Genome

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

4.26/5 · 46 ratings

IT BRIEFLY DESCRIBES ABOUT HUMAN GENES AND HOW LIFE ON EARTH WAS FORMED.

Reviews

user_13242

nice

user_13241

★ 5/5
This book speaks much about gene and genome. Even a person who doesn't know bio more can understand this book easily.It's very rare to see tamil books with deep insight on science and this is one of them. Sujatha always makes any topic easy to understand without using much mumbo jumbo terms , and makes it jargon free language. Hats off to sujatha sir.

user_13240

★ 5/5
A very short book gives an introduction of genetics. When it comes to the topic of Science, Author Sujatha scores high with his simple and comprehensive explaination. just few important points to note: 1) A-T-G-C : the four chemical bases of gene and its arrangement as DNA in the chromosome is your entire fate. 2) The three base combination is called Amino acid. for e.g - CAG is glutamine. If the repetition of CAG in chromosome 8 is more than 39, then the person will have change of having Huntington disease, a brain disorder that affects nerve cells causes uncontrolled movements, emotional problem and lack of cognition. Reference :

user_13239

★ 3/5
very informative !!

user_13238

★ 4/5
ஜீனோம் ❤️ • மனித மரபணுவின் சிக்கல்களை களைந்த விஞ்ஞான உலகின் வெற்றிக்கதையையும் அவ்வாய்வுகளின் வெளிப்பாடுகளையும் அனைவரும் அறிய உதவும் வகையில் எளிமையாக எழுத்தாக்கிய சுஜாதாவின் படைப்பே இந்த ‘ஜீனோம்’.

user_13237

Good

user_13236

★ 4/5
sujatha was the master incorporating scientific knowledge in Tamil stories. this was his straight attempt to explain genome and gene sequencing as simple as possible.

user_13235

★ 3/5
IF YOU ARE NOT A SCIENCE STUDENT YOU MIGHT WELL GO FOR IT AS SUJATHA IN HIS OWN INIMITABLE STYLE DESCRIBES BRIEFLY ABOUT THE ORIGIN OF HUMANITY.VERY SHORT BOOK PRICE RS.22 ONLY.

user_13234

★ 4/5
"வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான் மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான், கானில் வளரும் மரமெல்லாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான்'' என்ற பாரதியின் 'நான்' கவிதையிலிருந்து இந்த வரிகளை வைத்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் வேற்றுமைகள் பல இருந்தாலும் மரபணு ஒப்பனையில் நாம் அனைவரும் A, T, G மற்றும் C என்ற நான்கு மூலக்கூறுகளில் ஒற்றுமையாக அடங்குகிறோம் என்று சுஜாதா இந்த மரபணு கட்டுரையில் உரக்கச் சொல்லி வாசிப்போரைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறார். 2001ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை அது வரையிலும் உலகில் அரங்கேற்றப்பட்ட, மரபணு அறிவியலையும், அதன் ஆராய்ச்சிகளையும் மிக எளிமையாக அறிவியல் பயிலாதவர்களுக்குக் கூட நன்கு புரிகிற வகையில் பதினைந்து அத்தியாயத்தில் எடுத்துரைக்கிறது. மின்னணு பொறியாளரான சுஜாதா அவரின் துறையைத் தாண்டி மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) துறையிலும் ஆர்வங்கொண்டு அதன் ஆதி தொடங்கி அந்தம் வரையிலும் நாடியிருப்பது வியப்பளிக்கக்கூடிய ஒன்று. என்னுடைய இளநிலை உயிரித்தொழில்நுட்ப பட்டப்படிப்பில் மூலக்கூறு உயிரியல் ஒரு subject. முதல் முறை DNA, RNA, Protein அவைகளின் உருவாக்கத்தையும், செயலையும் புரிந்து படிப்பது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. இந்தப் புத்தகத்தை பற்றி அப்போது அறிந்து வாசித்து இருந்திருந்தால், கல்லூரியில் பரிந்துரைக்கப்பட்ட பாடப் புத்தகத்தைப் படிக்காமல் கூட சுலபமாக பாடத்தின் புரிதலோடு 60-70 % எடுத்திருக்கலாம். அதற்குக் காரணம் சுஜாதா இந்த அறிவியல் கூறுகளை அன்றாடம் நாம் புழங்கும் பொருட்களோடு ஒப்பிட்டிருப்பது . எடுத்துக்காட்டாக மனிதர்களைக் கட்டிடங்கள் என்றும், நம் திசுக்களில் இருக்கும் செல்களை அறைகள் எனவும், செல்லின் உட்கருவை (Nucleus) அலமாரி எனவும் அதில் சுருட்டி வைத்திருக்கும் புத்தகமே DNA என்று விளக்குகிறார். இப்பொழுது இருக்கும் Gym cultureல் ப்ரோட்டீனின் முக்கியத்துவம் நாம் அறிந்ததே. ஆனால் நம் உடம்பில் இருக்கும் செல்கள் அனைத்தும் ப்ரோடீன்களை உருவாக்கும் வல்லமை படைத்தவை. செல்களின் செயல்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள சில நேரங்களில் அதே ப்ரோட்டீன் தான் உதவுகிறது. அதனால் தான் சுஜாதா ப்ரோட்டீன் நாம் வணங்கத்தக்க ஒன்று என்று கூறி ஓர் அத்தியாயத்தில் பின்வரும் குறளை இயற்றியிருக்கிறார்: "நாட்டிலும் வீட்டிலும் யாவரும் வாழவைக்கும் ப்ரோட்டீனை எண்ணி வணங்கு" நீங்கள் gym வைத்திருந்தால், கூடவே ப்ரோட்டீன் பவுடர்களை promote செய்துகொண்டிருந்தால் இந்த வெண்பாவை சுஜாதாவிடமிருந்து கடன் வாங்கி உங்கள் Gym பலகையில் எழுதிக்கொள்ளலாம். அறிவியல் ஆராய்ச்சியில் நெறிமுறைகள் என்பது அனைவரும் கூர்ந்து கவனிக்கவேண்டிய மிகவும் அவசியமான ஒன்று. மரபணு அறிவியல் ஆராய்ச்சி ஒவ்வொரு நாளும் அதன் அபார வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கிறது. இதனால் உலகில் வாழும் உயிரினங்களுக்கு நன்மைகள் பல இருந்தாலும், வசதி படைத்தோர் ஒருவரின் மரபணு சாஸ்திரத்தை அவரவர் தேவைக்கேற்ப மாற்றி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் அனைவருக்கும் வாய்ப்புகள் ஒன்றாக கிடைக்காமல் ஒருவித ஏற்றத்தாழ்வு சமூகத்தில் நிலவ வாய்ப்புகள் அதிகம். மரபணு ஆராய்ச்சியில் நெறிமுறைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகளுடன் நன்கு அலசியிருக்கிறார் இந்தத் தொகுப்பில். DNA கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்கள்: ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆணால் அவர்களின் அந்தக் கண்டுபிடிப்பிற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் ரோசலிண்ட் பிராங்கிளின் எனும் ஒரு பெண் ஆராய்ச்சியாளர். வாட்சன் மற்றும் கிரிக் பெருமைகளை இந்தக் கட்டுரையில் அழகாக விளக்கியிருக்கும் சுஜாதா ரோசலிண்ட் பிராங்கிளின் பற்றி எங்கேயும் குறிப்பிடாதது ஒன்று தான் வருத்தமாக அமைந்தது இந்தப் புத்தக வாசிப்பில். மற்றபடி நீங்களோ உங்களுக்குத் தெரிந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவியல் ஆர்வலர்களாக இருந்தால் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் 'ஜீனோம்'!
Genres
Shelves
Science book சுஜாதா-2 Sujatha

More like this


தங்க முடிச்சு / Thanga Mudichu

ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங் களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்…

4.26/5 · 46 ratings

கற்பனைக்கும் அப்பால் / Karpanaikkum Appal

அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய …

4.26/5 · 46 ratings

நகரம் [Nagaram]

This book is written by Sujatha, published by Kizhakku Pathippagam.

4.26/5 · 46 ratings

நில்லுங்கள் ராஜாவே [Nillungal Raajaave]

"நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இ…

4.26/5 · 46 ratings

என் இனிய இயந்திரா [En Iniya Iyandhira]

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.26/5 · 46 ratings

கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]

Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling f…

4.26/5 · 46 ratings

சுஜாதாவின் சிறுகதைகள் [Sujathavin sirukathaigal

சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.

4.26/5 · 46 ratings

இதன் பெயரும் கொலை-1

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மர்ம நாவல், ஒரு மர்மமான தற்கொலை வழக்கிலிருந்து தொடங்குகிறது. அறிவுக்கூர்மை மிக்க கணேஷ் மற்று…

4.26/5 · 46 ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.26/5 · 46 ratings

வசந்த்! வசந்த்! [Vasanth! Vasanth!]

Thriller Based Fiction Written By Sujatha

4.26/5 · 46 ratings

ஆ...! [Aah...!]

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

4.26/5 · 46 ratings