Reviews for காதுகள்
25 reviews total
user_7559
★ 5/5 Feb 02, 2026மனிதனை உடலால் அழிப்பதற்குப் பல ஆயுதங்கள் இருக்கின்றன. ஆனால் காதுகள் நாவலில் மகாலிங்கத்திற்கு நடப்பதற்கு எந்த ஒரு காரணியையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.
பல கோணங்களில் நம்மை ஆராய விடும் இந்நாவல் - Auditory Hallucination, Schizophrenia எனப் பல வகை மனச்சிதைவுக்கு ஆளான ஒரு நல்ல கலைஞனின் கதை இது.
சிறுவயதில் பார்த்த கோரச் சம்பவங்கள், Traumatic Disorder தான் பல வகை மனச்சிதைவுக்கு வழிநடத்துகிறது. அதே சமயம் மகாலிங்கம் சமூகத்தில் மதிக்கப்படும் கலைஞன், தெய்வபக்தி உடையவன். இறுதிவரை போராட்டங்களைச் சந்தித்து வாழ்க்கையை நகர்த்தி வந்தான்.
பிரபஞ்சன் கூறியபடி, தமிழ் நாவல் சரிதத்தில் இது ஒரு முக்கியமான, வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்பது நிதர்சனமான உண்மை.
user_7558
Feb 02, 2026ரஷ்யாவிற்கு ஒரு தஸ்தோயெவ்ஸ்கி என்றால் தமிழுக்கு நான் என்கிறார் எம்.வி.வெங்கட்ராம்.
user_7557
★ 4/5 Feb 02, 2026மூக்குத்தி அம்மன் படம் வெளியானபோது வீட்டில் எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் சில காட்சிகள் மட்டும் பார்த்தேன். இந்தக் கதைக்கருவை வேறு விதமாகக் கையாண்டிருந்தால் படம் வேறு லெவலில் இருந்திருக்கும் என்று நினைத்தேன்.
காதுகள் நாவல் படிக்கும்போது அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. தமிழின் பெண் கடவுளான காளி பராசக்தி ஒரு சராசரி மனிதனுடன் நடத்தும் உரையாடல்களைப் படிக்கும்போது அது ஒரு Real Text Pleasure. இந்த மாதிரியான Transgressive Fiction-க்கு சாகித்திய அகாடமி போன்ற தேசிய இலக்கிய விருது கொடுத்துக் கௌரவிப்பது வேறு எந்த நாட்டிலும் சாத்தியமே இல்லை.
user_7556
★ 5/5 Feb 02, 2026உங்களுடன் எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு குரலை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் என்ன ஆகும்? பெரியவர்களின் வாழ்க்கையில் இது அதிகம் நடக்கிறது. பல பிரச்சினைகளும் மன அழுத்தமும் உருவாகின்றன, திசை உணர்வை இழக்கிறோம். இந்த நாவல் அது பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் பேசுகிறது. சில விவரணைகள் அற்புதமான நுணுக்கத்துடன் எழுதப்பட்டுள்ளன.
user_7555
★ 5/5 Feb 02, 2026"தரித்திரத்துக்கு பசி அதிகம்" - என்னை ஈர்த்த வாக்கியம். இந்தக் கதையில் வரும் மாலி என்கிற மகாலிங்கத்தின் காதுகள் அவரைப் படுத்தும் பாடுதான் கதை. இப்புதினம் psychological fiction வகையைச் சேர்ந்தது.
Auditory hallucinations (செவிவழிப் பிரமைகள்) என்று சொல்லக்கூடிய ஒரு மன வியாதியைக் கொண்ட மாலி படும் பாடு வாசகர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதைப் படிக்கும் போது என்னுடைய காதுகளிலும் சிலர் பேசுவது போலக் கேட்டு அச்சம் கொண்டு, பாதியோடு படிப்பதை நிறுத்திக்கொண்டேன். நேற்று இரவே படித்து முடிக்கவேண்டியது, பயம் சூழ்ந்துகொண்டதால் இன்று காலை படித்து முடித்தேன்.
user_7554
★ 4/5 Feb 02, 2026பெரும் செல்வந்தரின் ஒரே மகன் மாலி என்னும் மகாலிங்கம். படிக்கும் வயதிலேயே பெற்றோர் பெண் பார்த்து அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். தொழில் மெல்லச் சரியத் தொடங்கியது. மூன்று வேளை சோறு என்பது மிகப் பெரிய ஆடம்பரமாக இருந்தது.
மாலிக்குத் தன் காதுகளில் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. தாமச சக்தியின் தொல்லையோடு இருந்த மாலிக்கு சத்துவ சக்தியின் வழி தெரிய 20 ஆண்டுகள் ஆனது.
1993-இல் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல் இது. புத்தகங்களைப் படிப்போம், பயன் பெறுவோம்.
user_7553
★ 5/5 Feb 02, 2026மகாலிங்கம் - முதன்மைக் கதாபாத்திரம் - தனது 30-களின் மத்தியில் உள்ளிருந்தும் புறமிருந்தும் கற்பனையான ஓசைகளை, குரல்களைக் கேட்கிறான். புத்தகத்தின் முதல் சில பக்கங்கள் அவனது குழந்தைப் பருவம், கல்வி, திருமணம், குடும்பம் போன்றவற்றைச் சொல்லிவிடுகிறது. பிறகு முழுக்க முழுக்க அவனது காதுகளே அவனை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதைச் சொல்லிச் செல்கிறது.
ஆசிரியர் தனது அனுபவத்தையே புதினமாக எழுதியுள்ளதால் இப்புத்தகத்தைத் தனது வாழ்க்கை வரலாற்று நாவல் என்று கூறுகிறார்.
கற்பனையான உருவங்கள் உருவாகின்றன. கற்பனையான குரல்கள் கேட்கின்றன. சில நேரங்களில் அர்த்தமில்லாத சத்தமாய், சில நேரங்களில் அர்த்தம் செறிந்த உரையாடல்களாய். இந்தக் கற்பனைகள் இவனிடம் பேசும் அல்லது அவற்றிற்குள்ளேயே பேசிக் கொள்ளும். இவை பெரும்பாலும் எதிர்மறையானவை, கோரமானவை. இவற்றோடு இவன் போராடிக் கொண்டே இருக்கிறான்.
நானும் சில முறை இதே போல குரல்களைக் கேட்டுள்ளேன். தூங்கப் போகும் போதோ, தூங்கி எழும் போதோ ஏதாவது சத்தங்கள் கேட்கலாம். Auditory hypnagogic hallucination என்பதை நீங்களும் அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.
அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய புதினம். குறிப்பாக நீங்கள் அதிகம் யோசிக்கக் கூடியவராக இருந்தால் நிச்சயம் இப்புத்தகத்தை வாசியுங்கள்.
user_7552
★ 3/5 Feb 02, 2026உடல் சார்ந்த நோய் அனுபவங்களை இலகுவாக எழுதிவிடலாம். ஆனால் மனம் சார்ந்த நோய்களையும் அது ஏற்படுத்தும் அகப் பிரச்சினைகளையும் வார்த்தைகளில் ஒரு நாவலாக வடிப்பது கடினம். சாகித்திய அகாடமி விருதுக்கு உண்மையிலேயே தகுதியான ஒரு நாவல்.
user_7551
★ 5/5 Feb 02, 2026கவிஞர் ரவிசுப்பிரமணியனின் குரலில் கேட்பது மிகவும் சுகமாக இருந்தது. ஒலிப்புத்தக அனுபவம் அருமை.
user_7550
★ 3/5 Feb 02, 2026மாலி என்கிற மகாலிங்கத்திற்கு வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் திடீரென்று தன் காதுக்குள் பல ஒலிகள் கேட்கத் தொடங்குகின்றன. இறுதியில் அதனுடன் போரிட்டு வெற்றிபெற்றாரா என்பது தான் கதை.
கடவுளின் பெயரை வைத்து இவ்வளவு அப்பட்டமாக, ஆபாசமாக இருக்கும் எழுத்துகளைக் கண்டு எனக்கு மிகவும் ஆச்சரியம். ராமன், கருப்பன் இருவருக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தை அமோகம்!
கதைக்களம் சற்று இழுவையாகத் தான் எனக்குப் பட்டது. ஆனால் கதையின் முதன்மைக் கதாபாத்திரம் மாலி, எத்தனை துயரங்களைச் சந்தித்தாலும் மனம் தளராது வாழ்ந்து காட்டிட வேண்டும் என்று போராடுவதே இந்நாவலில் இருந்து நான் எடுத்துக்கொண்ட செய்தி. சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல் இது.