மறைந்து போன தமிழ் நூல்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மறைந்து போன தமிழ் நூல்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.89/5 · 9 ratings

வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நேரிடுகின்றன. அந் நிகழ்ச்சிகளின் பயனாகச் சில சமயங்களில் எதிர்பாராத செயல்கள் விளைகின்றன. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் விளைவுதான் இந்த மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் புத்தகம். அந்நிகழ்ச்சி இது: எனக்கு மக்கட்பேறு கிடையாது. ஆனால், எனது நெருங்கிய உறவினரின் குழந்தைகள் இருவர் என் வீட்டில் வளர்ந்தனர். அன்பழகன் என்னும் பெயருள்ள மூன்று வயதுச் சிறுவனும், தங்கமணி …

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20369

★ 5/5
இது தமிழின் மிகப்பெரிய ஆராய்ச்சி நூல் என்பேன். ஏனென்றால் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன எனப் பட்டியல் போடுவது சுலபம். ஆனால் என்னென்ன இருந்து இல்லாமல் மறைந்து விட்டன என ஆய்வு செய்து பட்டியலிடுவது மிகவும் கடினம். முதலில் மயிலையார் இந்த ஆய்வினை ஏன் செய்தார் என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு வாழ்வில் தீராத்துயரம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மனதை திசைத் திருப்புவதற்காக இவ்வாய்வில் இறங்கியிருக்கிறார். இது தமிழ் ஆய்வுலகிற்கு மிகப்பெரும் கொடையாக இருக்குமென பலர் ஊக்குவிக்கவும் புத்தகமாக வெளியிட்டுருக்கிறார். அக்கால கட்டத்திலேயே பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இலக்கிய நூல்கள் - அகப்பொருள் - 32 இலக்கிய நூல்கள் - புறப்பொருள் - 9 இலக்கிய நூல்கள் - காவியம் - 9 இலக்கிய நூல்கள் - ஏனையவை - 67 இசைத்தமிழ் நூல்கள் - 10 நாடகத்தமிழ் நூல்கள் - 24 இலக்கண நூல்கள் - 45 பெயர் தெரியாத நூல்கள் சிதைவுண்ட நூல்கள் தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? மேலுள்ள பட்டியல்படி ஒவ்வொரு நூலாக விவரிக்கிறார். மயிலையாரின் புத்தகங்களிலேயே இதுதான் கடினமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பாதிக்கும் மேல் உரையற்ற செய்யுள்களால் நிரம்பியுள்ளது. சில செய்யுள்களைத்தான் வாசிக்க முயன்றேன். மற்றவற்றில் இது குறித்து எங்கு குறிப்பிட்டுருந்தது? அதை மயிலையார் எப்படி கண்டறிந்தார் என்ற விளக்கங்களை ஆர்வமுடன் படித்தேன். உண்மையில் அவை என சுவாரசியமானவையாக இருந்தன. இப்புத்தகத்தை வாசிக்கிறிர்களோ இல்லையோ இறுதிக் கட்டுரையான இப்படி இத்தனை நூல்கள் எப்படியெல்லாம் மறைந்திருக்கக் கூடும் என்ற கட்டுரை மிகவும் முக்கியமானது. அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு படிக்கையில் பல தமிழ் நூல்கள் குறித்து படித்திருக்க வேண்டும். அவ்வழி மயிலையார் குறிப்பிடும் நூல்கள் குறித்து ஏற்கனவே அறிந்திருந்ததை எண்ணி எனக்கு நானே சபாஷ் சொல்லிக் கொண்டேன். மயிலையார் குறிப்பிடும் நூல்கள் குறித்து தனித்தனியாக விளக்கமாக நிறைய எழுதலாம். சுவாரசியமாக இருக்கும். உதாரணத்திற்கு ஜைன ராமாயணம் குறித்து என் பக்கத்தில் எழுதியிருந்தேன். முதற்சங்க நூல்களில் தொடங்கி 150 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்கள் வரை அன்னாரது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதை பார்க்கையில் தோன்றுவது ஒன்றுதான். தமிழனுக்கு நூல்களை மதிக்காதிருக்கும் பழக்கம் இனவழமைதான் போலும்.
Shelves
மயிலை சீனி. வேங்கடசாமி book

More like this


தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். 'தமிழ் சமூகத்தினாலே மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கின்ற அழகுக் கலைகளைப் பற்றி இக்க…

3.89/5 · 9 ratings
Check Price

நுண் கலைகள்

ஆதிகாலத்தில் மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் தங்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரியாமல் விலங்கு போல அலைந்து திரிந்தான். பிறகு மெல்ல மெ…

3.89/5 · 9 ratings
Check Price

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் [Kalapirar Atchiyil Thamizgan]

தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாக வும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்கா…

3.89/5 · 9 ratings
Check Price

துளு நாட்டு வரலாறு

“துளுநாட்டு வரலாறு” என்னும் இப்புத்தகத்தில் சங்க நூல்களில் துளுள் நாட்டைப் பற்றியுள்ள குறிப்புகளைத் தொகுத்து அந்த நாட்டின் பண்டைய வரலாற்றை உருவாக்க முயன்றிருக்கிறார். துளு ந…

3.89/5 · 9 ratings
Check Price

புத்தரின் வரலாறு

நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னு…

3.89/5 · 9 ratings
Check Price