Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 64
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- சந்தியா பதிப்பகம்
- ASIN
- B0DN8L69CH
இது கல்யாண்ஜியின் ஒரு கவிதைத் தொகுப்பு. யாருமற்ற தெருவில் விழும் வெயில், மரத்தில் தூங்கும் பழம், வளைந்து ஓடும் ஆறு, கிளையில் அமர்ந்த கிளி, நோட்டுப் புத்தகத்தில் இருக்கும் ஒரு படம் என அன்றாடம் நாம் கவனிக்காமல் கடந்துபோகும் சிறு காட்சிகளையும் தருணங்களையும் இத்தொகுப்பு கவிதையாக மாற்றுகிறது. எளிய, குறைந்த வரிகளில் பெரிய உணர்வுகளை அடக்கும் பாணி இதன் சிறப்பு.
வாசகர்கள் இதில் அலங்காரமற்ற மொழியையும், சாத…
Kadhaippoma with Kannamma
★ 4/5அன்றாட வாழ்வில் நாம் கவனிக்கத் தவறும் சிறிய அசைவுகளையும் உணர்வுகளையும் இந்தக் கவிதைகள் அழகாகப் பதிவு செய்கின்றன. சில தருணங்களில் நிகழும் தவறுகள்கூட கல்யாண்ஜியின் பார்வையில் அழகாகத் தோன்றுகின்றன. வெயில், பழம், ஆறு, உப்பு போன்ற சாதாரண விஷயங்களிலும் உயிர் இருப்பதை உணர்த்துகிறார்.
இவற்றைப் படித்த பிறகு, இதை இப்படியும் பார்த்திருக்கலாமே என்ற புதிய பார்வை கிடைக்கிறது. நாம் கவனிக்காமல் தவறவிட்ட வாழ்க்கையை மீண்டும் பார்க்க வைக்கும் இந்தக் கவிதைகள் மனதை மெல்ல வருடுகின்றன.
Saranya Dhandapani
★ 4/5கல்யாண்ஜியின் கவிதைகள் படித்தவுடன் புரிகின்றன; மனதில் பதிந்து காட்சியாகவும் கண்முன் நிற்கின்றன. தேர்ந்த எழுத்தாளர்களின் கவிதைகளைப் புரிந்துகொள்ள வழக்கமாகத் தேவைப்படும் மெனக்கெடல் இவற்றுக்கு இல்லை.
அன்றாட வாழ்க்கையை இத்தனை வேறொரு கோணத்தில் பார்க்கவும் ரசிக்கவும் முடியுமா என்று ஒவ்வொரு வரியும் வியக்க வைக்கிறது. இயல்பும் இயற்கையும் நிறைந்த, வாழ்க்கையையே கவிதையாக மாற்றிய தொகுப்பு இது. இவரைப் போல ஒரு கவிதையாவது எழுதிவிட்டால் என் பிறவிப்பயனை அடைந்ததாக உணர்வேன்.
Shelves
More like this
பூனை எழுதிய அறை
மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை. பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்து பூ விரும்பினாள். தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன். இரு கை நிறைத்த தாமரையை ஏ…
மீனைப் போல இருக்கிற மீன்
"நான் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கிறேன். இனியும் தீ வேண்டாம். இன்னும் சில இருக்காஞ்சட்டி விளக்குகளை ஏற்றுகிறபொழுது வரைக்கும் எண்ணெய் இருக்கும் என் திரியில்.என்னுடைய மாடங்கள், என்ன…
நிலா பார்த்தல்
இக்கவிதைத் தொகுப்பில், ஒரு கிராமத்துத் தெருவின் எதார்த்தமான காட்சிகள் வழியே நிலவொளியில் தெரியும் அன்றாட நிகழ்வுகளும் மனிதர்களும் கவிதைகளாகப் பதிவாகியுள்ளன. அழகான, இதம…
புலரி
நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிப்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம். Show more