Reviews for இரும்பு குதிரைகள்
27 reviews total
user_10886
★ 4/5 Feb 02, 2026குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று கேட்டே பழகிவிட்ட நம்மிடம், குதிரைகள்போல் வளர்ச்சி கண்டால் எவ்வளவு சிறப்பாகும் என ஆசிரியர் கூறியிருப்பது சிறப்பு. குதிரையை மனிதனாக ஓடவிடும் கவிதைகள் மிகவும் அருமை.
லாரி தொழிலைப் பற்றி ஆரம்பித்து, நெடுஞ்சாலையின் இடையில் வரும் விலைமாதர் வாழ்க்கைத் தொட்டு, இல்வாழ்க்கையும் பேசப்பட்டுள்ளது. காதல் மணம்புரிந்து கவிதை கிறுக்கும் கதாநாயகன், வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிய அவலம் அறியாதவன்.
வாழ்க்கை என்பது யாது என்று அலறும் மாந்தர்களில் ஒருத்தியாக காயத்ரி! மகளின் முற்போக்கான முடிவுகளை ஆமோதிக்கும் நாணு ஐயரின் முதிர்ச்சி பிரமிக்க வைக்கிறது. ஆயிரம் கேள்விகளைத் தூண்டும் அற்புதமான நாவல்!
user_10885
★ 4/5 Feb 02, 2026இந்நாவலின் கருத்துகளுடன் எனக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், பாலகுமாரன் தன் கதாபாத்திரங்கள் வழியாக தன் சிந்தனைகளை முன்வைக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. முழுமையாக உடன்பட முடியவில்லை என்றாலும், அருமையாக எழுதப்பட்ட நாவல்.
user_10884
★ 4/5 Feb 02, 2026சுவாரசியமான கதாபாத்திரங்கள், பாலகுமாரனின் பந்தய புற கதை போல் அமைந்திருக்கிறது.
காயத்ரி மிகவும் முற்போக்கான சிந்தனை கொண்ட பெண். கதாசிரியர் அப்போதே லிவிங் டுகெதர் உறவு பற்றி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
user_10883
★ 5/5 Feb 02, 2026காலத்தால் அழிக்க முடியாத படைப்பு!
பல்வேறு மனிதர்களின் வியாபார நுணுக்கங்களை, உணர்வுகளை, வாழ்க்கை முறைகளை உள்ளது உள்ளபடியே நேர்த்தியாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக படைக்கப்பட்ட வியக்க வைக்கும் படைப்பு.
user_10882
★ 4/5 Feb 02, 2026புத்தகத்தில் உள்ள எல்லா கருத்துகளுடனும் நீங்கள் உடன்பட வேண்டியதில்லை. ஆனால் சமூகத்தின் பல்வேறு தட்டுகளைச் சேர்ந்த, மிகவும் மனிதத்தன்மை கொண்ட, தெளிவான கருத்துகளுடைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. இந்தக் கதாபாத்திரங்களும் அவர்களின் உறவுகளும்தான் இப்புத்தகத்தை மிகவும் ஈர்க்கும் வாசிப்பாக மாற்றுகின்றன.
user_10881
★ 5/5 Feb 02, 20261980களின் தொடக்கத்தில் கல்கியில் தொடர்நாவலாக 42 அத்தியாயங்களில் எழுதப்பட்ட நாவல். பாலகுமாரன், தான் வேலை செய்த டிராக்டர் கம்பெனி மூலம் கிடைத்த அனுபவத்தில் 40 சதவீத அளவு தகவல்களைக் கொண்டு இப்புனைவை இயற்றியுள்ளார்.
லாரி தொழில் தொடர்பான பாகங்கள், பழுது, சரக்கு ஏற்றி செல்வது, அந்தத் தொழிலின் சாதக பாதகங்கள், ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், விலைமாதர் வாழ்க்கை, சரக்கு போக்குவரத்து தொழிற்சாலை ஊழியர்களின் வேலைப்பளு என பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வியல் யதார்த்தங்களைப் படம் பிடிக்கும் விதமாக இந்நாவல் அமைந்திருக்கிறது.
எங்கெங்கோ சுற்றித் திரியும் கதைமாந்தர்கள், வெகு இயல்பான சந்திப்புகளை நிகழ்த்தி, நூலில் கோர்க்கப்படும் முத்துக்களைப் போல ஒன்றுடன் ஒன்று கோர்த்து, வாசிப்பவரையும் இக்கதைக்குள் பயணப்படவைக்கிறார் பாலகுமாரன்.
நாணு ஐயர்-காயத்ரியின் முற்போக்கு சிந்தனை, விசுவநாதன்-காயத்ரி கவிதையாடல், தாரிணி-விசுவநாதன் குடும்ப யதார்த்தங்கள், விஸ்வநாதன் எழுதும் குதிரைக் கவிதைகள் எனப் பல கலவை அம்சங்களை கொண்ட அற்புதமான நாவல். பாலகுமாரனின் தலைசிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.
user_10880
★ 4/5 Feb 02, 2026ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கிய சில மாதங்களிலேயே வேலைப்பளு தலைக்குமேல் ஏறியது. கல்லூரி வாழ்க்கையில் மனதிற்கு பிடித்தாற்போல் வாழ்ந்து வந்த எனக்கு, வார இறுதியில் கிடைக்கும் இரண்டு நாட்கள் சற்றும் போதவில்லை. சில வார இறுதிகளிலும் மடிக்கணினி கொடுக்கப்பட்டு வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டேன். "என்னடா வாழ்க்கையிது" என மிக விரைவிலேயே நொந்துகொள்ளத் தொடங்கினேன்.
என்னைப்போல் ஆயிரம் ஆயிரம் பேர் இருப்பர் என நம்புகிறேன். இந்நிலையில், வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக அருமையாக எடுத்து விளக்கியது இப்புத்தகம்.
என்னைப்போன்ற விரக்தியில் யாரேனும் இருப்பீராயின், இப்புத்தகம் படிப்பது ஓர் எனர்ஜி டானிக் போன்றிருக்கும்! அருமையான படைப்பு!