Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வெயிலில் பறக்கும் வெயில்
Veyilil Parakkum Veyil
- பக்கங்கள்
- 64
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- சந்தியா பதிப்பகம்
- ASIN
- B0DN8L69CH
இது கல்யாண்ஜியின் ஒரு கவிதைத் தொகுப்பு. யாருமற்ற தெருவில் விழும் வெயில், மரத்தில் தூங்கும் பழம், வளைந்து ஓடும் ஆறு, கிளையில் அமர்ந்த கிளி, நோட்டுப் புத்தகத்தில் இருக்கும் ஒரு படம் என அன்றாடம் நாம் கவனிக்காமல் கடந்துபோகும் சிறு காட்சிகளையும் தருணங்களையும் இத்தொகுப்பு கவிதையாக மாற்றுகிறது. எளிய, குறைந்த வரிகளில் பெரிய உணர்வுகளை அடக்கும் பாணி இதன் சிறப்பு.
வாசகர்கள் இதில் அலங்காரமற்ற மொழியையும், சாத…
Kadhaippoma with Kannamma
★ 4/5அன்றாட வாழ்வில் நாம் கவனிக்கத் தவறிவிடும் மிகச் சிறிய அசைவுகளையும் உணர்வுகளையும் அழகியலோடு பதிவுசெய்யும் தொகுப்பு 'வெயிலில் பறக்கும் வெயில்'. ஆளரவமற்ற தெருவில் நடக்கும் வெயில், மரத்தில் தூங்கும் பழம், வளைந்து ஓடும் ஆறு, கிளையில் அமர்ந்திருக்கும் கிளி, நோட்டுப் புத்தகத்தில் இருக்கும் புத்தரின் படம், அடுக்களையில் இருக்கும் உப்பு — இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு உயிர் துடிப்பதை கல்யாண்ஜி உணரச் செய்கிறார்.
அவரது சில கவிதைகளைப் படிக்கும்போது, சில தருணங்களின் தவறுகள் கூட அழகாகத் தோன்றுகின்றன. நம்மைச் சுற்றியுள்ள சாதாரண விஷயங்கள் கவிதையாக மாறும்போது, நாம் தவறவிட்ட வாழ்க்கையை மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. மயிலிறகால் மனதை மெல்லத் தடவிச் செல்வதுபோல், இருளில் ஒளிரும் மின்மினிகள் போல இதமான கவிதைகள்.
Saranya Dhandapani
★ 4/5தேர்ந்த கவிஞர்களின் கவிதைகளைப் புரிந்துகொள்ள சற்று மெனக்கெட வேண்டியிருக்கும்; கல்யாண்ஜியின் கவிதைகள் அப்படியல்ல — படித்தவுடன் புரிகின்றன, மனதில் பதிகின்றன, கண்முன் ஒரு காட்சியாகவும் நிற்கின்றன. இந்த மூன்றையும் ஒருசேர நிகழ்த்திவிடுவதே அவரது கவிதைகளின் வலிமை.
'இதை இப்படியும் பார்க்கலாமா, இப்படிக்கூட ரசிக்கலாமா' என ஒவ்வொரு வரியும் வியப்பூட்டுகிறது. எதார்த்தமும், இயற்கையும், அழகும் நிறைந்த இந்த வரிகளில் அவர் வாழ்க்கையையே கவிதையாக வடித்திருக்கிறார். தலைப்பே சொல்வதுபோல் இது வெயில்தான் — ஆனால் இதமான வெயில்.
Shelves
More like this
பூனை எழுதிய அறை
மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை. பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்து பூ விரும்பினாள். தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன். இரு கை நிறைத்த தாமரையை ஏ…
மீனைப் போல இருக்கிற மீன்
"நான் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கிறேன். இனியும் தீ வேண்டாம். இன்னும் சில இருக்காஞ்சட்டி விளக்குகளை ஏற்றுகிறபொழுது வரைக்கும் எண்ணெய் இருக்கும் என் திரியில்.என்னுடைய மாடங்கள், என்ன…
புலரி
நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிப்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம். Show more
நிலா பார்த்தல்
இக்கவிதைத் தொகுப்பில், ஒரு கிராமத்துத் தெருவின் எதார்த்தமான காட்சிகள் வழியே நிலவொளியில் தெரியும் அன்றாட நிகழ்வுகளும் மனிதர்களும் கவிதைகளாகப் பதிவாகியுள்ளன. அழகான, இதம…