Reviews for அரியநாச்சி [Ariyanachi]
14 reviews total
user_12640
★ 4/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த நாள் இது. கதையின் இறுதி நொடிகள் மிகுந்த பரபரப்புடன் நகர்கின்றன. படிக்க ஒரு நாள் போதும், ஆனால் உணர்வுகள் பல நாள் நீடிக்கும்.
user_12639
★ 4/5 Feb 02, 2026கோபம் குலத்தை அழிக்கும் என்பதற்கு இந்தப் புதினம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கிராம மண்வாசம் கொண்ட கதையமைப்பும், வட்டார வழக்கு உரையாடல்களும் வாசகனை அழகாக உள்ளிழுக்கின்றன. ஒரு முறையாவது படித்தாக வேண்டும்.
user_12638
★ 5/5 Feb 02, 2026மிகச்சிறந்த கதை. வாசிக்கும் போது ஒரு உணர்ச்சி பெருக்கல் ஏற்படுகிறது. எழுத்தாளரின் விறுவிறுப்பான நடை வாசகரைப் பல மணிநேரம் கவர்ந்திடும் அளவிற்கு சுவாரசியமான படைப்பு.
user_12637
Feb 02, 2026தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கையை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழி. பழக்கவழக்கங்களும் பண்பாட்டமைப்புகளும் நம் கலாச்சாரத்தின் அடையாளம் என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது.
user_12636
★ 3/5 Feb 02, 2026கோபம் குலத்தை அழிக்கும் என்ற மையக்கருத்தைக் கொண்டு நகர்கிறது இந்நாவல். கல்யாணத்தில் என்ன பிரச்சனை வரும் என்ற பதட்டதுடன் ஆசிரியர் வாசகர்களை வைத்திருக்கிறார். விறுவிறுப்புடன் கதை நகர்ந்தாலும், கதை மனதில் பதிந்த அளவிற்கு கதாபாத்திரங்கள் பதியவில்லை. அவசர அவசரமாக கதைக்கு முடிவு அளித்ததைப் போல் இருந்தது. ஒரு முறை வாசித்துவிட்டு போய்விடலாம் என்ற அளவிற்கு சுவாரசியமான புத்தகம்.
user_12635
★ 4/5 Feb 02, 2026கோபம் குலத்தை அழிக்கும் என்ற மையக்கருத்துள்ள புத்தகம்.
அக்கா தம்பி தங்கை சார்ந்து வரும் கதை.
அரியநாச்சி தாயில்லா தங்கையை மிகுந்த பாசத்துடன் தாங்கியிருக்கிறாள், திருமணமுடிந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு கருவுற்று நிறைமாத கர்பிணியாய் தன் தந்தையிடம் தங்கையின் திருமணம் பற்றி பேச சிறைச்சாலைக்கு செல்வதில் தொடங்குகிறது இக்கதை.
வெள்ளைத்தேவர் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார், அங்கும் மிகுந்த நன்னடைத்தையோடு இருக்கிறார்.
பாண்டி தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் தன் தங்கையின் திருமணத்தை தன் தந்தையிடம் பேசியதால் கோபம் கொண்டு தன் மனைவியின் தம்பிக்கு மாயழகியை முடிக்கப்போவதாக பேசுகிறான்.
திருமணம் நடந்ததா இல்லையா? கதைமாந்தர்கள் என்வானார்கள் என்பது மீதிக்கதை.
இறுதியில் ரத்தம் பார்த்த கதைகளம்!
user_12634
★ 5/5 Feb 02, 2026இது என் முதல் வேல ராமமூர்த்தியின் கதை வாசிப்பு.
வெட்டு, குத்து என்பது எவ்வளவு இயல்பாகக் கருதப்படுகின்றது என்பதை ஆசிரியர் வெகு தெளிவாக இக்கதையில் விவரிக்கிறார். சில வரிகள் திகைப்பூட்டுகின்றன: கால் பவுன் தங்கிற்காக 9 தலைகள் உருண்டது முதல் ஜெயில் நமக்காகத் தானே சர்கார் கட்டி வைத்திருக்கிறது என்கிற வழக்கம் வரை.
144 பக்கங்கள் என்ன நடக்குமோ என்கிற பதை பதைப்புடனே நகர்கின்றன. கதையின் முடிவு ஒரு நொடியில் எவ்வளவு சேதம் நடக்க முடியும் என்பதையும், கோபம் குலத்தையே அழிக்கும் என்பதையும் நம் கண் முன்னே காட்டுகிறது.
ஆசிரியரின் எழுது பேச்சு வழக்காக இருந்தாலும் வாசிக்க எளிமையாகவே இருந்தது. வேல ராமமூர்த்தியின் இதர நூல்களை வாசிக்க விழைகிறேன்.
user_12633
★ 4/5 Feb 02, 2026ஜெயிலுல ஜென்ம கைதியாக இருக்கும் வெள்ளையத்தேவன். அவனுக்கு இரண்டு பொண்ணு ஒரு மகன். ஒரு கொலை பண்ணிட்டு ஜென்மத்திலே உள்ள போயிட்டாரு மூணு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குனது வெள்ளையத்தேவனின் தங்கை வள்ளிதான்.
பெரிய பொண்ணு அரியநாச்சி அவள் கணவன் வெள்ளாங்குளம் சக்கரைதேவன். கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷசத்துக்கு அப்புறம் இப்போதான் ஒரு புள்ள உண்டாயிருக்க அரியநாச்சிக்கு. தங்கச்சி மாயழகி தன் கொழுந்தன் சோலைக்கு கட்டிவைக்கணும்னு ஒரு ஆசை.
வெள்ளையத்தேவன் மகன் பாணி அவனுடைய மனைவி குமராயி. சொத்து வெள்ளாங்குளம் ஆளுகளுக்கு போக கூடாதுன்னு குமராயிக்கு தன் தம்பி கருப்பையாவுக்கு மாயழகி கட்டி வைக்கணும்னு முடிவாய் இருந்தா.
இதுல மாயழகி யார் கல்யாணம் பண்றாங்க பின்பு என்ன ஆகுது என்பதுதான் கதை.
முதலில் வரும் அத்தியாயங்கள் வெள்ளையத்தேவன், அரியநாச்சி, வெள்ளாங்குளம் சக்கரதேவரின் அறிமுகங்கள் கதையோடு கூறப்படுகிறது.
மொத்தமுள்ள இருபது அத்தியாயங்களும் விறுவிறுப்புக்கு கொஞ்சம்கூட பஞ்சமில்லாமல் பறக்கிறது. இறுதிப் பக்கத்தில் யாரும் எதிர்பாராத சில சம்பவங்கள் தோன்றி கதை முடிகிறது.
தமிழ்நாட்டின் கிராமத்து மண் சார்ந்த கதைகளை படிக்க விரும்புவோர் இந்த புத்தகத்தை தாராளமாகப் படிக்கலாம்.
user_12632
★ 4/5 Feb 02, 2026ஆப்பநாட்டு பெண் தெய்வம் என்ற வரிகளுடன் தொடர்கிறார் ஆசிரியர் திரு. வேல ராமமூர்த்தி.
வெட்டு, குத்து என்பது எவ்வளவு இயல்பாகக் கருதப்படுகின்றது என்பதை ஆசிரியர் வெகு தெளிவாக இக்கதையில் விவரிக்கிறார். கால் பவுன் தங்கத்திற்காக 9 தலைகள் உருண்டது முதல், ஜெயில் நமக்காகத் தானே சர்கார் கட்டி வைத்திருக்கிறது என்கிற வழக்கம் வரை கதையில் பல வரிகள் நம்மை திகைப்பூட்டுகின்றன.
144 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் கதை பெரிய திருப்பங்களையோ, புதிய கதவுகளையோ திறக்கவில்லை என்றாலும் சில கதாபாத்திரங்கள் மனதில் சில தாக்கத்தை உண்டாக்குகின்றன. குறிப்பாக அரியநாச்சியின் திருமணம் ஆகாத அத்தை கதாபாத்திரம் தீராத காதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. விறுவிறுப்பான கதை அமைப்பு, குடும்ப உறவுகளுக்கு இடையிலான கதைக்களம், கண்மூடி திறப்பதற்க்குள் தோன்றி மறையும் கோபத்தின் விளைவு என பதறவைக்கும் கதை நகர்வுடன் நம்மை ஈர்க்கிறார் ஆசிரியர்.
தமிழ்நாட்டின் கிராமத்து மண் சார்ந்த கதைகளை படிக்க விரும்புவோர் இந்த புத்தகத்தை தாராளமாகப் படிக்கலாம்.
user_12631
★ 5/5 Feb 02, 2026கூரிய பார்வையும், கம்பீர குரலும், உறுதியான உடற்க்கட்டும் கொண்ட நடிகரும், எழுத்தாளருமான திரு.வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துப் பயணம் பற்றி பலரும் அறிந்ததே.
அவரின் படைப்புகள் அத்தனையுமே சிறப்பானது என சொல்லக்கேட்டு எதை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் திகைத்தேன்.
அவரின் படைப்புகளான குற்றப் பரம்பரை, பட்டத்து யானை, குருதி ஆட்டம் ஆகிய மூன்றுமே ரத்தம், கோபம், வீரம் கொண்ட ஆண் உருவத்தைக் கொண்ட அட்டைப் படங்களை கொண்டிருக்க அரியநாச்சி நாவல் அதே ரத்தம், கோபம், வீரம் கொண்ட பெண் உருவமே அதை தேர்ந்தெடுக்க காரணமாயிற்று.
விறுவிறுப்பான கதை அமைப்பு, குடும்ப உறவுகளுக்கு இடையில் கட்டப்பட்ட கதை, வாழ்க்கை எவ்வளவு பிரியாவிட்டை, கண்மூடி திறப்பதற்க்குள் தோன்றி மறையும் கோபத்தின் விளைவு, இன்றைய நாட்களிலும் சாதி பெருமை பேசிக் கொண்டு வெற்றாய் திரியும் சில மனிதர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.