Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நீர்வழிப் படூஉம்
Neervazhi Paduum
- பக்கங்கள்
- 224
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Thannaram Publication
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789395560047
- ASIN
- B0CPY4TLDS
இந்நாவல் கொங்கு வட்டாரத்தின் நொய்யல் நதிக்கரையில் வாழும் குடிநாசுவர் எனப்படும் எளிய சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவையும் விரிவாகச் சித்தரிக்கிறது. குற்றம், மன்னிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகிய உணர்வுகளை முதன்மையாகக் கொண்டு நகரும் இக்கதை, வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் மனிதர்களின் எளிய வாழ்வை எதார்த்தமாக…
Appears in following lists
Genres
Quotes
மாமாவை வதைத்துக்கொண்டிருந்த காக்காய் வலிப்பு நோய் அப்போது அடிக்கடி வரத்தொடங்கியிருந்தது. அநேகமாக வாரத்திற்கொருமுறை. பெரியம்மா தந்துவிட்டுப் போயிருந்த இரும்பாலான தொரப்புக்குச்சியொன்றை எப்போதும் தன் தலைமாட்டில் வைத்துக்கொண்டிருந்தார் மாமா, எனினும் வலிப்பு வரும்போது அவரால் அதைத் தேடியெடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதுபோன்ற தருணங்களில் நினைவின் இழைகள் முற்றாக அறுந்துபோய்விடுகின்றன. கை, கால்கள் வெட்டியிழுப்பதையோ, வாயிலிருந்து கோழை வடிவதையோ வீறிட்டுக் கத்துவதையோ பார்ப்பதற்கு அநேகமாக யாரும் இருப்பதில்லை.
பேச்சுவார்த்தையற்றவராக எதிரே இருந்த முத்தையன்வலசுப் பெரியப்பா அப்போது வீட்டிலிருந்தால் அந்தச் சத்தத்தைக் கேட்டு வந்து விடுவார், அந்தச் சாவிக்கொத்தைத் தேடியெடுத்து உள்ளங்கையில் திணித்து மடக்கிப் பிடித்துக்கொள்வார், சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிப்பார், குடிக்கவும் தருவார். சிதறி வழிந்திருந்த கோழையைத் துடைத்து கால்களை நீட்டி மல்லார்ந்து படுக்க வைத்துத் தலையணையொன்றை முட்டுக்கொடுத்து பற்றியிருந்த அந்தத் தொரப்புக்குச்சியை விடுவித்துப் பழையபடி அவரது தலைமாட்டில் பத்திரப்படுத்திவிட்டுப் போய் விடுவார். வெகுநாட்கள் வரை மாமா அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. வலிப்பின் தாக்கம் நீங்கி நினைவு மீளும்போது தனக்கு வலிப்பு வந்ததை நினைவுகூர முற்படுவார் மாமா, உள்ளங்கையை விரித்து சாவிக்கொத்து இருக்கிறதா எனத் தேடுவார், அது வைத்தது வைத்த இடத்தில் அப்படியே கிடக்கும், கன்னங்களில் கோழையின் ஈரம் தென்படாது, மாமா குழம்பிப்போவார், உண்மையிலேயே வலிப்பு வந்ததா இல்லை அப்படிக் கற்பனை செய்துகொண்டோமா என யோசிக்க முற்படுவார்.
அப்போதுதான் படிக்கட்டுகளின் வழியே வேகமாக அடியெடுத்து வைத்து நடந்து தன்னைக் கடந்து போய்க்கொண்டிருந்த மகள் ஈஸ்வரியைப் பார்த்தார். 'ஈசு' எனப் பெருங்குரலெடுத்து அவர் அழைத்ததைக் கேட்டவள் கண்கள் விரிய அவரைப் பார்த்துச் சிரித்திருக்கிறாள், ஒரே வீச்சில் அவளை நெருங்கினார் மாமா, கைகளைப் பற்றிக்கொண்டார், 'ஈசு ஈசு கடசீல அந்த முருகன் உன்ன எம்பட கண்ணுக்குக் காட்டீட்டே, அவெ கண்கண்ட தெய்வம்ங்கறது. செரியாப் போச்சு பாத்தயா?' என அவளை வாரியணைக்க முற்பட்டார். அவள் கூச்சலிட்டாள், மிகப் பதற்றமடைந்தவளாக அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அவளது கூச்சலைக் கேட்டு ஓடிவந்த பக்தர்களில் சிலர் மாமாவிடமிருந்து அவளை விடுவிக்க முயன்றிருக்கிறார்கள், யாரோ ஒரு முதியவர், "தாயோலி, கோயல்ல வந்து என்ன காரியம்டா பண்ணிக்கிட்டிருக்கறே நீ?" எனக் கேட்டுக்கொண்டே மாமாவை அடித்திருக்கிறார், பார்த்த மற்ற சிலர் ஆத்திரத்துடன் மாமாவை நெருங்கியிருக்கிறார்கள்.
நல்வாய்ப்பாக அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது, சரிந்து கீழே விழுந்து கை,கால்கள் வெட்டியிழுத்ததைப் பார்த்தவர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள், மாமா கத்தியிருக்கிறார், வாயிலிருந்து கோழை வழிந்திருக்கிறது, முற்றிலும் கைவிடப் பட்டவராக அங்கே கிடந்து துடித்துக்கொண்டிருந்த மாமாவை அவரால் ஈஸ்வரி என அழைக்கப்பட்ட பெண் பார்த்தாளாம், ஓடிப்போய் அருகிலிருந்த பெட்டிக்கடை ஒன்றிலிருந்து சாவிக்கொத்து ஒன்றை எடுத்து வந்து மாமாவின் உள்ளங்கைகளுக்குள் திணித்து அழுத்திப் பிடித்துக்கொண்டாளாம், யாரோ கொண்டு வந்து நீட்டிய தண்ணீரை முகத்தில் விசிறியடித்து, இரண்டு மடக்குக் குடிக்கக் கொடுத்தாளாம், துடிப்படங்கியதும் அவரை அதே உபய மண்டபத்தில் கால்களை நீட்டி மலர்த்திப் படுக்க வைத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து போய் விட்டாளாம். அப்போது நடந்தவற்றையும் தன் சாயல்கொண்ட அந்த முகத்தையும் நினைவின் கயிறு அறுந்து விழுந்திருந்த அந்தநேரத்திலும் அவரால் துல்லியமாகக் காண முடிந்திருந்ததாம்.
சாகும்வரை அது ஈஸ்வரிதான் எனச் சொல்லிக்கொண்டிருந்தார் காருமாமா.
சில மாதங்களுக்கு முன்புதான் சவுந்திரா பெரியம்மா வயிற்றிலிருந்த பூசணிக்காய் அளவுள்ளகட்டியை அகற்றிக்கொண்டு வந்து புண்ஆறாத நிலையில் முடங்கிக் கிடந்தாள். அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கக் கூடும் என அவளுக்குச் சிகிச்சையளித்த அம்பளிக்கை மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியிருந்ததால் சாவை எதிர்நோக்கிக்காத்திருப்பவளாகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டிருந்தாள். முத்தையன்வலசுப் பெரியப்பாவும் பதின் வயதுகளிலிருந்த அவளது இரண்டு மகன்களும் அவர்களது பண்ணையக்காரர்களும் எங்கள் பெரியம்மாவும் காருமாமாவும் ராசம்மா அத்தையும் மற்ற உறவினர்களும் உடையாம்பாளையத்துவாசிகளும் அவ்வாறே கற்பனை செய்து கொண்டிருந்தனர். அம்பளிக்கை மருத்துவர்கள் அவளது வயிற்றைக் கிழித்த அந்தக் கணத்திலேயே சிதறிப்போனார் முத்தையன்வலசுப் பெரியப்பா. மருத்துவமனை வளாகத்தில் அங்கிருந்த செங்கொன்றை மரங்களின் மருந்துக்கழிவுகள் இறைந்துகிடந்த நிழல்களில் சித்தப்பிரமை கொண்டவரைப் போல் நடமாடிக் கொண்டிருந்தார் முத்தையன்வலசுப் பெரியப்பா. ஏறத்தாழ ஒருமாதம்வரை மருத்துவமனைப் படுக்கையிலிருந்த சவுந்திரம் பெரியம்மாவை எங்கள் பெரியம்மாவும் ராசம்மா அத்தையும் சுந்தராடிவலசுப் பெரியம்மாவும்தான் அவ்வப்போது வந்து ஒருவர்மாற்றி ஒருவராகத் துணையிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். காயம் கொஞ்சம் ஆறியபிறகு அம்பிளிகையிலிருந்து தாராபுரத்துக்கும் தாராபுரத்திலிருந்து மூலனூருக்கும் பேருந்துகளின் வழியாக அழைத்து வந்ததும் அங்கிருந்து தன் பண்ணையக்காரரொருவரின் இரட்டை மாட்டு வண்டியில் ராசம்மா அத்தையின் துணையுடன் அவளை உடையாம்பாளையம் அழைத்து வந்திருந்தார் காருமாமா.
அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே வயிற்று வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சவுந்திரம் பெரியம்மா அதைப் பொருட்படுத்தாமல் குடிவேலைகளை மேற்கொண்டு வந்தாள். நான்கைந்து மாதங்களில் வயிறு திரண்டு பெரிதாகத் தொடங்கியதும் அவள் தான் மூன்றாவதாக ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதாக நினைத்தாள். அதுபற்றிச் சொன்னதும் முத்தையன்வலசுப் பெரியப்பா சந்தோஷத்தில் மூழ்கினார். உற்றார் உறவினர்களை அழைத்து விருந்து விஷேசம் எனக் கொண்டாட்டங்களில் திளைத்தார். வயிறு இயல்பைவிடப் பெரிதாகத் தென்பட்டதைப் பார்த்த எங்கள் பெரியம்மா அவளைப் பரிசோதித்து அவள் கருவுற்றிருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லையெனச் சொன்ன பிறகு பெரியப்பா கொண்டாட்டங்களைக் கைவிட்டார்.
Shelves
More like this
வெக்கை
வறண்ட நிலப் பரப்பையும் ஏற்றத்தாழ்வு நிறைந்த கிராமிய சமூக அமைப்பையும் பின்னணியாகக் கொண்ட இந்நாவல், நிலத்திற்காக நடக்கும் பழிவாங்குதலின் விளைவுகளை பதினைந்து வயதுச் சிறுவன் …
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
ஒரு வெள்ளாட்டிற்கு மேய்ச்சலும் பேருக் காலமும் தவிர வேறென்ன இருக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை சுவாரஸ்யமாக ஒரு வெள்ளாட்டின் கதையைச் சொல்ல முடியுமா என்று ஆச்…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
எனக்குள் பேசுகிறேன்...
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…
மரகதலிங்கம்
சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது.புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை -தொடர்ந்து ஒரு மண்டல க…
நைலான் கயிறு
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் நிகழும் ஒரு கொலையை மையமாக வைத்து இந்த விறுவிறுப்பான துப்பறியும் நாவல் நகர்கிறது. ஒரு நைலான் கயிறு கொலையாளியை அட…
சேரமான் காதலி
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…