Good book and real incidents are nit anyway lesser than crime novels
Good book and real incidents are nit anyway lesser than crime novels. It is proof again that if ordinary person has integrity and perseverance he can get things done even in current system
ஊழல் செய்யும் அரசாங்கத்தை எதிர்த்து போராடும் மனிதன் பற்றிய கதை. நிஜக்கதை. ஒரு நாளில் படித்து முடித்துவிட்டேன். சங்கர் எந்த மனிதரின் பெயரையும் மறைத்து வைத்து கதை சொல்லவில்லை. அது தான் இதல் இருக்கும் ஒரு பெரிய PLUS :)
Wow! I've read various whistleblowing articles in the savukku blog (circa 2013/14) before but had no idea that he was going through such a traumatic legal situation all through those times. Wonderfully penned down book that shows the real (and pathetic) state of many of the state government wings in Tamil Nadu.
சாமானியனின் சரித்திரம்
அரசு இயந்திரம் என்பது வெறும் விதிமுறைகளாலானது, அதன் கருப்புப்பக்கங்களை வெள்ளையாக்கமுயல்பவனை அது முழுபலத்துடன் கருப்பாக்கவே முயல்கிறது... இந்த நூல் ஒரே ஒரு சாமானியனின் போராட்டம் மட்டுமல்ல; உதவிய அனைத்து சாமானியர்களையும் சேர்த்த சாமானியர்களின் சரித்திரம்.
மிகத்தெளிவான, உத்வேகமான நடை.
அதிகார துஷ்பிரயோகம் எவ்வளவு மலிந்துள்ளது என்பதை மிகவும் தெளிவாக எழுதியுள்ளார்.
அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் தன் சுய லாபத்திற்காக எவ்வளவு கொடியவர்களாகவும் கயமைத்தனத்துடனும் நடந்து கொள்கிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டி உள்ளார் . அதற்கு ஊடகம் எவ்வளவு தூரம் துணை போகிறது என்பதையும் மிக நன்றாகவே சொல்லி உள்ளார்.
சமகால அரசியல் எப்படி நடக்கிறது என்பதை பட்டும் படாமலும் சொல்லி இருந்தாலும் இதுவே போதும் என்று நினைக்கிறேன்.
A thrilling tale of gut and resolve
The book is an autobiography of the man behind tamil sting website, Savukku with a thrillers pace. While it shows the struggles of a common clerk who just decided to stand up against the corrupt system also highlights the inefficiencies of inverting an outdated system of bureaucracy from the British designed to exploit and be good only on paper. As the author himself says one cannot but wonder how a single man's grit can bring down the Titan, howsoever mighty if righteousness is on his side.. An inspiring must read
We used to crib about politicians, but this book exposes a side of bureaucracy that is lesser known. The life inside of a prison, the uncertainty in how to face a prison life even if it is for a couple of months, how rules are rarely if ever followed across police enquiry and subsequent Judicial processes, this book has been an eye opener. Also, as a matter of fact, indicates, when the judgement comes, a lot of the involved parties are rarely alive without any harm to their reputation and only the living are left to pick up the pieces.
இந்தியா ஜனநாயக நாடல்ல என்பதற்கு இன்னொரு உதாரணம் @savukku மீதான வெறியாட்டம். பணம் பதவி வெறியில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அரசியல்வாதி, அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்கும் நீங்கள் வெளியிடும் கட்டுரைகள், புகைப்படங்கள் எப்படி ரமணா படம் போல கிடைக்கிறது என்பதற்கு பதில் இப்புத்தகத்தில்.
ஒரே ஒரு ஐயம். இதில் வரும் நேர்மையான அதிகாரிகளின் உறவினர்கள் படிக்கும் போது எப்படி பெருமைப்படுவார்களோ அதே போல் மனிதன் போர்வையில் இருக்கும் சில ஈனப் பிறவிகளின் உறவினர்கள் படிக்கும் போது கொஞ்சமாவது குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகுவார்களா?
The book is an autobiography of an individual detailing his struggles against the state government. It gives an account of the hardships he had to face for exposing corruption within the government machinery of the state of Tamilnadu, and hence the legal battles he endured, over almost a decade-long journey.
It is a very interesting read, and I thoroughly enjoyed it as it gave me hitherto unknown views of the functioning of various government departments. It was almost like watching a crime, thriller movie. Kudos to the author for his perseverance in his fight against corruption.
தன் பணி வரலாற்றின் மூலமாய் இந்த தமிழகத்தின் 25 ஆண்டு அரசியல் வரலாற்றை எழுதியிருக்கிறார் சங்கர். ஒரு வாழ்க்கைப் பயணத்தை இவ்வளவு விறுவிறுப்புடனும் எந்த இடத்திலும் சலிப்பு தட்ட வைக்காமலும் எழுதி படிப்பவரை இன்னும் என்ன இன்னும் என்ன என்றே கேட்க வைக்கிறார். சில சமயம் தற்பெருமை பேசுவது போல் தெரிந்தாலும் அது எல்லைக் கடக்கவுமில்லை; நூலை பாதிக்கவுமில்லை. போகிறபோக்கில் நாயை சூ என்று விரட்டுவது போல் தமிழக காவல்துறையையும் உளவுதுறையை பற்றியும் நமக்கு அறியாத பற்பல தகவல்களையும் (பஸ் வாரண்ட், ரகசிய நிதி, விசாரணை ஆணையத்தின் வரம்புகள், சிறையின் எதார்த்தம்,...) தெரியப்படுத்துகிறார். படிக்கத் தொடங்கினால் ஒரு மூச்சில் படிக்கவைத்திடும் எழுத்துநடையிலான புத்தகம்
கொஞ்சம் கால்பு
மிக நீண்ட பதிவை எழுத வேண்டும், ஆனால் ஒரு சிலவைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
அரசு அதிகாரிகள் செய்த குற்றங்களை வெளியே கொண்டு வரும் சங்கர் உண்மையில் ஓரு துணிச்சல் காரர் தான், அதை நாம் பாராட்டியே ஆக வேண்டும் . ஆனால் அதே நேரத்தில் அ தி மு க அரசில் பலன் பெற்று அதிகாரிகளின் கோர முகங்களை வெளியே கொண்டு வருகிறார், சில அரசு உரையாடல்கள் வெளியே வருகிறது அதற்கு அப்போதைய முதல்வர் கலைஞர் ஒரு ஆணையம் அமைக்கிறார், இதை எந்த முதல்வரும் செய்வது தான் ஆனால் சங்கரோ ஏதோ கலைஞர் இவர் மீது தனி பகை கொண்டு பழிவாங்க முயற்சி செய்தது போன்று ஒரு பிரமையை ஏற்படுத்த முயல்வதைம், வம்படியாக தி மு கவை குற்றம் சுமைத்துவதையும் தாண்டி நல்ல புத்தகம் , வாழ்த்துக்கள் சங்கர் !
தொடக்கம் முதல் முடிவு வரை விசாரணை(லாக்கப்) படத்தை மிஞ்சும் விறுவிறுப்பு . பக்கத்துக்கு பக்கம் தெளிவான விவரிப்பு என மிக நேர்த்தியாகவும் அருமையாகவும் எழுதப்பட்டு உள்ள காவல்துறை சார்ந்த அரசியல் கையேடு. நேர்மையாக இருத்தல் என்பதன் பிரதி பலனாக ஒரு சாதாரண காவல்துறை குமாஸ்தா அனுபவிக்கும் கொடுமைகள் கண்முன்னே நடப்பது போல உள்ளது. ஊழல் புரையோடி போன சமுதாயத்தில் அரசியல் மற்றும் அதையும் மிஞ்சும் ஊழலில் திளைக்கும் போலீஸ் பட்டாளத்தையும் பற்றிய தெளிவான புத்தகம் .தமிழக அரசியலில் களம் இறங்க நினைக்கும் வருங்கால தலைமுறைகள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ஒருவேளை இதை படித்த பின்னர் பதவிக்கு வந்தால் அதிகார மட்டத்தில் நடக்கும் லஞ்ச லாவண்ய முறைகளை சரி செய்ய முயற்சி எடுக்கும் பட்சத்தில் கட்டாயம் உதவும் . இவர்களை எல்லாம் ஸ்காட்லாந்து யார்டுடன் (அதாங்க லண்டன் போலீசு ) ஒப்பிட்டு பேசிக்கொள்ளும்போது ஸ்காட்லாந்து யார்டை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது.
அரசு அமைப்புகளின் வெளியே இருந்து மட்டும் நாம் பார்க்கிறோம். ஊழல் தொடங்கி அதன் அத்தனை பிரச்சனைகளும் அந்த பார்வையைக் கொண்டே புரிந்து கொள்கிறோம். ஆனால் அதன் சிக்கலான செயல்பாட்டு முறைகளை அறிந்த ஒருவர், அங்கிருந்து வந்து அவற்றை விளக்கும்போது நாம் நடுங்கிப் போகவேண்டி இருக்கிறது. சங்கரின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமானவை. ஆனால் அந்த எழுத்துக்களின் பின்னனிக் கதையை வாசிக்கும்போது மட்டுமே என்னால் அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. என் வாழ்வின் இந்த புள்ளியில் இப்படியான புத்தகம் வெளிவந்ததும் உடனே வாசிக்க நேர்ந்ததும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதை இளைஞர்கள் முக்கியமாக வாசிக்கவேண்டும். பொதுவாக பரிந்துரைகள் செய்யாத நான் எல்லாரிடமும் வாசிக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இடைவிடாமல் வாசிக்க வைக்கிற சிறிய புத்தகம். வெகுதூரக் கடந்த காலத்தில் நடந்தது அல்ல இப்போது சற்று முன்னரே நடந்து முடிந்த, இனியும் இயங்கும் ஒருவரின் கதை.
அரசியல் பிரமுகர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ,பத்திரிக்கையாளர்கள் எனத் தொடங்கி பலருடைய உரையாடல்களை தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாக ஒட்டு கேட்ட விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த தொலைபேசி ஒட்டு கேட்பு சவுக்கு சங்கரின் வாழ்வையும் அடியோடு மாற்றி அமைத்தது குறித்த நூல்.
சவுக்கு சங்கரின் பிரபலத்தின் காரணமாக படிக்கத் தொடங்கும்போதே இந் நூலின் மீது ஒரு சிறிய அளவு ஆர்வம் சற்று அதிகமாகவே இருந்தது.அந்த ஆர்வத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வரையில் எடுத்துச் சென்றது மிக மிக அற்புதம் .ஒரு சாமானியன் அரசை எதிர்த்து எவ்வாறு போராடினான் என்பதை முன் பக்கத்தில் கொடுத்தது போல கதையை மிஞ்சும் நிஜமாகவே உள்ளது. எனினும் அது மட்டுமின்றி காவல்துறையின் கொடுமைகள், 2000ங்களில் முன்பும், பின்பும் நடந்த அரசியல் நிகழ்வுகளை அளவாக, தேவைக்கேற்ப வைத்து எடுத்துக்காட்டாய் காட்டியது கவர்ந்த பெரும் ஒன்று. மேற்குறிப்பிட்டது போல் பல துறைகள் குறித்து ஓர் சிறிய புரிதல் நமக்கு ஏற்படுத்த வல்லது. எந்த ஒரு தேவையில்லாத தரவுகளும், தன்னை மேன்மைப்படுத்தி காட்டக்கூடிய வார்த்தைகளும், வாக்கியங்களோ ஏதும் இடைபெறாதது அருமை.
மொத்தத்தில் ஒரு தனி மனிதனுக்கு எதிராக அரசு இயந்திரம் தொடுத்த போரின் அசாதாரணமான கதை இது.
ஒரு சாமானியனின் போராட்டத்தை உண்மையான அரசியல் நிகழ்வுகளை கலந்து படித்ததில் ஒரு திருப்தி படைப்பை படித்த பின் தோன்றியது.
Everybody is thought from childhood to be honest, ethical and truthful. But if a common man working in a government office follows that, this book tells what one has to go through. The book is about a real story of Mr Shankar who has arrested in a case with no basis. It is the plight of a normal person for 8 years with no background. It depicts the working culture of our government system. Its corruption, the respect to human rights, fellow beings. On the whole, its like a real civics book reflecting judicial and law system. The real culprits of our society are corrupt administrators. The story reflects the working style of both governments (DMK and ADMK), it pinholes, its ups and downs without bias. Kudos to the writer for facing these challenges in real life without regret. On the whole, it's not a story about an individual, it's an important documentary about our whole administrative and judicial system. I wonder how this book has not been banned yet!!!. As we are talking about reformation in the police department today, which is a long time requirement, the experience of an author makes us to understand its urgent implementation in the entire system.
ஊழல் - உளவு - அரசியல் - Savukku Shankar
ஒரு ஊழல் ஏகாதிபதியத்திர்க்கு எதிராக ஒரு சாமானியனின் எதிர்பாராத போராட்டம்.
குமாஸ்தாவக அரசு அலுவலகத்தில் தன் தந்தையின் இறப்பின் நிமித்தம் 16 வயதில் சேர்கிறார் சங்கர்.
பெரியார், மார்க்ஸ் முதலான கோட்பாடுகளில் ஈர்ப்பு ஏற்படுகிறது. காவல் துறையின் ஊழலை அறுவருக்கும் சங்கர், தன்னால் முடிந்ததை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக செய்ய முற்படுகிறார். அதிகார வர்க்கம் எவ்வளவு வலிமையானது என்பதை கண்டு வியக்கிறார்.
வேலையில் முதலமைச்சர்கலுக்கு எதிரான ஆவணங்களை தட்டச்சு செய்வதில் இருந்து, தமிழகத்தை கலக்கிய ரெய்டுகள் வரை சுவாரஸ்யமான நிகழ்வுகள் பலவற்றில் தெரிந்தோ தெரியாமலேயோ சங்கர் இடம் பெறுகிறார்.
அது வரை தன் வாழ்க்கை போகும் பாதையில் போகும் சங்கர், தான் செய்யாத ஒரு பெருங்குற்றத்திற்காக சிறை வாசம் செல்கிறார். ஆளும் கட்சியும் எதிர் கட்சியும், காவல் துறையும் நீதி துறையும், மாறி மாறி ஊழலுக்கு எதிராக கிளம்பும் ஒரு அரசு ஊழியனை என்னவெல்லாம் செய்ய துடிக்கிறது, அதை தன் 7 வருட சட்ட போராட்டத்தால் எப்படி எதிர்கொண்டார் என்பதே புத்தகத்தின் சாராம்சம்.
கொலைகாரர்களின் கருணையையும், வழக்கறிஞர்களின் எதிர்பார்பில்லாத உதவியையும், காவல் துறையின் மிருகத்தனமான நடத்தையையும், நீதி துறையின் அட்டூழியங்களையும் விவரிக்கும் போது, இந்த சமூகத்தின் மேல் இருக்கும் நம் பார்வையை சவுக்கால் அடிக்கிறார் சங்கர் !
- மரு. டேனியல்
A common man’s fight with corruption and government brutality !!
Back in the later half of last decade, Savukku website was famous for its whistle blower articles. Mr. Sankar’s life is not for the weak hearted, it’s a true one man fight against the giant government apparatus. When this government and Judicial apparatus created by the civilized society acts repressive against a common man, mostly the person don’t have choice other than to accept defeat and get destroyed. But Mr. Sankar has written in this book about how he managed to stay alive and positive amidst the scum of corruption and negativity. Every step he took ended up in failure, there seems to be no positive happenings for Mr. Sankar for nearly 10 years, yet he didn’t stop his pursuit of whistle blowing major issues of the government and officials. This book depicts the judicial system of India naked, it so scary to know how the judicial and police operate in India.
The book is a big eye opener on how cases are filed by police in India. Even cyber crime department chief officials had very less understanding about electronics and computers.
The print version was sold out so couldn’t get a copy, lucky that it was available in Kindle, I read the book in 1 day, such was the narration of the story. Can’t believe the torchure undergone Mr. Sankar. A must read for anyone who wants to understand the black marks in our government and judicial systems!
Wow.. As a book it was too good, a real page turner. But, what he has to go through was unimaginable. Hats off to him for what he has done and for taking a fight on to the government.
சமீபத்துல ஒரு புனைவல்லாத புத்தகத்த இத்தனை விறுவிறுப்பா படிச்சதே இல்ல. 16 வயசுல தந்தையின் அகால மரணத்தால அரசுப்பணி கிடைக்கப்பெறுகிற சிறுவன். நல்ல சம்பளம், பதவி உயர்வு, அமைதியான வாழ்க்கைங்குற சாமானியக் கனவுகளோட இருக்குற ஒரு அதிகாரி, பின்னாட்கள்ல ஊழலை எதிர்த்து கேள்வி கேக்குறதனால இந்த அரசியல் அமைப்பும்..சக அதிகாரிகளும்... சட்டமும் எந்த அளவுக்கு கஷ்டப்படுத்தியிருக்குன்னு தெரியும்போது ஒரு மாதிரி மிரட்சியா இருக்கு. போலியா கட்டமைக்கப்பட்ட பட்ட வழக்கு அதுக்காக சிறைவாசம்; சுற்றமும் நட்பும் அனுபவிக்கிற துன்பங்கள்; நீதித்துறை, காவல்துறை, சிறைத்துறை உட்பட எல்லா இடங்கள்லயும் புரையோடிப்போயிருக்கிற ஊழல், யாரையாவது பலிகடாவாக்கி எப்படியாவது வழக்கை முடிச்சாப் போதும்னு நெனைக்கிற மனோபாவம், எந்த ஆட்சி வந்தாலும் பச்சோந்திகளாக மாறி தங்களோட நலன்ல மட்டுமே கவனம் செலுத்துற அதிகாரிகளோட குணம் இப்படி எல்லாத்தப் பத்தியும் ரொம்ப விரிவா எழுதியிருக்காரு சவுக்கு சங்கர். நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம்.
அரசு அதிகாரிகள் எல்லா ஆட்சியிலும் அதே கோரமுகம் கொண்ட அரசு அதிகாரிகள் தான் என்பதை உணரச்செய்யும். உங்கள் நேரம் அனுமதிப்பின் படியுங்கள். லஞ்ச ஒளிப்புத்துறை செயல்படும் விதம், ஒரு வழக்கை கருணாநிதியும் ஜெயலலிதாவும் அணுகும் முறை, நீதித்துறையில் வழங்கபடும் தீர்ப்புக்கு பல சமயங்களில் சாட்சிகள் மட்டும் தேவைப்படுவதில்லை போன்று பல பேசப்படுகின்றன. நேரடியாக அரசு அலுவலர்களின், செயலாளர்கள், நீதிபதிகள் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதை படித்து முடித்ததும் ஒன்றுதான் தோன்றியது இயல்பாகவே நமக்கு அடிப்படை உரிமைகள் பற்றி தெரிவதில்லை என்பதும் அதை துளிகூட மதிப்பதில்லை என்பதும், தெரிந்தாலும் அதை அனுமதிக்க தயாராக இல்லை என்பதும் தான். போலீஸ் என்ற அதிகார அமைப்பில் நிறைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது என்பதை மறுக்கமுடியாது. கண்டிப்பாக சவுக்கு சங்கருக்கு வாழ்த்துகள் சொல்லவேண்டும்.
Really mesmerising while read court scenes experience upon imprisonments bold indeed critics governance & RTI petition anna university admission elite government officials extraordinary work
அரசாங்க ஊழியராக பயணியாற்றிய சங்கர், அரசு அதிகாரிகளின் ஊழல்கள், அரசு அதிகாரிகள் எப்படி அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி பலன் பெற்றார்கள், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் மாறுபடும் அதிகாரிகளின் பச்சோந்தி முகம், காவல் துறை அதிகாரிகளின் மனித உரிமை மீறல், சிறைச்சாலை ஊழல்கள், பல நீதிபதிகளின் உண்மை முகம், வழக்கறிஞர்களின் வாதங்கள், நீதிமன்ற நடைமுறைகள், இவை அனைத்தும் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அலைப்பேசி ஒட்டுக்கேட்ப்பு வழக்கில் தான் நிரபராதி என நிரூபிக்க இவர் நிகழ்த்திய போராட்டம் அனைத்தும் இந்த புத்தகத்தில்(ஊழல்-உளவு-அரசியல்) விவரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வில்(ஊழல் -உளவு-அரசியல்) இருந்து சில கோஷங்கள்,
‘தம்பி, எப்போதும் திறந்த மனத்தோடு இருக்கவேண்டும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எல்லாமே தப்புத் தப்பாகத்தான் தெரியும்’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு அவரே விளக்கினார். ‘எல்லாத்தையும் பார்ப்பன எதிர்ப்பு கண்ணோட்டத்திலேயே பார்ப்பது மிகத் தவறான விஷயம். தலித்துகள் மீதான சாதிக் கொடுமைகள், சாதிய கட்டமைப்புக்கான காரணங்கள், வரலாற்று ரீதியாக உருவான சாதிகளின் பின்புலம் போன்ற பல்வேறு விஷயங்களை ஆய்வுசெய்து வெளியுலகுக்குச் சொன்னவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பனர்களே.
அலுவலகம் வர வேண்டும். அதிகாரிகள் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும். அடுத்த அகவிலைப்படி ஏற்றத்தில் அதிக சம்பளம் ஏறவேண்டும். தவணை முறையில் சென்னையின் எல்லை தாண்டி 10 கிலோ மீட்டருக்குள் மஞ்சள் பெயிண்ட் அடித்த ஒரு வீட்டுமனை வாங்கவேண்டும். வருமான வரியைத் தவிர்க்க சேமிக்கவேண்டும். அவ்வளவுதான் அவர்களுடைய கனவு, எதிர்பார்ப்பு எல்லாமே. இவற்றைத் தாண்டி அவர்கள் உலகம் இயங்குவது இல்லை.
‘இவனுங்க என்ன சங்கர் நெனச்சிக்கிட்டு இருக்கானுங்க.இந்த வேலை இல்லன்னா நான் செத்துடுவேனா? இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி பேங்குல ஆபீசரா இருந்தேன். அதுக்கு முன்னாடி இடுப்புல அரிவாளை சொருகிட்டு வயல்ல வேலை பாத்துக்கிட்டு இருந்தேன். இந்த வேலை இல்லன்னா திரும்பி போய் விவசாயம் பண்றேன். செத்தா போயிடுவேன். என்னா நெனச்சிக்கிட்டு இருக்கானுங்க. இதுக்கெல்லாம் பயந்தவனா நான்’
ஊழலை எதிர்ப்பதை அரசு இயந்திரம் என்றுமே விரும்பாது. அந்த எதிர்ப்புக் குரலை முடக்குவதற்குதான் எல்லா முயற்சிகளையும் அரசு இயந்திரம் எடுக்கும்.அதுதான் அதன் தன்மை. அரசு இயந்திரத்தோடு மோதுவது என்பது எளிதான காரியம் அல்ல. அரசு இயந்திரம் என்பதற்கு அதிமுக, திமுக என்ற வேறுபாடு கிடையாது.அது ஒரு இயந்திரம் மட்டுமே. இரண்டு கட்சியின் ஆட்சியிலும் அதன் தன்மை ஒரே மாதிரிதான் இருக்கும்.
-கலைச்செல்வன் செல்வராஜ்
சரியான நாளன்று (சுதந்திர தினம்), மிக சரியான நூல் "ஊழல் - உளவு - அரசியல்", நீண்ட நாட்களாக எனது to-readயில் இருந்த நூல்.
நூல் ஆசிரியர் அவர் சொல்லவேண்டிய கருத்துக்களை/நிகழ்வுகளை தெளிவகம் , சுவாரசியமாகவும் , கோர்வையாகவும் எழுதியுள்ளார்.
இந்நூலில் அரசாங்கத்தில் உள்ள பல துறைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்ககளை பகிர்த்துள்ளார் மற்றும் பல முக்கிய அரசியவாதிகள் மற்றும் அதிகாரிகள் உடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்ககளை பகிர்த்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகதில் CM quotaவில் தொடங்கி பல துறைகளில் தான் நடத்த ஊழல்களை விரிவாக எழுதியுள்ளார்.
. இந்நூலின் முலம் காவல் துறை , நீதி துறை , சிறைத்துறை ஆகியவற்றில் உள்ள நடைமுறைகள் அரித்துக்கொள்ளமுடிகிறது.
David versus Goliath.
The book is by and large about Shankar's experience going mano-a-mano with the machinery of government (Mr.Hyde side of the government?).
With chilling details, Shankar builds a world filled with (subservient) bureaucrats who dance to the whims of (self-serving) politicians. Throughout the book, he tries to narrate how these two arms of the government along with the (self-indulgent) Judiciary works in tandem to deceive, disenfranchise, loot, and dare I say enslave ( and on rare occasions help) the people they serve. Midway through his narration, you can't but wonder if the world he tries to paint for us eerily resembles the dystopian Kafkaesque world (perhaps Oceania too).
He alleges corruption charges on high-ranked civil servants to revered politicians and everyone in between (and everything feels very believable). Excerpts involving Kalaingnar and J's acumen are good reads. His way of explaining bureaucracy is frightening but fascinating at the same time. His story's timeline (1991-2017) spans across terms of 5 State Governments in Tamil Nadu and you start to notice that the pattern of corruption and utter disregard of the rule of the land stays the same throughout, irrespective of the Political party in power. The biggest takeaway from this is to an extent his account of TN's history puts in perspective the current state of affairs.
All things said so far piggybacks on Shankar's story of how he valiantly fought against the government machinery to acquit himself from a high-profile Phone eavesdropping case.
My favorite excerpt from the book is "ஊழலை எதிர்ப்பதை அரசு இயந்திரம் என்றுமே விரும்பாது. அந்த எதிர்ப்புக் குரலை முடக்குவதற்குதான் எல்லா முயற்சிகளையும் அரசு இயந்திரம் எடுக்கும்.அதுதான் அதன் தன்மை. அரசு இயந்திரத்தோடு மோதுவது என்பது எளிதான காரியம் அல்ல. அரசு இயந்திரம் என்பதற்கு அதிமுக, திமுக என்ற வேறுபாடு கிடையாது.அது ஒரு இயந்திரம் மட்டுமே. இரண்டு க���்சியின் ஆட்சியிலும் அதன் தன்மை ஒரே மாதிரிதான் இருக்கும்".
And I think this pretty much abridges the whole book.
சவுக்கு சங்கரின் இப்புத்தகம் ஒரு சாமானியன் அரசு இயந்திரத்தை எதிர்த்தால் அரசும் அரசு அதிகாரிகளும் அம்மனிதனை எவ்வாரெல்லாம் நசுக்க முயற்சிக்கும் என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார்.
புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ள அதிகாரிகள் இன்றும் பெரும்பாலானோர் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்,ஆனால் இப்புத்தகத்திற்கு எதிர்ப்போ,தடையோ வாங்காமல் உள்ளதே ஆச்சரியமாக உள்ளது.
இப்புத்தகம் மூலம் அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை ஓரளவு தெரிந்து கொள்ள வசதியாக உள்ளது,மேலும் சுவாரசியமாக புத்தகமும் கூட.
இவ்வளவு தைரியமாக இந்நூலை எழுதியதற்காகவே திரு.சவுக்கு சங்கருக்கு மனதார வாழ்த்துகள்.
Savukku Shankar is a popular YouTube personality and a freelance journalist. His interviews are interesting and he normally has a lot of info that is not in the public domain to share. So I used to wonder where and how he is getting all those info and I think I got some answer with this book. This book chronicles his journey from joining the anti-corruption bureau of TN as just a clerk at the age of 16, and how over a period of time (17 years) he came to know in detail the inner functioning of the political-bureaucratic nexus, and how in his limited capacity he tried to set right a few things, and how that landed him as the prime accused in a high profile case in which actually he was an innocent bystander. Basically, the police wanted to pin the case on this guy simply because they couldn't solve the case and ofc, he had a few things going against him. What followed was a 8 year duel with the govt machinery, moving from pillar to post, and finally getting acquitted.
I greatly liked the writing style and how any argument was put forth cogently. I didn't find the book dull at all and it was as funny as it could be too given the material. I am already reading his another book.
Rating: 4.5 stars.
அரசு அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் சங்கர், தனக்குத் துளியும் சம்பந்தமில்லாத டெலிபோன் ஒட்டுக்கேட்பு வழக்கில் அரசு இயந்திரத்தால் பலிகடா ஆக்கப்படுகின்றார். ஊழல் மலிந்த, அரசியல் குறுக்கீடுகள் நிறைந்த அரசு இயந்திரத்தை, எவ்வாறு எதிர்கொண்டு போராடி வெற்றி பெற்றார் என்னும் உண்மைக் கதையே இப்புத்தகம். அரசு இயந்திரத்தின் செயல்பாடு பற்றியும், 1990களுக்கு பிறகான தமிழக அரசியலைப் பற்றியும் நிறைய தெரிந்துக் கொள்ள முடிகிறது. உண்மைக் கதையை விறுவிறுப்பாகக் கொண்டுச் செல்லும் எளிய மொழி நடை.
2014. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்கு சில தினங்களுக்கு முன்பு "சென்று வா மகளே" என்றொரு கட்டுரை எழுதினார் சவுக்கு. அந்த கட்டுரையை ஒரு நூறு முறை படித்திருப்பேன். அதில் "இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் மைக்கேல் குன்ஹாவைக் கூட மன்னிப்பேன். ஆனால், இந்த சோரம் போன ஊடகங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய ஒரு விஷயத்தை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு மூடி மறைக்கின்றன" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். என் மன எண்ணமும் அதுவே. பாழ் பட்டு போன தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் சவுக்கு.
அவர் புத்தகம் எழுதுகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது. எஸ்கேபி கருணாவும் அதன் விறுவிறுப்பிற்கு சான்றளித்தார். உண்மை தான். 230 பக்கத்தை இரண்டரை மணி நேரத்தில் ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது வெறும் விறுவிறுப்பு மட்டும் உள்ள கதை தானா?
சவுக்கு என்னமோ அவர் அரசு பணிக்குள் வந்தது, அவரின் அனுபவங்கள் அவருக்கு நேர்ந்த பிரச்சனைகள் அதிலிருந்து அவர் வெளிவந்த சொந்த கதையை தான் சொல்கிறார். ஆனால் அதுவே 25 ஆண்டு கால தமிழக அரசியல் அதிகார வரலாற்றின் மேல் பயணிக்கிறது. குறிப்பாக ரஜினியால் பிரபலப்படுத்தப்பட்ட சிஸ்டம் என்றால் என்ன அது இங்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இந்த புத்தக்தை விட அதிகமாக ஆவணப்படுத்திய வேறு ஏதேனும் முயற்சிகள் தமிழில் இருக்கின்றதா என்றே தெரியவில்லை.
போற போக்கில் தமிழ் நாட்டின் பெரும் அதிகாரங்கள் பற்றிய உண்மைகள் புட்டு புட்டு வைக்கப்படுகிறது. ஜெ வழக்கில் கருணாநிதி செய்த தவறுகள், திலகவதி பற்றிய செய்திகள் எல்லாம் ஒரு பத உதாரணங்கள். இந்த புத்தகத்திற்கு அவர்கள் தடை வாங்காமல் இருப்பதே ஆச்சர்யம் தான்.
சவுக்குக்கு வாழ்த்துக்கள். அதிகாரத்தின் தவறுகளுக்கு ஒத்திசையாது அதை நோக்கி கேள்வி எழுப்புவதே அறம் என்பதை தொடர்ந்து பின்பற்றவதற்கு நன்றிகள்.
சவுக்கு சங்கரின் 'ஊழல் - உளவு - அரசியல்'
அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்.
கதையை மிஞ்சும் நிஜம். கற்பனைக்கும் எட்டாத சாகசம். உயிரோட்டமுள்ள ஓர் அசாதாரணமான ஆவணம்.
(அட்டைப்பக்கத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்)
ஒவ்வொரு வாசகனையும் அது எந்தளவுக்கு புரட்டிப்போடப்போகின்றது என்பதற்கான எச்சரிக்கைக்காகவே அவை எழுதப்பட்டிருக்கக்கூடும்.
வணிகம் சார்ந்து என்னத்தையாவது எழுதிவிடவேண்டும் என அல்லாமல் எந்தவொரு அலங்காரப் புனைவுகளுமின்றி முழுக்க முழுக்க அதன் இயல்பிலேயே ஒன்றி உயிரோடும் வார்த்தைகளைக் கோர்த்து உருவாக்கப்பட்டிருக்கின்றது இந்நூல். சாமானியன் ஒருவனாய் இருந்து ஊழலால் கரைப்படிந்திருக்கும் அரசு இயந்திரத்தை அசைத்துப் பார்க்க துணிந்தபோது தன்னை அடிபணியவைக்க எடுக்கப்பட்ட சித்திரவதைகளிலிருந்து சூழ்ச்சிகளிலிருந்து தப்பிக்க தானெடுத்த முயற்சிகளில் எவ்வாறு இறுதியில் வெற்றி அடைந்தார் என்பதைப்பற்றி பேசுகின்ற ஓர் உண்மைக்கதை. வஞ்சனையால் புதைக்கப்பட இருந்த அரும்பெரும் தன் வரலாற்றை தனியொருவனாகவே நின்று சுயமாக போராடி மீட்டுருவாக்கி வென்று காட்டிய வகையில் இந்த படைப்பு நமக்கு கிடைத்திருக்கிற ஒரு அரிய பொக்கிசம்.
ஒரே இரவில் இந்நூலைப் படித்துமுடித்தேன். அந்தளவிற்கு எழுத்தாளர் இந்தப்புத்தகத்தில் தன் எழுத்துக்களால் வாசகனோடு உரையாடுகின்றார். பேசுகின்றார். உற்சாகமூட்டுகின்றார். சிரிக்கவைக்கின்றார். அழுகின்றார். அழவைக்கின்றார். எங்கெங்கோ அவர்கடந்த பாதைகளில் வாசகனின் கைப்பிடித்து கூட்டிச்செல்கின்றார். பயணிக்கவைக்கின்றார். கற்பிக்கின்றார். சிந்திக்க வைக்கின்றார். உறவாடுகின்றார். இப்படியாக வாசகனின் அசைவுகளைக் கட்டிப் போடுகின்றார். எந்த இடத்திலும் சலிப்பு தட்டவேயில்லை. அவரைப்போலவே சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் அவரது எழுத்துகளும் நம்மைப்பயணிக்க வைக்கின்றன.
சாதாரணக்குடும்பத்தில் பிறந்த சங்கர், தனது தந்தை அவரது அரசுப்பணிக்காலத்திலேயே திடீர் மறைவடைந்ததால் அதன்வழி கிடைத்த அரசுப்பணியில், தன் பள்ளிப்படிப்பை முடித்தக்கையோடு தனது பதினாறு வயதிலேயே சேர்கிறார். ஆழ்ந்த சிந்தனையும், தொடர்ந்த வாசிப்பும், அயராத உழைப்பும் கொண்டிருந்தமையால் நாளும் சிறப்படைந்து வருகின்றார். ஆரம்பத்தில் பெரியாரியம், அதைத்தொடர்ந்து இடதுசாரிய கொள்கைகளால் ஈர்க்கப்படுகின்றார்.
கலைஞர் கருணாநிதியின் அரசியல், ஆட்சி நிர்வாகம், மக்கள் நலப்பணிகள் பலசெய்திட்ட திமுகவின் பொற்காலம் தொடங்கி அலைக்கற்றை ஊழல் நடந்த திமுகவின் கெட்ட காலம் வரையிலும் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கி முதல்வரான பின் அவராடிய ஆட்டங்கள், ஊழல்கள், கீழான அரசியல் ஆட்சி நிர்வாகம் தொடங்கி திமுக காலத்தில் தம்மீதும் தம்மைச்சார்ந்தோர் மீதும் போடப்பட்ட பல்வேறு ஊழல் சார்ந்த வழக்குகளை மூட அவர் காட்டிய ஆர்வம், லஞ்ச ஒழிப்புத்துறையில் இல்லாத நடைமுறையில் ஊழல் பின்னணி கொண்ட தமக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக அமைத்து தமக்கு வேண்டியதை செய்துக்கொள்ளும் அடாவடியான ஆளுமை வரையிலும் நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி பட்டியலிடுகின்றார். இதுவரை நான் எனதளவில் கொண்டிருந்த ஜெயலலிதா எனும் ஆளுமையின் பிம்பம் சுக்குநூறாய் போனது.
அடுத்ததாக அண்ணாபல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு முதல்வர் ஒதுக்கீட்டு முறையில் ஒதுக்கப்பட்ட இடங்களைவிட அநேக இடங்களில் அமைச்சர்கள் சிபாரிசோடு அரசு உயர்நிலை அதிகாரிகளின் பிள்ளைகள் உட்பட மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தவர்களுக்கு இடங்களை ஒதுக்கப்பட்டிருந்தது. பலகாலமாக இதுபோன்ற அராஜகங்கள் நடந்துவந்தாலும் அரசு ஊழியர்கள் தானுண்டு தன்வேலையுண்டு என்று இருக்கும் ஒரே காரணத்தினால் தான் இதுபோன்ற ஊழல்கள் நடக்கின்றன என்று வருத்தப்படுவதோடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் தன்னையே களத்தில் இறக்கி செயல்படுகின்றார். அதன் பயனாய் பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியில் உச்சநீதிமன்றம் அத்தகைய ஒதுக்கீட்டு முறையை நீக்குகின்றது. இது பெரிய சாதனை அல்லவா. இதுபோன்று பல இடங்களில் தன் கண்ணுக்கு முன்னால் நடக்கின்ற அநீதிகளை தன் பலத்திற்கு உட்பட்டோ மீறியோ காரியத்தில் இறங்கி சாதித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணியில் வேலையில் இருந்த சங்கருக்கு தன் தலையெழுத்தையே மாற்றப்போகும் அளவிற்கான சிக்கல் உண்டாகின்றது. தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கின்றார். சிறைத்துறையிலும் நீதித்துறையிலும் நடந்த (நடக்கின்ற) அநீதிகளைச் சொல்லிச் செல்கின்றார்.
சிறைவாசத்தில் பெற்ற அனுபவத்தை நிறையவே பகிர்ந்திருக்கின்றார். பீடிக்கட்டுகள்தான் சிறைக்குள் பணமாகி இருப்பதைப்பற்றியும் விவரிக்கின்றார். சிறை நிர்வாகத்தில் நடக்கும் ஊழலைப்பற்றியும் அரசியலைப்பற்றியும் சொல்கின்றார். பணவசதி இல்லாதவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாமல் இருக்கும் ஏனையோர்கள், தங்கள் குற்றத்திற்கு தண்டனைக் கிடைத்தாலும் கிடைக்கக்கூடிய காலத்திற்கும் அதிகமாய் விசாரணை என்ற போர்வையில் விசாரணை நீட்டிக்கப்பட்டு அநியாயமாய் சிறையில் தண்டிக்கப்படுவதை அடிக்கோடிட்டு காண்பிக்கின்றார். பின்னாளில் ஜாமீனில் வெளிவந்தபிறகு சிறையில் சந்தித்த இசுலாமிய நண்பர் ஒருவருக்கு வழக்கிலிருந்து வெளிவர அவரது உண்மைத்தன்மையை ஆராய்ந்து வைத்து, தன்னால் முடிந்தவரை உதவிசெய்ய முயன்று, செயலை முடுக்கிவிட்டு அதில் வெற்றியும் அடைகின்றார்.
நீதித்துறையில் வெளிப்படையாக பார்க்கும் பொழுது எல்லாம் சரியான முறையில் நடப்பது போன்று தோன்றுவது மாயை என்றதோடு அங்கு உள்ளே நடக்கின்ற அவலங்களை தோலுரிக்கின்றார். அரசியல் காரணமாக ஒரு வழக்கை எத்தனை நீதிபதிகள் விசாரிக்கின்றனர் என்பதும், ஒரு வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கவிருக்கும் வேளையில் நீதிபதி மாற்றப்படும் மோசடி நடப்பதையும் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திச் சொல்கின்றார்.
ஒருமுறை நீதிமன்ற அறையைவிட்டு வெளிவரும் பொழுது தன்மேல் கொண்ட ஆத்திரம் மற்றும் விரக்தியால் பொய் புனைவுகளோடு குற்றம்சாட்டிய அதே டிஎஸ்பி பாலு நிற்கின்றார். அப்போது சங்கர் அவரருகில் சென்று 'என்ன பாலு, எப்படி இருக்க?' என்று கேட்கும்பொழுது அட்டகாசம். (ஒரு பி.ஜி.எம் பின்னால ஓட விட்டுருந்தமாதிரி இருந்துச்சு.)
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக இவரது வழக்கும் நடக்கின்றது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்னும் முதுமொழிக்கேற்ப, ஆரம்ப காலத்தில் அதிகாரிகளால் இவர்மீது பொய்யாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்��ப்பத்திரிக்கையின் மீது இறுதிக்கட்ட குறுக்குவிசாரணையில் சில சாட்சியங்கள் இறந்தும் பல சாட்சியங்கள் முன்பு பொய் சொல்லிவிட்டு பின்னர் ���ிறழ் சாட்சியங்களாய் மாறின. பல போராட்டங்களின் விடியலாய் ஓர்நாள், சாட்டப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களிலும் இருந்து சங்கர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றார்.
சங்கர் அவர்களின் வாழ்வில் பல இடங்களில் முக்கிய திருப்புமுனையாக அமைந்து, அவருக்கு பலவழிகளில் உதவி செய்திட்ட மனிதர்களை பட்டியலிட விரும்புகின்றேன். பேராசிரியர் கல்யாணி, எஸ்.பி. அருண், நண்பர் ராஜசேகர், முக்கியமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி உபத்யாய், வழக்கறிஞர் புகழேந்தி, டெகல்கா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் மணிகண்டன், மற்ரும் இறுதி குறுக்கு விசாரணையின் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர்களை போற்றுகின்றேன்.
இப்படியாக ஒவ்வொருவரும் ஒரு துரும்பை எடுத்துப் போட்டதால்தான் தம்மால் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் நீந்திக் கரையேற முடிந்திருக்கிறது என்று சொல்லுவதோடு, இதுவரை பட்டதற்கு வருத்தப்படவில்லை மாறாக பெருமைப்படுவதாகவும் எழுத்தாளர் சொல்லி முடிக்கின்றார்.
சங்கர் அண்ணனுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்.
இதுபோன்று நிறைய சங்கர்கள் மறைந்து வாழ்ந்தும் வரலாம். பிரச்சினைகளில் சிக்குண்டும் இருக்கலாம். சமூகத்திற்கு உதவ நினைத்து தன் நலன்களை இழந்தும் நிற்கலாம். தயவு செய்து உங்கள் கண்முன்னால் அப்படி யாரேனும் இருந்தால் தோள் கொடுத்து அவர்களை நிமிரச்செய்யுங்கள். அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு வடிகாலாய் மட்டும் அமைந்துவிடாதீர்கள். நீங்களும் அரசு வேலைப்பார்ப்பவராய் இருந்தால் மறைமுகமாகவாவது உங்களால் முடிந்த அளவிற்கு வேண்டிய உதவியை செய்ய முன்வாருங்கள். நமக்கு சங்கங்களை விட இப்போது நிறைய சங்கர்கள் தான் அவசியமும் தேவையும் கூட.
இதுவே சவுக்கு சங்கர் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பார் என்பது எனது அனுமானம்.
அங்குராசன்.
23-02-2017
A brilliant read on how a LD clerk in a government department was pitted against multiple power centres - IPS officers, High court judges et al. The book's first hundred pages are especially enlightening as it shows ,among others ,as to how Karunanidhi's blunder in 2000 ensured that the Disproportionate Assets case against Jayalalithaa dragged on and on till 2014 . To learn how government works, we read Civics books in schools. Once we grow out of our school mindsets, books of this kind must be read to understand realities.