Quotes from வேடிக்கைப் பார்ப்பவன்
உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
வேலை இல்லாதவனின் பகலைச் சுட்டெரிக்கும் வெயில், இவன் வானத்தில் தினமும் எரிந்துகொண்டேயிருந்தது. புத்தகங்களின் நிழலில் ஒதுங்குவது மட்டுமே இவனுக்கு ஆறுதலை அளித்தது.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
சில பார்வையாளர்கள் புத்தகங் களைப் படிப்பதைப் போல பாவனைசெய்து, திருடிச் சென்றுவிடுவார்கள். ‘விடுப்பா... அந்தப் புத்தகம் அவனைப் பாதிச்சா, அடுத்த மாசம் திரும்ப வந்து காசு தருவான்’ என்பார் நாரயணன்.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
இவன் கடவுளாக இருந்தபோது இவனுக்குள் இருந்த சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
இவன் அப்பா அழைத்து, இவன் வாழ்வின் மிகப் பெரும் ஜன்னல் ஒன்றைத் திறந்துவைத்தார். அன்று அவர், இவன் கையில் கொடுத்தது... அந்த விடுமுறையில் அவசியம் படிக்க வேண்டிய 10 புத்தகங்களுக்கான பட்டியல்.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
எல்லாம் எழுதிய பிறகும் ஏதும் எழுதாததைப் போல் தோன்றுகிறது. இதுதான் வாழக்கைபோலும்.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய்ச் சொல்வது? வீடு மாற்றுவதை!
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற எல்லா சுதந்திரமும் உனக்கு இருக்கு. பின்னாட்கள்ல அதற்கான சந்தோஷத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கும்போது மட்டும், என்னை நினைச்சுப் பார்த்துக்கோ. அதுக்கு முன்னாடி ஒரு புத்தகம் தர்றேன். அதை முழுசாப் படி. அப்புறம் முடிவு எடு” என்று சொல்லிவிட்டு புத்தக அலமாரிகளில் தேடித் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகத்தை இவனிடம் கொடுத்தார். அது நடிகர் சிவகுமார் எழுதிய ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற புத்தகம்.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ? -கவியரசு கண்ணதாசன்
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'