Reviews for மூன்றாம் உலகப் போர்

30 reviews total

user_6466

★ 5/5 Feb 02, 2026

இரண்டு தலைமுறையாக கடனில் இருக்கும் ஒரு குடும்பத்தின் கதை. கருத்தமாயி ஒரு ஏழ்மையான விவசாயி. தன் தந்தையின் விவசாய நிலத்தையும் ஊராரின் நிலத்தையும் தனியாரிடம் விற்க நினைக்கும் மூத்த மகன் முத்துமணி, கிராமத்தை சீர்திருத்த முயற்சிக்கும் இளைய மகன் சின்னப்பாண்டி — சந்தர்ப்பச் சூழ்நிலையால் தான் ஈன்ற மூத்த மகனைக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்லும் கருத்தமாயி. தந்தை விட்டுச் சென்ற இடத்தில் விவசாயத்தைத் தொடரும் இளைய மகன்.

user_6465

Feb 02, 2026

செயற்கையில் உழலும் மனிதனே, இயற்கையை மறவாதே என்று தலையில் கொட்டும் நாவல் இது.

user_6464

★ 5/5 Feb 02, 2026

என் நினைவு தெரிந்து ஒரு புத்தகத்தைப் படித்து இவ்வளவு கண்ணீர் சிந்தியது இல்லை. "சாபம் பெற்று வந்த தெய்வம் விவசாயிகள்" என ஆரம்பித்து விவசாயிகளின் துன்பம், சந்தோஷம், பாசம், துரோகம், அன்பு, கடன் என அனைத்தையும் வைரமுத்து கூறிய விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது. "உடல் விட்டு உயிர் பிரிந்து செல்வது மட்டும் சாவு இல்லை, சொந்த மண்ணை விட்டு மனிதன் செல்வதும் சாவுதான்" என்று புரியவைத்த புத்தகம்.

user_6463

Feb 02, 2026

இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

user_6462

★ 5/5 Feb 02, 2026

பசுமை எண்ணங்களை ஒரு புகழ்பெற்ற கவிஞனின் எழுத்துக்களில் நம்மில் விதைக்கும் புதினம் இது. அனைவரும் படிக்க வேண்டிய நூல். வைரமுத்துவின் எண்ணங்களிலும் கவிதை நடையில் வரும் வார்த்தைகளிலும் மண்ணின் மீதும் மக்களின் மீதும் மற்ற உயிர்களின் மீதும் அவருக்கிருந்த கரிசனத்தை நம்மில் விதைப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்.

user_6461

★ 4/5 Feb 02, 2026

உலகமயமாதல் மற்றும் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை அறியாத மனிதர்களுக்கு ஒரு முன்னுரை போன்ற புத்தகம் இது. உலகம் சூடேறி உயிர்கள் ஆவியாகும் நாள் மிகத் தொலைவில் இல்லை என்பதை சில ஆர்வலர்கள் கூறும்போது காது கொடுக்காது மானுடம் என்பதை நன்கு அறிந்திருக்கிறார் வைரமுத்து. ஒரு கதையின் வழியாக இந்த உண்மையை உணர்த்தும் சிறந்த படைப்பு.

user_6460

★ 5/5 Feb 02, 2026

இந்தியாவில் இன்றைய விவசாயிகளின் நிலையை ஓர் ஓரம் நின்று படம்பிடித்துக் காட்டும் நூல். கண்ணீர் சிந்தாமல் படித்து முடிப்பது சிரமம்தான். மையக்கருவான விவசாயம் தவிர்த்து, வைரமுத்துவின் கவித்துவமான எழுத்துக்களுக்காக மட்டுமே கூட படிக்கலாம். "பூவரச இலைக்கே பொங்கல் பத்தாதுங்கிறப்ப வாழையிலைக்கு எங்கிட்டுப் போறது?" — ஏழ்மையை உணர்த்தும் இந்த வரிகள் நெஞ்சை நெகிழவைக்கின்றன.

user_6459

★ 4/5 Feb 02, 2026

வைரமுத்து சம்பவத்தின் வீரியத்தை எப்படிச் சொல்லியிருக்கிறார் பாருங்கள் — "வெட்டவந்தவன் கழுத்துல தோலக் கிழிச்சு, சதையில இறங்கி, ரத்தநாளம் கடந்து, சவ்வப் பொளந்து, கழுத்தெலும்ப ஒடச்சு உள்ள புகுந்து, முதுகுத்தண்டு நரம்பை அறுத்து உசுர வாங்கித் தலையத் தொங்கவிட்டு சங்குக் குழியில நின்னுபோச்சு அருவா." படித்ததும் குப்புன்னு ஆகிப்போனேன். விவசாயத்தின் பெருமையை உரக்கச் சொல்லும் ஒரு படைப்பு.

user_6458

★ 5/5 Feb 02, 2026

மூன்றாம் உலகப் போர் புத்தகத்தை முடிக்கும்போது கருத்தமாயின் வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. இந்திய விவசாயி மேல் மரியாதையையும் விவசாயத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் நம்மிடையே விட்டுச் செல்கிறது இந்தப் புத்தகம்.

user_6457

★ 5/5 Feb 02, 2026

விவசாயத்தின் அருமையையும் மண்ணின் மகத்துவத்தையும் உணர்த்தும் அற்புதமான படைப்பு. "தன்னை விற்க நேர்ந்தாலும் நம் மண்ணை விற்காதே" என்ற வரிகள் இதயத்தை தொடுகின்றன. இந்தப் புத்தகத்தை குப்பை என்று சொல்பவர்கள் இன்றைய சூழலையும் விவசாயிகளின் நிலையையும் புரிந்துகொள்ளாதவர்கள். திருக்குறளின் உழவுப் பாடல்களை நினைவூட்டும் இந்த நாவல் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.