Reviews for கோபல்லபுரத்து மக்கள்
30 reviews total
user_6241
★ 4/5 Feb 02, 2026இந்த நாவல் நாயக்கர் சமுதாயத்தின் ஆவண நாவல் என்றே சொல்லலாம். அருமையான வருணனை மற்றும் கற்பனை கலந்த அந்த வயதான பாட்டியின் கதைகள் நம் பிந்தைய தலைமுறைக்கு எப்போதும் கிடைக்காது. அவர்கள் இது போன்ற நாவலைப் படித்தால்தான் உண்டு.
user_6240
★ 4/5 Feb 02, 2026ஒன்றாம் பாகம் கொடுத்த அதே அனுபவம் இதுவும் கொடுத்தது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை ஒரு மிகச்சிறிய கிராமத்திலிருந்து காண்பது மிக நல்ல அனுபவமாக இருந்தது. சில முக்கிய தகவல்களையும் இந்த நாவல் மூலம் அறிய முடிந்தது. முக்கியமாக கப்பல் படையின் போராட்டம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கடிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளின் பங்கு ஆகியவை.
user_6239
★ 4/5 Feb 02, 2026கோபல்ல கிராமத்தை முதலில் படித்துவிட்டு இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று கி.ரா தன் அகாதெமி விருது விழாவில் பேசியிருந்ததால், நல்லவேளையா முதலில் அதைப் படித்தேன்.
சாகித்ய அகாதெமி விருது வாங்கிய இந்த வரலாற்று நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வரும். தொடர்ந்து படிப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் இடைவெளி விட்டுப் படித்தால் பாத்திரங்கள் மறந்துபோகும்.
முதல் பாதியில் கிட்டப்பன்-அச்சிந்தலு காதல் கதையும், கடைசியில் அதிகம் பேசப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. காரி காளைமாட்டுக் கதைகள், ஜல்லிக்கட்டு ஆரம்பம், ஆங்கிலப் படிப்பு, பகத்சிங் கதை, கள்ளுக்கடை ஒழிப்பு, மாலுமிகள் போராட்டம் என பல சுவாரசியமான அம்சங்கள் உள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள், கிராமத்துக் காதலை ரசிப்பவர்கள், சொலவடைக் கதைகளை விரும்புவர்கள் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
user_6238
★ 4/5 Feb 02, 2026முதல் பாதி கொஞ்சம் மெதுவாகச் சென்றது, அதன் பின் செம ரகளை! சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஒரு கிராமத்து மக்களின் அன்றாட வாழ்வின் முறைகளிலிருந்து தொடங்குகிறது.
ரயில்பெட்டி, தேநீர், அரிசி, டார்ச்லைட், பேனா — இவை அனைத்தும் அங்கு அறிமுகமாகும்போது மக்களின் அணுகுமுறை படிக்கும்போது நமக்குச் சிரிப்பு வந்தாலும், நாம் அந்த நேரத்தில் இருந்திருந்தால் அப்படித்தான் நடந்திருப்போம் என்றே தோன்றுகிறது.
சுதந்திர வேட்கை கிராமத்தில் பரவும்போதும், காந்தி, காங்கிரஸ் பற்றிய செய்திகள் கிடைக்கும்போதும் மக்களின் உணர்வு எவ்வாறு இருந்தது என்பது படிக்கப் படிக்க ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. சுதந்திரம் கிடைக்கும்போது மக்களின் எண்ணங்களோடு இந்தப் புத்தகம் முடிகிறது. கள்ளுக்கடை எதிர்ப்பு, மாலுமிகள் போராட்டம், காந்தியின் சர்ச்சைக்குரிய முடிவுகள் என பல முக்கிய விஷயங்கள் என்னைப் பாதித்தன.
user_6237
★ 5/5 Feb 02, 2026கரிசல்காட்டு இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் (1978) நாவலின் தொடர்ச்சியான இந்த நாவல் 1991-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது.
நாவல் இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் கிராமத்தின் மக்கள் வாழ்க்கையை, பழக்கவழக்கங்களை, உறவுகளை ரசிக்கும்படியாக நம் கண்முன் காட்சிப்படம் ஓடுவது போல, மண்ணெண்ணெய் பயன்பாடு, தேநீர் அருந்திய அனுபவம், ஊர் திருவிழா விளையாட்டுக்கள், உடன்கட்டை ஏறும் நிகழ்வு என கி.ரா-வுக்கே உரிய சொலவடைகளுடன் வெடிச்சிரிப்பை உண்டாக்குகிறார்.
இரண்டாம் பாகத்தில் சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பகால தாக்கம் எப்படி அக்கிராமத்தின் சலசலப்பை உண்டுபண்ணுகிறது என்று விரிவாகப் படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன, செய்தித்தாள்கள் மூலம் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அறிகிறார்கள், கப்பல்படை மாலுமிகளின் போராட்டம் விரிவாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்தப் புத்தகம் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கிராமங்களின் வாழ்க்கைச் சூழலையும், முன்னோர்களின் வாழ்வியலையும், ஒரு கிராமத்தின் பரிணாம வளர்ச்சியையும் புரிந்துகொள்ள உதவும் அற்புதமான படிமம்.
user_6236
★ 3/5 Feb 02, 2026காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறுகின்றன. கிட்டப்பன் - அச்சிந்தலு கதையோடு கிராமத்தின் மாற்றங்களை அழகாகப் படம்பிடித்த நாவல்.
user_6235
★ 3/5 Feb 02, 2026முதல் பாதி இரு கதாபாத்திரங்களைத் தழுவியும், இன்னொரு பாதி சுதந்திரப் போராட்டம் பற்றிய சில அரிய தகவல்களைச் சொல்வதாகவும் இருந்தது. தேவையில்லாமல் சில கதாபாத்திரங்களை விளக்கியும் பின் கதையில் தொடர்பில்லாமல் போவதும் சலிக்கும் விதமாய் இருந்தது.
user_6234
★ 5/5 Feb 02, 2026கரிசல் இலக்கியத்தின் ஓர் இணையற்ற படைப்பு. இதை ஒரு புதினம் என்று சொல்வதைவிட, ஒரு திண்ணையில் அமர்ந்து தாத்தா-பாட்டி சொல்லும் ஊர் கதைகளைக் கேட்கும் அனுபவம் எனக்குக் கிடைத்தது.
முதன்மை கதாபாத்திரங்களை விடுத்து, அந்தக் கிராமத்தின் வழக்கம், மரபு, உணவு போன்றவற்றை முன்நிறுத்திய தன்மை புதிதாகவும் மேன்மையாகவும் இருந்தது. கள்ளுக்கடை அடைப்பு போராட்டம், மாலுமிகளின் போராட்டம், விடுதலைப் போராட்டம் போன்ற சம்பவங்களை இந்தியாவின் தென்கோடியில் இருந்த அக்கிராம மக்கள் நுகர்ந்த விதம் பற்றிய விவரணை அருமை. காதல், சாதி, அரசியல் என்று மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்மூன்றையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் கி.ரா. வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய புதினம்.
user_6233
★ 5/5 Feb 02, 2026கி.ரா-வின் சிறுகதைகள் தொகுப்பு போன வருடம் படித்தபோது வட்டார வழக்குச் சொற்களைப் புரிந்துகொள்ள சிரமாமாக இருந்தது. மீண்டும் அவர் எழுத்து படிப்பேன் என்று எண்ணவில்லை. ஆனால் சாகித்ய விருது பெற்ற இந்த நாவலை வாசித்தது நல்ல முடிவு!
கி.ரா பிறந்து வளர்ந்து இளைஞனான காலகட்டத்தில் கரிசல் நிலமான கோவில்பட்டி சுற்றி இருந்த மக்களைப் பற்றியும், நடைமுறை மாற்றங்கள் பற்றியும் கதை. விடுதலைப் போராட்டப் பின்னணியில் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார். கிராம வாழ்க்கையைக் கண் முன்னே கொண்டு வருகிறார்.
ஆவணக் கதை போல போகும் இந்நாவலை முடித்தபோது ஒரு இனிமையான பிரயாணம் போனதாக உணர்ந்தேன்.
user_6232
★ 5/5 Feb 02, 2026தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. கி.ரா-வின் எழுத்தாற்றலுக்கு மதிப்பீடு வழங்குவது என்பதே பெருமை. ஒரு நல்ல உணவு சாப்பிட்ட பிறகு நாவில் தங்கும் சுவை போல, இந்தப் புத்தகம் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் அனுபவத்தைத் தரும்.