Quotes from வேடிக்கைப் பார்ப்பவன்
பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
இவன் தனிமையின் வெற்றிடத்தை புத்தகங்கள் நிரப்பின.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
உண்மையில் ஆண்களின் கண்ணீரும் உயர்வானது. அது பெண்களுக்காகச் சிந்தப்படும் எனில், அதி உயர்வானது.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
கவலைப்படாத. காசுங்கிறது காகிதம் மாதிரி. வரும்... போகும். இதையெல்லாம் ஒரு அனுபவமா எடுத்துக்கோ.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா, பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா.. புரியுதா?
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
தாத்தா நெறைய கடன் வாங்குனார்டா. அதெல்லாம் அப்பாதான் அடைச்சேன்.” மகன் கேட்டான். “தாத்தா எதுக்குப்பா கடன் வாங்குனாரு?” “தாத்தா நெறைய புக்ஸ் படிப்பார்டா. அத வாங்கத்தான் கடன் வாங்குனாரு...” “நல்ல விஷயம்தானப்பா... நீங்களும் நெறைய புக்ஸ் படிங்க. உங்க கடனை எல்லாம் நான் அடைக்கிறேன்!
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'
கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'வேடிக்கைப் பார்ப்பவன்'