Reviews for நாளை மற்றுமொரு நாளே

30 reviews total

user_7407

★ 3/5 Feb 02, 2026

ஒரு நாளில் வாழ்க்கை — அதுதான் நாளை மற்றுமொரு நாளே. கந்தன் என்பவனைச் சுற்றி நடக்கும் கதை. ஒரு நாள் கதைக்களம் என்றாலும், முன்கதை பல இடைச்செருகலாக வந்து போகிறது.

இந்த கதைக்களம் தற்போது பல திரைப்படங்கள், நாவல்கள் வழி நாம் பார்த்துவிட்டோம். அக்காலத்தில் புதுமையான படைப்பாகத் தோன்றியிருக்கலாம். நல்ல வாசிப்பு.

user_7406

★ 5/5 Feb 02, 2026

எவனோ ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையை அதற்கே உரித்தான இசைவுகளுடனும் அபத்தங்களுடனும் கூறிச் செல்கிறார் ஜி.நாகராஜன்.

முழு வாழ்க்கையும் ஒரு அனுபவமே என எண்ணும் பட்சத்தில், அந்த அனுபவத்தை வெளிச்சத்திலிருந்து இருட்டைக் கண்டும், இருட்டிலிருந்து வெளிச்சத்தைக் கண்டும் பெற முடியும். நாளை மற்றுமொரு நாளே இரண்டாவது வகையைச் சார்ந்தது.

user_7405

★ 4/5 Feb 02, 2026

ஜி.நாகராஜன் தமிழ் உரைநடையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர், ஜெயகாந்தனுக்கு நிகரானவர். வடக்கில் வளர்ந்ததால் தமிழில் படிக்க-எழுத வாய்ப்பு கிடைக்காதது மிகப் பெரிய வருத்தம்.

பெங்குவின் கிளாசிக்ஸ் மொழிபெயர்ப்பில் இந்நாவலைப் படித்தேன். 1950களின் சிறிய தமிழ்நாட்டு நகரத்தில் ஒரு சாமானியனின் ஒரு நாள் வாழ்க்கை. அழகான சிறு கதை, சில நேரங்களில் நெருடும் உரைநடையில் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலத்தின் மார்க்சிய மற்றும் திராவிட அரசியல் இயக்கங்களின் கரடுமுரடான அடிநீரோட்டம் உள்ளது. காமுவின் இருத்தலியல் உரைநடையை நினைவூட்டும் டேவிட் ஷுல்மனின் விமர்சன முன்னுரையை கண்டிப்பாக படியுங்கள்.

user_7404

★ 4/5 Feb 02, 2026

குறத்தி முடுக்கு நாவலுக்கு பிறகு நான் படிக்கும் ஜி.நாகராஜனின் இரண்டாம் நாவல். இந்த இரண்டு நாவலுக்கு பிறகு, சிறுகதைகளைத் தவிர வேறு நாவல் எதையும் எழுதாதது வருத்தமே.

ஜி.நாகராஜனின் தனித்தன்மையான எழுத்துப் பாங்கு — இதுவரை படித்திராத ஒன்று. இந்த நாவலில் கந்தன் என்ற பாலியல் புரோக்கரின் பொழுதுகளை பதிவு செய்திருக்கிறார். சுப்பையா செட்டியார் - ஐரின் அத்தியாயத்தை தொட்ட உடனே எழுத்து நையாண்டியின் உச்சத்திற்கு சென்றுவிடுகிறது.

user_7403

★ 5/5 Feb 02, 2026

ராஜாக்களின், வீரர்களின், ஞானிகளின் கதைகளை படித்து பெருமூச்சுடன் மூடிவைக்கக்கூடிய புத்தகங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் இது. நம் வீட்டின் கீழ், அடுக்கு மாடிகளை ஒட்டிய குப்பங்களில், குடிசைகளில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் பற்றிய கதை. ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை — அவனின் வாழ்க்கை ஆதாரத்துக்காக அவன் செய்யும் நடவடிக்கைகளை முன்வைத்து நகர்கிறது.

நமக்கு கீழ் இத்தனை கீழ்த்தரமான சமூகம் உள்ளது என்பதை உணர வேண்டும் என்பதற்காகவாவது ஒரு வாசகனாக நாம் படிக்க வேண்டிய ஒன்று. அவர்களுக்கு நாளை மற்றுமொரு நாளே...

user_7402

★ 3/5 Feb 02, 2026

குறத்தி முடுக்குவுடன் ஒப்பிடும்போது சற்று ஏமாற்றமே! அந்த நாவல் கொடுத்த தாக்கத்தை இது தரவில்லை.

user_7401

★ 5/5 Feb 02, 2026

புத்திசாலித்தனமான எழுத்து! மிகவும் சாதுர்யமான கதைசொல்லல். அதே சமயம் ஆழமாக நெகிழ வைக்கும் நாவல்.

user_7400

★ 5/5 Feb 02, 2026

கிண்டிலில் கிடைத்த அருமையான கண்டுபிடிப்பு. ஜி.நாகராஜன் இந்த 1970களின் நாவலில் சர்ரியலிசத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். எல்லாமே ஒரு நாளில் நடக்கிறது, ஆனாலும் ஏராளமான ஃப்ளாஷ்பேக்குகள் உள்ளன — நாளை என்பது வெறும் மற்றுமொரு நாள் தான். இவரின் மீதமுள்ள எல்லா படைப்புகளையும் படிக்கப் போகிறேன்.

user_7399

★ 3/5 Feb 02, 2026

குறத்தி முடுக்கில் உணர முடிந்த யதார்த்தம், இந்நாவலில் ஏனோ கிடைக்கவில்லை. ஒரு மாதிரியான அந்நியத்தன்மை. அதனாலேயே கந்தன் என்கிற பிரதான கதாபாத்திரத்தின் மீது எவ்வித ஈர்ப்போ, அனுதாபமோ, ஆர்வமோ ஏற்படவில்லை.

கந்தனைக் கழுகுப் பார்வையில் பின்தொடர்ந்த ஒரு வெளி ஆள் பதிவு செய்த குறிப்புகள் போன்று தோன்றியதே தவிர, அவனின் அன்றாடத்தில் பின்னிப் பிணைந்து அசலாகப் பதியப்பட்ட அனுபவங்களாகத் தோன்றவில்லை.

user_7398

★ 4/5 Feb 02, 2026

எப்போதாவது சோர்வாக உணரும் போது, சும்மா இரண்டு பக்கங்கள் வாசிக்கலாம் என்று தோன்றும் போது தேர்ந்தெடுக்கும் ஒரே புத்தகம் சுஜாதா எழுதிய "கணையாழியின் கடைசி பக்கங்கள்". அப்படி படிக்கும் போது, நமக்கு பிடித்த நாவலை ஒருவர் எழுதிவிட்ட காரணத்தாலே அவரின் அனைத்து படைப்புகளையும் புகழ்ந்து தள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்று ஜி.நாகராஜன் எழுதிய குறத்தி முடக்கை சுஜாதா விமர்சிக்கிறார், மேலும் அதே பதிவில் ஜி.நா எழுதிய "நாளை மற்றுமொரு நாளே" என்ற நாவலை சிலாகித்து எழுதுகிறார். குறத்தி முடக்கு எனக்கு பிடித்திருந்தது, அதைவிட சிறந்தது என்று கருதப்படும் நாவலை படிக்க தூண்டியது.

கந்தனின் வாழ்வில் ஒரு நாள் நடக்கும் சம்பவங்களின் ஊடாக நம்மை அவனுடன் பயணிக்கச் செய்யும் எழுத்து. கதை வடிவம் புதிதாக இருந்தது. எதேச்சையாக அவன் பார்க்கும் காட்சிகளான, இரண்டு நாய்கள், பலூன், வண்டி போன்றவை அவன் வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவங்களையும் மனிதர்களையும் அடிகோடிட்டு செல்கிறது. சாராயக் கடையில், லாட்ஜில், பெட்டி கடைகளில் இருக்கும் சாதாரண மனிதர்கள் பாட்டாளிகளின் அரசியலையும் முதலாளித்துவத்தின் பாதகத்தையும் நையாண்டியுடன் விமர்சிக்கும் எழுத்து அட்டகாசம். அவசியம் படிக்க வேண்டிய நாவல்.