Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
இரவு
Iravu
- பக்கங்கள்
- 240
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- தமிழினி வெளியீடு
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First
- ISBN-13
- 9789384149109
- ASIN
- B0DLT43GZR
பகல் முழுவதும் உறங்கி, இரவில் மட்டுமே விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்தினுள் நுழையும் ஒருவனின் அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு குறுநாவல் இது. பெரிய மிருகங்கள் அனைத்தும் இரவில் மட்டுமே வாழ்கின்றன என்றும், இரவே அழகானது பகல் அழகற்றது என்றும் நம்பும் அந்த மக்களின் விசித்திரமான உலகம் வாசகனை ஒரு புதிரான வெளிக்குள் இழுத்துச் செல்கிறது. இருளை ஒரு குறியீடாக மாற்றி, மனித மனத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் ம…
Appears in following lists
Raji
★ 5/5நீலிமா — அழகும் துணிவும் ஒருங்கே கொண்ட, தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவான ஒரு பெண். இந்த நாவலின் மையத்தில் நின்று வாசகரைப் பற்றி இழுத்துக்கொள்கிறாள்.
ஜெயமோகனின் 'இரவு' ஒரு காதல் நாவல்தான், ஆனால் அதற்குள் வாழ்க்கையைப் பற்றிய பல தத்துவக் கேள்விகளை அவர் இயல்பாகக் கடத்திவிடுகிறார். கேரளத்தின் நீர்நிலைகளை விவரிக்கும் பகுதிகள், படிக்கும்போதே நம்மை அங்கே கொண்டு சேர்த்துவிடும். நாவலில் இடம்பெறும் இனிமையான பாடல்கள், எண்பதுகளின் மலையாளப் பாடல்களின் மேல் ஒரு புதிய காதலைத் தூண்டிவிடுகின்றன.
முடிவு சற்று திணிக்கப்பட்டதுபோல் தோன்றினாலும், அது வாசிப்பின் இன்பத்தைக் குறைத்துவிடவில்லை. அப்படியொரு உலகம் உண்மையில் இருக்குமா, அப்படி வாழும் மனிதர்கள் உண்டா என்ற ஏக்கத்தை நாவல் விட்டுச் செல்கிறது. அனைவரும் படிக்கலாம்; ஜெயமோகனை விரும்பிப் படிப்பவர்களுக்கு இது தவறவிடக்கூடாத நாவல்.
Genres
Quotes
யஷி என்பது ஒரு ஆளுமை அல்ல. ஒரு தருணம்தான். எல்லாப் பெண்ணும் ஏதோ ஒரு தருணத்தில் யஷியாக ஆகித் திரும்பி வருகிறாள்.
தமிழ்நாடு முழுக்க முந்நூறு வருஷம் தெலுங்கர்களோட ஆட்சியிலே இருந்திருக்கு. மன்னர்கள் மட்டும் தெலுங்கு இல்லை. கிட்டத்தட்ட பெருவாரியான ஜனங்களும் அங்கேயிருந்து வந்து தமிழ்நாடு முழுக்க பரவியிருக்காங்க. அவங்க தமிழை தெலுங்கு உச்சரிப்புக்கு மாத்திட்டாங்க. அதுக்கு முன்னாடி தமிழ் கேக்கிறதுக்கு மலையாளம் மாதிரித்தான் இருந்திருக்கும், தெலுங்கு ஆதிக்கம் இல்லாத இடங்களிலே இருக்கிற பழமையான தமிழ் அப்டியே மலையாள ஓசையோடதான் இருக்கு. ஃபர் எக்ஸாம்பிள் தெற்கு திருவிதாங்கூர். ஐ மீன், கன்யாகுமாரி ஜில்லா பாஷை. அப்றம் ஸ்ரீலங்காத் தமிழ். அப்றம் மேற்குமலைகளிலே இருக்கிற டிரைப்ஸ் பேசற தமிழ்.
எல்லையற்ற தூரிகையொன்றின் நுனியில் சொட்டி நிற்கும் கரும்சாயம் இந்த இரவு.
Shelves
More like this
முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…
ஏழாம் உலகம்
சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்க…
விஷ்ணுபுரம்
ஒரு கற்பனை நகரத்தை மையமாகக் கொண்டு, ஒரு பெரும் விஷ்ணு சிலையை முன்வைத்து, பல நூற்றாண்டுகளாக விரியும் ஒரு காவிய நாவல் இது. மலைவாழ் மக்கள் தங்கள் மூதாதையர் நினைவாக எழு…
ரப்பர்
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடுகள் அழிந்து ரப்பர் தோட்டங்களாக மாறிய சூழலை மையமாகக் கொண்டு விரியும் இந்நாவல், வணிகமயமாதலும் சுற்றுச்சூழல் அழிவும் ஒரு நில…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…
உறுபசி
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…
பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் ப…
வெள்ளி நிலம் (சிறார் நாவல்)
வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாட…
நூறு நிலங்களின் மலை
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புத…
குகைகளின் வழியே
ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் ந…