Reviews for யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்
19 reviews total
user_11407
★ 4/5 Feb 02, 2026ஜெருசலேம் — யூத, கிருத்துவ, இசுலாமிய ஆகிய மூன்று மதங்களின் புனித பூமி. இந்தப் புனித நகரம் யாருக்கு சொந்தம் என நடந்த சண்டையில் மாண்ட மனிதர்களின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை.
இஸ்ரேல் இன்று இந்த இடத்தை முழுவதுமாக கைப்பற்றிவிட்டது. சாலமன் ஆலயம் மீண்டும் ஜெருசலேமில் கட்டப்பட வேண்டும் என்ற கனவை நோக்கியே யூத மக்கள் ஒவ்வொருவரும் உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
யூதர்கள் வரலாற்றில் பல இன்னல்களை சந்தித்தவர்கள். ஹிட்லரின் கொடுமையில் சிக்கி கொத்துக்கொத்தாக மாண்டவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டும். ஜெருசலேம் நகரத்திற்காக யூதர்களின் ரத்தம் ஆற்று வெள்ளமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.
user_11406
★ 5/5 Feb 02, 2026பல ஆண்டுகளாக யூதர்களின் வரலாற்றைப் படிக்க விரும்பினேன். இந்தப் புத்தகம் ஒரு விருந்தாக இருந்தது.
கிருத்துவம், இசுலாம், யூதம் ஆகிய மூன்று மதங்களைப் பற்றிய என் பார்வையையே மாற்றிவிட்டது. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைக்கான விரிவான காரணங்களை புரிந்துகொள்ளலாம்.
யூதர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், எந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டாலும் எப்படி வளர்ந்தார்கள் — அவர்களின் வரலாறு இரத்தத்தாலும் போர்களாலும் நிறைந்தது. கடவுள் மீதான நம்பிக்கையும் தாயகம் மீதான வேட்கையுமே அவர்களை முன்னேறச் செய்கிறது.
நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலே அவர்களின் திறமைக்கு சான்று. சப்பாத் ஓய்வு நாளில் அவர்கள் எதுவுமே செய்யமாட்டார்கள் — அந்த அளவுக்கு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பார்கள்.
இஸ்ரேலின் ரகசிய உளவு அமைப்பு மொசாட் பற்றிய தகவல்கள் ஆச்சரியமாக இருந்தன. இந்த மதத்தில் மதமாற்றமே கிடையாது, மாற விரும்பினாலும் மிகவும் கடினமான சடங்குகளை கடக்கவேண்டும் என்பது சுவாரசியம்.
தமிழில் படிக்க கிடைத்ததால் முழுமையாக மூழ்கி அனுபவிக்க முடிந்தது. மிகவும் தகவல் நிறைந்த, திருப்தியான வாசிப்பு அனுபவம்.
user_11405
★ 4/5 Feb 02, 2026மிகவும் தகவல் நிறைந்த புத்தகம்! 5775 ஆண்டுகால யூத வரலாற்றை விரிவாகக் கூறுகிறது.
user_11404
★ 5/5 Feb 02, 2026யூதர்களின் வரலாறும் வாழ்க்கையும் என்ற இந்நூல் மிகவும் சிறப்பாக உள்ளது. யூத இனத்தின் பாரம்பரியத்தையும் போராட்டத்தையும் ஒருங்கிணைத்து வழங்கும் அருமையான நூல்.
user_11403
★ 4/5 Feb 02, 2026யூதர்களின் துரதிர்ஷ்டங்களையும் அவர்கள் மீண்டும் எழுந்த விதத்தையும் சுவாரசியமாக விவரிக்கிறது.
user_11402
★ 4/5 Feb 02, 2026ஓர் இனத்தின் வரலாற்றினைப் புரட்டிப்பார்த்தால் ஒரு சில ரத்தக் கறைகள் இருப்பது சாதாரணம். ஆனால் யூதர்களின் வாழ்க்கையும் வரலாறும் இன்றுவரை ரத்தத்தால் மூழ்கியுள்ளது.
இப்புத்தகத்தினை வாசித்த பிறகுதான் யூதர்கள் குறித்தும், ஹிட்லர் ஏன் யூதர்களை குறிவைத்து கொன்றொழித்தார் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. ஹிட்லரின் வதை முகாம்கள் பகுதியினை வாசிக்கும்போது மனம் பதைபதைக்கிறது.
யூதர்களின் முன்னோர்கள், அவர்கள் எவ்வாறு தோன்றினார்கள், அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே இன்றுவரை நிகழ்ந்துவரும் யுத்தம், தனி நாடு கேட்டு போராடிய யூதர்களுக்கு ஹிட்லரின் செயல்களே மறைமுகமாக தனிநாடு பெறச் செய்தது என்பதையும் அவர்களின் மத நம்பிக்கை, பண்டிகைகள், சமூகம், சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் இந்தியாவில் யூதர்களின் நிலை என்ன என்பதையும் மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார். யூதர்கள் பற்றி தெரிந்துகொள்ள உகந்த புத்தகம்.
user_11401
★ 5/5 Feb 02, 2026என் மதமான கிருத்துவத்தை புரிந்துகொள்ள மிகவும் அவசியமான புத்தகம். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைகளையும் தெளிவாக விளக்குகிறது.
user_11400
★ 5/5 Feb 02, 2026ஓர் இனத்தின் வரலாற்றை முழுவதும் அறியத் திரும்பிப் பார்த்தோமானால் ஆங்காங்கே இரத்தக் கறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இரத்தத்தாலே தோய்த்தெடுத்த ஓர் இனம் இருக்குமென்றால் அது யூதர்கள் தான்.
ஹிட்லர் ஞாபகத்திற்கு வரும்போது யூதர்களும் சேர்ந்து வருவது சரித்திரம் விட்டுச் சென்ற சுவடு. மனிதக் குலம் உண்டான காலத்திலிருந்து இப்புத்தகம் தொடங்குகிறது. மோசஸ் எகிப்தில் துன்பத்தால் அவதிப்பட்ட யூதர்களைக் கடவுளின் நிலம் நோக்கி நகர்த்தி வந்ததிலிருந்து இரத்தத்தில் நனையும் சரித்திரம் தொடங்குகிறது.
இஸ்ரேல் கடவுள் யூத இனத்திற்காக அளித்த பூமி என்பதை ஆண்டாண்டு காலமாக பற்றிக்கொண்டு உயிரையும் துச்சமாக மதித்து இனப் பெருமையை நிலைநாட்ட அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு ஆச்சரியங்களையே கொடுக்கிறது.
உலகம் மொத்தமும் சேர்ந்து ஓர் இனத்தை விரட்டியடித்தால் அவர்கள் கொடுக்கும் பதிலடி நயவஞ்சகத்தின் வழியே தான் வரும். கூட்டுச் சமூகத்தின் உயர்வை யூதர்களின் பாதையில் தான் உணரமுடியும். அதுவே அவர்களின் பலம். அது இருக்கும் வரை எக்காலத்திலும் அவர்களை அழிக்க முடியாது.
user_11399
★ 4/5 Feb 02, 2026இப்புத்தகத்திற்கு யூதர்கள் என்ற பெயருக்கு பதில், "இனம்" என்றிருந்திருக்கலாம்.
இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாசின் காலத்தில் ஆரம்பிக்காமல், கடவுள், மனித படைப்பு, மோசே, ஆபிரகாமிய மதங்கள், யூதம், கிருத்துவம், இசுலாம் எனச் சென்று பின் வரலாறாக இனஎழுச்சி, பிற இனமக்களால் துரத்தியடிப்பு, உலகப்போரில் யூதர்களின் நிலை, தற்கால வளர்ச்சி, சடங்கு சம்பிரதாயங்கள் வரை விவரிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் தலைசிறந்த அறவியல் வல்லுநர்கள், மேதாவிகள் பலர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே!
இயேசு உயிர்த்தெழுந்தார் என நம்பியவர்கள் கிருத்துவர்களாகவும், அவர் ஒரு தீர்க்கதரிசி என நம்பியவர்கள் யூதர்களாகவும் தொடர்ந்தனர். ஜெருசலமை புனிதநகரமாகவும், சாலமோன் தேவாலயத்தின் மீதமான சுவரை பிரார்த்தனை பிம்பமாகவும் வழிபடுகின்றனர்.
எந்த மூலைக்கு விரட்டியடிக்கப்பட்டாலும், யூதர்களின் எண்ணமும் செயலும் தங்கள் தேசமான ஜெருசலமையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் நோக்கியே இருக்கும். அந்த பகுதியே தற்போதைய இஸ்ரேல்.
பற்பல போர்களையும், இன அழித்தொழிப்புகளையும், கொடுங்கோலர்களையும் மீறி, யூத இனம் பிழைத்து தற்போது உலகையே இயக்குகிறதென்றால், அதற்கான காரணம் அவர்களின் இன ஒற்றுமையும், இனப் பாசமுமே ஆகும்.