Reviews for ஆயிஷா

30 reviews total

user_7927

★ 4/5 Feb 02, 2026

அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் படிக்க வேண்டிய கட்டுரை.

"முள்ளை முளையிலேயே கிள்ளு" என்ற பழமொழியைத் தவறாய், "முல்லையை முளையிலேயே கிள்ளு" என்று கொண்டு, இன்றைய கல்விச்சமூகம் நடைபோட்டு வருகிறது.

அதை எளிமையாய் வெளிச்சத்துக்குக் காட்டும் ஒரு குறுநாவல்.

user_7926

★ 5/5 Feb 02, 2026

இன்றைய கல்விமுறை, பள்ளிச்சூழல் மற்றும் ஆசிரியர்களின் தரம் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு குறுநூல். கற்றுக்கொள்ளத் தணியாத ஆர்வம் உள்ள ஒரு பள்ளி மாணவி பள்ளி ஆசிரியர்களால் எவ்வாறு மாற்றப்படுகிறாள் என்பதை விவரிக்கிறது.

user_7925

Feb 02, 2026

இதுவரை படித்ததிலேயே மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று. பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக வாசிக்கத் தொடங்குபவர்களுக்கும் மிகவும் பொருத்தமான புத்தகம். ஒரு மணி நேரத்தில் படித்து முடித்துவிட்டேன், ஆனால் இந்த வாசிப்பு ஏற்படுத்திய தாக்கம் என் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். எளிமையான எழுத்து நடை, புரிந்துகொள்ள எளிதான மொழி. கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற அக்கறையை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

user_7924

★ 5/5 Feb 02, 2026

நம் அனைவருக்குள்ளும் ஆயிஷா இருக்கிறாள்! அவளை வளரவிடுவது பெற்றோர்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும்தான் உள்ளது.

அனைவர்க்கும் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளின்போது ஆயிஷா கட்டாயப் படமாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது!

அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.

user_7923

★ 5/5 Feb 02, 2026

ஒவ்வொரு ஆசிரியரும் நிச்சயமாகப் படிக்க வேண்டும். முடிந்தால் இந்தப் புத்தகத்தை B.Ed பட்டப்படிப்பில் சேர்க்கலாம். சிறிய புத்தகம் எனினும், ஏற்படுத்துவதோ மிகப்பெரிய தாக்கம்.

user_7922

★ 5/5 Feb 02, 2026

நமது பள்ளிகளின் கல்விமுறையைச் சீரமைக்க வேண்டிய தேவையை உணர்த்தும் நூல்.

ஆயிஷா எனும் சிறுமியின் கேள்விகள் நிறைந்த உலகிற்கு நம்மை இழுத்துச் சென்று, முடிவில் கண்ணீரால் நிரப்புகிறார் நூல் ஆசிரியர்.

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். மிகவும் சிறிய, மிகவும் சிறந்த நூல்.

user_7921

★ 4/5 Feb 02, 2026

இந்நூல் ஓர் சிறார் நூல். ஆனால் கட்டாயம் வாசிக்க வேண்டியவர்கள் யாரெனில், சிறுவர்களின் மேல் அதிகப் பற்று வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

குழந்தைகளின் மனம் எப்போதும் அறியாத விஷயங்களின் மேல் ஆர்வம் கொண்டதால், அவர்களின் பேச்சுகள் கேள்வியை நோக்கியே இருக்கும். அது என்னவென்று தெரிந்துகொள்ள மனம் ஏங்கி, முழுமையாக உள்ளுணரும் வரை கேள்விகள் மூலம் நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். இதை அறியாத பெரும்பான்மையான பெரியோர்கள் அக்கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தெரியாமல் தம்முடைய அதிகாரத்தை நிலைநாட்டி அடக்கி ஆள்வார்கள்.

இந்நூலை வாசித்து முடிக்கும்போது மனதில் எழும் கேள்விகள் ஏராளம். நாம் ஏன் குழந்தைகளின் மேல் அதிகாரத்தைச் செலுத்தி அவர்களின் அறிவைப் பாழ்படுத்துகிறோம் என்றுதான் தோன்றியது. முடிந்தவரை அவர்களின் சொற்களைச் செவிதாழ்த்திக் கேட்டாலே போதும். தமிழில் சிறார் நூல்களின் பட்டியலில் இப்புத்தகத்திற்கு ஓர் தனி இடம் உள்ளது.

user_7920

★ 5/5 Feb 02, 2026

குழந்தைகளிடமும் மாணவ செல்வங்களிடமும் இயற்கையான குணம் ஒன்று உண்டு - அது கேள்வி கேட்பது. தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கேள்வியாகக் கேட்டு பதில் எதிர்பார்க்கும் குணம்.

இந்தக் குறுங்கதையில் ஆயிஷா என்ற மாணவி தனது ஆசிரியர்களிடம் விஞ்ஞானக் கேள்விகளை அடுக்கிக் கேட்க, தங்கள் தொழிலைக் கடினமாக்குவதாகக் கருதி அவளை அடிக்கிறார்கள்.

அந்தப் பள்ளியில் உள்ள இன்னொரு ஆசிரியை ஆயிஷாவை நேசிக்கிறாள். அவளது கேள்விகளைச் செவிமடுத்துக் கேட்கிறாள்.

ஆயிஷாவின் அறிவுத்தாகத்தை மட்டம் தட்டி அடிக்கும் ஆசிரியர்கள், கல்வி மறுக்கப்படும் பெண்களின் வில்லர்களாகவே இருக்கிறார்கள் என்பதை இக்கதையின் முடிவு உணர்த்துகிறது. அவசியம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.

user_7919

★ 5/5 Feb 02, 2026

மிகச் சின்ன நூல். ஆனால் ஒரு சிறு மிளகின் உரைப்பைப் போல கண்கலங்க வைத்த நூல். கேள்வி கேட்பவரை மிதித்து நசுக்கி நெருப்பிலிட்டு கருக்கும் ஒரு நிறுவனமாகவே நம் கல்விக்கூடங்கள் செயல்படுகின்றன இன்றும். எதுவும் பெரிதாக மாறவில்லை என்று நினைக்கும்போது மனம் வெம்புகிறது.

நானும் கேள்வி கேட்டபோதெல்லாம் "அதிகப்பிரசங்கி, முதல்ல மார்க் வாங்கு அப்புறம் கேள்வி எல்லாம் கேக்கலாம்" என்று மட்டம் தட்டப்பட்டு பலமுறை உட்கார வைக்கப்பட்டேன். ஆயிஷாவின் மூலம் அந்த வலியை மீண்டும் உணர்ந்தேன். சமீபகாலத்தில் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பு.

user_7918

★ 5/5 Feb 02, 2026

ஆயிஷா எங்களைப் போல் எல்லாம் இல்லை, அவள் கேள்வி கேட்பவள். தெரியாதவற்றை தெரிந்து, புரியாதவைகளை புரிந்து கொள்ள முனைபவள். அறிவை அடையும் ஆவலில் அலைபவள். அவள் எண்ணங்கள் உயர்வானவை. நாங்களும் சிறுவயதில் இப்படித்தான் இருந்திருப்போம். ஏனோ தெரியவில்லை காலப்போக்கில் எல்லாம் மாறி மரத்துப்போன மனிதர்களாய் மாறுகிறோம். கேள்வி கேட்கும் ஆர்வமும், புதியவற்றை அறியும் ஆவலும் போகப்போக போயேவிடுகின்றன. இதற்கு முக்கிய காரணியில் ஒன்றுதான் நம் பள்ளிப்பருவம்.

ஒரு சிறந்த பள்ளிக்கூடமும் அதன் ஆசிரியர்களும் ஒருவனை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் உயர்த்தக்கூடிய வல்லமை படைத்தது. அதே வகையில் ஒரு சில ஆசிரியர்கள் இதற்கு முரணாகவும் செயற்படுகின்றனர். இந்த ஒரு சிலரும் தம் பொறுப்பை உணர்ந்து சிறந்த கல்வியையும் உயர்ந்த எண்ணங்களுடனான ஆளுமையையும் பிள்ளைகளிடத்தில் வளர்ப்பார்களேயானால் நாளைய உலகம் நல்லதாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

ஒரு சில பக்கங்களை மட்டுமே கொண்டு நம்மனதை விரிக்கும் இப்புத்தகம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய ஒன்று.