உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]
Share:

உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]

Check Price on Amazon
4.14/5 · 400+ ratings

உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]

4.14/5 · 400+ ratings
வடிவம்
Paperback
பதிப்பகம்
மீனாட்சி புத்தக நிலையம்
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DN23KD3C

ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது, தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் முடியும். கல்யாணத்தின் உண்மையான தாத்பரியம் அதுவல்ல. தனக்காக வாழ்ந்துக்கிட்டிருந்த ஒருவனோ ஒருத்தியோ இன்னொருவருக்காக வாழ்வதின் ஆரம்பமே திருமணம்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_8178

★ 5/5

ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துகள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியவை.

இக்கதை மாந்தர்களான தங்கம், மாணிக்கம், சிட்டி, அன்னம்மா, கன்னியப்பன், தொண்டர் துரைக்கண்ணு என அனைவரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

படித்து முடித்த பின்னர் மனம் பாரமாகி விட்டது.

user_8177

★ 3/5

சென்னையின் குடிசைப் பகுதியை பின்னணியாகக் கொண்ட, தாய்-மகன் உறவைப் பற்றிய உருக்கமான கதை. மாணிக்கத்தின் முடிவு குறித்து முழு திருப்தி இல்லை என்றாலும், கதையின் உணர்வுப் பிடிப்பு அபாரம்.

user_8176

★ 5/5

"இந்தப் பாரததேசத்தின் எதிர்காலமே எச்சில் துண்டு சிகரட் பொறுக்கித் திரிவதுபோல் அவர் இதயத்தில் உருவகமாயிற்று."

ஒரு தேசத்தின் லட்சணத்தை அளக்கவேண்டுமானால் அந்த தேசத்தின் பெண்களின் நிலையைப் பார்க்கவேண்டும். இந்த தேசத்தின் தாய்மார்களின் நிலை இதுவானால் இந்த தேசத்தின் எதிர்காலத்தின் நிலை எவ்வாறு இருக்கும்?

"யாருகிட்டே சண்டை போட்டாலும் தாய்கிட்டே சண்டை போடக் கூடாதப்பா; தாய்கிட்டேயே சண்டை போட்டாலும் ஒருத்தன் தன் கிட்டேயே சண்டை போட்டுக்கக் கூடாது… ஆமா! அது ரொம்பத் தப்ப தன்னைத் தானே வெறுக்க ஆரம்பிச்சுட்டா அந்த மனசு அப்பறம் யாரையுமே நேசிக்க முடியாமலே அழுகிப் போயிடும்."

உயிர் என்பது ஜடமன்று. ஜடம் உடைந்தால் ஒரு முழுமை இரண்டு மூளிகளாக மட்டும்தான் மாறும். உயிரின் முழுமை மாறுதல் கொண்டால் ஒன்றிலிருந்து பல மூளிகள் அல்ல - பல முழுமைகளே செழிக்கும்.

user_8175

★ 5/5

ஜெயகாந்தனின் பிறந்த தினத்தையொட்டி இதைப் படிக்க நேர்ந்தது. படித்தப் பின் ஏற்பட்ட தாக்கம் மிகப் பெரியது. தாக்கத்தை ஏற்படுத்தாத ஜெயகாந்தன் புத்தகம் தான் ஏது?!

"தங்கம்" என்கிற முப்பது வயது பெண் சித்தாள், அவளது 12 வயது மகன் "சிட்டி" - இவர்களைப் பற்றிய கதை தான் இது. 16 வயதிலே கள்ளத் தொடர்பால் தங்கம் கர்ப்பமாகிறாள் - அந்த குழந்தை தான் சிட்டி. அன்னம்மா ஆயாவின் உதவியோடு குழந்தையை வளர்க்கிறாள். "துரைக்கண்ணு" என்கிற மாமனிதனை சிட்டி ஒரு நாள் சந்திக்க நேர்கிறது. அதன் பின் தான் சிட்டி ஒரு பொறுப்புள்ள சிறுவனாக மாறுகிறான்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அந்தந்த நேரத்து நியாயத்தை ஜெயகாந்தன் தனது எல்லா படைப்புகளிலும் காட்டுவார். முழுமையாக யாரையுமே வெறுக்க முடியாது. கடைசி இருபது பக்கங்கள் படிக்கையில் கண்களில் வழிந்துக் கொண்டே இருந்த கண்ணீரை நினைக்கையில் அவர் எழுதிய இந்த வரி தான் நினைவுக்கு வருகிறது - "மனிதனின் சகல சோகங்களுக்கும் வித்தான பிறவியெனும் பெருஞ்சிலுவையைத் தோளில் சுமந்து நிற்பவன் போன்று..."

user_8174

★ 5/5

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய "உன்னைப்போல் ஒருவன்" நாவல் பற்றிய வாசிப்பு அனுபவங்கள் இந்தப் பதிவில்.

மனித உறவுகளைப் பற்றி இந்தச் சமூகம் கொண்டிருக்கும் முன்முடிவுகளைப் பற்றிய தீர்க்கமான கேள்விகளை முன்வைக்கும், எளிமையான நாவல்.

30 வயதான தன் அம்மா அவர் மனத்துக்குப் பிடித்த இன்னொரு ஆணுடன் வாழத் தொடங்கையில், அந்தச் சராசரி ஏழைக் குழந்தைக்கு ஏற்படும் மனச் சிக்கல்களை, ஒரு சிறுவனின் மனவோட்டத்துடன் ஜெயகாந்தன் அவர்கள் அணுகியிருக்கிறார்.

1960-களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் விவாதிக்கும் விஷயங்கள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

Shelves
Novels நாவல் Fiction book புனைகதை ஜெயகாந்தன் Jayakanthan

More like this


சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings
Check Price

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

தமிழ் இலக்கிய உலகின் மகுடமாகத் திகழும் இந்த நாவல், கலையுலகின் பின்னணியில் ஒரு பெண்ணின் ஆளுமையையும் அவளது சுதந்திர வேட்கையையும் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. சமூகத்தின்…

4.22/5 · 500+ ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1]

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1 யுக சந்தி இல்லாதது எது இரண்டு குழந்தைகள் நான் இருக்கிறேன் பொம்மை தேவன் வருவாரா? துறவு பூ உதிரும் குறைப் பிறவி யந்திரம். …

4.26/5 · 600+ ratings
Check Price

யாருக்காக அழுதான்?

ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.

4.32/5 · 300+ ratings
Check Price

ரிஷி மூலம் [Rishi Moolam]

The eeriness of Jayakanthan's two novellas in this volume is overwhelming and disturbing. The protagonists are helpless victims of psychological m…

3.92/5 · 300+ ratings
Check Price

பிரம்மோபதேசம் [Brammopadhesam]

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்…

4.27/5 · 48 ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price