Reviews for குறத்தி முடுக்கு [Kurathi Mudukku]
10 reviews total
user_7584
★ 3/5 Feb 02, 2026"மனிதன் தான் ஆசைப்படும் வாழ்க்கை ஒன்று. ஆனால் கிடைக்கும் வாழ்க்கை ஒன்று." இது சாதாரண மனிதனுக்கும் நடக்கும். பெரும் பாதிப்போடு, பல கதைகளோடு சமூகத்தால், ஆசையால் ஒரு அவலநிலைக்குத் தள்ளப்படும் விலைமாதர்களுக்கு ஆசையென்பதே பலமுறை தோற்கடிக்கப்பட்ட பல கனவுகள் தான் போலும்.
செண்பகம், தேவயானை, தங்கம் என பலரும் இருளில் கண்டுகொள்ளப்பட்டும் "அவர்கள் அப்படித்தான், அவர்களுக்கு அப்படித்தான்" என்று போய்விடுகிறார்கள்.
"மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டம் மாறும்போது, வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது."
user_7583
★ 4/5 Feb 02, 2026ஜி. நாகராஜன் அவர்களின் முதல் சிறுநாவல் குறத்தி முடுக்கு. குறத்தி முடுக்கு என்பது கற்பனையில் உருவாக்கிய விலைமாதர்கள் தெரு.
முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மையான எழுத்தாளர் ஜி. நாகராஜன் என்பது ஒரு சில பத்திகள் படிக்கும் போதே நமக்குப் புரிந்து விடுகிறது.
வேசிகளை பாவப்பட்ட ஜென்மங்களாகவோ அல்லது புனிதர்களாகவோ மற்ற எழுத்தாளர்கள் தங்கள் புனைவில் வரையறுக்கும்போது, ஜி. நாகராஜன் விலைமாதர்களின் வேதனைகளையும், மாறுபட்ட அனுபவங்களையும் நேர்மையாகச் சொல்லியிருக்கிறார்.
user_7582
★ 5/5 Feb 02, 2026இந்தச் சிறுகதை காதல், காமம், திருமணம் ஆகியவற்றைப் பற்றிய என் புரிதலையே கேள்விக்குள்ளாக்கியது. எளிய வார்த்தைகளில் ஆழமான தத்துவத்தை விதைக்கிறார் ஜி. நாகராஜன்.
user_7581
★ 5/5 Feb 02, 2026குறத்தி முடுக்கு மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்ட நாவல். தற்போது பாலியல் தொழிலாளர்கள் பற்றிய அறிவு திரைப்படம் வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நமக்கு சிறிதளவு கிடைத்துள்ளது. ஆனால் நாவல் எழுதப்பட்ட காலமாகிய 1963ல் எவ்வகையான தெளிவு மக்களிடையே இருந்திருக்கும் என்பது கேள்விக்குறியே!
பாலியல் தொழிலாளர்களின் வாழ்வியலை கதை களமாக எடுத்துக்கொண்டது நாகராஜனின் தனித்துவம். பல உண்மைகளையும் நிகழ்வுகளையும் யதார்த்தமான எழுத்தின் மூலம் பதிவு செய்து அவர்களின் வாழ்வியலை அறியச் செய்கிறார். இன்னும் ஆழமாக சில நிகழ்வுகளை பதிவு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மரகதம், தங்கம், செண்பகம், தேவயானை ஆகிய கதாபாத்திரங்களின் வாயிலாக நம்மை அவர்களின் உலகுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டிவிட்டார்.
user_7580
★ 5/5 Feb 02, 2026குறத்தி முடுக்கு எளிமையான, உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காகவும், நல்ல மொழிநடைக்காகவும் அவசியம் வாசிக்கப் படவேண்டியது.
user_7579
★ 4/5 Feb 02, 2026குறத்தி முடுக்கு ஒரு ஆழமான கதை. நாம் மோசமாக நினைக்கும் ஒரு செயல் இயற்கையாகத் தோன்றுகிறது. அது சரியா, தவறா என்பதைவிட அதை எவ்வாறு நாம் புரிந்துகொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நம்மைப் பற்றிய பல விஷயங்களை ஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு வழியாகச் சொல்கிறார். நமக்கான ஆய்வு புத்தகம் இந்த குறத்தி முடுக்கு.
user_7578
★ 4/5 Feb 02, 2026சமுதாயத்திற்கு பயந்து கள்ளத்தனமாக தன் வயிற்றுக்குக் கீழ் வரும் பசியை போக்கும் இடத்தில் எழும் காதலையும், அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையையும் இந்த குறுநாவலில் நேர்கோட்டில்லாமல் ஜி. நாகராஜன் கதையை நகர்த்தி, படிக்கும் வாசகனை குறத்தி முடுக்கில் சற்று நேரம் உலாவ விடுகிறார்.
user_7577
★ 5/5 Feb 02, 2026காதல் மற்றும் திருமணம் பற்றி முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் இந்த குறுநாவல் விரிகிறது. சமூகம் வகுத்த எல்லைகளுக்கு அப்பால் இந்த உறவுகளை எப்படி புரிந்துகொள்வது என்ற கேள்வியை எழுப்புகிறது ஜி. நாகராஜன்.
user_7576
★ 5/5 Feb 02, 20261950களின் பாலியல் தொழிலாளர்களின் யதார்த்தத்தை பேசும் படைப்பு இது. கற்பனையோ பொய்யான அழகுபடுத்தல்களோ இல்லாமல் எழுதியிருக்கிறார் ஜி. நாகராஜன். இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இதயத்திலிருந்து வரும் உண்மையான வார்த்தைகளையே பேசுகிறது. மனிதர்களின் ஆசைகள், காமம், திருமணம் பற்றிய நேர்மையான பார்வையை இந்த குறுநாவல் தருகிறது.
user_7575
★ 5/5 Feb 02, 2026வள்ளிக்குறத்தி முடுக்கில் செயற்கையாக இருட்டடிக்கப்பட்ட பாலியல் தொழில் நடக்கும் தெருவிற்கு அடிக்கடி வந்து போகும் கதை சொல்லிக்கும் அங்கு வசிக்கும் தங்கத்திற்கும் இடையேயான உறவு. வாழ்க்கையை பற்றிய எதிர்மறை எண்ணங்கள், சமுதாயக் கட்டுப்பாடுகளைப் பற்றி எழும்பும் கேள்விகள், அவை சரி, சரியில்லை என்று தனக்குள்ளே தர்கித்து ஆராய்ந்து அறிய முயற்சிக்கிறார் கதை சொல்லி.
குறத்தி முடுக்கில் வசிக்கும் மரகதம், செண்பகம், தேவயானை, தங்கம், அங்கு வந்து செல்லும் கதை சொல்லி இவர்கள் அனைவருமே அமைத்துக் கொள்ள முயற்சிக்கும் வாழ்க்கை ஒன்று அடைவது வேறு.
தங்கம், மரகதம், செண்பகம், தேவயானை என்று பெண்கள் அனைவரும் உடலை அலட்சியப்படுத்தி மனதால் வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள்.
தன்னிடம் வருபவர்களிடம் எல்லாம் பணம் வாங்கி தன் காதலனுக்கு தந்து அவன் காதலை யாசிக்கும் மரகதம். அவன் தன்னிடம் பணத்துக்காகவே வருகிறான், அதற்காக ஏமாற்றுகிறான் என்றறிந்து மனமுடைகிறாள்.
யாருமில்லாத தனக்காக, ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள நினைத்து முடியாமல் போகும் செண்பகம். தற்கொலை முயற்சி செய்யும்போது அதுவே விபத்தாகிப் போகும் பதினைந்து வயது தேவயானை.
காதல், திருமணம், குடும்பம் போன்றவற்றில் எதிர்மறை எண்ணங்களுள்ள கதைசொல்லி, பின்னர் தங்கத்தின் மேல் ஆசைக் கொண்டு கல்யாணம் செய்யக் கேட்கிறார். ஆனால் தங்கம் ஏற்கனவே திருமணமாகி இரு பிள்ளைகளுக்குத் தகப்பனான நடராஜனை காதலித்து வந்தவள் பின்பு அவனோடு சென்று விடுகிறாள்.
தன்னால் தான் நடராஜன் அவன் குடும்பத்தினரை துன்புறுத்தினான், அவர்களிடமிருந்து பிரிந்தான் என்ற குற்றவுணர்வு இருந்தாலும், கதை சொல்லி அவளைத் திருமணம் செய்யக் கேட்டதற்கு மறுத்துவிட்டு நடராஜனை திருமணம் செய்து கொள்ளாமலே அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டு அவனோடு வாழ்கிறாள் தங்கம்.
கதையின் ஆரம்பத்தில் கதை சொல்லி சொல்லும், "காதலுக்கு மணவாழ்க்கையின் அனுகூலங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு அர்த்தத்தைக் கற்பிப்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயம்" என்கிற இந்த வாதத்தை இக்கதையில் வரும் தங்கம் தகர்த்தெரிகிறாள். மணவாழ்க்கையையோ அது தரும் பாதுகாப்பையோ, அதன் தேவையையோ அவள் எதிர்ப்பார்க்கவேயில்லை.
தங்கத்தை மறக்க முடியாமல் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போக முயற்சிக்கும் கதை சொல்லி எதேச்சையாக அவளைச் சந்திக்கிறார். அவள் வறுமையை சுட்டிக் காட்டி அலட்சியமாகப் பேசுகிறார், இருந்தும் அவள் காதல் நடராஜனிடமே இருக்கிறது என்று அறிந்து மனமுடைந்து திரும்புகிறார்.