Reviews for யவன ராணி - இரண்டாம் பாகம்
18 reviews total
user_9259
Feb 02, 2026கதையின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன்.
user_9258
Feb 02, 2026வரலாற்று நாவல்கள் மிகவும் பிடிக்கும். இந்த வகையான புத்தகங்கள் வாசிக்க எப்போதும் ஆர்வமாக இருக்கிறேன்.
user_9257
★ 5/5 Feb 02, 2026சுவாரஸ்யமான வரலாற்று நாவல். கரிகால சோழனின் ஆட்சிக் காலம் குறித்த பல விவரங்களை அறிய முடிகிறது. சாண்டில்யன் அனைத்துக் கதாபாத்திரங்களையும் அழகாகப் படைத்திருக்கிறார். சிறந்த நாவல்.
user_9256
★ 5/5 Feb 02, 2026சாண்டில்யனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்புதினத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அவற்றின் பண்புகளும் அருமையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
பிரும்மானந்தர், கரிகாலன், பூவழகி, குமரன்சென்னி, அல்லி, நாங்கூர்வேள் எனப் பல கதாபாத்திரங்கள் கொண்ட இந்நாவலின் முக்கிய இரு கதாபாத்திரங்கள் யவன ராணியும் இளஞ்செழியனும். சம்பவங்களும் கலை வர்ணனைகளும் நிறைந்திருக்கின்றன. அந்தக் காலத்தின் வெளிநாட்டுத் தொடர்புகளையும் இப்புதினத்தில் காணலாம். அருமையான புத்தகம்.
user_9255
★ 5/5 Feb 02, 2026புகார் கடற்கரையில் நடந்துகொண்டிருக்கும் இளஞ்செழியன் காலில் ஏதோ தட்டுபட, கீழே பார்க்கும்போது பேரழகு கொண்ட ஒரு பெண்ணின் உடலைக் காண்பதிலிருந்து தொடங்குகிறது இந்தப் பெரும் நாவல்.
அவள் யார் என்ற கேள்வியில் தொடங்கி, தன் நாட்டிற்கே எதிரி என்றும் ராணியாக முடிசூட வந்தவள் என்றும் அறிந்த பின்னும், அத்தை மகள் பூவழகி இருப்பதை மறந்து மனத்தடுமாற்றம் அடையும் இளஞ்செழியன், இறுதியில் உயிரையும் பணயம் வைத்துப் போரிடுகிறான்.
காற்றை விட வேகமான ரதத்தில் போர் புரியும் மாவீரன் கரிகாலன், சூழ்ச்சியால் தந்தையை இழந்து சிறைப்பட்டு, தளபதி இளஞ்செழியன், மாமன் இரும்பிடர்த்தலையார், ஆசை நாயகி அல்லி ஆகியோருடன் இணைந்து நாட்டை மீட்பதே இந்நாவலின் மையக் கதை.
துறவறம் பூண்ட பிரும்மானந்தரும், சமண அடிகளும், பூவழகியும், இரும்பிடர்தலையாரும் கரிகாலனுக்காகச் செய்யும் தியாகங்கள் நாட்டுப்பற்றை எடுத்துரைக்கின்றன. காதலுக்காக உயிர் ஈந்த யவன ராணியும், குருவையே எதிர்க்கத் துணிந்த அலீமாவும், அசுரனாகச் சித்தரிக்கப்படும் டைபீரியஸும் என்றும் மனதில் நிற்பார்கள்.
கல்லணை கட்டிய மன்னன் என்று மட்டும் அறியப்படும் கரிகாலன் - அவனின் இயற்பெயர், அவன் எவ்வாறு ஆட்சியில் அமர்ந்தான் என்ற வரலாறை இந்நாவல் விரிவாகச் சொல்கிறது.
user_9254
★ 5/5 Feb 02, 2026சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று. க்ளைமாக்ஸ் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆசிரியர் கதையின் இறுதியில் வாசகர்களை எதிர்பார்ப்பில் தொங்க விடும் விதம் அலாதியானது.
user_9253
★ 5/5 Feb 02, 2026அருமையான வரலாற்று நாவல், கட்டாயம் படிக்க வேண்டியது. கதை மிகவும் சுவாரஸ்யமாக நகர்கிறது. ஆனால் சில இடங்களில் ஏற்கெனவே சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் சொல்வது தேவையற்றது. அதைக் குறைத்திருந்தால் பக்கங்களும் குறைந்திருக்கும், கதையும் மேலும் இறுக்கமாக இருந்திருக்கும்.
user_9252
★ 5/5 Feb 02, 2026மிகவும் நல்ல நாவல். வரலாற்றையும் கற்பனையையும் இணைத்து சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.
user_9251
★ 5/5 Feb 02, 2026அற்புதமான வாசிப்பு அனுபவம்! இந்த நாவல் மனதைப் பண்டைய தமிழகத்திற்கு அழைத்துச் சென்றது. காலப்பயணம் செய்த உணர்வை அளித்தது.
user_9250
★ 5/5 Feb 02, 2026போர்க் காட்சிகள் மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டிருந்தன. எதிர்நாயகனான டைபீரியஸ் கதாபாத்திரம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது - நாவலின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று.