களப்பிரர் ஆட்சியில் தமிழகம் [Kalapirar Atchiyil Thamizgan]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் [Kalapirar Atchiyil Thamizgan]

None

3.62/5 · 56 ratings

தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாக வும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு …

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_12097

irundakalam yena sollappadum thagaval therinthukolla

user_12096

★ 4/5
களப்பிரர் காலம் பற்றிய மறுக்க இயலா சான்றுகளை சிறப்பாக முன் வைக்கின்ற நூல்.

user_12095

★ 5/5
களப்பிரர்கள் இப்பெயர் குறித்து பொதுவாக என்ன அபிப்பிராயம் இருக்கும் என்பது நான் பகிர்ந்துள்ள படத்தை பார்த்தாலே தெரிந்திருக்கும். அதற்காகத்தான் இதை பகிர்ந்தேன். வரலாற்றில் இருண்ட காலம் என்பதற்கு அர்த்தம் அக்காலகட்டம் குறித்த தகவல் அதிகம் கிடைக்கப்பெறவில்லை என்று. ஆனால் நம்மாட்கள் அது ஏதோ கொடுரமான காலம் என்று நினைக்கிறார்கள். (டேய் பரமா வாசிங்கடா!) அதற்கு முன்பு நிலைப்படை மட்டும் கொண்டிருந்த மூவேந்தர்கள் எளிதாக வெளியிலிருந்து வந்த கர்நாடக களப்பிரர்களால் வெல்லப்பட்டிருப்பார்கள். மேலும் ஒவ்வொரு பேரரசும் வீழ்ச்சிக்கு பின்புதான் உருவாகும். அடுத்தடுத்து வளர்ந்து கொண்டுதான் போகும். அதை விடுத்து அப்போதே அப்படி இருந்தோம், இப்போது இல்லை என புலம்புவது அறிவீனம். இப்புத்தகம் ஆய்வு நூல். அதனால் வெறும் தகவல்களாலே நிரம்பியிருப்பினும் தர்க்கப்பூர்வமாக இருப்பது சுவாரசியத்தை கொடுத்தது. இன்னார் இப்படி சொல்கிறார்கள், இதனால் அது இப்படி இருக்காது என தன் கருத்தை முன்வைத்தபடி செல்கிறார். எனக்கு சுவாரசியமான தகவலாக இருந்தது. களப்பிர கால சோழர்களின் நிலைதான். களப்பிரர்களை தாஜா செய்ய மன்னர் பெயரை மகனுக்கு வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். பாண்டியர்கள் பரவாயில்லை, அருகாமை தீவுத்தேசத்திற்கு சென்று ஆட்சியைப் பிடித்துருக்கிறார்கள். அதே போல சமயம். களப்பிர கால சமயநிலை. கட்டாயம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டியது. ஏனென்றால் அதில்தான் பல தவறான வதந்திகள் உலா வருகின்றன. ஒரு மன்னனே நினைத்தாலும் மொத்தமாக இன்னொரு மதத்தை நிராகரிக்க முடியாது. களப்பிர காலத்தில் வைதீக மதம் நிலையை தெளிவாக விளக்கியிருக்கிறார். அதே போல் இன்னொரு முக்கியமான தகவலாக இறையனார் அகப்பொருள் என்றொரு நூலை ஏன் இறைவன் எழுதியாக முன்வைத்து பூ சுற்றப்பார்த்தார்கள் என்றும் விளக்கியிருக்கிறார். எனக்கு புதுகை சுற்றுலாவில் இறைவன் எழுதிய ஓலைச்சுவடி எனக்காட்டி பணம் பறித்தது நினைவுக்கு வந்தது. தமிழ் செய்யுள்கள் பட்டியலை ஏற்கனவே படித்திருந்தாலும் இவர் இன்னும் புதிதாக பலதை காட்ட வியப்பாக இருந்தது. எவ்வளவு காலத்தால் இழக்கப்பட்டிருக்கிறது? புனைவெழுத்தாளர்களை தாண்டி ஓர் ஆய்வாளராக 125 ஆண்டிலும் கொண்டாட பட வேண்டியவராக மயிலையார் இருக்க காரணம் அவரது படைப்புகளே... வாசித்து அறிவீர்....

user_12094

★ 4/5
என் புத்தக விமர்சனம் இங்கே--->https://youtu.be/aTBjFyGoNsM?si=CcIf1...

user_12093

★ 4/5
"களப்பிரர்களின் ஆட்சியில் தமிழகம் " - மயிலை சீனி. வேங்கடசாமி ********************************************************** கிட்டதட்ட கிபி 250-600ம் ஆண்டு வரை ஆண்ட களப்பிரர்கள்., களப்பரர்கள் , களப்ராக்கள் என்றைழைக்கப்பட்ட, கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட இனம், மெல்ல வளர்ந்து தென்னகத்தை கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளனர். களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் சென்ற நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது. அவர்களை பற்றிய பெரும் செப்பேடுகளோ, நாணயங்களோ, வரலாற்று சிறப்புமிக்க சாதனை சரித்திர நிகழ்வுகளோ இல்லாததால், களப்பிரர்கள் என்ற ஒரு இனம் தமிழகத்தை ஆண்டது மிகத் தாமதமாகவே அறியக்கிடைத்திருக்கிறது . களப்பிர அரசர்களைப் பற்றி வரன்முறையான வரலாறு கிடைக்காமல், மேற்காட்டியபடி, அங்கொரு துணுக்கும் இங்கொரு துணுக்குமாகக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் களப்பிர அரசருக்குப் பெரிய எதிர்ப்புகளும் அரசியல் கலகங்களும் குழப்பங்களும் நாட்டில் இருந்துகொண்டிருந்தன என்பதைச் சில குறிப்புகளைக் கொண்டு அறிகிறோம். களப்பிரர்கள், மூவேந்தர்களுக்கு முன்பே பல்லவ, சளுக்கியர்களுக்கு இணையான, வலுவான நிலையில் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். அதாவது, சேர,சோழ,பாண்டியர்கள் குறுநில மன்னர்களாக, களப்பிரர்கள் பெருங்குடையின் கீழ், அவர்களின் ஆட்சிக்குட்பட்டவர்களாக! அதேவேளையில் தமிழகத்தின் தொண்டைமண்டலம்(எனும் வடகோடி மாவட்டங்கள்) மட்டும் பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்ததால், களப்பிரர்களின் ஆளுமை இம்மண்டலத்தில் நடைபெறவில்லை. இலங்கை களப்பிரர்கள் காலத்திலும் போர்களோடுதான் ஊடாடிகொண்டருக்கிறது. இலங்கை அரசர்களுக்குள்ளும் பாண்டிய சிற்றரசுகளின் படையெடுப்புகளாலும் நிம்மதியற்ற நிலையிலயே இலங்கை இருந்து வந்துள்ளதை அறியமுடிகிறது. இப்படி பற்பல வரலாற்று தகவல்கள், சான்றுகள், செப்பேடுகள் கொண்டும், சங்க கால இலக்கியங்களான அகநானூறு , குறுந்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, நற்றிணை , நாலாயிர திவ்வியப் பிரபந்தம் , பதிற்றுப்பத்து, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், பட்டினப்பாலை, பரிபாடல், பன்னிரு திருமுறைகள், பாண்டிக்கோவை, புறநானூறு, பெரியபுராணம், பெருங்கதை, மணிமேகலை உட்பட 130க்கும் மேலான தரவு நூல்களை கொண்டும் ஆய்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். களப்பிரர்கள் பற்றிய நேரடி வரலாற்று தகவல்கள், 3 முதல் 6ம் நூற்றாண்டு வரை கிடைத்த சான்றுகள், பாடல்கள், வரைபடங்கள் வைத்து ஒப்பீட்டளவில் இந்த ஆய்வு புத்தகம் இயற்றப்பட்டிருக்கிறது. சமணம், பௌத்தம் பற்றிய ஏராளமான குறிப்புகளும் அறியக்கிடைக்கிறது. இதனாலேயே அதிக அளவில் இப்புத்தகத்திலிருந்து குறிப்பெடுத்துள்ளோம்(Highlights). மேம்போக்காக அல்லாது ஊன்றி படிக்க வேண்டிய நூல்.!
Genres
Shelves
மயிலை சீனி. வேங்கடசாமி History book

More like this


ராஜராஜ சோழன் [Raja Raja Cholan]

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…

3.62/5 · 56 ratings
Check Price

Birbal the Wise

Author: Anant Pai

It is about a heaven without barbers A jealous queen Kidnapping – or should it be king-napping Akbar, and... ...The hanging o…

3.62/5 · 56 ratings
Check Price

துளு நாட்டு வரலாறு

“துளுநாட்டு வரலாறு” என்னும் இப்புத்தகத்தில் சங்க நூல்களில் துளுள் நாட்டைப் பற்றியுள்ள குறிப்புகளைத் தொகுத்து அந்த நாட்டின் பண்டைய வரலாற்றை உருவாக்க முயன்றிருக்கிறார். துளு ந…

3.62/5 · 56 ratings
Check Price

Tamil Tigress

Two days before Christmas in 1987, at the age of 17, Niromi de Soyza found herself in an ambush as part of a small platoon of militant Tamil Tiger…

3.62/5 · 56 ratings
Check Price

Smoke and Mirrors : An Experience of China

Winner of the Vodaphone Crossword Readers Choice Award 2008 by far the most well-informed and entertaining account of life in the Middle Kingdom b…

3.62/5 · 56 ratings
Check Price

தெற்கிலிருந்து ஒரு சூரியன்: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!

தெற்கிலிருந்து ஒரு சூரியன்: கருணாநிதியின் அயராத உழைப்புக்கான மரியாதை! திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொட…

3.62/5 · 56 ratings
Check Price

மனிதனுக்குள் ஒரு மிருகம் [Manithanukkul Oru Mirugam]

This book was published as a series in a Tamil weekly, Junior Vikatan a few years ago.

3.62/5 · 56 ratings
Check Price

சமணமும் தமிழும்

சமணமும் தமிழும்’ என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொ…

3.62/5 · 56 ratings
Check Price

Sebastian and Sons: A Brief History of Mrdangam Makers

The mrdangam is an integral part of the Karnatik stage, its primary percussion instrument. Yet—startling as this is— the instrument as we know it …

3.62/5 · 56 ratings
Check Price