Reviews for சோற்றுக்கணக்கு

21 reviews total

user_8068

★ 5/5 Feb 02, 2026

நான் படித்த முதல் சிறுகதை. எப்போதுமே சாஹிப்பை என்னால் மறக்க இயலாது.

user_8067

★ 5/5 Feb 02, 2026

ஒரு மனிதன் தன் வாழ்க்கையை இவ்வளவு ஆழமாகப் பார்க்க முடியுமா என்று வியக்க வைக்கும் அழகான கதை.

user_8066

★ 3/5 Feb 02, 2026

படிக்கத் தகுந்த கதை. அடிப்படைத் தேவைகள் கூட ஒரு ஏழை மனிதனுக்கு எவ்வளவு கடினமானவை என்பதைக் காட்டுகிறது. படித்து முடித்தபின் என் வாழ்க்கை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டது என்ற நினைவூட்டல் மனதில் ஒளிர்ந்தது.

user_8065

★ 5/5 Feb 02, 2026

நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த கதை. வறுமையின் கொடுமையை ஆழமாய் மனதில் அச்சிட்டுச் செல்லும் கதை. இதில் வரும் கெத்தேல் சாஹிப் என்னைப் பொறுத்தவரை மிக உயர்ந்த மனிதர். உயரத்திலும் உள்ளத்திலும்.

user_8064

★ 5/5 Feb 02, 2026

மிகவும் சுவாரஸ்யமான கதை. கதையின் நாயகனைப் போன்ற மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள். இந்தக் கதையைப் படித்தபின் திருவனந்தபுரம் சென்று ஜெயமோகன் குறிப்பிட்ட இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. கண்டிப்பாகப் படிக்க வேண்டிய கதை.

user_8063

★ 5/5 Feb 02, 2026

யாரும் படிக்கலாம் என்ற எளிமையான கதை. படித்து முடித்தபின் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். அற்புதமான புத்தகம்.

user_8062

★ 5/5 Feb 02, 2026

மிக அருமையான ஒரு கதை. இதை வாசிக்கும்போது மனிதமும், அறமும், உண்மையும் கர்வமாகத் தலைத்தூக்கி, இன்றைய சமுதாயத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறது.

user_8061

★ 5/5 Feb 02, 2026

கெத்தேல் சாஹிப் கடையை உண்மையில் கண்டுகொண்டு அங்கே உணவு உண்ணும் ஆசையை, அதனினும் மேலாக தீராக் காதலை ஏற்படுத்தியுள்ள ஜெயமோகனுக்கு வாழ்த்துக்கள்.

user_8060

★ 4/5 Feb 02, 2026

60-70களில் திருவனந்தபுரத்தில் கெத்தேல் சாஹிப் நடத்தி வந்த சாப்பாட்டுக் கடையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. கெத்தேல் சாஹிப் வாடிக்கையாளர்களிடம் சாப்பிட்ட உணவுக்கு பில் வாங்கமாட்டார். வாடிக்கையாளர் மனது வைத்து கடையின் மூலையில் இருக்கும் உண்டியலில் பணம் போட்டால் உண்டு. அதையும் அவர் கூர்ந்து கவனித்தவர் இல்லை.

சின்ன வயதில் டீ விற்ற நாட்களில் இருந்தே யாரிடமும் தானாக பணம் வாங்காமல் அவர்களாகக் கொடுக்கும் பணத்தில் வியாபாரம் செய்தது வியப்பில் ஆழ்த்துகிறது.

கதையின் நாயகன் கெத்தேல் சாஹிபின் கடையில் சாப்பிட்டு அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்வதுதான் இந்தக் கதை. கெத்தேல் சாஹிப் மாதிரியான மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது வாழ்க்கையின் மீதான பற்றும் நம்பிக்கையும் இன்னும் அதிகரிக்கிறது.

user_8059

★ 5/5 Feb 02, 2026

புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ள இயலாத பசியின் கொடுமையைப் பேசும் கதை. அற்புதமான படைப்பு.