Reviews for இரவு

29 reviews total

user_9107

★ 4/5 Feb 02, 2026

நல்ல நாவல். இரவின் அழகையும் அதில் வாழும் மனிதர்களின் உணர்வுகளையும் ரசிக்கத்தக்க படைப்பு.

user_9106

★ 4/5 Feb 02, 2026

இரவு வாழ்க்கை பற்றிய ஒரு புதிய உலகை அறிமுகப்படுத்தியது. இரவு வாழ்க்கை மீது ஒருவிதமான ஏக்கத்தை நமக்கு விட்டுச் செல்கிறார் ஜெயமோகன்.

user_9104

★ 4/5 Feb 02, 2026

ஒரு மாயாஜால பயணம். சில இடங்களில், குறிப்பாக முடிவில், ஜெயமோகனின் "காடு" நினைவுக்கு வந்தது. இன்னொரு முறை நிதானமாகப் படிக்க வேண்டிய நாவல்.

user_9103

★ 3/5 Feb 02, 2026

இரவு, யட்சி, பிரக்ஞை, காயல், சமூகம், உக்கிரம் போன்ற சொற்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. கான்செப்ட் அருமை, ஆனால் கதை கொஞ்சம் இழுவையாகத் தெரிகிறது.

user_9102

★ 5/5 Feb 02, 2026

இரவு வாழ்க்கையின் அழகை அற்புதமாக விவரிக்கும் புத்தகம். இதைப் படிக்கும் எவரும் நிச்சயமாக இரவின் மீதும் இரவு வாழ்க்கையின் மீதும் காதல் கொள்வார்கள்.

ஆசிரியர் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இரவின் அழகை மிக அழகாகச் சித்தரிக்கிறார். புனைகதை ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பரிந்துரைக்கத்தக்க நாவல்.

user_9101

★ 4/5 Feb 02, 2026

ஒரு சில ஆசிரியர்களால் மட்டுமே படிப்பவரைக் கதைக்களத்திற்குக் கொண்டு செல்ல முடியும். படிக்கும்போது கதையின் சுவாரசியத்தையும் படபடப்பையும் வாசகர்களுக்கு ஏற்றுவதை அனைத்து ஆசிரியர்களாலும் செய்ய முடியாது.

நீலிமாவைப் பார்க்கும்போதும் ஆசிரமத்திற்குச் செல்லும்போதும் சரவணனுக்குள் ஏற்படும் அதிர்வு நமக்குள்ளும் ஏற்படும். வாசித்த அனைவருக்கும் ஒரு நாளாவது அந்த இரவு வாழ்க்கையை வாழ்ந்துவிட ஆசை தோன்றும். இரவைப் பற்றிய புதிய பரிணாமத்தையும் வர்ணனையையும் கொண்ட கவர்ந்து கட்டிப்போடும் நாவல்.

user_9100

★ 5/5 Feb 02, 2026

இரவுக்கு மட்டும்தான் என்னவோ — மனித மனம், பண்பு, குணாதிசயம் சற்று இளகியே கிடக்கும். தனிப்பட்ட முறையில் இரவில்தான் நான் எழுதுவதுண்டு. அப்படிப்பட்ட தனிச் சிறப்பு இரவு என்னும் சூழலுக்கு உண்டு.

"Night life is nothing but a Cheap Romanticism" என்ற வசனம் கதையில் வருகிறது. இருக்கட்டும் — நானும் ஒரு Cheap Romanticist தான்.

இரவைத் தோழியாகக் கொண்டு எழுதிய கவிதைகளும், உணர்வுகளும் இந்நாவலின் வாசிப்பனுபவத்தை மேலும் ஆழமாக்கின. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் — புது அனுபவமாக இருக்கும்.

user_9099

★ 5/5 Feb 02, 2026

முற்றிலும் மயக்கும் வாசிப்பனுபவம். ஜெயமோகனின் மொழிநடையும் இரவின் வர்ணனைகளும் வாசகரை வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவை.

user_9098

★ 4/5 Feb 02, 2026

இரவின் வண்ணங்களை முழுக்க மனிதனே தீர்மானிக்க முடியும், ஆனால் பகல் அப்படி அல்ல — பிரம்மாண்டமான வானத்தால் மனிதனை ஒரு பொருட்டாக்காமல் அவன் மீது கொட்டப்படுவது. இரவின் இந்த அழகை ஜெயமோகன் மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

user_9097

★ 4/5 Feb 02, 2026

"தனிமையை இரவால் போர்த்திக்கொள்ள முடியும். தனிமையின் ஒவ்வொரு சொல்லுடனும் தாயின் கனிவோடு உரையாட இருளால் முடியும்." இரவின் தனிமையும் அழகும் கவிதையாக வெளிப்படும் நாவல்.