Reviews for பட்டாம்பூச்சி விற்பவன்

30 reviews total

user_7897

★ 5/5 Feb 02, 2026

பத்தில் பத்து மதிப்பெண் தரத்தக்க வாசிப்பு! கதை பேச ஆளில்லா கணங்களில் கபாலத்துக்கும் காகிதக் கோர்வைக்குமான கனத்த உரையாடலுக்குக் கச்சிதமாய் பொருந்தும் ஒரு புத்தகம்.

user_7896

★ 5/5 Feb 02, 2026

நா.முத்துக்குமாரின் எழுத்து எப்போதும் சிறந்தது. இந்தக் கவிதைத் தொகுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல — எளிய வார்த்தைகளில் ஆழமான உணர்வுகளைத் தரும் அற்புதமான படைப்பு.

user_7895

★ 3/5 Feb 02, 2026

34 தலைப்புகளில் கவிதைகள் கொண்ட இத்தொகுப்பு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம். நா.முத்துக்குமாரின் கவிதைகளில் நம் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்கள் கவிதையாக மலர்கின்றன. சில கவிதைகள் சிரிக்க வைக்கும், சில சிந்திக்க வைக்கும். பாலு மகேந்திரா மற்றும் பாரதிராஜா அவர்களின் முன்னுரை புத்தகத்திற்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

user_7894

★ 5/5 Feb 02, 2026

நா.முத்துக்குமார் அவர்களின் மூன்றாவது புத்தகம் நான் படிப்பதில். சில வரிகளில் ஓராயிரம் உணர்வுகளைத் தரக்கூடியவர் இவர்.

ஒரு கிராமத்து கிரிக்கெட், பள்ளி, டென்த் ஏ காயத்ரி, தூர் — இவை அனைத்தும் பிடித்தமான கவிதைகள்.

ஒவ்வொரு கவிதையின் முடிவிலும் ஒரு இனம் புரியாத நெகிழ்வை ஏற்படுத்த முடியும் என்றால் அது இவரால் மட்டுமே சாத்தியம்.

இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள் வரும்.

user_7893

★ 5/5 Feb 02, 2026

"ஒரு மூட்டை புத்தகம் கிடைத்தால் என்னையே விற்றாலும் விற்றுவிடுவார் என் அப்பா" — மனதைத் தொட்ட வரிகள். புத்தக அன்பை இவ்வளவு அழகாகச் சொல்ல முத்துக்குமாரால் மட்டுமே முடியும்.

user_7892

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தில் இவர் எழுதியிருக்கும் எதாவது ஒரு கவிதையை நம் வாழ்வோடு இணைத்துப் பார்த்துவிட முடியும். மிக எளிய நடையில் அமைந்த நா.முத்துவின் எழுத்துக்கள் மனதைத் தொடுகின்றன.

user_7891

★ 5/5 Feb 02, 2026

நான் படித்த முதல் கவிதைத் தொகுப்பும், என்னைக் கவிதை வாசிப்பின் பக்கம் ஈர்த்த கவிஞரும் நா.முத்துக்குமார் தான். இந்தப் புத்தகம் என் இலக்கியப் பயணத்தின் தொடக்கப்புள்ளி.

user_7890

★ 5/5 Feb 02, 2026

Murakami-இன் "Kafka on the shore" படித்து முடித்து சுமார் எட்டு மணி நேரம் கழித்து இந்தப் புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தீவிர தாக்கம், குழப்பத்தில் இருந்தும் அந்த மாய உலகில் இருந்து என்னை மீட்டெடுத்ததும் இந்தக் கவிதைத் தொகுப்பு தான்.

முன்னுரையில் பாலு மகேந்திரா எழுதிய முதல் இரண்டு வரி படிக்கும் போது வந்த கண்ணீர் தான், புத்தகம் முடியும் வரை கண்களில் தேங்கியபடியும் அவ்வப்போது எட்டிப் பார்த்தபடியே இருந்தது — கண்ணீர்துளி, அழுகை என வெவ்வேறு பரிமாணங்களில்.

இது ஒரு கவிதைத் தொகுப்பு. இயல்பான எதார்த்தமான மொழிநடையில் வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களை அழகாய் சொல்லும் தொகுப்பு.

அக்கா-தங்கை-அண்ணாவைப் பற்றிய ஒரு கவிதை. அதைப் படிக்கும் போது அத்தனை அழுகை! அத்தனை வாஞ்சை!

எப்போதாவது வாழ்க்கை உங்களை மிகவும் சோதிப்பது போல் தோன்றலாம், வாழ்க்கையையே வெறுக்கும் நொடி கூட வரலாம். அப்போது ஒரே ஒரு நா.மு கவிதையை மட்டும் படித்து விடுங்கள். வாழ்க்கையின் துயரங்கள் எல்லாம் தள்ளி நின்று வாழ்க்கையே உங்களைக் கட்டியணைப்பது போல் தோன்றும். ஒவ்வொரு நா.மு புத்தகம் முடித்த பின்னும் ஏற்படும் மனநிறைவுக்கு நிகர் வேறெதுவுமே இல்லை.

ஒவ்வொரு கவிதையும் ஒரு நினைவுத் தாலாட்டு.

user_7889

★ 5/5 Feb 02, 2026

நா.முத்துக்குமார் அவர்கள் வெளியிட்ட முதல் கவிதைப் புத்தகம். அவரை அறிமுகம் செய்த "தூர்" என்ற கவிதையும் இப்புத்தகத்தில் தான் உள்ளது. மிகச் சிறிய புத்தகம் தான். எளிய நடையிலேயே கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.

user_7888

★ 5/5 Feb 02, 2026

அற்புதமான படைப்பு. இதயத்தைத் தொடும், சிந்திக்க வைக்கும் அழகான கவிதைகள் நிறைந்த தொகுப்பு. இந்தத் தொகுப்பைப் புரட்டுவது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இந்தப் புத்தகம் 20 வருடங்கள் பழையது என்பது நம்பமுடியவில்லை. அவரது வார்த்தைகள் காலத்தை வென்று நிற்கின்றன என்பதற்கு இது ஓர் அத்தாட்சி. இந்த மாபெரும் மொழிக்குச் சொந்தமானவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இனி மேலும் அவரது கவிதைகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.