabulary i have given simple tagline to these stories. check the link below Short Stories --------------------------------------------------------------------- Ippa Nan yenna Seiyattum (what should i do? ) - Clash of the Titans, Idealist vs Realist Thavarugal Kuttrangal alla (Mistakes are not sins) - People who ask for forgiveness also sometimes in the position of forgiving someone. Yuga Sandhi (circle of life) - Customs or tradition that evolve based on the human needs and emotions. Nikki (The pet dog Nikki) - The forgotten lot in the society podcast link -------------------------------------

user_14881

★ 5/5
“குருபீடம்”- ஜெயகாந்தன் 9 சிறுகதைகளை கொண்ட சிறுகதை தொகுப்பு.,1971ல் முதற்பதிப்பு கண்டது. சிறுகதைகள் என்றாலும் பல உள்ளார்ந்த அர்த்தங்கள் பொதிந்த பெரும்பொதி கதைகள். கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று கதைமாந்தர்களை கொண்ட அல்லது அதுவும் இல்லாத கதைகள். 'அவன்', 'அவள்', 'அவர்' என்ற சொற்களை வைத்தே கதைகளுக்குள் ஜாலங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கதை தலைப்புகளும் அவற்றை பற்றிய சிறு துணுக்கும்: 1. "குருபீடம்"(1970)- பிச்சைக்காரனுக்கு தன்னை குருவாகவும் தான் இருக்கும் சத்திர திண்ணையை குருபீடமாகவும் உணர்த்திய கதை. 2. "டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும்"(1969) - கிளார்க் வேலையை விட்டு உழவுக்கு மாறிய பெரியவர் வேதகரி முதலியாரின் கதை. 3. "நிக்கி"(1970) - தெரு நாய்க்கு பிறந்த குட்டிகளில் பெட்டையை நாயை தவிர, அதனுடன் பிறந்த ஆண் நாய்களுக்கு எஜமானர் கிடைத்துவிடுகின்றனர். அந்த பெட்டை நாயின் வாழ்வியலை சொல்லும் கதை.(இக்கதை பழைய கருப்பு வெள்ளை படமொன்றில் அவரை பகுதியாக எடுத்தாளப்பட்டுள்ளது) 4. "ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது" (1969) - முரட்டு திருடன் ஒருவன் சிறைவாசத்திற்கு பிறகு, மீண்டும், தன்னை மாட்டிவிட்டவர்களின் காலனியிலியே வந்து குடியேறுகிறான். அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கின்றனர் எனச் சொல்லும் கதை.(அஞ்சலி & வியட்னாம் காலனி படங்களில் இப்படியான சூழல் ஒரு பகுதியாக வரும்) 5. "தவறுகள், குற்றங்கள் அல்ல" (1969)- நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் ஐம்பதை கடந்த நிர்வாக இயக்குனர் நாகராஜன், தனது பெண் செயலாளரிடம் சபலப்பட்டு சறுக்கி, பிறகு பின்வாங்கி தவறை உணர்ந்த கதை. செயலாளரும், "Its a slip, not a fall" என முடிக்கிறார். 6*. "அந்த உயிலின் மரணம்"(1969) - வேணுகோபாலன் தான் இறந்தபின் இன்னாருக்கு தான் எழுதிய உயில் சேரவேண்டும் என தனது மனைவி பெயர் வைத்து உரையிலிடுகிறார்.அதை உயில் என்பதை விட, கிட்டத்தட்ட தனது மனசாட்சியை படம்பிடித்து எழுதப்பட்ட உயில் என்கிறார். யார் கையில் சேர்க்கவேண்டும் என எழுதியிருந்தாரோ, அவரெல்லாம் மரித்துப் போக(தனது சிநேகிதி உட்பட), இனி அந்த உயில் இருந்து என்ன பயன் என்று, அதையும் மரணிக்க செய்கின்ற கதை. 7. "விதியும் விபத்தும்" (1969)- மாங்கொட்டைகளுள் ஒன்று புழுவுக்கு இடம் கொடாமல் விருட்சமானதும், மற்றொன்று புழுவினால் மரணித்ததும்.,என விதிக்கும் விபத்துக்கும் உண்டான வித்தியாசத்தை கதைமாந்தர்கள் இல்லாது சொல்லப்பட்ட கதை. 8. "புது செருப்பு கடிக்கும்" (1971)- புது கணவன்-மனைவிக்குள் நடக்கும் பிரச்னையை பற்றி, அந்த கணவன், தனது முன்னாள் சிநேகதியுடன் ஆலோசிக்கும் கதை. 9*. எங்கோ யாரோ யாருக்காகவோ..." (1970) - மத்திம வயது நண்பர்கள், சென்னை கடற்கரை ஓரம் இளம்சிவப்பு சேலை பெண் ஒருத்தியை கண்டு, தங்களது காரில் புறநகர் பகுதிக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களுக்குள் நடக்கும் போதை உரையடல்கள்தான் கதை. (இக்கதைமாந்தர்களுக்கு பெயரே இல்லை. பெரும்கதை அல்லது குறுநாவல்) திரு ஜெயகாந்தனின் ஒவ்வொரு படைப்பை வாசிக்கும்போது தலைக்குள் சுற்றும் கேள்வி, "எப்படி எதிர்காலத்திற்கும் சேர்த்தே கதைகளை செய்யமுடியும்? அப்படியானால் கதை எழுதப்பட்ட காலத்தில்(50 ஆண்டுகளுக்கு முன்) எப்படி அக்கதைகளை அந்த காலத்து சமூகம் எடுத்துக்கொண்டிருக்கும்?" ஒரு வெற்றி பெற்ற எழுத்தாளன் என்பவன், மக்களுக்கு எக்காலத்திலும் பொருந்தும் விதமான படைப்புக்களை படைப்பதின் மூலம்தான் என நம்புகிறோம். 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைகள் தற்போதைய சூழலுக்கும் பொருந்தி போகிறதென்றால், அந்த எழுத்தாளரின் எதிர்காலத்தை நோக்கிய பொதுப் பார்வையின் வீச்சு எப்படி இருந்திருக்கிறது! அதனால்தான் திரு ஜெயகாந்தன் இப்போதும் கொண்டாடப்படுகிறார். ஜெயகாந்தனின் அத்தனை கதைமாந்தர்களும் அவ்வளவு முதிர்ச்சி பெற்றவர்கள். அவரை வாசிக்க வாசிக்க நிச்சயம் அவரின் கதை மாந்தர்களாகிவிடுவோம். புத்தகத்திலிருந்து... \ (முன்னுரை).... புனை பெயரிலும், பெண்டாட்டியின் பெயரில் ஒளிந்து கொண்டும், மேலதிகாரிகள் உத்தரவு பெற்ற தயவிலும் இந்த பத்திரிகைகளுக்கு எழுதுவது ஒரு இலக்கியப் பணி என்று கருதமாட்டேன் எழுதுவதற்கு பணம் வாங்குவது அப்போது அதர்மமாகக்கூட எனக்குப்படும். / \ 'உனக்கு சிஷ்யனாக வந்திருக்கிறானே, அவன் தான் உண்மையிலே குரு... சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கிறான்...அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கிறான் எந்த பீடத்தில் இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடிமீது உட்கார்ந்து கொண்டு முருகன் அவனுக்கு கற்றுத் தரவில்லையா? இங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு...' / \ ஆனாலும் உலகம் ஓடுகிற வேகத்தில் அதன் கையைப் பிடித்துக் கொள்ளத் தவறி, அனாதையாய் நின்றுவிட்ட மாதிரிதான் இந்த கிராமம் இன்னமும் இருக்கிறது. / \ அவர்களுக்கு என்ன தெரியும்? மன்னிக்கப்பட்டவர்களே மன்னிக்கிறார்கள் என்பது. / \ தான் உண்டு, தன் வேலையும் சம்பாத்தியமும் உண்டு என்று சுதந்திரமாக திரிகிற வாழ்க்கையின் சந்தோஷத்தை, அல்லது வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தவனை, அப்படியே வாழ்ந்து விடுவது எனத் தீர்மானித்திருந்தவனை, இந்த கல்யாணம், பெண்டாட்டி, குடும்பம் என்றெல்லாம் இதில் ஏதேதோ பெரிய சுகம் இருப்பதாகவும், மனுஷ வாழ்க்கையின் அர்த்தமே அதில் அடங்கி இருப்பதாகவும் கற்பித்துக் கொள்கிற பைத்தியக்காரத்தனத்தில், சிக்க வைத்த அந்த சைத்தானின் தூண்டுதலை, எண்ணிப்பார்த்த பெருமூச்சுடன் வீட்டுக்குள்ளும் போகாமல், வெளியேயும் போகாமல் வாசற்படியில் அமர்ந்து ஒரு சிகரட்டை பற்ற வைத்துக் கொண்டு இருளும் நட்சத்திரமும் கவிந்த வானத்தைப் பார்த்தான். / \ ஒரு பெண்ணினால் ரசிக்கப்படுவது ரொம்ப சுகம்தான். அதுவும் ஒரு ஆண், பெண்ணை ரசிக்கிற மாதிரி ஒரு பெண் என்னை ரசிப்பது எனக்கு எப்போதுமே சுகமாகத்தான் இருக்கிறது. / \ காரிலிருந்து ஜமுக்காளத்தை நான் எடுத்துக் கொண்டேன். காரின் கண்ணாடிகளை உயர்த்திக் கதவுகளை அடைத்து காரைப் பூட்டிக்கொண்டு அவர்களின் பின்னால் தொடர்ந்தேன். வயலின் வரப்புகளில் நண்பர் முன்னாலும், அவருக்கு பின்னே அவளும், கடைசியில் நானுமாக - போகிற காட்சியை நானே சற்று தள்ளி நின்று பார்த்து மிகவும் விஷமமாய், ராமன் சீதை லட்சுமணன் மூவரும் கானகத்தில் நடக்கிற காட்சியை கற்பனை செய்து சிரித்துக் கொண்டேன். என்னுடைய குறும்புத்தனத்துக்காக நானே என்னைக் காதைமுறுக்கித் தலையில் ஒரு குட்டு வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது. /

user_14880

★ 3/5
நல்ல கதை தொகுப்பு.. அதிலும் "எங்கோ,யாரோ, யாருக்காகவோ" இந்த கதை மிக அருமை...

user_14879

★ 5/5
Collection of few best short stories by jeyakanthan.
Shelves
book ஜெயகாந்தன் Jayakanthan

More like this


பாரீஸுக்குப் போ

பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது. சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர க…

4.37/5 · 68 ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

4.37/5 · 68 ratings
Check Price

கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதா…

4.37/5 · 68 ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.37/5 · 68 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2

ஜெயகாந்தன் இந்திய இலக்கியசூழலில் உருவான முற்போக்கு அலையின் படைப்பாளிகளில் ஒருவர். தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] , பிமல் மித்ரா[பங்காளி] , யஷ்பால் [இந்தி] , முல்க்ராஜ் …

4.37/5 · 68 ratings
Check Price

ரிஷி மூலம் [Rishi Moolam]

The eeriness of Jayakanthan's two novellas in this volume is overwhelming and disturbing. The protagonists are helpless victims of psychological m…

4.37/5 · 68 ratings
Check Price

ஜெய ஜெய சங்கரா [Jaya Jaya Shankara]

“பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பௌராணிகர்கள், சூதரும் மற்றப் பௌராணிகர்களும் எப்படிப் பிரசாரம் செய்தார்களோ அவ்விதமே செய்யவேண்டியது இன்றையப் பத்திரிகையாளர்க…

4.37/5 · 68 ratings
Check Price

இன்னும் ஒரு பெண்ணின் கதை [Innum Oru Pennin Kathai)

தண்ணீரையும் குடிக்கிறோம். பாலையும் குடிக்கிறோம். எதையும் குடி என்று அழைப்பதில்லை. மதுவை மட்டும் குடி என்கிறோம் ஏன்? அது ஒன்றுதான் நம் உயிரை குடிக்கிறது. என்பதுபோல் மாதவ…

4.37/5 · 68 ratings
Check Price