Quotes from வேடிக்கைப் பார்ப்பவன்

எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!” _ சுகுமாரன் 'பூமியை வாசிக்கும் சிறுமி’ கவிதைத்
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
ஒரு வியாபாரி கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல் போகும். ஒரு கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும் கவிதையே காணாமல் போய்விடும்!
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
நெருப்பு’ என்றால், நெருப்பு மட்டுமல்ல; நெருப்புக்குள்ளும் நீர் இருக்கிறது. அந்த நீர்... கண்ணீர்!
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
நிஜம்தான் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கிவைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக் கொள்ளத்தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என்று ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்தானே வெயில் விழும். ஆனால், இங்கே மட்டும்தான் விழும் என்பது போல் ஒவ்வொருத்தரும் கொடியில் ஓர் இடத்தில் தொங்கப்போடுவது நமக்குப் பிடித்திருக்கிறது இல்லையா? - எழுத்தாளர் வண்ணதாசன்
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'