Reviews for காதுகள்
25 reviews total
user_7569
★ 4/5 Feb 02, 2026எம்.வி.வெங்கட்ராம் தனது எண்பதாவது வயதில் இறக்கிறார் (1920-2000). நாவலின் மூலப்பாத்திரமான மாலி என்கிற மகாலிங்கத்தின் வாழ்க்கையைத் தனது வாழ்க்கை என்கிறார்.
அவருக்குத் தன் காதுகள் துவங்கி இன்னபிற புலன்களும் சேர்ந்துகொண்டு அவரை முழுக்க இம்சித்து உலுக்குகின்றன. தீய சக்தி, தெய்வசக்தி என்ற உருவங்கள் நேரெதிரே பல்வேறு வடிவங்கள் பூண்டு தன் மனக்கண்ணுள் நடத்தும் நாடகங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்.
ஒரு புத்தகம் வாசிக்கையில் அது நமது வாழ்க்கையில் கடந்த இன்னொரு நபரை நினைவுபடுத்தாமல் இருந்தால் அது சீர்மிகு புத்தகம் அல்லதானே? அதன்படியே எம்.வி.வி எனது தாத்தா காலத்துக்கு அழைத்துச் சென்று அவர் வாழ்வுக்கு நேர்மாறான இன்னொரு வாழ்க்கையைக் காட்டியிருக்கிறார்.
user_7568
★ 5/5 Feb 02, 2026ஒரு வழியாக முடித்துவிட்டேன். இவ்வளவு நாள் ஒரு நாவலை நான் வாசித்ததில்லை - அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது இந்த நாவல்.
எனக்குத் தெரிந்து அனைவரும் இந்த நாவலை ஒரு முறையாவது படித்துவிட வேண்டும், நாமே நம்மைச் சுயபரிசோதனை செய்ய ஏதுவாக இருக்கும்.
எம்.வி. இந்த நாவல் அவரது வாழ்க்கை அனுபவம் என்று சொல்கிறார். ஆனால் இது இந்த நூற்றாண்டில் இருக்கும் அனைத்து மனிதர்களின் மன உளைச்சலையும் பிரதிபலிக்கிறது. மகாலிங்கம் என்னும் மனிதனின் மனம் சார்ந்த கருத்துகளை முன்வைத்து ஒரு கருத்தை மற்றொரு கருத்து வென்றுகொண்டிருக்கிறது.
"பிரம்மை புகட்டும் எண்ணங்களை நான் என் எண்ணங்களாக ஏற்றுக்கொண்டுவிட்டால் எனக்கு முழுசாக பைத்தியம் பிடித்ததாகத் தானே அர்த்தம்" - என்னைப் பாதித்த வரி.
user_7567
★ 5/5 Feb 02, 2026அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக இறுதியில் வரும் ராமன் மற்றும் கருப்பன் உரையாடல்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன.
user_7566
★ 5/5 Feb 02, 2026இதற்கு முன் நீங்கள் வாசித்ததைப் போல் இருக்காது. மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். அவரது எல்லா நாவல்களையும் விரும்புகிறேன். ஆனால் இன்னும் அவரது முழுப் படைப்புகளும் அச்சில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
user_7565
★ 3/5 Feb 02, 2026மிகவும் வித்தியாசமான நடையில் வித்தியாசமாய் எழுதப்பட்ட ஒரு நாவல். தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான படைப்பு.
user_7564
★ 3/5 Feb 02, 2026நம் நினைவுகள், யோசனைகள் எல்லாம் குரலாகக் காதுக்குள் கேட்டால் எப்படியிருக்கும்? பைத்தியம் பிடிக்கப்போகிறது என்று நமக்கே தெரிந்தால் எப்படி இருக்கும்? இந்த நூலில் அப்படித் தான் மகாலிங்கத்துக்கு இருக்கிறது.
நூலாசிரியர் 20 ஆண்டுகளாகத் தான் அனுபவித்ததை நூலாக எழுதியிருக்கிறார். நம் மனதுக்குள் இருக்கும் நல்லெண்ணங்கள் ஒரு குருவாக வழிநடத்துகிறது - அதை முருகனாக மகாலிங்கம் நினைத்துக்கொள்கிறார். காம எண்ணங்கள் தீயசக்தியாக ஆட்கொள்கின்றன - அது காளியாகிறது.
இந்தக் கதைக்கரு ஹாலுயூசினேஷன் என்று பிரபஞ்சன் முன்னுரையில் சொல்கிறார். ஆனால் ஆழமாகப் பார்த்தால், நல்லதுக்கும் தீயதுக்கும் இடையில் ஊசலாடுகிற மனம் சிவனானது. காமம் காளியாகி அவரைத் துரத்துகிறது. புத்தி முருகனாகவும் ராமனாகவும் உருவகமாகிறது. இந்தப் போராட்டம் தான் காதுகள் ஆகிறது.
சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நாவல். மௌனி பிடிப்பவர்களுக்கு இந்நூலும் பிடிக்கும் என்பது என் ஊகம்.
user_7563
★ 5/5 Feb 02, 2026தமிழில் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவல். அனைவரும் ஒரு முறையாவது படிக்க வேண்டியது.
user_7562
★ 5/5 Feb 02, 2026அற்புதமான, மனதைக் கவரும், மூளையைக் குலுக்கும் படைப்பு. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.
user_7561
★ 3/5 Feb 02, 2026தமிழில் இது போன்ற நாவல்கள் எழுதப்பட்டுள்ளனவா என்பது ஒரு ஆச்சரியம் தான். இந்தக் கதாநாயகனின் மனப்போராட்டம் எத்தகைய வியப்புக்குரியது.
சில சமயம் சிந்தித்துப் பார்த்தால் எல்லா மனிதர்களும் மனதிற்குள் இப்படி உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதுதான் மனித இயல்பு போலும். இன்னும் சிறப்பான முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
user_7560
★ 5/5 Feb 02, 2026ஒரு எழுத்தாளனின் காதுகளில் தொடர்ந்து கேட்கும் அமானுஷ்ய குரல்களால் அவன் என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்திக்கிறான் என்பதே கதை. இது உண்மைக் கதை என்று எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் கூறியிருக்கிறார்.
தமிழில் இது போன்ற உளவியல் சார்ந்த புத்தகத்தை நான் படிப்பது இதுவே முதல்முறை. Schizophrenia என்ற அகச்சிக்கல் சார்ந்த நோயைப் பற்றி அதிகப்படியான தகவல்களைத் தெரிந்துகொள்ள நேர்ந்தது.
ஆங்கிலத்தில் A Beautiful Mind (2001) திரைப்படத்தை இந்தக் கதையின் கருவோடு பொருத்திப் பார்க்கலாம். அந்தத் திரைப்படத்தில் வரும் கதாநாயகன் உண்மை என நம்பும் நிகழ்வுகள், இங்கே வெறும் ஒலிகளாக மாலியின் காதுகளில் ஒலிக்கிறது.
வாசிக்க ஆரம்பித்து ஒரே முயற்சியில் முடிக்கும்படியான எழுத்துநடை என்னை வெகுவாக ஈர்த்தது. நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல்.