Reviews for விஷ்ணுபுரம்

30 reviews total

user_6221

★ 5/5 Feb 02, 2026

ஈடு இணையற்ற, மயக்கும் காவியம். இதுபோன்ற பிரமாண்டமான மற்றும் சிக்கலான ஒரு நாவலை இதற்கு முன் படித்ததில்லை. ஆனால் இந்தக் காவியத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள அர்ப்பணிப்பும் பொறுமையும் தேவை. ஆசிரியரின் அனைத்துக் கருத்துக்களையும் புரிந்துகொள்ள பல மறுவாசிப்புகள் தேவைப்படலாம்.

user_6220

★ 5/5 Feb 02, 2026

மிகவும் நன்றாக இருந்தது. புரிந்த வரையில் இது ஜெயமோகனின் சிகரம் என்றே சொல்லலாம். ஒரு கணக்கு வாத்தியார் போல இவர் இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார். சில இடங்களில் அயர்ச்சியாக சென்றது, குறிப்பாக மூன்றாவது பகுதி. முதல் பகுதி திருப்பதி மற்றும் ராமேஸ்வரத்தை நினைவுபடுத்தி வந்தது.

நாவலின் மைய இழையாக உணர்ந்தது இரண்டாவது பாகமே. தர்க்க ரீதியாக ஆரம்பித்து, அதன் உச்சத்தைத் தொட்டு, உச்சத்தின் வெறுமையில் முடிகிறது. மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய நூல்.

user_6219

★ 5/5 Feb 02, 2026

விஷ்ணுபுரம் வெறுமனே படிக்கும் புத்தகம் அல்ல. அனுபவிக்க வேண்டிய ஒரு கனவு! ஜெயமோகனின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. ஒரு செவ்வியல் நூல்!

user_6218

Feb 02, 2026

சிறப்பான படைப்பு. பிரளயம் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஆசிரியர் செய்திருக்கும் ஆராய்ச்சி பிரமிக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தை முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை.

user_6217

★ 5/5 Feb 02, 2026

வாழ்நாள் முழுவதிலும் வாசிக்கலாம். ஒவ்வொரு வாசிப்பிலும் இது தரும் மன ஒளி புதுமையானது. ஈடு இணையற்ற செவ்வியல் நூல்.

user_6216

★ 5/5 Feb 02, 2026

நீண்ட புத்தகம், மிகவும் கருத்தியல் ரீதியான நாவல். படிப்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன். ஆழமான சிந்தனைகளை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படைப்பு.

user_6215

★ 4/5 Feb 02, 2026

படிப்பதற்கு கடினமான நாவல், ஆனால் சுவாரஸ்யமானது. சவாலான வாசிப்பு அனுபவத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றது.

user_6214

★ 5/5 Feb 02, 2026

முழுமையான ஒரு இந்திய நாவல். இந்திய பண்பாடு, தத்துவம், வரலாறு அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்பான படைப்பு.

user_6213

★ 4/5 Feb 02, 2026

விஷ்ணுபுரத்தின் தொடக்கம் முதல் அழிவு வரை இந்து தத்துவங்களை உள்ளடக்கிய காவியக் கதை. பிரமாண்டமான புனைவு.

user_6212

★ 5/5 Feb 02, 2026

வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களில் ஒன்று, ஜெயமோகன் படைப்புகளில் முதன் முதலாக வாசித்தது விஷ்ணுபுரம் என்பது. வாசிப்பு தரத்தை நானே அறியும்படியான ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. இந்நூலே அதன் வாசகர்களைத் தேர்ந்தெடுக்கும் திறன் கொண்டது.