Reviews for அவமானம்
26 reviews total
user_14256
★ 5/5 Feb 02, 2026நான் முழுதும் கண்ணாடியால் ஆன ஒரு வீடாகவும், மண்ட்டோவின் கதைகள் இந்தச் சமூகம் என்னை நோக்கி எறியும் கற்களாகவும் உணர்ந்தேன்.
திற என்ற கதை என் மனதை நொறுக்கியது என்றே சொல்ல வேண்டும். அவமானம், சாஹத் ஆகிய கதைகளும் மிகவும் நேர்மையானவை.
user_14255
★ 5/5 Feb 02, 2026மண்ட்டோவின் படைப்புகளை படித்துவிட்டு எளிதாகக் கடந்து செல்ல முடியுமானால் கேள்விக்குறிதான்! அவரே கூறியது போல: என்னுடைய கதைகள் அசிங்கமானதாகவும் கேவலமானதாகவும் இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் வாழும் இந்த சமூகம்தான் அப்படிப்பட்டது.
மண்ட்டோவின் கதைகள் சமூக அவலங்களைப் பேசும். ஆனால் அவர் அப்பழுக்கற்ற மனிதராகவே வாழ்ந்து மறைந்தார். மண்ட்டோ - மகத்தான கலைஞன்.
user_14254
★ 4/5 Feb 02, 2026மண்ட்டோவின் உருது சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இப்புத்தகம். பெரும்பாலான கதைகள் பிரிவினையைச் சுற்றியே அமைந்துள்ளன. எழுத்தாளர் கதைகளை முரட்டுத்தனமாக முன்வைக்கும் விதம் செரிமானிக்க கடினமாக இருந்தாலும், இது உண்மையாக நடந்திருக்கக்கூடும் என்று உணரும்போது வருத்தமாக இருக்கிறது.
சிறுகதைகள் உணர்ச்சிகள் நிறைந்தவை - சிலவற்றை ஏற்றுக்கொள்ள பெரிய மனம் வேண்டும். எழுத்தாளர் சொல்ல வரும் உணர்வுகளைப் புரிந்துகொள்வது சற்று கடினம் - ஆனால் அதுவே இந்தச் சிறிய தொகுப்பின் சிறப்பு.
புத்தகத்தின் முதல் பாதி மிகச் சிறப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதி அந்த அளவுக்கு இல்லை.
user_14253
Feb 02, 2026மண்ட்டோவின் வரிகளில் கதை தொடங்குகிறது: என்னுடைய கதைகள் அசிங்கமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் வாழும் சமூகம் அசிங்கமாக இருக்கிறது என்று பொருள்.
உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகளின் தமிழ் தொகுப்பு இது. காலித், அவமானம், திற, சஹாய், ஜவ்வுமிட்டாய், அதிசய மனிதன், சில்லிட்டுப் போன சதைப்பிண்டம், முன்னெச்சரிக்கை ஏற்பாடு, மோசமான வியாபாரம் என்ற தலைப்புகளில் சிறுகதைகள் அமைந்துள்ளன.
முஸ்லிம் மற்றும் இந்துக்கள் இடையே நடந்த லாகூர் மதக்கலவரங்கள், விலைமாதர்கள் என்ற களத்தில் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன. மோசமான வியாபாரி என்ற 15 வரிக் கதை மதவெறிக்கு ஒரு அளவு இல்லையா என்று தோன்ற வைத்தது. திற என்ற சிறுகதை கண்களில் நீர் கோர்க்க வைத்தது.
மண்ட்டோவை மீண்டும் மீண்டும் வாசிப்பது நம்மை நாமே வாசிப்பதாகும்.
user_14252
★ 4/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தை இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் பார்த்துத்தான் முதலில் தெரிந்துகொண்டேன். எல்லோரும் மிகவும் பாதிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
முதலில் மண்ட்டோ யார் என்பதும் அவர் பாணியும் தெரியவில்லை. முதல் கதை புரியவில்லை. ஆனால் மூன்றாம் கதையிலிருந்து அவர் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்பதை உணரத் தொடங்கினேன்.
ஐந்து வரிகளில் எழுதப்பட்டாலும் ஐந்நூறு வரிகளின் தாக்கம் உண்டு. சில கதைகள் நெற்றியில் அடித்த மாதிரி காயப்படுத்தும். இக்கதைகள் சாதாரணமாகப் புரிய சொல்லப்பட்டவை அல்ல - நாம் மனிதர்களாக உணரும் நிலைகளை நெருக்கமாகத் தொடும் வகையில் எழுதப்பட்டவை. மண்ட்டோவின் கதைகள் மனதில் காலம் முழுவதும் நிலைக்கும் என்று நம்புகிறேன்.
பாதிப்பை ஏற்படுத்திய கதைகள்: திற, விட்டுக்கொடுத்தல், சஹாய்.
user_14249
★ 4/5 Feb 02, 2026இந்தியாவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் சாதத் ஹசன் மண்ட்டோ. அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இப்புத்தகம். அநீதி, பாவம், புனிதத்தன்மை மீறல் என்று சமூகம் சொல்வதை செய்பவர்களையே கதை மாந்தர்களாகக் கொண்டு பிரிவினைவாதத்தையும் வன்முறையையும் தனக்குரிய பாணியில் எழுதியிருப்பது சிறப்பு.
திற, அவமானம், சில்லிட்டுப் போன சதைப்பிண்டம் போன்ற கதைகளில் உலகத்தால் வஞ்சிக்கப்பட்டு கொடுமைக்கு உள்ளாகும் கதாபாத்திரங்கள் நம்மை கேள்வி கேட்க வைப்பது மிகவும் சிறப்பு.
user_14248
★ 5/5 Feb 02, 2026சாதத் ஹசன் மண்ட்டோவின் புத்தகங்களை வாசிப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். பெரும்பாலான கதைகள் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த உண்மை நிகழ்வுகளைப் பேசுகின்றன. இந்த வகையான எழுத்துக்காக எழுத்தாளரை சமூகம் வெட்கப்பட வேண்டியதில்லை - இது நம் சமூகம் எப்படி இயங்கியது என்பதன் துல்லியமான பிரதிபலிப்பே.
அமெரிக்க அரசியல் விளையாட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் விதமும் அருமை. மிகவும் நையாண்டியான எழுத்து. நடந்ததை நம்ப முடியாவிட்டாலும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. தைரியமான, துணிச்சலான எழுத்தாளர்.
user_14247
Feb 02, 2026உருது மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளரான மண்ட்டோவின் சிறுகதைத் தொகுப்பு இப்புத்தகம். பெரும்பாலான எழுத்துகள் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் அதைத் தொடர்ந்த மதக்கலவரங்களும் பின்னணியாகக் கொண்டவை. சமுதாயம் நாகரீகம் என்ற செயற்கை எல்லைகளை வரைந்தபோது மண்ட்டோ அதைத் தூக்கி எறிந்தார்.
திற என்ற சிறுகதை குறிப்பிடத்தக்கது - கலவரத்தின் மையத்தில் பெற்ற மகளைத் தொலைத்து மன்றாடும் தந்தையின் பரிதவிப்பை தத்ரூபமாக எழுதியிருப்பார். கதையின் முடிவு எல்லையற்ற துயரத்தை தந்தது.
அவமானம் கதையில் சமூகம் ஒரு பெண்ணை சக மனிதியாகப் பாராமல் செய்யும் தொழிலை வைத்து முத்திரையிட்டு ஒதுக்குவதை சொல்கிறார். அர்த்தமுள்ள காதலை ஏங்கி தவிக்கும் அவளுக்கு மிஞ்சுவது அவமானம் மட்டுமே.
மண்ட்டோவின் எழுத்து படிப்பதற்கு எளிதல்ல. புரிதலும் ஏற்றுக்கொள்வதும் வாசிப்பவரின் முனைப்பை அவசியமாக்குகிறது.
user_14245
★ 5/5 Feb 02, 2026கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்! மண்ட்டோவின் எழுத்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
user_14244
★ 3/5 Feb 02, 2026நாம் அவமானம் அடைந்துவிட்டால் அதை எப்படியாவது எதன் மீதாவது காட்டி விடத் துடிக்கும் மனித இயல்பின் கதை.