Periyar (Tamil)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

4.24/5 · 300+ ratings

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, …

Reviews

user_8317

★ 5/5
Good for reading பெரியாரைப் பற்றி நிறைய புதிய தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது, மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது, சிறப்பான எழுத்து நடை, கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

user_8316

★ 5/5
Short and Crisp. Most of the major events have been included. Would recommend for those who wants to have a glance on Periyar's life, origin of DMK and ADMK parties.

user_8315

★ 4/5
Knowing the facts make me curious.. .. This book had the unknown facts happened in DK and DMK..

user_8314

★ 5/5
A good start to know about periyar. Every page kept me eager and also kept me awake all night.

user_8313

★ 4/5
Short and UnbIassed biography of the icon of Dravidian movement PERIYAR..

user_8312

★ 5/5
பெரியாரின் பிடிவாதம் யாரும் வாதம் செய்யாதவாறு உறுதியாக உள்ளன .... 👌

user_8311

★ 3/5
Thank you, I like the way you narrated the whole event.

user_8310

★ 3/5
Good book about Periyar and his life history. Recommend for any beginners who want to know about him.

user_8309

★ 5/5
Concise insight about Periyar and his life. Great read. A wonderful book which provides a gist of Periyar, his thoughts, life and politics. Periyar is a great personality who had such a far sightedness and had given his voice for rights of women.

user_8308

★ 5/5
Amazing Book Impressive! This book delves into history, chronicling the necessity for political party formation, the leaders involved, and their early struggles both within and outside the party.

user_8307

★ 3/5
I have read Periyar books .This does not show any of his ideas deeply but it explore his life at peek interest.Explaining important things at his life.Periyar was portrayed a hero in this book.A small quick history book it is..

user_8306

★ 3/5
பெரியாரின் வாழ்க்கை வரலாறாக பெரியாரைப் பற்றிய நல்ல அறிமுகம். அவரின் வாழ்வை அழகாக்க படம் பிடித்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றின் அரிச்சுவடியை அறிய விரும்பபவர்களிற்கு இது ஒரு நல்ல புத்தகமாக அமையும்.

user_8305

★ 5/5
Good book about a great leader Written with an hawk's eye view. Really nice to read, as the flow is very good and suitable for fast reading. The entire book is not only mentioning the life history but also heavily sandwiched with the quotes of periyar. Thanks for the book

user_8304

★ 5/5
I wanted to know Periyar as a person and his influence on TN politics, this book gave it the best way. It's interesting to know that he supported Congress throughout and was not on DMK's side during the elections, esp even in 1967. I hadn't imagined it that way. After reading this book, I really wonder at the hierarchy of Periyar, Anna, Kalaignar... Feels weird!

user_8303

★ 4/5
சிறப்பான புத்தகம். தமிழன் அனைவரும் பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பு. இந்தி திணிப்பு எதிர்ப்பு, சாதிப் போராட்டங்கள், பிராமணர்களுக்கு எதிரான போராட்டங்கள், விழிப்புணர்வு போராட்டங்கள், குலக்கல்வி எதிர்ப்பு இப்படி பல போராட்டங்களை வாழ்நாள் வரையிலும் செய்து தமிழர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுத்த தலைவர். திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தந்தை.

user_8302

★ 4/5
பெரியார் பற்றி அறிமுகம் வெகு நாட்களாய் பெரியார்ப்பற்றி படிக்க நினைத்திருந்தேன். இந்த புத்தகம் அவரைப்பற்றி அறிய நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. திமுகவை கண்ணீர்துளிகள் கட்சி என்றழைத்தது, காமராஜருடன் நட்பு பின் முரண், திமுகவையும், எம்.ஜி.ஆரையும் பற்றிய அவரது கருத்துக்கள் முதலாக தெரிந்துக்கொள்ள முடிந்தது. தமிழ் எழுத்து மாற்றம் கொண்டு வந்தது. இவரைப்பற்றி மேலும் படிப்பேன்.

user_8301

★ 4/5
"திராவிட சமுதாயம் என்று நம்மை கூறிக்கொள்ள கஷ்டமாக இருக்கும்போது தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும் . இங்கேயே பாருங்கள் கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன் , தொழர் அண்ணாத்துரை தமிழர் , எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னை பொறுத்தவரை நான் தமிழன் எனச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் . தெலுங்கரும் அப்படியே . எனவே திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம் : நம்நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக்கொள்வதில் இவர்களுக்கு ஆட்செபனை இருக்காது." - பெரியார், சேலம், 1944.

user_8300

★ 3/5
A great read for for the people those who want to know periyar's life in a short read. Author didn't have to put on much effort to make sure the book wasn't boring since the job was taken care by periyar himself through his unpredictable actions throughout his life. Wont take more that 4 hrs to complete (160 Pages). Most of the major events in periyar's life is covered without much detailing on any events. Probably the author compelled himself to limit the pages, mostly discussing the positive aspects of periyar's ideology and ignores to mention the detailed counter argument of people who was having different opinion (for ex. C.N. Annadhurai). A good start for getting to know periyar.

user_8299

★ 4/5
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளின் அணைத்து சுவரொட்டிகளில் கட்டாயம் இருப்பவர் பெரியார். யார் தான் இந்த பெரியார் என்று எனக்குள் அடிக்கடி தோன்றியது உண்டு. ஆர்.முத்துகுமார் எழுதியுள்ள இந்த புத்தகம் ஒரு தெளிவை தந்துள்ளது . சுயமரியாதையை உயிர் போல் எண்ணிய பெரியார் தன்னுடைய வாலிப பருவத்தில் யாசித்து உண்றது பேராச்சரியத்தை தந்தது. அன்றைய சமுதாயம் எந்த அளவிற்கு படு நாசமாய் இருந்தது என்றால் குலக்கல்வியை சட்டமாக இயற்றிருக்கிறது தமிழக அரசு. அதை எதிர்த்து பெரியார் போராட்டம் நடத்தாமல் இருந்து இருந்தால் இன்றைக்கு என்னால் இந்த புத்தகத்தையே படித்து இருக்க முடியாது. அனைத்து சமுகத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி , பெண்ணியம் போன்ற புரட்சிகர சிந்தனைகளை தமிழ் நாட்டில் விதைத்தவர் இவரே என்பதை அறியமுடிந்தது. எந்த கட்சியுடனும் சமரசம் இல்லாமல் தமிழ் மக்கள் நலன் மட்டுமே ஒரே குறிக்கோள் என்று வாழ்ந்து மறைந்து இருக்கிறார் பெரியார்.

user_8298

இந்த புத்தகத்தை குறித்த என் பார்வை …… பெரியார் பிறந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து இருந்தும் , நான் அவரை பற்றி முழுவதுமாக அறிந்திருக்கவில்லை . 2019 , ஆகஸ்டு மாதம் நடந்த புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்க நேர்ந்தது . பெரியார் என்ற சொல்லைக் கேட்டவுடன், நினைவுக்கு வருவது, கருப்பு சட்டை, கள்ளுக்கடை மறியலில் தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்ந்தது, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது, இன்னும் பல…… 1879 இல் பிறந்தது முதல் அவர் வாழ்கை நகர்ந்த ஒவ்வொரு கட்டமும், அரசியலில் அவர் சந்தித்த வெற்றி , தோல்வி , அவர் அமைத்த நீதிக்கட்சி (தற்போது திராவிடர் கழகம், கி.வீரமணி தலைவராக இருக்கிறார் ) இன்னும் பல தகவல்களைக் கொண்டது , இந்த புத்தகம் . அனைத்து பிரிவு மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்ற கொள்கை, வ.வே.சு ஐயரின் ஆசிரமத்தில் நடந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்க பாடுபட்டார். ஆனால் அது நிறைவேறாத காரணத்தால் , காங்கிரசில் இருந்து வெளியேறினார். ஈ.வெ.ரா கதர்ப் பிரச்சாரம், மது ஒழிப்பு, வகுப்பு வாரி இட ஒதுக்கீடு , வர்ணாசிரமத்திற்கு எதிராக பேசினார் . ஆனால் காங்கிரஸ் காந்தியை வரவழைத்து வர்ணாசிரமத்திற்கு ஆதரவாக பேசியது, இருவருக்கும் இருந்த பிளவு அதிகமாகி கொண்டிருந்தது . பெண் என்றாலே அடுப்பங்கரையிலும், பிள்ளை பெற்றுத்தரும் எந்திரமாக எண்ணியிருந்த காலத்தில், பெண்ணுரிமையின் அவசியத்தை , அவர் எழுதிவந்த குடியரசு பத்திரிக்கைகளில் தீயாய் ஏற்றினார். அரசியல் ஆளுமைகளில் பெண்களின் உரிமையைக் குறித்தும், கல்வியைக் குறித்தும் அதிகம் பேசியது அவரே (நான் அறிந்த வரை ) 1972 இல் இராஜாஜி இறந்த போது , மயானம் வரை சென்றவர். காதல் மனைவி நாகம்மை இறந்த போது கூட கண்ணீர் வடித்திடதா அந்த கண்கள், நண்பரின் மரணத்தை தாங்காது கண்ணீர் வடித்தது . 24.12.1973 , பெரியார் என்னும் புரட்சித் தீ அணைந்தது .

user_8297

★ 5/5
தமிழர் அனைவரும் ஒருவரை அவசியம் வாசிக்க வேண்டும் அவரிடம் சுயமரியாதை அதிகம் உள்ளது பிடிவாதம் மிக மிக அதிகம் புரட்சியோ தூக்கல் அவர் பார்வை தான் இன்றைக்கும் தமிழகம் கண்ட ஆக சிறந்த பார்வை சுற்றி இருக்கும் மாநிலங்கள் வியக்க வளர்ந்து நிர்க்கும் விதை அவர் இட்டது இன்னும் எத்தணை வருடம் ஆனாலும் நமக்கான எல்லைச்சாமி "பெரியார்" ஒருவர் தான். அவரை படித்து இறுகப்பற்றிக் கொள்வது நம் கடமை! கை தடி ஆதிக்கத்தை வெளுக்கும்! அடித்து விரட்டும்! டவுசர் இல்லமால் ஓட விடும்! வாழ்க பகுத்தறிவு பகலவன் வளர்க நின் புகழ்! Book: பெரியார் Author: ஆர். முத்துக்குமார் ❤️🖤

user_8296

★ 5/5
ஒரு நாவலுக்கு தேவையான விறுவிறுப்பு இந்த புத்தகத்தில் இருந்தது. வாழ்க்கை வரலாற்றை 150 பக்கங்களில் அடக்குவது என்பது அசாத்தியமான காரியம் அதுவும் தந்தை பெரியார் வாழ்க்கையை, ஆனாலும் ஆர். முத்���ுக்குமார் மிகவும் திட்டமான வடிவில் நமக்கு கொடுத்துள்ளார். பெரியார் பற்றி மேலோட்டமாக தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.

user_8295

★ 4/5
A good read. Author is admirer of Periyar; so there's no criticism but only positive aspects of his decisions. Periyar is the most important person in the last century for all the Tamils. Being the architect of Dravidian moment he has steered the politics of TN till his last breath. Some of his visionary policies were implemented by the subsequent DK parties came to power. His thinking on Women rights were exemplary. Though I don't agree with all his decisions and policies, my admiration for his selfless protests for the weak , poor and downtrodden section of society.

user_8294

★ 4/5
இந்த நூல் எனக்குச் சில அளவுக்கு ஈ.வே.ரா அவர்களின் வாழ்க்கையை அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால், ஒரு புத்தக வாசிப்பாளராக என்னைச் சுற்றி பல கேள்விகளை எழுப்ப வைத்தது. புத்தகத்தை படிக்கும்போது அது ஒரு புது பார்வையை தருமா, ஒரு புதுமையான ஆழத்தைக் கொடுப்பதா என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்தது. ஆனால், நூலின் ஒட்டுமொத்த அமைப்பே ஏற்கனவே வெளியான ஈ.வே.ரா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை நேரடியாக நூல் வடிவில் மாற்றியதாகவே தோன்றியது. திரைப்படத்தை முன்பே பார்த்தவர்களுக்கு, இந்த நூலில் புதிதாகக் கற்றுக்கொள்ள ஏதும் இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. வாழ்க்கை வரலாறு என்ற பெயரில், ஒரு திரைக்கதையின் பிரதி வாசிக்க வேண்டிய நிலை வாசகருக்கு ஏற்படக்கூடும்.

user_8293

★ 4/5
The book discussed the time line of Periyar's life, his various protests, political stances, his relationship with other leaders. But the book missed to explain Periyar's relationship with Ambedkar, Periyar's non political stands, Periyar's thoughts on all issues in detail. The book was more like a life history of Periyar and didn't have the complete view on all social issues Periyar worked on. A good read for the one who is starting to read about Periyar and his life, but for those who already have enough knowledge on Periyar can avoid this and better go for books which clearly explains what Periyarism had and brought to this society.

user_8292

★ 5/5
The book focuses only on incidents where periyar was utmost successful and dint reveal the incidents from unbiased standpoint. To some extent, I agree with periyar thoughts and most I wouldnt agree to it. I agree that, periyar was a really a big icon in history to bringup dravidar group to better civilized society or else where upper caste would have dominated thru out for some more time, but the way he dealt few protests is not good I feel. I read in one of the protests where violence crept in, he asked rebels to have a pocket knife in handy which I would condemn very badly. I dont believe in violence and that would bring solution. Also I read somewhere when things dint turn out as he intended it to be, he asked lower caste people to kill brahmins to remove the clutch from their dominance which again is against ahimsa. Few of the thoughts which he revealed is praised and is achieved only by words which are still existing and dint bring change. Any so called rationalist should have tons of patience to bring change over time whch I feel peiyar failed in some cases. Over all good read to know periyar as rationalist as society claims to be!!

user_8291

★ 4/5
“அறியப்படாத தந்தை பெரியாரின் சில முக்கிய பக்கங்கள்” இந்த புத்தகத்தில் இருக்கும் சில அம்சங்கள் இவை : அவரது பெற்றோர் பற்றி, பாலியம் பற்றி, மண்டி கடை உரிமையாளர் ,ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இடையிலான உறவு பற்றி, நீதிக்கட்சி பற்றி, காங்கிரசுக்கும் பெரியாருக்கும் இடையிலான உறவு பற்றி, அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையிலான உறவு பற்றி, கருப்பு சட்டைப் படை பற்றி, இந்தி எதிர்ப்பு பற்றி, பிராமணன் அல்ல பிராமணர்

user_8290

★ 3/5
A well written biography with clear presentation of facts.

user_8289

★ 4/5
கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன் வணங்குகிறவன் காட்டுமிராண்டி . இவைதான் பெரியாரின் முதல் கொள்கைகள் ! தீண்டாமை, சாதி வேற்றுமைகள், மூடநம்பிக்கைகள், மடமைச் சடங்குகள் ஆகியவற்றை இவர் கடுமையாக, வன்மையாகக் கண்டித்து அவற்றை விட்டொழிக்கும்படி வலியுறுத்தி இவர், பொதுமக்கள்மீது அவர்களுடைய லட்சியங்கள், நல்வாழ்க்கை விஷயமாகவும் கொண்டுள்ள பற்றுதலும், ஒரு இனத்தவர்கள் மற்ற இனத்தவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதையும் இவர் வெறுத்தார் . பெரியாரின் வாழ்வை மிகவும் எளிமையாக விவரிகின்றது இப்புத்தகம் . பெரியாரை அறிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகம்

user_8288

★ 5/5
பெரியார் - இவரை பிடிக்குமா? பிடிக்காதா? என்று கேட்டால் எந்திரன் வசனம் "Its a hypothetical question" என்றே கூறுவேன். செப் 17, 1879 இல் "தமிழக அரசியல் அன்னை" ஈன்றெடுத்த முதல் குழந்தை இந்த ராமசாமி! குறும்புத்தனமும், அடாவாடியுமாக இருந்த ஒரு சிறுவன் தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தை மாற்றுவான் என்று யார் கண்டாரோ? முதலில் தந்தையுடன் வணிகத்தில் ஈர்ப்பு, பின் ஈரோடு நகரசபைத் தலைவர், பின் ராஜாஜியுடனும் காங்கிரஸ் உடனும் கூட்டணி, குடியரசு என்ற பத்திரிக்கை நிறுவியது, நீதிக்கட்சி தலைவராக இருந்தது, நீதிக்கட்சி பின்னர் "திராவிடர் கழகம்" என்று மாறியதே இன்று தி.மு.க ஆகவும் (அண்ணாதுரை பெரியாரை விட்டு பிரிந்து உருவாக்கிய கட்சி),அ.தி.மு.க ஆகவும் (தி.மு.க, எம்.ஜி.ர் யை துரத்தி, பின் உருவாகிய கட்சி) தமிழகத்தை நாலா புறமும் மாறி மாறி 50 ஆண்டுகளாக நம்மை கும்மு கும்ம்னு கும்மி கொண்டிருக்கிறது! பெரியாரின் பெண்ணுரிமை போராட்டம், தமிழகத்தில் குலக்கல்வி ( இந்தி ஒழிக, தமிழ் வாழ்க) ஒழிக்க போராட்டம், பகுத்தறிவு வளர வேண்டும் என்று பல கொள்கைகள் பாராட்டுக்குரியது என்றாலும், பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று கூற வேண்டும் என்றும், பாம்பையும், பார்ப்பனரையும் கண்டால் பார்ப்பனை அடி என்றும், விநாயகர் சிலை உடைப்பு , ராமன் சிலைக்கு செருப்பு போன்ற சிக்கலான விஷயங்கள் இந்து மதத்தையும், கடவுள் பக்தர்களையும் எரிச்சல் ஊட்டியது உண்மையே (நியாயமும் கூட)! ஆங்கில மருந்து போல் உடனடி நிவாரணமாக, "கீழ் மக்களை தீண்டாதே என்ற மேன்மக்களை ஒழி" என்று சமூக பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கண்டது போன்ற எக்கச்சக்க கொள்கைகள்... பெரியார் ஒரு தவறு செய்து விட்டார்! கல்வியையும் அவர் கொள்கையில் "Extra fit" போட்டிருக்கலாம்! இந்து சாதிகளில் உயர்ந்தவர்கள் பிராமணர்! பிராமணர்களுக்கும் மற்ற சாதியினருக்கும் இருந்த ஒரே வேறுபாடு "கல்வி". இந்த கல்வி ஒன்று மட்டும் சம உரிமையோடு அனைத்து சாதியினருக்கும் "அன்றே" அமைந்திருந்தால், தமிழ்நாட்டை அசைக்க முடியாத ஒரு மாநிலமாக அமைந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. அரசியலும் இன்று உருபட்டிருக்கலாம்..
Shelves
Biography ஆர்.முத்துக்குமார் (R.Muthukumar) Nonfiction book

More like this


மனிதனும் மர்மங்களும் [Manithanum Marmangalum]

The Book Title Manithanum Marmangalum Written By Madhan is published by Kizhakku Pathippagam

4.24/5 · 300+ ratings

Buddha

King Suddhodana was at his wit's end. He had surrounded his handsome young heir with comfort and riches, love and respect, but Prince Siddhartha w…

4.24/5 · 300+ ratings

சே குவேரா [Che Guevara]

Author: Marudhan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கு…

4.24/5 · 300+ ratings

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்

பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முத…

4.24/5 · 300+ ratings

The Seasons of Trouble: Life Amid the Ruins of Sri Lanka's Civil War

For three decades, Sri Lanka’s civil war tore communities apart. In 2009, the Sri Lankan army finally defeated the separatist Tamil Tigers guerril…

4.24/5 · 300+ ratings

வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை

தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு. இந்த மனிதர் எதை…

4.24/5 · 300+ ratings

மறக்கவே நினைக்கிறேன் [Marakkavae Ninaikkiraen]

ஒரு நிகழ்ச்சியை மூன்று விதமாகப் பார்க்கலாம். வெறும் நிகழ்வாக அதன் போக்கில் பார்ப்பது ஒன்று. நம் விருப்பு வெருப்புகளை அதன் மேல் சாயம் ஏற்றிப் பார்ப்பது இரண்டு. அதை ஓர் அனுபவம…

4.24/5 · 300+ ratings

கி.மு கி.பி [Ki.Mu Ki.Pi]

குமுதம் இதழில் ஒரு வரலாற்று தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது. மொத்தத்தில் உலக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழில் ஒரு நல்ல புத்தகம்.

4.24/5 · 300+ ratings

ஏன்? எதற்கு? எப்படி? (II) [Yen? Yetharku? Eppadi?] Part 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

4.24/5 · 300+ ratings

Karukku

Author: Bama Translator: Lakshmi Holmström

In 1992 when a Dalit woman left the convent and wrote her autobiography, the Tamil publishing industry found her language unacceptable. So Bama Fa…

4.24/5 · 300+ ratings

ராஜராஜ சோழன் [Raja Raja Cholan]

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…

4.24/5 · 300+ ratings