Reviews for இரவு

29 reviews total

user_9117

Feb 02, 2026

வசீகரிக்கும் நாவல்! ஜெயமோகனின் மொழிநடையும் இரவின் சித்தரிப்பும் வாசகரை மயக்கும் ஆற்றல் கொண்டவை.

user_9116

★ 2/5 Feb 02, 2026

கதை நன்றாக ஆரம்பமாகிறது. ஆசிரியர் உருவாக்கும் ஆர்வம் பெரும் எதிர்பார்ப்பைத் தருகிறது, ஆனால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தோல்வியடைகிறது.

user_9115

★ 3/5 Feb 02, 2026

ஜெயமோகனின் படைப்புலகில் நுழைய விரும்புபவர்களுக்கு நல்ல தொடக்கப் புத்தகம். எளிமையான கதையோட்டத்துடன் ஆழமான தத்துவங்களை முன்வைக்கிறது.

user_9114

★ 5/5 Feb 02, 2026

இரவு மனிதனின் இன்னொரு வகையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. பகலில் காண முடியாத மனித உணர்வுகளின் ஆழத்தை இரவின் பின்னணியில் ஜெயமோகன் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

user_9113

★ 4/5 Feb 02, 2026

இரவின் வர்ணனை இரவோடு உலாவத் தூண்டும். ஆம், மனிதன் இரவில் இளகித்தான் போகிறான். ஆழ்மனதின் ஏக்கங்கள் செயல்களாக வெளிப்படும் ஒரு அழகிய காலநிலை இரவு — அதை ஜெயமோகன் கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்.

user_9112

★ 5/5 Feb 02, 2026

இரவின் மீதான நீண்ட வர்ணனைகளுடன் இரவு சமூகத்தைப் பற்றிய நாவல். காயல் பயணத்தின் மூலம் உளவியல் ரீதியாகக் கூறுவது மறக்க முடியாதது.

இரவைப் பற்றிய பல்வேறு தருணங்கள் மனதைச் சலனப்படுத்தும்படி சொல்லப்பட்டுள்ளன. இரவு கண்ணுக்குள் தார்போல படிந்து அகத்துக்குள் சென்றுவிடும்படியான உணர்வை ஏற்படுத்தும் கதையாடல் — வாசித்து நெஞ்சில் நிலைத்துக்கொள்ளும் படைப்பு.

user_9111

★ 4/5 Feb 02, 2026

இந்நாவலில் இரவில் வாழும் மனிதக் குழுக்களின் பார்வையைச் சொல்கிறது — இயற்கை மற்றும் மனிதர்கள் பற்றிய அவர்களின் பார்வையை ஜெயமோகன் விவரிக்கிறார்.

படிக்கும்போது இந்த நாவலை வேகமாகப் படித்து முடித்துவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.

இக்கதையில் காமம், இருத்தலியல் நெருக்கடி, ஆசை, ஆன்மிகம், சமூக அமைப்பு, மதம், கடவுள் என பல்வேறு விஷயங்களை உரையாடுகிறது.

நாவலை முடித்த விதம் எதிர்பார்த்ததுபோல இருந்தாலும் நிறைவாக இருந்தது.

user_9110

★ 3/5 Feb 02, 2026

பகலில் உறங்கி இரவில் கண்விழித்து வாழும் சமூகத்தின் கதை. இரவின் அழகையும் ஆழத்தையும் விவரித்த ஆசிரியரின் வர்ணனையும் மொழிநடையும் "நாமும் இரவு வாழ்க்கை வாழ்ந்து பார்த்தால் என்ன?" என்னும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கேரள மண் சார்ந்த வாழ்க்கை, உணவு, யட்சிகளின் கதைகள், மொழிகளின் வரலாறு, கொடுங்கல்லூர் கோவிலின் சிறப்பு அம்சங்கள், ஏராளமான உளவியல் தகவல்கள் என்று கதையைத் தாண்டியும் அள்ளி அள்ளிக் கருத்துகளைக் கொடுக்கிறார் ஜெயமோகன்.

பாதி கடந்த பின் சாதாரண கதைகள் போலவே ஓட்டம் எடுத்ததோ என்ற எண்ணம் தோன்றியது. இருப்பினும் இரவு வாழ்க்கை பற்றிய ஒருவிதமான ஏக்கத்தை விட்டுச் செல்கிறது இந்த நாவல்.

user_9109

★ 5/5 Feb 02, 2026

ஜெயமோகனின் "இரவு" இருளில் மூழ்கிய வாழ்க்கையின் ஆழமான ஆய்வு — நேரடியாகவும் உருவகமாகவும். பாதிப்படையக்கூடிய தன்மையும் உறுதியான வலிமையும் ஒன்றாக இருக்கும் ஓரங்களில் வாழும் மனிதர்களின் கச்சா, வடிகட்டப்படாத உணர்வுகளை சித்தரிக்கிறது.

கதாபாத்திரங்கள் தனித்துவமானவை — குற்ற உணர்வோ தார்மிக தயக்கமோ இல்லாமல் முழு நம்பிக்கையுடன் வாழ்பவர்கள். சமூக நெறிமுறைகளைத் தாண்டிய இலட்சியங்களை உடையவர்கள்.

தீவிரமான கதையோட்டம் ஒழுக்கம் மற்றும் அடையாளம் குறித்த கருத்துகளை சவாலிடுகிறது. தத்துவ ஆழத்திலும் துணிச்சலிலும் இக்கதாபாத்திரங்கள் அயின் ராண்டின் படைப்புகளை நினைவூட்டுகின்றன. கடைசிப் பக்கத்திற்குப் பிறகும் நீண்ட நேரம் நினைவில் நிற்கும் அசாதாரணமான படைப்பு.

user_9108

★ 5/5 Feb 02, 2026

ஜெயமோகனின் "இரவு" நாவல், இரவில் விழித்து பகல் முழுதும் உறங்கி ஒரு தலைகீழ் வாழ்க்கையை வாழும் சிறு சமூகக் குழுவைப் பற்றிய கவித்துவமான படைப்பு.

மேலோட்டமாக, பல்வேறு காரணங்களுக்காக இரவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கதை. ஆனால் உள்ளடுக்கில் இரவு பற்றிய விவரணைகள், இரவு-பகல் குறித்த உரையாடல்கள், புது வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் மனக்குழப்பங்கள், இரவு வாழ்க்கை ஒரு படிமமாக உருமாறுவது போன்றவை வாசகனுக்கு புதிய வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன.

"பொது மாயை" என்னும் சொல் உண்மையின் வரையறையை முழுவதுமாக கேள்விக்குள்ளாக்குகிறது. உண்மை பொதுவானதா அல்லது தனி மனித மனத்திற்குரியதா என்ற தத்துவக் கேள்வியை முன்வைக்கிறது.

ஆசிரியர் தன் மொழியாளுமையால் சொற்களால் விவரிக்க முடியாத உணர்வுகளைச் சொற்களின் வழியே கடத்திவிடுகிறார். கனவின் வழி நிஜ வாழ்வில் பெரும் விடுதலை, இயல்பு மீறல்களின் சாதாரணத்தன்மை, அறியாமையின் ஒளி, அறிவின் இருள் என்ற முரண்கள் ஒரு புதிய பார்வையை முன்வைக்கின்றன.