About இமையம் (Imaiyam)
இமையம் (இயற்பெயர் வெ. அண்ணாமலை) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். முதுகலைப் பட்டம் பெற்ற இவர் பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான "கோவேறு கழுதைகள்" மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய "செல்லாத பணம்" புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள், இப்புதினம் தலித் சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும், மேல்சாதியினரைப் புகழக்கூடிய வகையிலானதாகவும் உள்ளதாக விமர்சனம் தெரிவிக்கின்றனர்.
அக்னி அக்ஷரா விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, என்.எல்.சி. விருது, தமிழ் தென்றல் திரு.வி.க. விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். கேரளா, தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகளாலும் கவுரவிக்கப்பட்டவர்.