Reviews for மூன்றாம் பிறை - வாழ்வனுபவங்கள்
28 reviews total
user_11736
★ 4/5 Feb 02, 2026சில கதைகள் உண்மையிலேயே அருமையாக இருக்கின்றன. மலையாளத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
user_11735
★ 5/5 Feb 02, 2026பிறையல்ல... முழு நிலவு! மம்முட்டியின் வாழ்க்கை உண்மைகளை மறைக்காமல் பகிர்ந்திருப்பது அவரது நடிப்பை விட அதிகமாக என்னை ஈர்த்தது. அருமையான மொழிபெயர்ப்பு.
user_11734
★ 4/5 Feb 02, 2026மிகப்பெரும் கலைஞனின் மனிதம், எதார்த்தம், மறுபக்கம்.
சுய அனுபவங்களை சிறுகதைகளாக எழுதியுள்ளார். திரையில் காணும் மம்முட்டியைத் தாண்டி ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகளும் பார்வைகளும் இதில் தெரிகின்றன.
user_11733
★ 5/5 Feb 02, 2026மம்முட்டியின் வாழ்வனுபவங்கள் எளிமையாகவும் நேர்மையாகவும் பகிரப்பட்டுள்ளன. நல்ல வாசிப்பு அனுபவம்.
user_11732
★ 4/5 Feb 02, 2026மம்முட்டி தன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். பல கட்டுரைகளில் இறுதியில் அறிவுரை சொல்வது கொஞ்சம் சலிப்பு தட்டியது. அவற்றை வெறும் சம்பவமாகவே சொல்லியிருக்கலாம் — அதுவே போதுமானது என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. மற்றபடி மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.
user_11731
★ 5/5 Feb 02, 20262002-2003 இல் எழுதப்பட்ட அருமையான 23 கட்டுரைகள் — சிறுகதைகள் என்றும் சொல்லலாம்.
மம்முட்டி தான் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள், சமூகப் பார்வைகள் பற்றிய கதைகள் இவை. மம்முட்டியை நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் பிடித்திருக்கிறது இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு.
அழகான தமிழ் மொழிபெயர்ப்பு — ஷைலஜா.
user_11730
★ 4/5 Feb 02, 2026இலகுவான வாசிப்பு; அழகான மொழிபெயர்ப்பு.
ஒழுகிச் செல்லும் சரளமான நடை வேகமாக வாசிக்க வைத்தது. ஆசிரியரின் தன்னனுபவங்கள் இலகுவான நினைவு மீட்டலாக அமைந்துள்ளன. ஒரு நடிகரின் பெரிய பிம்பத்தை இதில் பார்க்க முடியவில்லை — அகங்காரம், தலைக்கனம், பொறாமை, பயம் போன்ற குணங்கள் கொண்ட சக மனிதனாக எழுதியிருக்கிறார்.
பல சொற்றொடர்களை ரசித்தேன். கேரளத்தில் வாழ்வதால் மலையாளச் சாயலைக் கண்டுகொள்ள முடிந்தது. மூல அழகை குலையாமல் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது.
புதிதாக வாசிக்கத் தொடங்குபவர்களும், கேரள பண்பாட்டுக் கூறுகளை அறிய விரும்புபவர்களும் வாசிக்கலாம்.
user_11729
★ 4/5 Feb 02, 2026ஒரு சட்டப் பட்டதாரியும் திரை நட்சத்திரமும் இவ்வளவு அழகாக எழுத முடியுமா, நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தத்துவ முடிவுகளை இயல்பாகவும் கவிதை நடையிலும் எழுத முடியுமா என்று ஆச்சரியப்படுகிறேன்.
மம்முட்டியின் பதிப்பா அல்லது ஷைலஜாவின் மொழிபெயர்ப்பும் தமிழின் இலக்கிய வண்ணமும் கூடுதல் நிறம் சேர்த்ததா? இலகுவான ஆனால் சுவாரஸ்யமான வாசிப்பு. மம்முட்டியின் உலக இலக்கிய ஆர்வமும், நீண்ட கால வாசிப்பும் அவரது எழுத்தின் அழகுக்குக் காரணம் என்பதை உணர முடிந்தது. மொழிபெயர்ப்பே இவ்வளவு அருமையாக இருந்தால் மூலம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்!
user_11728
★ 5/5 Feb 02, 2026நடிகனாக அறிமுகமான மம்முட்டியை எழுத்தாளனாக அறிமுகப்படுத்தியது "காய்ச்சப்பாடு" என்னும் வாழ்வனுபவப் புத்தகம். அதன் தமிழ் மொழிபெயர்ப்புதான் "மூன்றாம் பிறை".
23 கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் எங்கும் இது மொழிபெயர்ப்பு என்று தெரியாத வண்ணம், மம்முட்டியே நம்மிடம் உரையாடுவது போல மிக நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார் ஷைலஜா.
தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், சவால்கள், நிகழ்வுகள் — எல்லாவற்றையும் வெறும் சம்பவங்களாகக் கடக்காமல் சமூகப் பார்வையுடன் நமக்குக் கடத்துகிறார். தனது பெயரை மறைத்த கதையிலிருந்து மம்முட்டி ஆன தருணம் வரை — "அழைத்தலின் பின்னுள்ள அன்பும் வாத்ஸல்யமும்தான் பெயரைச் சந்தோஷமாக்குகிறது" என்ற தத்துவார்த்த பார்வையும் தருகிறார்.
user_11727
★ 2/5 Feb 02, 2026நம் அனைவருக்கும் பிரியமான நடிகர் மம்முட்டி 2002-03 ஆண்டுகளில் எழுதிய நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு இது. தன் வாழ்க்கையின் சிறு சிறு நினைவுகளையும் அனுபவங்களையும் அவற்றிலிருந்து கற்றுக்கொண்டவற்றையும் பகிர்கிறார்.
விசேஷமாக எடுத்துச் சொல்லக்கூடிய மொழிநடையோ வியக்க வைக்கும் அனுபவங்களோ இல்லை — ஒரு சாதாரண மனிதன் தன் நினைவுகளைப் பகிர்கிறான் என்று மட்டுமே சொல்லலாம்.
"ஓமர் ஷரீஃப்" என்ற பெயரில் அறியப்பட விரும்பிய கல்லூரி மாணவன் முகமது குட்டி, சக மாணவன் சசிதரனால் "மம்முட்டி" என்று அழைக்கப்பட்டது — அந்த சாதாரண பெயர்தான் பின்னாளில் உலகெங்கும் அசாதாரண நடிகரை அழைக்கப் பயன்பட்டது.
தன் அகங்காரம், விமர்சனங்கள், உதவியவர்கள், நேசித்தவர்கள் பற்றி 23 நினைவுக் குறிப்புகளில் பகிர்கிறார். எல்லாமே அவரது பார்வையில் எழுதப்பட்டவை — அதனால்தான் "காய்ச்சப்பாடு" (பார்வை) என்ற பெயர்.