Reviews for கிடை

30 reviews total

user_7748

★ 4/5 Feb 02, 2026

மிகவும் கிராமத்து கரிசல் நிலத்தை கடந்து செல்லும் உணர்வு ஏற்படும். இதில் வரும் செவனி கதாபாத்திரம் மிகவும் மனதை உலுக்கச் செய்யும். இது ஒரு குறுநாவல், கி.ராவின் படைப்பில் மிகவும் அற்புதமான படைப்பு. படிப்பதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும்.

user_7747

★ 5/5 Feb 02, 2026

கரிசல் காட்டு வழக்கங்கள் நிறைந்த கதை. சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற கவலை மட்டுமே. நாயக்கர் சமுதாய மக்கள் கிடை போடுவார்கள் என்பதை இதிலிருந்து அறிந்தது மிக ஆச்சரியமாக இருந்தது.

user_7746

★ 4/5 Feb 02, 2026

இந்த ஆசிரியரைப் பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவரின் படைப்பை இப்போதுதான் வாசிக்கிறேன். மொழி, குறிப்பாக வட்டார வழக்கு, வர்ணனைகள், கதைக்களம், உட்கதைகள் மற்றும் அதில் உள்ள நுணுக்கங்கள், விவரங்கள் - எல்லாம் அருமை. ஐந்து நட்சத்திரத் தகுதி. முடிவு மட்டும் சற்று திருப்தியளிக்கவில்லை. தமிழ் இலக்கிய ரசிகர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

user_7745

★ 4/5 Feb 02, 2026

மேய்ச்சல் வாழ்க்கை நடத்தும் மக்களின் மொழி, பழக்கவழக்கங்களை விவரிக்கிறது. வட்டார மொழியை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருந்தாலும், கி.ராவின் புத்தகங்களை படிக்கும்போது அவரே நம் அருகில் அமர்ந்து தாத்தா போல் கதை சொல்வது போல் இருக்கும். அவரை ஒரு முறையாவது நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

user_7744

★ 5/5 Feb 02, 2026

ஒரு சுவாரசியமான குறுநாவல். மூடநம்பிக்கையை எதிர்ப்பு காட்டி, அது உருவாகும் காரணத்தையும் பரவும் விதத்தையும் சொல்கிறார் கி.ரா. பேயை சாக்கு சொல்லி கலவாடும் விதம், ஒரு பெண்ணின் நிலை அறியாது அவளுக்கு பேய் ஓட்டும் கொடுமை.

கிடையை மையமாக வைத்து கி.ரா சொல்லும் கருத்துகள் சிறப்பும் இயல்பும் உடையதாய் உள்ளன. கதை முடிவில் செவனிக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு மனம் விம்மும்.

user_7743

★ 5/5 Feb 02, 2026

வெறும் 60 பக்கங்களே கிடை, ஆனால் அதன் எடை அளக்க அளவே இல்லை. ஒரே கருத்து - "பிறப்பால் சாதி பார்க்கும் எவரும் பிறப்புறுப்பில் சாதி பார்ப்பதில்லை." இன்று வரை தொடரும் அந்த ஏற்றத்தாழ்வுகள் ஓரிடத்தில் மட்டும் தாழிட்டுக் கொள்கின்றன, பிறகு வழக்கம் போல் இந்த சமூகத்திற்கே உரிய முரண்களும் வேறுபாடுகளும் தொடர்கின்றன.

கி.ராவின் உணர்ச்சிமிக்க எழுத்துகளும் அவதானிப்புகளும் கரிசல் நடையும் வாசகனுக்கு தீனியே. கிடை இந்த சமூகத்தில் இன்றளவும் தொடரும் நடை.

user_7742

★ 5/5 Feb 02, 2026

65 பக்கங்களில் ஏழுக்கும் மேற்பட்ட காட்சிகளை கதையில் கொண்டு வந்திருக்கிறார். வட்டார வழக்கை புரிந்து கொள்ள முடிந்ததால் விவரங்களையும் நகைச்சுவையையும் முழுமையாக ரசிக்க முடிந்தது. வட்டார மொழி புரியாதவர்கள் கூட புத்தகத்தை படித்து முடிக்காமல் விட மாட்டார்கள்.

சுவாரசியமான அம்சம் என்னவென்றால், கதையின் மீதியை வாசகர்களின் கற்பனைக்கே விட்டிருக்கிறார் ஆசிரியர். சாதிய அடுக்குகளும் மூடநம்பிக்கைகளும் நுட்பமான முறையில் வலுவாக கிழித்துக் காட்டப்பட்டுள்ளன. திருப்திகரமான வாசிப்பு அனுபவம்.

user_7741

★ 5/5 Feb 02, 2026

தீவிரமான, தாக்கமிக்க படைப்புகள் கனமாகவும் பெரியதாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. கிடை - ஒரு விரைவான ஆனால் நீண்ட நாள் சிந்தனையைத் தூண்டும் வாசிப்பு.

உலகமயமாக்கல் யுகத்தில், சமூக விதிமுறைகளுக்கு கட்டுப்படுவது தேவையற்றதாகத் தோன்றலாம். ஆனால் சில பகுதிகளில் இது இன்றும் நடக்கும் யதார்த்தம். வாழ்க்கையை அதன் உண்மையான வடிவத்தில் பதிவு செய்வது அவசியம்.

இந்தப் புத்தகம் கீதாரிகளின் வாழ்க்கை மற்றும் அன்றாட நடவடிக்கைகளைச் சுற்றி அமைகிறது. சமூக சிக்கல்களும் நம்பிக்கைகளும் விரிவான விவரணையில் அழகாக பின்னப்பட்டுள்ளன. ஆசிரியர் இத்துறையின் மூத்தவர் - அது அவரின் படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது.

user_7740

Feb 02, 2026

கிடை - சிறிய நாவல் என்றாலும், முந்நூறு பக்க நாவலை படித்த நிறைவை அளித்தது.

இது ஒரு ஊரின் கிடையை மையமாகக் கொண்டு, அதன் சுற்றி இருக்கும் சூழலையும் வாழும் மனிதர்களையும் பற்றி விவாதிக்கிறது. ஒவ்வொரு கதையும் மனதில் நிற்கும் அளவுக்கு சிந்தனையைத் தூண்டுகிறது. எவ்வளவு வகையான ஆடுகள் உள்ளன என்பதையும் அறிய முடிகிறது.

இதன் சிறப்பம்சமாக இதில் நடக்கும் உரையாடல்கள் மிக நேர்த்தியானதாக உள்ளன, படிப்பதற்கு புதுமையாக இருந்தது. கிடை, கீதாரி, பங்கம் போன்ற சில புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டது மகிழ்ச்சி. இதில் பேசப்படும் சமூக படிநிலை வாழ்க்கை மற்றும் அரசியல் இன்றளவும் அழியாதிருப்பது வேதனையே.

user_7739

★ 4/5 Feb 02, 2026

இது ஒரு கிளாசிக் குறுநாவல். வெங்கடஸ்ரீ ராமானுஜ நாயக்கர் கேரக்டரிலிருந்து கதை தொடங்குகிறது. கிடை என்பது ஊரின் ஒட்டுமொத்த ஆட்டுக்கூட்டத்தையும் பராமரிக்கும் இடம். ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கிறார்கள் - அவற்றின் தோற்றத்தை வைத்துத் தான் பெயரும்.

ஒரு நாள் கிடையிலிருந்து ஆட்டை வெளிவிட்டுக்கொண்டிருக்கும்போது அந்த ஊரில் இருக்கும் ராக்கம்மாள் ஆட்டை மறிக்கிறாள். அவளுடைய நிலத்தில் விளையும் பயிரை முழுதும் ஆடு மேய்ந்து பாழாகிவிட்டது. இதை யார் செய்தது என்று கண்டுபிடிப்பதுதான் மீதி கதை.

கரிசல் மண்ணின் அழகை வட்டார மொழியில் கி.ராவை தவிர வேறு யாராலும் இவ்வளவு நுணுக்கமாகவும் அழகியலோடும் வர்ணிக்க முடியாது. கி.ரா எந்த அளவுக்கு மனிதர்களை கவனித்திருக்கிறார் என்பது தெரிகிறது. குட்டி குட்டி விவரங்கள் கூட விடாமல் சேர்த்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் அழகே. சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதையும் கடைசியில் சொல்லியிருக்கிறார். படித்து முடிக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன.