பிரம்மோபதேசம் [Brammopadhesam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிரம்மோபதேசம் [Brammopadhesam]

None

4.27/5 · 48 ratings

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்துக் கொண்டு அழிவை மறைத்துப் புது வேடம் போட்டு வாழும் பாமரப் பிராமணர்கள் நடுவே இந்தக் கதையில் வரும் சங்கரசர்மா ஒரு மகத்தான புரட்சிக்காரர்.என்று இந்நூலின் ஆசிரியர் கூறுகிறார்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17428

★ 4/5
ஜெயகாந்தனின் எண்ணங்களை இந்த இரண்டு கதைகள் பிரதிபலிக்கிறது. கதை 60 களில் நடப்பது என்பது அவர்கள் செலவு செய்யும் காசில் மட்டுமே தெரிகிறது. மற்றவை எல்லாம் இன்றும் பெரிதும் பேச்சு பொருளாக. இதில் வந்த இலக்கணம் இல்லா கவிதை - சூப்பர் deluxe படம் இரண்டும் ஒரே விஷத்தை தான் பேசுகின்றன.

user_17427

★ 5/5
"பிரம்மோபதேசம்" - ஜெயகாந்தன் ******************************* "பிரம்மோபதேசம்" மற்றும் "இலக்கணம் மீறிய கவிதை" என்ற குறுநாவல்களை கொண்ட புத்தகம் 1963இல் முதற்பதிப்பு கண்டது. ஜெயகாந்தனின் மேலும் இரு முற்போக்கு கருத்துக்களுடைய குறும்புதினங்கள். பிரம்மோபதேசம் --------------- சங்கர சர்மா எனும் பவித்ரமான பிராமணன் தான் கற்று தேர்ந்த சாத்திர/வேதங்கள் வழி வழுவாது, நேர்மையாக வாழ்பவர். அதே வேளையில் போலி பிராமணியத்தையும் எதிர்ப்பவர். சமையல் வேலை எடுத்து செய்யும் அவர், திருவல்லிக்கேணி ஒண்டு குடித்தினத்தில் தன் 19 வயது மகள் மைத்ரேயியுடன் வாழ்கிறார். அவருக்கு உதவியாக குண்டுராவ் என்பவரும், அவரது மனைவி கங்காபாயும் அதே வீட்டில் இன்னொரு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கின்றனர். குண்டுராவின் மூலம் கம்யூனிச இளைஞனான சேஷாத்திரி, சர்மாவிடம் வேளைக்கு சேர்க்கப்படுகிறான். அதே வேளையில், சதானந்த ஓதுவார் என்ற இளைஞனும் சர்மாவை கவர்கிறான், அவனது தெய்வ பக்தியாலும், தூய்மையான வாழ்முறையினாலும். இதில் சேஷாத்திரி பிறப்பால் பிராமணனாலுனும் அவனது போக்கு சர்மாவிற்கு பிடிப்பதில்லை. நடுவில் மைத்ரேயி கவனம் யாரின் மேல்?, கங்காபாய் யார் பக்கம்? சர்மா தனது மகளின் விருப்பத்திற்கு குறுக்கே நின்றாரா? சதானந்த ஓதுவார் என்னவாகிறார்? என பல கேள்விகளுக்கு பலவிதமான தர்க்கங்களை கொண்டு இப்புதினம் நிறைவடைகிறது. அது நமக்கான பிரம்மோபதேசமாகவே விளங்குகிறது. சர்மா தன் சாத்திரத்தையும் விட்டுத்தராமல், அதே நேரத்தில் சாதியையும் பிடித்து தொங்காமல் ஆன்மீகத்தை கைக்கொண்டு செல்வது இந்து தர்மத்தின் ஆழப் புரிந்துகொண்டவர்களால் மட்டுமே கூடியது. ஆன்மீகமும் முற்போக்கு கலந்த சிறுபுதினம், ஆனால் கருத்தாழம் மிக்க ஆழி! இலக்கணம் மீறிய கவிதை: ----------------------- ராமநாதன் எனும் முப்பத்தைந்து வயதினன், பத்திரிக்கைகளுக்கு கதை/கவிதைகள் எழுதும் பழக்கமுடைய, வியாபார அலுவலகத்தில் வேலை பார்க்கும் டைப்பிஸ்ட். தாய் எவ்வளவு சொல்லியும் திருமணம் செய்து கொள்ளாமல், தான் வசிக்கும் லாட்சுக்கே பெண்ணை இரவில் கூட்டி வரும் பழக்கமுடியவன்.இதை பார்த்து கிருஷ்ணய்யர் என்பவர் எதிர்த்தபோது, குடும்ப சுழலுக்குள் உழல விரும்பவில்லை என தத்துவம் பேசுகிறான். ஒரு நாள், பத்திரிகையில் வெளியான கவிதையை படித்து தன்னை மறந்து சிரிப்பதை, பஸ் ஸ்டாப் பெண்ணொருத்தி பார்க்க, மேலும் ஒரு தொடர்பு தொடர்கிறது அன்றைய இரவுக்கு. சரளா, ஏனோ ராமநாதன் மேல் அவளுக்கு பரிவு. கூடி களிக்கிறார்கள். அன்பு உருவாவதை உணர்ந்து அவளை அணுகும்போது என்னவாகிறாள் சரளா? என்பதாக புதினம் முடிகிறது. இலக்கணம் மீறீனால்தான் கவிதையும் மனிதனும் அழகு என சொல்லாமல் சொல்கிறது இக்குறும்புதினம்.

user_17426

★ 3/5
To analyse the ideological moorings of Jeyakanthan ,the novella "Brahmobadesam" is a must read.
Genres
Shelves
ஜெயகாந்தன் Jayakanthan book Fiction

More like this


பாரீஸுக்குப் போ

பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது. சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர க…

4.27/5 · 48 ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

4.27/5 · 48 ratings
Check Price

ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது

தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன்.சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் ச…

4.27/5 · 48 ratings
Check Price

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

4.27/5 · 48 ratings
Check Price

உடையார்

Udaiyar (History of Cholas - Part 4)

4.27/5 · 48 ratings
Check Price

கடல் புறா 2 [Kadal Pura]

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

4.27/5 · 48 ratings
Check Price

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

4.27/5 · 48 ratings
Check Price

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

4.27/5 · 48 ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

4.27/5 · 48 ratings
Check Price

மோகமுள் [Moga Mul]

மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும்…

4.27/5 · 48 ratings
Check Price

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

வாழ்க்கைக்கு நிறைவைத் தேடுவதாகப் பேசுவதெல்லாம் பொய். வாழ்க்கை நிறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் நமக்கோ மேலும் மேலும் குறைகள் வேண்டும். குறைந்தபட்சம் நம்முள்ளே இருக்கும் ஆக்ரமிப்…

4.27/5 · 48 ratings
Check Price

மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

4.27/5 · 48 ratings
Check Price