Reviews for உணவு யுத்தம்
18 reviews total
user_11998
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தை மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க!
user_11997
★ 4/5 Feb 02, 2026பல உணவுகளின் வரலாறு மற்றும் தோற்றம் பற்றி பேசும் சுவாரசியமான வாசிப்பு. உருளைக்கிழங்கு, சாபுதானா, ரொட்டி போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உணவுகள் எப்படி இந்தியாவிற்கு வந்தன என்பதை படிப்பது மிகவும் சுவாரசியமாக இருந்தது.
user_11996
★ 5/5 Feb 02, 2026நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு உணவையும் எடுத்துக்கொண்டு, அதைச் சுற்றியுள்ள அரசு மற்றும் உணவுத் தொழில்துறையின் அரசியலை ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார். மேலும் உணவின் வரலாற்றை ஆதாரங்களுடன் நிறுவுகிறார். குறிப்பாக நமது பூமி உணவு விஷயத்தில் எந்த திசையில் பயணிக்கிறது என்பதில் அக்கறை கொண்டவர்களுக்கு மிகச் சிறந்த வாசிப்பு.
user_11995
★ 4/5 Feb 02, 2026இலக்கியத்தைத் தாண்டி ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்பின் ஒரு வடிவமாகவே இந்த நூலைக் காண்கிறேன். சங்க கால உணவுக்கலன்களில் தொடங்கி நவீன உணவு சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல் வரை நீண்டு செல்கிறது இந்த நூல்.
வாழைப்பழத்தின் சந்தைக்காக ஒரு இனப்படுகொலையா! சாக்லேட் வணிகத்தின் பின்னணியில் அடிமை முறையா! டீயில் பிஸ்கட்டைத் தொட்டு உண்ணும் முறையை விளக்கும் இயற்பியல் விளக்கமா! என பல வியப்புக்குறிகளை நம்முள் வரைந்து செல்கிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
user_11994
★ 5/5 Feb 02, 2026உணவு யுத்தம் என்பது நிஜத்தில் துப்பாக்கி முனையில் ஒரு நாட்டைக் கைப்பற்றுவதை விட உணவு சந்தை வழியே எளிதாக ஒரு நாட்டை அடிமையாக வைப்பது நடந்தேறி வருகிறது.
நாம் அன்றாடம் ஆரோக்கியம் என நினைத்துக்கொண்டு சாப்பிடும் எந்தக் காய்கறியும் ஆரோக்கியமானது அல்ல — அனைத்தும் வியாபார நோக்குடன் மரபு மாற்றம் செய்யப்பட்டவை. வெறும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய கடுகு முதல் காய், பழம், தினை வரை எல்லாம் இப்பட்டியலில் அடங்கும்.
அனைவரும் படித்து, பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் யுத்தத்தில் இருந்து நம்மைத் தற்காத்து நமது அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
user_11993
★ 4/5 Feb 02, 2026உணவு அரசியல் என்ற வார்த்தையை எங்கோ கேட்டு, உணவில் ஏது அரசியல் என்று அதைப் பற்றித் தேடும்போது விழிப்புணர்வாக இருந்தது. அப்படி தேடியதில் கிடைத்த புத்தகம்தான் உணவு யுத்தம்.
இந்தியாவிற்குள் ஆங்கிலேயர்கள் நுழைந்ததற்கு மிளகை மலிவாக வாங்கிச்செல்வதற்காகத்தான். ஆனால் உப்பிற்கு நாம் வலுக்கட்டாயமாக ஆங்கிலேய அரசுக்கு வரி செலுத்தியிருக்கிறோம். தேயிலை தோட்டங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். செயற்கை பஞ்சத்தில் உயிர் இழந்திருக்கிறோம்.
கெட்சப் இல்லாத உணவகம் என்பதால் அவற்றைத் தவிர்த்து வேறு உணவகத்திற்குச் செல்கிறோம். ஆக, ஒரு உணவகத்தைத் தேர்ந்தெடுப்பதை கெட்சப் முடிவு செய்கிறது. ஆனால் கெட்சப்பிற்கு உகந்த சதைப்பற்றுள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளியை விளைவிக்க இத்தாலிய தக்காளி தோட்டங்களில் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாட்டு அகதிகள் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைச் சார்ந்தது. நாம் அரிசி, கோதுமை, பால் சார்ந்த உணவுப்பொருட்கள், தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற தரமான பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு அயல் நாட்டு உணவுகளை வாங்கி உண்கிறோம்.
வாழைப்பழ யுத்தம், உருளைக்கிழங்கு உலகை இணைக்கிறது போன்ற தலைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தது.
user_11992
★ 5/5 Feb 02, 2026அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். நூறு புத்தகங்கள் படித்த அனுபவத்தை இந்தப் புத்தகம் கொடுத்தது.
user_11991
★ 4/5 Feb 02, 2026நாம் தற்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு உணவுகளைப் பற்றி, குறிப்பாக துரித உணவுகள் பற்றி, அதன் வரலாறு, பெயர்க் காரணம், தயாரிக்கப்படும் முறை, அவற்றில் கலப்படம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும் தெளிவாக ஆதாரத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்.
பன்னாட்டு நிறுவனங்கள் உணவுப் பொருட்களை வைத்துச் செய்யும் அரசியல், வித விதமான விளம்பர உத்திகளை உபயோகித்து மக்களைக் கவர்ந்திழுக்கும் முறைகளைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.
மேலும் நம்முடைய பழங்கால மற்றும் பாரம்பரிய உணவுகள் பற்றியும், அவை எவ்வாறு நம்முடைய சூழலுக்கு ஏற்றது எனவும் அதன் அளவற்ற நன்மைகள் பற்றியும் அருமையாக விளக்கியுள்ளார்.