தாகங்கொண்ட மீனொன்று
Share:

தாகங்கொண்ட மீனொன்று

Thaagangonda Meenondru

Check Price on Amazon
4.0/5 · 5 reviews

தாகங்கொண்ட மீனொன்று

Thaagangonda Meenondru

4.0/5 · 5 reviews
பக்கங்கள்
200
வடிவம்
Hardcover
பதிப்பகம்
Last Resort
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9780955667466

பெருங்கடலால் மட்டுமே மீனின் தாகம் தணிக்கமுடியும். ஞானநிலையே அக்கடல். அதை நோக்கிய பயணத்திற்காக மீன் துடிக்கிறது.

ரூமியை மொழிபெயர்ப்புச் செய்வது என்பது உண்மையில் ஒரு தியானப்பயிற்சியே. இப்பயிற்சியின் வழியே ஒருவர் ஞானத்தின் ரகசியத் தோட்டத்திற்குள் நுழைகிறார். விசித்திரங்களை அறிந்து கொள்கிறார்.

சத்யமூர்த்தியும் அதையே செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்

  • எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன…
Interested in this book? Check Price on Amazon
Quotes

சரி தவறு என்பதற்கு அப்பாற்பட்டதொரு வெளி உண்டு. அங்கு சந்திப்பேன் உன்னை.

புல்வெளியின் மீது ஆன்மா கவிந்திருக்கும்போது எதையும் பேசவியலாதபடி ததும்புகிறது இப்பிரபஞ்சம்.

மொழி எண்ணம் ஏன் 'ஒருவருக்கொருவர்' எனும் பதம் கூட பொருளற்றுப் போகிறது அங்கே.

காதலின் வழி நுட்பமான விவாதமல்ல. பிரளயமே அங்கு செல்வதற்கான வாயில்.

தங்களது சுதந்திரத்தைப் பெருவானில் வட்டமிட்டு களிப்பெய்துகின்றன பறவைகள். அவை எப்படிப் பயில்கின்றன பறத்தலை?

அவை விழுகின்றன. அவ்வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள்.

பகல் முழுக்க யோசித்திருப்பேன் அதைப்பற்றி.

இரவில் சொல்லிவிடுகிறேன் அதை.

எங்கிருந்து வந்தேன் நான்? எதைச் செய்யவேண்டும் நான்? பிடிபடவில்லை எனக்கு.

ஆனால் நானறிவேன் எனது ஆன்மா வந்தது வேறெங்கோ இருந்து அங்கு சென்றடையவே விரும்புகிறேன் நான்.

வேறேதோ மதுபான விடுதியிலிருந்து பிறந்திருக்கிறது இந்தப் போதை, நான் அங்கு மீளும்போது முற்றிலும் தெளிவடைந்திருப்பேன்.

இப்போது இந்த கூட்டில் அமர்ந்திருக்கும் நான் வேறோர் நிலவுலகின் பறவை.

நான் பறந்து வெளியேறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆனால் எனது குரலுக்கு எனது காதினுள் செவிமடுப்பவர் யார்? எனது உதடுகள் வழி வருவது எவரது வார்த்தைகள்? எனது கண்கள் வழியே பார்ப்பவர் யார்? அந்த ஆன்மா எது?

கேட்காமலிருக்க முடியவில்லை என்னால்.

பதிலின் ஏதோ சிறுதுளி ருசிக்கக் கிடைத்தால் போதும் எனக்கு. போதையுற்றவர்களின் இந்தச் சிறையை உடைத்துக் கிளம்பிவிடுவேன். நானாக வரவில்லை இங்கு திரும்பிச் செல்வதற்குமில்லை அப்படியே. அழைத்து வந்தவரே என்னைத் திரும்ப இட்டுச் செல்லட்டும்.

இந்த கவிதை. என்ன சொல்லப்போகிறேன் என்று ஒருபோதும் எனக்குத் தெரியாது. திட்டமிட்டதுமில்லை.

அதைச் சொல்வதைத் தவிர்த்ததோர் வெளியில் சஞ்சரித்திருப்பேன் நான் மௌனமாக.

More Quotes...
Shelves
கவிதைகள் Poetry

More like this


தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

பாரதியார் கவிதைகள்

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…

4.2/5 · 31 reviews

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …

3.0/5 · 19 reviews

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

3.8/5 · 4 reviews

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…

3.7/5 · 7 reviews

கவிராஜன் கதை

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…

4.1/5 · 17 reviews

பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…

தாவோதேஜிங் லாவோட்சு

பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பைபிளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தாவோ தே ஜிங், சீன மொழியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோ ட்சு என்பவர…