Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
காகித மலர்கள்
Kagitha Malargal
- பக்கங்கள்
- 368
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Uyirmmai Pathippagam
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788188641284
1970களின் டெல்லியில், அரசாங்க உயரதிகாரி பசுபதியின் மேல் நடுத்தர வர்க்கப் பிராமணக் குடும்பம் வெளிப்படையான நல்லிணக்கத்தின் முகமூடிக்குப் பின்னால் சிதறிக்கிடக்கிறது. பதவி ஆசையில் எதையும் செய்யத் தயாராகும் பசுபதி, தமிழ் நாடகங்களில் நடிக்கும் மனைவி பாக்கியம், சூழலியலை இலட்சியமாகக் கொண்ட மூத்த மகன் விசுவம், அரியர்ஸ் வைத்துக்கொண்டு வாழ்க்கையின் மீது சலிப்படைந்த செல்லப்பா, கட்டுப்பாடுகளை உடைக்கத் துடிக்க…
Appears in following lists
Genres
Quotes
செல்லப்பா தலைமயிரை விரல்களால் கோதி சரிபார்த்துக் கொண்டான். அங்கிருந்து எடை யந்திரத்தின் கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டான். அவனுக்கு முதன் முறையாகத் தன்னைப் பற்றி நம்பிக்கையும் ஆசுவாசமும் ஏற்பட்டது. அவனிடம் எந்தக் குறையுமில்லை. தவறான கண்ணாடிகளில் அவன் தன் பிம்பத்தைப் பார்த்துவந்தான். அவ்வளவுதான். இதுதான் அவனுடைய சரியான பிம்பம். இவளைச் சார்ந்து உண்டாகிற பிம்பம். இவள்தான் அவனுக்கேற்ற கண்ணாடி. அவனைச் சிறிதாக்கவோ பெரியதாகவவோ செய்யாத கண்ணாடி.
உங்கள் பகல் நேரங்களை அநேகமாக ஏதாவதொரு ஸ்தாபனத்துக்கு, குறிப்பிட்ட ஒரு மாதச்சம்பளத்துக்கு விற்றிருப்பீர்கள் - மனச்சாட்சிக்கு உடன்பாடற்ற காரியங்களை அந்தச் சம்பளத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பீர்கள். உங்களுடைய சிந்தனைச் சுதந்திரம், செயல் சுதந்திரம் யாவும் பறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலைமை ஏற்படுத்தும் குற்ற உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக, அரசியல்வாதிகளை, அரசியல் அமைப்பைச் சாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது; அமைப்பே தவறானதென்று சுட்டிக்காட்டுவதன் மூலம் அமைப்பின் ஒரு சிறு மூலையில் நீங்கள் செய்யும் சிறு தவறுகள் தவிர்க்க முடியாதவை போலவும், மன்னிப்புக்குரியவை போலவும் தோன்றுகின்றன. ஆனால் இது ஒரு மயக்கம்; ஒரு மாஸ்டர்பேஷன். ஆமாம், மிஸ்டர் மாதுர்; நம் நாட்டுச் சிந்தனையாளர்களின் செயலார்வமோ செயல் திறனோ அற்ற மலட்டுத்தனம்தான் நம் தேசத்தை வீழ்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது.
பத்மினியும் மனதாழத்தில், அவர்களிடையேயுள்ள பந்தத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம்தான் அளித்திருக் கிறாளோ, ஒரு வேளை? அப்படியென்றால் தாய்மை அவளைக் கவர்ச்சி குறைந்தவளாக, பாதுகாப்பற்றவளாக உணரச் செய்யலாம். அதே சமயத்தில் அவனைத் தந்தையாக்கியதால் அவனுடைய சகோ சாந்தியடைந்து, அவன் அவள் மீது நன்றி பாராட்டுவானென்று அவர் எதிர்பார்க்கலாம். சமூக ஒழுக்கத்தின் அடிப்படையில் அவனை நிரந்தரமாகச் சிறைப்படுத்திவிட்டதாகத் திருப்தியடையவும் கூடும். ஏன், அவனும் தான் குழந்தை பிறந்த பிறகு அவள் மீது அவனுடைய ஆதிக்கம் உறுதிப்பட்டுவிட்டதாகவும் சமூக நியாயங்களின்படி அவளுக்கு அவனுடைய ஆதரவு இன்றியமையாததாகிவிட்டதென்றும் சுயநலமான ஆசுவாசம் பெறக்கூடும். சே, காதல் கடைசியில் இவ்வளவுதானா? பயன்படுத்திக்கொள்ளல்தான் உண்மையா?
Shelves
More like this
என் பெயர் ராமசேஷன்
நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ராமசேஷன், பெண்களின் ஆளுமையில் ஊறிய குடும்பச் சூழலிலிருந்து தப்பிக்க விடுதியில் தங்கிப் படிக்கிறான். அங்கே ராவ் என்ற நண்பன் வழியாக மேல்தட்…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
பசித்த மானிடம்
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான 'பசித்த மானிடம்' காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பச…
பள்ளிகொண்டபுரம்
'பள்ளிகொண்டபுரம்' நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்ல்லாம். அனந்தன் நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்த…
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …
முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
ஒரு வெள்ளாட்டிற்கு மேய்ச்சலும் பேருக் காலமும் தவிர வேறென்ன இருக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை சுவாரஸ்யமாக ஒரு வெள்ளாட்டின் கதையைச் சொல்ல முடியுமா என்று ஆச்…
உறுபசி
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…
யாமம்
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…