Reviews for உப பாண்டவம்
20 reviews total
user_10931
Feb 02, 2026ஊரடங்கின் வார இறுதியைக் கௌரவர்களோடு கழிக்க முடிவுசெய்தேன். 2019 புத்தகக் கண்காட்சியில் வாங்கப்பட்டு இப்பொழுதாவது படிக்கச் சொல்லி என் விரல்களைப் பற்றிக்கொண்டது நூல்.
யாரும் அறியாத கதையை எழுதுவது வேறு; யாவரும் அறிந்த கதையைச் சலிப்பின்றி மீண்டும் படிக்கத் தூண்டுவது வேறு; அறிந்த பகுதிகளின் அறியப்படாத கோணத்தையும், புலப்படாத பின்புலத்தையும், வெளிப்படாத விளைவுகளையும், கவனிக்கப்படாத கதை மாந்தர்களின் முடிவுகளையும் எழுதுவது தனித்துவமானது. அதையே ஆசிரியர் இந்நூலில் செய்துள்ளார்.
பாரதக் கதையில் மட்டுமல்ல, உவமைகளிலும் வாழ்வில் கவனிக்கத் தவறிய பலவற்றைக் கூறி, படித்த வரியை மீண்டும் படிக்க வைத்து மனதில் பதிய வைக்கிறார். "கனவில் இருந்து பறிக்கப்பட்ட ஒரு மலரைக் கையில் வைத்திருப்பது போல", "நினைவுடன் பிறப்பதைப் போல துரதிர்ஷ்டம் எதுவும் இருக்கிறதா" - இப்படி எத்தனையோ மனதைத் தொடும் வரிகள். இரு நூறு பக்கங்களை இளைப்பாறாமல் நடந்து இனிதாய்க் கழிந்தன இரண்டு நாட்கள்!
user_10930
★ 5/5 Feb 02, 2026உப பாண்டவம் மகாபாரதத்தின் நவீன புனைவு. ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்கள் மூலம் இந்திய நிலவியலையும் பாரதக் கதாபாத்திரங்களையும் புதிய பரிமாணத்தில் காண முடிந்தது.
user_10929
★ 5/5 Feb 02, 2026அற்புதமான வர்ணனையுடன் மகாபாரதத்தை ஒரு சிறப்பான பார்வையில் காட்டும் நூல். எஸ்.ராமகிருஷ்ணனின் மொழிநடை இதிகாசத்தின் ஆழத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.
user_10928
★ 4/5 Feb 02, 2026பல ஆண்டுகளாகத் தேடியலைந்த புத்தகம், 2016 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆசிரியரின் கையெழுத்தோடு வாங்கப்பட்டு, நாடு கடந்து கடல் கடந்து கைக்குக் கிட்டியது. கிடைத்துப் பல மாதங்களாகியும் படிக்கும் மனநிலை ஏற்படவில்லை. நடுவில் ஆரம்பித்து முப்பது பக்கங்களுடன் நின்ற வாசிப்பைக் கடந்த இரு நாட்களில் முடித்துவிட்டேன்.
எஸ்.ரா-வின் எழுத்து நடையும் காட்சி விவரணைகளும் மிகவும் வசீகரிக்கின்றன. பாரதக் கதை ஒரு தூர தேச பயணியின் மூலம் விரிவடைகிறது. முன் பின்னாகக் கதை மாந்தர்கள் அறிமுகமாகின்றனர். ஆரம்பத்தில் பெயர்கள் கொஞ்சம் குழப்பத்தைக் கொடுத்தாலும் கதையின் போக்கில் அது தெளிவடைகிறது.
பாரதத்தையும் அதன் உபகதைகளையும் அவற்றிற்கான காரணிகளையும் வாசிக்க வாசிக்க மலைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒரே கதைதான் ஒவ்வொருவரின் புரிதலில் வேறுவேறு கதைகளாக மாறிவிடுகிறது.
user_10927
★ 5/5 Feb 02, 2026மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசம் மனிதர்களின் அனைத்து அடிப்படை பண்புகளையும் - வீரம், காதல், நட்பு, தீமை, நன்மை, கற்பனை என அனைத்தையும் உள்ளடக்கியது. வேத வியாசர் ஒளிர்விக்கும் இந்த மாய உலகில் பயணிக்கும் ஒவ்வொருவரும் தமது கண்களாலும் புரிதலாலும் அதை உள்வாங்குகின்றனர்.
எஸ்.ராமகிருஷ்ணன் அத்தகையதொரு பயணி. உப பாண்டவம் மூலம் தனது அனுபவத்தையும் பயணத்தையும் புதிய மொழியிலும் புதிய பரிமாணத்திலும் விவரிக்கிறார். திருதராஷ்டிரன், பீஷ்மர், விதுரன், சகுனி, காந்தாரி, திரௌபதி, குந்தி போன்றோரின் அகஉலகமும் வெளிப்பாடுகளும் இந்நூலின் மையம்.
உப பாண்டவம் கேட்டு அறிவதற்கான பிரசங்கம் அல்ல - அனுபவிக்க வேண்டிய பயணம். எல்லா பாதைகளும் அஸ்தினாபுரத்துக்கே இட்டுச் செல்கின்றன.
user_10926
★ 3/5 Feb 02, 2026மகாபாரதமும் இராமாயணமும் நினைவு தெரிந்த வயதிலிருந்தே படித்துக் கொண்டே வந்திருக்கிறேன். மகாபாரதம் சுவையாக இருந்த அளவிற்கு இராமாயணத்தில் ஒன்ற முடிவதில்லை. ஒவ்வொரு வயதிலும் இந்த இதிகாசங்களைப் படிக்கும்போது ஒரு புதுவிதக் கண்ணோட்டத்தை அடையாமல் இல்லை.
உப பாண்டவம் நிச்சயம் மகாபாரதத்தைத் தெரிந்த ஒருவர் மட்டுமே படித்துச் சுவைக்கக் கூடிய நூல். நிகழ்வுகள் காலவரிசையில் செல்லவும் இல்லை, 400 பக்கங்களில் முழுமையான மகாபாரதத்தை எதிர்பார்க்கவும் முடியாது. ஒரு பயணியின் கண்ணோட்டத்தில், பெரும்பாலான மகாபாரதங்களில் முக்கியத்துவம் தரப்படாத பகுதிகள் மற்றும் நபர்களைப் பற்றித் தொகுத்து வழங்கப்பட்டிருப்பதே இந்நூல்.
அறிந்த கதாபாத்திரங்கள் பற்றிய புதிய கண்ணோட்டமும், வர்ண பேத அடிப்படையிலான போர் முறைகள், ஆயுதம் ஏந்தும் உரிமை போன்ற அக்காலத்து வழக்கங்களும் இதில் வெளிப்படுகின்றன. மகாபாரதக் கதை ஓரளவு தெரிந்திருந்தால் நிச்சயம் படிக்கலாம்.
user_10925
★ 4/5 Feb 02, 2026மகாபாரதப் பாண்டவக் கதையில் பேசப்படாத மாந்தர்களைப் பற்றி நவபுனைவாக எழுதப்பட்ட நூல். மகாபாரதத்தை முழுமையாக யாரும் படித்ததில்லை - மூலமொழியில் 14000 பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். வடநாட்டுப் பயணமும், கர்நாடக மாநிலத்துப் பெரியவர் ஒருவர் மூலம் மகாபாரதத்தின் மூலமொழி மொழிபெயர்ப்பை அறிந்ததும் இந்நாவலுக்கான அடித்தளம்.
முதல்நபர் பார்வையில் எழுதப்பட்ட இந்நூலில், ஆசிரியர் அஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம், துவாரகை, இமயம் எனப் பயணிக்கிறார். சூல், பால்ய விருட்சம், உதிரவாசிகள், நகரங்களின் உரையாடல், இரு உடலாளர்கள், மாயசபை எனப் பதினெட்டு அத்தியாயங்களில் மகாபாரத மாந்தர்களின் பிறப்பு, வாழ்வு, போர், முடிவு அனைத்தும் விரிகின்றன.
திருதராஷ்டிரன், பீஷ்மர், விதுரன், சகுனி, காந்தாரி, திரௌபதி, குந்தி போன்றோரின் அகஉலகமும் அதன் வெளிப்பாடுகளும் இந்நாவலின் மையம். நமது சிந்தையிலும் ஆழ்மனத்திலும் உள்ளிறங்கி நியாய தர்ம தராசை வெளிக்கொணரும் எழுத்துக்கள். Psycho-Tragedy Drama எனலாம் - பொறுமையாக நேரமெடுத்துப் படிக்க வேண்டிய புத்தகம்.
user_10924
★ 4/5 Feb 02, 2026மகாபாரதத்தின் சுருக்கம் ஒரு வழிப்போக்கனூடே விவரிக்கும் இந்நூல், கதாநாயக-வில்லன் பாத்திரங்களை அழித்தொழித்து, அவற்றுக்குரிய இயல்பினூடே பாண்டவர்களின் வாழ்வியல் முறைகளையும் தர்ம அதர்மங்களையும் இயல்பாய் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
ஒரு வனம் அழியும்போது ஏற்படும் சலனங்களைப் பாண்டவர்களின் மாய நகரினூடே எடுத்துச் சொல்லப்படுகிறது. இதன் கதை பெண்களின் சக்தி மூலமாகவே கொண்டு செல்லப்படுகிறது. தொடக்கம் குழப்பத்தில் தொடங்கினாலும் விறுவிறுப்பான நிலை ஆசிரியரின் எழுத்தினூடே விரிந்து செல்வதோடு, வெவ்வேறு நிகழ்வுகள் முற்றுப்பெறாமல் ஒருமித்தே பயணித்து ஒரு புள்ளியில் முற்றுபெறுகின்றன.
படித்து முடித்தபோது மனதில் கனமும் வெறுமையும் ஏற்பட வைக்கும் இந்த நாவலை அவசியம் படிக்கலாம்.
user_10923
★ 4/5 Feb 02, 2026மகாபாரதக் கதையல்ல இது, எனினும் மகாபாரதத்தில் வரும் பெரிதும் அறியப்படாத நபர்கள், சம்பவங்கள் பற்றி 18 தலைப்புகளில் எழுதப்பட்டவை. படிப்பதற்கு முன்பு சிறிதளவேனும் மகாபாரதம் பற்றித் தெரிந்திருத்தல் அவசியம்.
கதையாசிரியர் துரியோதனன் படுகளம் காணக் காஞ்சிபுரம் செல்கிறார். செல்லும் வழியில் ஒரு குடுகுடுப்பைக்காரனைச் சந்திக்கிறார், அவன் யாரும் இல்லா நீர்நிலையில் அஸ்வத்தாமா இருப்பதாகக் கூறிச் செல்கிறான். பின் பயணி ஒரு நதியைக் கடந்து அஸ்தினாபுரம் செல்கிறார், அங்கு மகாபாரதக் கதையை விளக்கும் இரு சூதர்களைச் சந்திக்கிறார் - அதில் ஒருவர் பார்வையற்றவர், மற்றவர் செவித்திறனற்றவர்.
சூல், பால்ய விருட்சம், உதிரவாசிகள், நகரங்களின் உரையாடல், இரு உடலாளர்கள், மாயசபை, விடுபட்ட குரல்கள், கதா ஸ்த்ரீகள், உபபாண்டவர்களைத் தேடி என ஒவ்வொரு அத்தியாயமும் மகாபாரதத்தின் வெவ்வேறு பரிமாணங்களை விரித்துக்காட்டுகிறது. முக்கியமாக, கவனிக்கப்படாத கதை மாந்தர்களின் வாழ்வும் முடிவும் ஆழமாக ஆராயப்படுகின்றன.
user_10922
★ 5/5 Feb 02, 2026பாரதத்தில் சஞ்சயன் பக்கம் சாராதவன். சஞ்சயன் ஒரு போர் சாட்சி. சஞ்சயனைப் போல ஒரு வழிப்போக்கனாய் நாம் இருந்து மாயநகரான அத்தினபுரியின் நிகழ்வுகள் அனைத்தையும் நிழலைப் போல காண நேரிட்டால்?
ஒரு வழிப்போக்கன், அவனுடைய மனப் பிரதிபலிப்பு - இதைத் தாண்டிய எந்த ஆதரவையும் யாருக்கும் நீட்டிக்கவில்லை எஸ்.ரா. ஒரு பெரும் வெற்றியைத் தாண்டி, இந்த வெற்றியெல்லாம் மாயப் பிம்பம் என்னும் கோரமான வெறுமையின் முகத்தை எளிமையாகக் காட்டியுள்ளார்.
மாய நகரான அத்தினபுரியைக் காணும் ஆவலுக்குத் தூபம் போடுகிறது உப பாண்டவம்.