Reviews for மூன்றாம் உலகப் போர்
30 reviews total
user_6486
★ 4/5 Feb 02, 2026எங்கோ இருக்கும் குமரிக்கண்டத்தில் கடவுள் இருந்தார், அவர் ஆட்சி செய்த ஊர் கடலில் மூழ்கிப்போனது எனப் பலர் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த நூலைப் படித்தபிறகுதான் — அவ்வளவு தூரம் ஏன் யோசிக்கனும்? உன் மாவட்டத்தில் ஒரு அங்கமாக இருந்த ஊர் இன்று அணைக்கட்டின் அடியில் மூழ்கிப்போச்சு தெரியுமா? கவிஞர் என்னைப் பார்த்துக் கேட்ட மாதிரி இருந்தது. வைரமுத்துவின் மிக முக்கியமான படைப்பு இந்த நூல். கட்டாயம் படியுங்கள்.
user_6485
★ 4/5 Feb 02, 2026சமுதாயப் பிரச்சினைகளை ஒரு கதை வடிவத்தில் கொடுத்துள்ளார் வைரமுத்து. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். வைரமுத்து தன் பெயருக்கு ஏற்றார் போல வைரத்தைப் போன்ற ஒரு புத்தகத்தை நமக்கு முத்தெடுத்துக் கொடுத்திருக்கிறார்.
user_6484
★ 3/5 Feb 02, 2026அட்டணம்பட்டி விவசாயி சீனிச்சாமி கடன் வாங்கி விவசாயம் செய்தார். கடன் கொடுத்தவன் ஒருநாள் தெருவில் அநாகரிகமான முறையில் கடனைத் திருப்பிக் கேட்டான். அவமானத்தில் மனம் நொந்தவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதில் மகன்கள் சுழியனும் கருத்தமாயியும் தப்பிவிட்டார்கள். தாய், தந்தை, தங்கையின் மரணத்திற்குக் காரணமான கவட்டைக்காலனைக் கருத்தமாயி கொலை செய்துவிட்டுச் சிறை சென்று, தண்டனைக் காலம் முடிந்து திரும்பி அட்டணம்பட்டி வந்து தந்தையின் வழியில் விவசாயத்தைத் தொடர்கிறார்.
user_6483
★ 5/5 Feb 02, 2026காலத்திற்குத் தேவையான படைப்பு என்று எனது பார்வையில் தோன்றுகிறது. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் முக்கியமான படைப்பு. விவசாயிகளின் உழைப்பு, தோல்வி, வேதனை, வலி — இவற்றை நாம் பலர் அறிந்திருப்பது அரிது. அவர்கள் வாழ்வை வாழ்வதும் கொடிது என்று மனதில் ஆழமாக வேரூன்றுகிறது. ஊர் மாற்றம் கொள்ள என்ன தேவைகள் உள்ளது, பிரச்சினைகள் உள்ளது, மக்களின் ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்று உணர்த்துகிறார்.
user_6482
★ 4/5 Feb 02, 2026"அறியப்பட்ட இருபது லட்சம் உயிரினங்களில் ஒரு ஜீவராசிதான் மனிதன்" — அவ்வளவுதான்! பத்தில் ஒன்று கூட இல்லை, இருபது லட்சத்தில் ஒன்று! உலக வெப்பமாதல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல், காடழித்தல் போன்ற முக்கியமான விஷயங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் அர்த்தம் இழந்த சொற்றொடர்களாக மாறிவிட்டன. எவ்வளவு மகத்தான விஷயமாக இருந்தாலும் அதை உணர்த்த ஒரு சிறந்த கதை வேண்டும் — அதை வைரமுத்து செய்திருக்கிறார்.
user_6481
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் — "எப்படி இப்படி ஒரு கதையை வட்டார வழக்கோடு, சொல்ல வந்த நோக்கம் மாறாமல் அழகாக எழுதியிருக்கிறார்" என்பதுதான். எமிலியிடம் தொடங்கிய கதை இஷிமுராவை அறிமுகப்படுத்தி அட்டணம்பட்டியை வந்தடைகிறது. கருத்தமாயி-சிட்டம்மாவின் வாழ்க்கை நம் கண் முன்னே நிழலாடுகிறது. கருத்தமாயியின் வாழ்க்கையை எடுத்துரைக்கும்போது உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
user_6480
★ 5/5 Feb 02, 2026வைரமுத்து எழுதிய இந்தப் புத்தகம் 2012-ல் வெளிவந்தது, நான் 2021-ல் படித்தேன். இவ்வளவு ஆண்டுகளாக இதைப் படிக்காமல் போய்விட்டேனே என்று வருந்துகிறேன். இரண்டு காரணங்கள் — ஒன்று, நானும் பின்விளைவுகள் தெரியாமல் இயற்கைக்கு நிறைய தீங்கு செய்துவிட்டேன். மற்றொன்று, விவசாயம் ஒரு தொழில் என்று நினைத்திருந்தேன், ஆனால் விவசாயம் ஒரு வாழ்க்கை முறை என்பது படித்தபின்தான் தெரிந்தது.
user_6479
★ 5/5 Feb 02, 2026கரிசக்காட்டு நடையின் மூலமாக கதையோடு பயணித்தே அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். கருத்தமாயி ஒரு ஏழ்மையான விவசாயி — அவரைச் சுற்றியே நகரும் கதையோட்டத்தில் அறிவியலைக் கதையோடு ஒன்றி உருபெற வைத்துள்ளமை சிறப்பு. விவசாயம் மற்றும் விவசாயிகளின் மகத்துவத்தையும் அவர்களின் அன்றாட அல்லல்களையும் படம் போட்டுக் காட்டியுள்ளார். இஷிமுரா, எமிலி ஆகிய கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வியப்பூட்டுகின்றன.
user_6478
★ 5/5 Feb 02, 2026இந்த மண்ணில் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன், தன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் உற்று நோக்கி, உலகத்தின் போக்கைப் புரிந்துகொண்டு, உள்ளூர் மக்களின் வார்த்தைகளில் உலக அளவிலான பிரச்சினையை விவரிக்கிறார். இது புகழுரையோ புகழ்மாலையோ அல்ல — புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணராதவர்களின் அறிவுத் தெளிவின்மையைப் புரிந்துகொண்டதன் சிறு ஆதங்கம்.
user_6477
★ 3/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் சினிமாவின் பிரதிபலிப்பு போல் உள்ளது. முழு புத்தகமும் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிப் பேசும் ஒரு திரைப்படம் போல. தீர்வுகள் இல்லை, அறிவியல் முறைகள் இல்லை — வெறும் பிரசாரமும் நாடகத்தனமும் மட்டுமே.