பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
Prabhakaranin Postmortem
Select a cover image
Searching for images...
Saving cover image...
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
Prabhakaranin Postmortem
- பக்கங்கள்
- 312
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- Uyirmmai Pathippakam
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 1
- ASIN
- B08CSV2WT7
Psycho analysis -ஐ களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் தமிழ் நாவல். மருத்துவப் பட்டதாரி மாணவன் ஒருவனின் தற்கொலை என்ற புள்ளியில் இயங்கும் கதை, தற்கொலைக்கான காரணத்தை அறியும் அலைக்கழிப்பில், கடந்து வரும் மனித மனங்களுடைய அலைவுகளின் அத்தனை பரிமாணங்களையும் அதன் அவலங்களையும் சில்லுசில்லாக பகுப்பாய்வு செய்கிறது. அத்தனையும் கூறுப்போடப்பட்டப்பின் மிச்சமிருக்கும் உண்மையின் கசப்பு எந்தவொரு சமரசமுமின்றி அப்பட்டம…
user_14226
★ 5/5அற்புதமான உளவியல் புனைகதை. ஆசிரியர் அனைத்து பாத்திரங்களின் மனதிற்குள்ளும் ஆழமாகப் புகுந்து, அவர்களின் நோக்கங்களையும், உள்ளார்ந்த செயல்பாடுகளையும், வெளிப்புறச் செயல்களுக்கான சூழ்நிலைகளையும் விளக்குகிறார் - பிரபாகரனின் வாழ்க்கையைச் சுற்றி நிகழும் உருவகமான போஸ்ட்மார்ட்டம் இது. திகைப்பூட்டும் படைப்பு!
user_14225
★ 4/5நான், தன், சுயம் எனும் மிகச் சிறிய வார்த்தைகள் மிக மிகப் புதிரானது, புரிதலுக்கு அப்பாற்பட்டது, அனைத்தையும் விஞ்சி நிற்பது. தன்னிலிருந்து எழுதல் ஆன்மீகம், தன்னைக் கைவிடுதல் லௌகீகம். இரண்டுமே சமூகத்தில் மிகப் பெரிய அதிர்வுகளை உண்டாக்குகின்றன.
அதனால் தான் தற்கொலை என்கிற செயல் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எனப் பாகுபாடின்றி அனைவரையும் புரட்டிப் போடுகிறது. அது இறந்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அல்ல மாறாக இருப்பவர்களை, நமது இருப்பைப் பற்றிப் புரிந்துகொள்வதற்காக.
உச்சி முனை வரை ஒருவனைக் கொண்டு சென்ற, அழுத்திச் சென்ற விசைகள், நகர்வுகள் என்னென்ன எனக் கூறு போடுகிறது இந்த நாவல். நாவலில் வரும் மருத்துவர் மயில்சாமி போன்றவர்கள் பொதுவாக எல்லாத் துறைகளிலும் இருப்பவர்கள். அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு உழைத்து வந்திருந்தாலும் தாங்கள் அடைந்த அவமானங்களை, கஷ்டங்களை அடுத்தவர்கள் மீதும் பிரயோகிப்பார்கள்.
இந்தக் கதையில் வரும் சதாசிவம் தொடங்கி அன்வர் வரை அவர்களின் நடவடிக்கைகளுக்கும் செயல்களுக்கும் தனிமனிதர்கள் என்கிற சலுகையை அளித்து விட முடியாது. அவர்களின் மனசாட்சியை இந்தச் சமூகம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும்.
ஒருவரின் பால்யகாலம் என்பது இந்த உலகத்தில் அவர்கள் வாழும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் காலகட்டம். அந்தப் பால்யகாலத்திற்கான பொறுப்பாளி பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான். அஸ்திவாரம் பலமாக இல்லாத கட்டிடங்கள் சாதாரணக் காற்றுக்கே சரிந்து தான் போகும்.
ஒருவரின் விமர்சனங்கள் அந்த ஒன்றை மட்டுமல்ல அதை விமர்சிப்பவரையும் யார் என்று சுட்டுகிறது. இந்த நாவல் ஒரு பார்வை மாற்றத்தை அல்லது நாம் உணர்ந்த ஒன்றின் மீது ஒரு அழுத்தத்தை நிச்சயமாக ஏற்படுத்துகிறது.
user_14224
★ 5/5சமீப காலங்களில் படித்த மிகச்சிறந்த நாவல். அநேகமாக மருத்துவ மேற்படிப்பு மாணவர்களை, அவர்களின் அல்லல்களை களமாகக் கொண்ட தமிழின் முதல் நாவலாக இது இருக்கலாம். ஒரு மருத்துவ மாணவனின் தற்கொலையில் தொடங்கும் நாவல், அவனின் நண்பனின் பார்வையில், தற்கொலைக்கான காரணத்தை தேடும் பெரும்பிரயத்தனமாக விரிகிறது.
மனிதர்களின் உளவியலை பகுத்துப்போட்டு அதன்வழி உண்மையை கண்டறிய கதைசொல்லி முயல்கிறான். அதனூடாக நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும் உளவியல் தத்துவங்களும், மனிதர்களின் ஆழ்மன வஞ்சங்களும், இச்சைகளும், அந்தத் தற்கொலைக்கு பலகோணங்களை தருகின்றன. இறுதியில் வரும் சாவு என்ற அத்தியாயம் கனம் மிக்கது. நாவலின் உச்சமென அதை சொல்வேன். சமகாலத்தின் தவறவே விடக்கூடாத நாவல்.
user_14223
★ 5/5சமீபகாலத்தில் நான் படித்த சிறந்த தமிழ் எழுத்துகளில் இதுவும் ஒன்று. புத்துணர்ச்சி தரும் படைப்பு. ஒரு மரணத்தின் பின்விளைவுகளில் நிகழும் உளவியல் பகுப்பாய்வை மையமாகக் கொண்ட இந்த ஆழமான நாவல், மனித ஆசைகளின் பன்முகத்தன்மையையும் பாத்திரங்களின் இயல்பையும் அற்புதமாகப் படம்பிடிக்கிறது. கதையாடலில் கூர்மையான நகைச்சுவையும் புத்திசாலித்தனமும் மிளிர்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் எனக்குப் பிடித்த வரிகளை அடிக்கோடிட வேண்டியிருந்தது - அத்தனை அழகான, தரமான எழுத்து.
user_14222
★ 5/5நூலின் பெயர் மற்றும் மொழி வளம் குறித்த விமர்சனங்கள் என்னை வாசிக்கத் தூண்டின. உளவியல் பகுப்பாய்வு எனும் குறிப்பு புதிதாய் இருந்த போதும், பிரபாகரனின் சாவிற்கு யார் காரணம் என்ற கண்ணோட்டத்திலேயே வாசிக்கத் துவங்கினேன். சில பக்கங்களிலேயே அக்கண்ணோட்டம் தவறு என்றுணர்ந்து இவ்வொரு வார்த்தையையும் உள்வாங்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே அவ்வளவு ஆத்மார்த்தமான, கலப்படம் இல்லாத தூய தமிழ்! மற்றும் இக்காலத்தில் அரிதாகிப் போன வளமான மொழி நடை! இந்நூலின் ஒவ்வொரு வரியையும் அடிக்கோடிட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஓர் எதிர்மறையான விஷயத்தை மையமாகக் கொண்டு வாழ்க்கையின் பெரும் புரிதலை உணர்த்தி விட்டார் ஆசிரியர். ஒரு மரணம் அல்லது தற்கொலை சுற்றி உள்ளவர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது, என்னவெல்லாம் செய்யத் தூண்டுகிறது என்பதைக் கண்முன் நிறுத்துகிறார். ஒரு மனிதனை முழுமனதுடன் பாராட்டக்கூட முடியாத, அவன் சாதனையில் குறை கண்டு அதில் தன் தாழ்வு மனப்பான்மையை சரி செய்து, இறந்தவன் தானே என்று அவன் மேல் அவதூறாக குற்றங்களை சுமத்தும் குரூரங்கள் அனைத்தும் எதார்த்தங்களே என்பதை ஓர் ஈன மனிதப்பிறவியாய் உணர்கிறேன்.
மருத்துவத் துறையில் இருக்கும் அரசியல் மற்ற துறைகளைக் காட்டிலும் அதிக விஷத் தன்மையோடு இருக்கிறது போல. ஆசிரியர் முன்னுரையில் சரியாகக் கூறியது போல நாம் வேலை செய்யும் துறைகள் யாவும் வசிக்கத் தகுதியற்ற, வேட்டையாடப்படும் இடங்களாகவே மாறிவிட்டன. நம் இருப்பையே சோதிக்கும் அளவிற்கு நச்சுத்தன்மையோடு இருக்கின்றன.
குட்ட குட்ட சகித்துக் கொண்டு குனியச் சொல்கிற உலகம் என்றும் குட்ட வேண்டாம் என்று சொல்வதில்லை. இந்த உலகம் பலவீனர்களுக்கானது அல்ல - இதுபோல் நம் முன் வைக்கப்படும் சில வாழ்க்கைக் கருத்துக்கள் மனதை ஏதோ செய்கின்றன. முடிவில், தற்கொலைக் கடிதம் இருந்தால் என்ன ஆகும், இல்லையானால் என்ன ஆகும் என்று ஒரு பெரும் தாக்கத்தைத் தரக்கூடிய கருத்தை ஆசிரியர் வைத்துள்ளார். அதுபோல் நான் யோசித்தும் இல்லை, எங்கேயும் வாசித்ததும் இல்லை! அசந்தே விட்டேன்.
பல அதிர்வுகளை உருவாக்கக் கூடிய ஓர் அழுத்தமான படைப்பிது! இவ்வருடத்தின் சிறந்த வாசிப்பு இந்நூலே! மற்றுமோர் முறை கட்டாயம் வாசிப்பேன். எச்சரிக்கை: மரணம் மற்றும் தற்கொலை தொடர்பான கனமான கருத்துக்கள் அடங்கிய நூல்.
Genres
Shelves
More like this
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…
கள்ளிக்காட்டு இதிகாசம்
தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…