Reviews for வயது வந்தவர்களுக்கு மட்டும்
16 reviews total
user_12113
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். கி.ரா-வின் கிராமிய நடையில் எழுதப்பட்ட நாட்டுப்புற பாலியல் கதைகள் சுவாரசியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
user_12112
★ 5/5 Feb 02, 202640-க்கும் மேற்பட்ட கிராமிய பாலியல் கதைகளை 250 பக்கங்களில் கொண்ட புத்தகம் இது. சில கதைகள் முன்பே கேட்டவையாக இருந்தாலும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட இக்கதைகளை உண்மைக் கதை போல் சொல்கிற போக்கே ஒரு விதச் சுவாரசியத்தை உண்டாக்குகிறது.
கிராமத்தில் உள்ள குசும்பு பிடித்த பெரியவர்கள் சில்வண்டுகளுக்குச் சொல்லும் விதமாகக் கதைகள் இடம்பெறுகின்றன. நிறையக் கதைகள் இருந்தாலும், அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல.
முதல் பதிப்பு நன்றாக விற்கப்படும் என எதிர்பார்த்து ஏமாந்ததாக ஆசிரியர் கூறுகிறார். கி.ரா-வின் கிராமிய நடையில் சுவாரசியமாக வாசிக்கக்கூடிய தொகுப்பு.
user_12111
★ 3/5 Feb 02, 2026நாட்டுப்புற பாலியல் நாட்டார் கதைகளின் தொகுப்பு இது. இதன் சிறப்பு என்னவெனில், எந்தக் கதையிலும் ஆபாசம் தூவப்படவில்லை. நாகரிகமான எழுத்தில் சுவாரசியமாக வடிக்கப்பட்ட தொகுப்பு.
user_12110
★ 5/5 Feb 02, 2026கி.ரா-வின் மற்றுமொரு வாசிக்க வேண்டிய படைப்பு. கதைகளைவிட வட்டார வழக்குப் பேச்சில் கதைகளைச் சொன்ன விதம் மிகவும் கவர்ந்தது. கி.ரா ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
user_12109
★ 4/5 Feb 02, 2026தமிழில் படித்த முதல் பாலியல் சார்ந்த புத்தகம் இது. ஆனாலும் எந்த விரசமும் இல்லை. ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு புன்னகை நிலைத்து நிற்கிறது. இவ்வளவு நுட்பமான தலைப்பில் நேர்த்தியாக எழுதிய கி.ரா-வுக்கு மிகுந்த பாராட்டுகள்.
வழக்கமான புத்தகங்களிலிருந்து மாறுபட்ட அனுபவம் தேடுபவர்களுக்கு ஏற்ற நூல். தலைப்பு சொல்வதுபோல், வயது வந்தவர்களுக்கு மட்டுமே.
user_12108
★ 5/5 Feb 02, 2026மூத்த எழுத்தாளர் கி.ரா அவர்கள் இப்புத்தகத்தின் கருவைக் கருத்தில் கொண்டு ஒரு பெரும் திரட்டு முயற்சியில் ஈடுபட்டதின் மூலம் தமிழுக்கு இப்படைப்பு கிடைத்திருக்கிறது. தலைப்புக்கு ஏற்றார்போல் வயது வந்தவர்கள் மட்டுமே கேட்க வேண்டிய காரியங்கள் பேசப்பட்டுள்ளன.
மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டும் பகிரப்பட்டும் வந்த பாலியல் சம்பந்தப்பட்ட கற்பனைக் கதைகள் காலப்போக்கில் அழியக்கூடிய நிலை இருப்பதை இப்புத்தகத்தைப் படித்த பின் உணர முடியும்.
மன்னர் காலத்தில் தொடங்கி ஜமீன், நாட்டாமை, சாதாரண மக்கள், பறவைகள், விலங்குகள் என பல்வேறு கதைமாந்தர்கள் கொண்ட 50-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். உயிர்களுக்கு ஏற்படும் உடல் தேவையையும், அது அதிகரிக்கும்போதும் கற்பனையில் திளைக்கும்போதும் யாரோ எங்கோ உருவாக்கிய இக்கதைகள் தரும் சுவாரசியம் உச்சம்.
பாலியல் கல்வியை நாம் அவசியம் என்போம் எனில், இக்கதைகள் அவற்றின் மூதாதையர்கள்.
user_12107
★ 5/5 Feb 02, 2026இது நாட்டுப்புற பாலியல் கதைகளின் தொகுப்பு. தமிழில் பாலியல் கதைகள் குறைவு — அவை வாய்வழிக் கதைகளாக இன்றளவிலும் உள்ளன. இந்தக் கதைகள் ஏன் தேவை என்பதற்கு இந்தப் புத்தகத்திலேயே விடை உண்டு. ஆண், பெண் இருவரும் தம் உடல் மற்றும் துணையின் உடல் குறித்த தேவைகளைப் புரிந்துகொள்ள இவை அடிப்படையாக உதவுகின்றன.
அதிக வக்கிரம் இல்லாமல் பெரும்பான்மையான கதைகள் சிரிப்பையே தூண்டும். பெண்களைக் கொச்சையாக சில கதைகள் சித்தரிப்பதை நாம் காணலாம், ஆனால் அது அவர்களின் தேவைகள் நிராகரிக்கப்பட்டதின் விளைவுகளே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
மொத்தம் 52 கதைகள் உள்ளடங்கிய புத்தகம். கி.ரா-வின் கிராமிய நடையில் வாசிக்கச் சுவாரசியமான தொகுப்பு.
user_12106
★ 4/5 Feb 02, 2026சிறு வயதினர் படிக்கக் கூடாது, கி.ரா இப்படி எழுதலாமா என்றெல்லாம் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்ட நூல். வயது வந்தவர்கள் மட்டும் படிக்க வேண்டிய கதைகள் இவை. காரணம், அவர்களால்தான் இந்தக் கதைத் தொகுப்பில் வரும் நகைச்சுவைகளையும் குறியீடுகளையும் ரசிக்க முடியும் என்பதைத் தாண்டி பெரிதாக வேறு ஒன்றுமில்லை.
கதைகளைத் தொகுத்து வழங்கியது கி.ரா என்பதால் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. ஒரு கதைத் தொகுப்பைப் படிப்பது போல் அல்லாமல் நல்ல சுவாரசியமாகவே இருக்கிறது. நாட்டுப்புறத்தில் திண்ணைகளில் உட்கார்ந்து அசைபோடப்பட்ட, சிறிது காம ரசம் சேர்க்கப்பட்ட கதைகள். சில கதைகள் நம் காதுகளைக் கடந்த மாதிரி தெரிந்தாலும் பெரும்பாலான கதைகள் புதிதாகவே இருந்தன.
கி.ரா எழுத்துக்களை விரும்புபவர்களும், அவர் படைப்புகள் முழுவதையும் படிக்க வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்களும் இந்தத் தொகுப்பைப் படிக்கலாம்.
user_12105
★ 3/5 Feb 02, 2026"கெட்டுப் போறவன் எப்படியும் கெட்டே போவான். சொல்லப்போனா கெட்ட வார்த்தைக் கதைகளை நிறையத் தெரிஞ்சு வச்சுகிட்டவன் அவ்வளவு சீக்கிரமா கெட்டுப் போயிரமாட்டான்" என முதல் கதையில் சொல்கிற தாத்தாவை முன்னிறுத்தி கி.ரா கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
இந்த மாதிரி கதைகளைச் சொல்ல நண்பர்கள் இருந்தபடியே இருக்கிறார்கள். அப்படி கேட்ட பல கதைகள் "ராணி"யை மையமாகக் கொண்டு நிகழும். அதன் பின்னால் இருக்கும் மனநிலையை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. பாலியல் கதைகளில் வருகிற பெரும்பாலான பெண்கள்தான் உண்மையில் உரிமையைப் பேசுவது போல் தெரிகிறது.
"ஆம்பள எப்படியும் நடப்பான்னா பொம்பளையும் எப்படியும் நடப்பா. ஆம்பள தெரியும்படி நடக்கான்; பொம்பள தெரியாதபடி நடந்துக்குவா" — இப்படி கதையின் வழியே கி.ரா பல விஷயங்களைக் கடத்திவிடுகிறார். திருமணம் என்ற அமைப்பும் உடைமை மனப்பான்மையும் பாலியலோடு எந்த அளவு தொடர்பு வைத்திருக்கிறது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
நம் நகர தாத்தாக்கள் சொல்லாததை, நண்பர்கள் நகைத்தபடி சொல்லியதை, தெளியும்படி சுவாரசியமாகச் சொல்கிற கி.ரா, இந்தப் புத்தகத்தை இப்படி முடிக்கிறார் — "எப்படியோ; எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வந்தது மாதிரி இந்த ஒலகத்துக்குத் தெரிஞ்சது."
user_12104
★ 4/5 Feb 02, 2026நாட்டார் வழக்கில் சொல்லப்படும் பாலியல் கதைகள் விரசமில்லாமல் அருமையாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நடைமுறையில் மறந்துபோன சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.