விஷ்ணுபுரம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விஷ்ணுபுரம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Author: Jeyamohan
4.18/5 · 400+ ratings

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன. வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை. கனவுகள் நம்மை நமக்குக் காட…

Reviews

user_6221

★ 5/5
Unparalleled and Mesmerizing epic It have not read such a grand and complicated novel before. But needs dedication and patience to understand the grandeur of this epic. May require several revisions to understand all the views of the author. 👌👌🙏

user_6220

★ 5/5
மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு புரிந்த வரயில் இது ஜெ வினுடய சிகரம் என்றெ சொல்லாலம். ஒரு கணக்கு வத்தியர் போல இவர் இந்த நாவலை கட்டமைத்து இருகிறார். சில இடங்கலில் ஆயசமாக சென்றது.குறிப்பக மூன்றவது பகுதி. முதல் பகுதி எல்லாம் திருப்பதி மற்றும் ராமெச்வரத்தை நினைவு படுத்தியெ வந்ததது. நாவலின் மைய இழையக நான் உணர்ந்தது இரண்டவது பாகமே. தர்க்க ரிதியாக ஆரம்பித்து. அதனின் உச்சத்தை தொட்டு, உச்சத்தின் வெறுமையில் முடிகிறது. மீண்டும் மீண்டும் வசிக்க வேண்டிய நூல்.

user_6219

★ 5/5
Vishnupuram is not a book to be simply read. It is a dream to be experienced! One of the finest works of Jeyamohan! Classic!

user_6218

Great work Lot of ground work done to gather information from Vegas about parlayam. Not able to leave this book until finished

user_6217

★ 5/5
வாழ்நாள் முழுவதிலும் வாசிக்கலாம். ஒவ்வொரு வாசிப்பிலும் இது தரும் மன ஒளி புதுமையானது. ஈடு இணையற்ற செவ்வியல் நூல்.

user_6216

★ 5/5
Long book. Highly abstract. Really enjoyed reading

user_6215

★ 4/5
Difficult read yet interesting..

user_6214

★ 5/5
A complete Indian novel..

user_6213

★ 4/5
epic story. deals with hindu philosophies during the course of the story from beginning to destruction of Vishnupuram

user_6212

★ 5/5
வாழ்க்கையில் எனக்கு நடந்த நல்ல விசயங்களில் ஒன்று ஜெயமோகன் படைப்புகளிலே நான் முதல் முதலாக வாசித்தது விஷ்ணுபுரம் என்பது. என்னுட வாசிப்பு தரத்தை நானே அறியும்படியான ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. இந்நூலே அதன் வாசகர்களை தேர்தெடுக்கும் திறன் கொண்டது.

user_6211

★ 5/5
It’s an attempt to discuss about the philosophical implications that goes around the novel. The author has boiled himself through the words in every chapter.He is everything and he is kind of nothing. Enjoyed reading a one which induces your mind to know “what , why and how “ of the life . Great Job - Vishnupuram

user_6210

★ 1/5
நேரவிரயம். சமஸ்கிரதத்தில் எழுதப்பட்டுள்ள முதல் தமிழ் நூல் இதுவே. ஜெ.மோ தனது அரைவேக்காட்டு தத்துவ ஆரய்ச்சிகளை எழுத்து வழியே வாந்தி எடுத்து வைத்துள்ளார். ஆகம விதிகள், ஆரிய பண்பாடுகள், கடவுளர்களின் கட்டுக்கதைகளை புரியாத மொழியில் தெளிவில்லாத நடையில் படிக்க விரும்புபவர்களுக்கானது. மற்றவர்கள் வேறு ஏதாவது உருப்படியான புத்தகத்தை படிக்கவும்.

user_6209

★ 5/5
தமிழில் இந்நாவல் ஒரு பெரும் கொடை. வாழ்வில் நம்முள் எழும் கேள்விகள் பல உண்டு. அவற்றை தேடல்களாக மாற்றிக்கொள்ள தவறவிட்டுவிடுவோம். ஒருவேளை அத்தேடல்கள் அனுபவங்கலாலும், (இந்து, பௌத்த மத) ஞான நூல்களின் துணையாலும் நடந்து இருந்தால் அதன் தொகுப்பே இந்த காவியம். ஒரு அற்பனிப்பு இருந்தால் படிக்க எளிதான ஒரு நாவல் தான். ஆனால் அது அளிக்கும் படிமங்களை புரிந்துக்கொள்ள மறுவாசிப்பு தேவைப்படும் ஏனெனில் முதல் வாசிப்பு நம் தேடல்களின் கண்டடைந்த பரவசச்சின் கிளர்ச்சியனுபவமாகவும், நாம் தினம் தினம் பார்க்கும் கோயில்களில் இருக்கும் பிரமாண்ட தரிசனமும் நம்மை ஆட்கொள்ளும். அதனை கடந்து இதன் ஆழத்திற்கு சென்று மறுவாசிப்பும், விவாதங்களும், தருக்கங்களும் செய்தால் மிக பயனுள்ளதாக அமையும்

user_6208

★ 4/5
ஒரு அருவியின் அருகில் நின்றால் சிலிர்க்கும் குளிர் காற்று, சற்று அருகே போனால் சாரல் அடிக்கும், அருவியில் குளிக்கபோனால் தாப் தாப் என்று கனத்த நீர் தலையில் விழும், நீண்ட நேரம் நிற்க முடியாது, மூச்சு திணறும், கண் தெரியாது, அருவியை விட்டு வெளியே வந்துவிட தோன்றும். குளித்துவிட்டு வெளியே வந்தால் மீண்டும் குளிக்கத்தோன்றும். அப்படிதான் படித்தவுடன் நான் உணர்ந்தேன். இந்நூலில் உள்ள கருதுகோளை ஒரு வரியில் கூறிவிட முடியாது. வரலாறு, தொன்மம், அறிவியல், ஆன்மிகம், பண்பாடு, கலாச்சாரம் என பல கிளைகள் உள்ளடக்கிய மாபெரும் விருட்சம். எந்த ஒப்பனையும் இல்லாத எதார்த்தம் வாய்ந்த படைப்பு. பல இடங்களில் முகம்சுளிக்க வைத்தாலும் இது தான் உண்மை. சில இடங்களில் மர்மம், சில இடங்களில் சுவராஸ்யம், சில இடங்களில் சலுப்பு, சில இடங்களில் குழப்பம். சில இடங்களில் தெளிவு. கண்டிப்பாக மறுவாசிப்பு செய்யப்படவேண்டிய நூல். சில ஆண்டுகளிக்குபின் நான் நிச்சயம் மீண்டும் படிப்பேன்.

user_6207

★ 5/5
ஒரே மூச்சில் படிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் பணி நிமித்தம் காரணமாக ஒரு மாதமாகி விட்டது. காவியம் என்ற உடன் கொஞ்சம் பயம் இருந்தது. புரியுமா புரியாதா இல்லை இரண்டும் கேட்டான் நிலையில் இருப்பேனோ என யோசித்தேன். கொஞ்சம் prework பண்ணிக்கிட்டேன். ஜெயமோகனின் பின்னூட்டங்களை படித்து கொஞ்சம் தெளிவான உடன் ஆரம்பித்தேன் . நல்ல காலம் பின்னூட்டத்தில் ஸ்பாய்லர்ஸ் ஏதும் அகப்படவில்லை . திருவட்டாறு சாமியை முதன் முதலாக பார்த்தது என் அக்கா அத்தான் மூலமாக தான். இத்தனைக்கும் நான் கன்னியாகுமாரிகாரன் வேற. முதல்முறை பார்க்கும் போது பத்மநாப சாமியின் அவரின் ஆரோகணம் கண்டிப்பாக மெய்சிலிர்க்க வைக்கும். அதன்பின் பலமுறை அங்கு போயிருக்கிறேன் . அடுத்த முறை பார்க்கும் போது நிச்சயமாக ஜெயமோகன் வரிகள் மனதில் நினைக்காமல் எம்பெருமானை பார்க்க முடியாது என தோன்றுகிறது . ஒரு புனைவு நகரம் எப்படி இருந்திருக்கும் என வார்த்தை சிற்பங்களில் செதுக்கப்பட்ட கல் மண்டபம் இந்த புத்தகம் . பிரளயம் , ஊழி ,காலபைரவன் என வார்த்தைகளில் சொல்வதற்கும் அதை வகை படித்துதலுக்கும் (டீடைலிங் ) நிறைய வித்தியாசம் உண்டு. கண்டிப்பாக தமிழ் மக்களுக்கு இது ஒரு சிறந்த புதினம்.

user_6206

★ 4/5
First of all, one should have a lot of patience to complete reading this title. It may feel tiresome for almost everyone before finishing the first part 'Sri Paadham' (Vishnu's Feet) - the part where the magnificent 41 day festival 'Sri Paadha Thiruvizha' in Vishnupuram is extensively described. Coz, I felt that there is no connection between the chapters or characters or incidents most of the time. The second part 'Koushthubam' (A Gem worn by Vishnu on his Chest) talks about how the Buddhist monk Ajithan took over Vishnupuram from Vaishnavas by winning a wisdom debate (Gnana tharukkam). Here hell lot of different perspectives are discussed and debated over. The third part 'Manimudi' (Vishnu's Crown) is where I could get a clear and connected picture on what I've read in the first part. On the whole, this talks about a grand city beyond imagination (Vishnupuram), how it was in its prime and how it waned out and finally vanished. AND came back to life again. Of course don't think about timelines. This is a PURE FICTION giving an understanding on how might have the concept of religion/God has born. There are so many 18+ incidents all over, I mean trying to understand religion/God itself is an interest of 18+ :p

user_6205

★ 1/5
This was a big let down. I wanted to read it for so long. Once I started , couldn't believe that Jeyamohan has written this.

user_6204

★ 5/5
இந்திய நவீன இலக்கியத்தில் ஒரு மைல்கல். கனவும், கற்பனையும், தர்க்கமும், அங்கதமும், தேடலும் கலந்த ஒரு காவியம்.

user_6203

★ 4/5
ஒரு புராண இலக்கியத்திற்கு உரிய எல்லா அணிகளும் உடைய நாவல்.

user_6202

★ 4/5
நாவலின் சாராம்சம் சூன்யத்தில் தொடங்கி சூன்யத்தில் முடிவடைகிறது. சூன்யத்தை நீக்கிடும் போது மிஞ்சுவதும் சூன்யமே. நாவலின் தொடக்கம் எனக்கு எளிதாகவில்லை எழுத்தாளர் விஷ்ணுபுரம் என்ற நகரை முதல் நூறு பக்கங்களில் பிரமாணிக்கிறார், பிரமாண்டமான வளர்ச்சி. தமிழில் நூலிருந்தாலும் பல வார்த்தைகளின் அர்த்தம் விளங்கவில்லை. என் மனதை சஞ்சலப்படத் துவங்கியது. காரணம் இது இலக்கிய வகையா ? ஆன்மீகத் தேடலா.. படிக்க வேண்டாமா கைவிட்டு வேறு ஏதாவது படிக்காலாமா என எண்ணிய போது புத்தகத்தில் நூற்று நாற்பது பக்கங்களையும் கடந்து விட்டாயிற்று. கதையும் இடமும் எனக்கு வேகம் பெறத் துவங்கியதும் இந்த இடம் தான். இந்த நாவலில் மிக முக்கிய கதாபாத்திரங்கள் என்று எதுவுமில்லை. நாவல் மூன்று பாகங்களையும் வெவ்வேறு கால ஓட்டத்தையும் கொண்டு புனையப்பட்டுள்ளது. முதல் பாகம் விஷ்ணுபுரத்தின் நிர்மாணம், ஆட்சி முறை , மக்களின் வாழ்க்கைத்தரம் அங்கு கொண்டாடப்படும் விழாக்கள் என விரிந்தும் . ஒவ்வொரு கதாப்பாத்திர அறிமுகங்களும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் எதிர்ப்பார்ப்பையும் தேடலையும் கொண்ட கதாப்பாத்திரங்களே. முதல் பகுதியில் வருண அடையாளங்கள் முன்னிருத்தப்பட்டு அதனூடே மக்களின் வாழ்வு முறைவகுக்கப்படுவதும் அரசாள்பவர்கள் ஞானமுள்ளவர்களை நசுக்கி எப்படி ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறார்கள் என்பதோடு நகரும் இந்த நாவல் விஷ்ணுபுரத்தை அழிக்க சிற்பி எடுக்கும் முயற்சியும் அது முடியாமால் அவன் தற்கொலை செய்வதோடு முடிகிறது. இரண்டாவது பாகம் விஷ்ணுபுரத்தின் முந்தைய காலக்கட்டதோடு பயணிக்கிறது. இதில் அஜிதன் என்ற பவுத்தனின் வரவும் அவன் வாதத்தால் விஷ்ணுப்புர மணிபீடத்தைப் பிடிப்பதும் அடிமைத் தளைகள் தகர்க்கப்பட்டும் எல்லோருடைய வாழ்வும் சமமாகப் பார்க்கப் படுவதாக சொல்லும் இந்த தளம். கண்டிப்பாக முதல் பாகத்தைப்படிக்கும் முன் இரண்டாம் பாகத்தை படித்து முதல் பாகம் செல்லும் போது நாவலின் பல நடைமுறைச் சிக்கல்கள் திர்க்கப்படுகிறது. இரண்டாம் பாகம் பல இடங்களில் பெருத்த அலுப்பை கொடுக்கிறது. காரணமாக அமைவது கேள்வியும் விவாதமும் என்ற பகுதிகள். இந்த பகுதி ஆன்மிகத்தை பௌதீகத்தையும் திணித்து கதையோடு பயணிக்கிறது. கண்டிப்பாக எனக்கு அலுப்பைக் கொடுத்த இடங்கள் இதில் விவாதிக்கப்படும் தன்மைகளே. இந்த பகுதி பவுத்த ராஜ்யத்தையும் அதன் அழிவையும் மையப்படுத்தி புனையப்பட்டுள்ளது. மூன்றாம் பாகம் இந்த இரண்டில் விடுப்பட்டுப்போன பல கதாபாத்திரங்களின் முடிவுகளோடும் விஷ்ணுபுரத்தின் அறத்தால் நிர்மானிப்பதையும் அதில் வழுவும் போது ஏற்படும் அழிவையும் மையப்படுத்தி புனையப்பட்டிருக்கிறது. நமது தேடலுக்கும் சந்தேகங்களுக்கும் இதில் விடைகள் உள்ளதாகவே கருதுகிறேன். இது ஆன்மீக நாவலா அல்லது இலக்கியமா என்பதில் எனக்கு பல ஐயங்கள் உள்ளது. படிக்கலாமா வேண்டாமா என்பது வாசகர்களின் மனநிலையைப் பொறுத்ததே. காரணம் எனக்கு இந்த நாவல் பல இடங்களின் சுவாரஸ்யத்தையும் சில இடங்களில் அலுப்பைக் கொடுத்திருந்தாலும் இதைப் பற்றி படித்தவர்களோடு விவாத செய்யும் போதே இதற்கான் தெளிவான விளக்கங்கள் கிடைக்கப் பெறலாம்.

user_6201

★ 4/5
புத்தகத்தை படித்து முடித்தவுடன் கேட்கபடும் முதல் கேள்வி , இந்த புத்தகத்திற்காக ஏன் ஜெயமோகனுக்கு சாகித்யா ஆக்டாமி விருது வழங்கபடவில்லை. இந்த புத்தகம் வந்த வருடம் இந்த புத்தகத்தில் உள்ள இலக்கியத்தை விட தேர்வாளர்கள் கண்ட இலக்கிய செறிவடைந்த நாவல் எதுவாக இருக்கும் . இரண்டு புத்தகத்தையும் படித்து தான் விஷ்ணுபுரத்தை நிராகரித்தார்களா அல்லது இந்த புத்தகத்தின் பக்கங்களின் கணக்கை கண்டு பயந்து படிக்காமல் வேறு புத்தகத்திற்கு விருதை வழங்கிவிட்டார்களா . இந்த புத்தகத்தை பற்றிய ஒற்றை வரி விமர்சனம் , காவியம் . மற்ற மொழியின் காவியங்கள் எல்லாம் ஓரளவு நாகரிகம் வளர்ந்த பின் எப்படி எழுதப்பட்டது எதனால் உந்தப்பட்டு இந்த பகுதியை எழுதினார் என்று எழுத்தாளரை கேட்கும் பக்குவம் அடைந்த பின் எழுதப்பட்ட காவியங்கள் ஆகும் . ஆனால் தமிழ் மொழியின் காவியங்களின் சூத்திர ரகசியங்களை கற்பதற்கான வழிகளே சொற்பம் . அப்படியிறுக்கும் பட்சத்தில் இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதம் என்றே அழைக்கலாம் . மற்ற 500+ நாவல்களைப் போல் அல்லாமல் இதை படித்தவுடன் ஒரு நாவலுக்கும் இலக்கிய காவியத்திற்குமான வித்தியாசத்தை ஒரு சாதாரண வாசகனால் உணர முடிவதனாலேயே இந்த புத்தகம் இன்னும் வெகுஜனத்திற்கு போய் சேர வேண்டும் என்பது என் ஆசை .

user_6200

★ 5/5
Prepare to enter the mystic city of Vishnupuram and witness the splendor for yourselves.

user_6199

★ 2/5
விஷ்ணுபுரம் முழுக்க பேசப்படும் சிற்ப சாஸ்திரம், யானை, குதிரை சாஸ்திரங்கள், ஆகம விதிகள், வேதங்கள் ,இந்து, பெளத்த ஞான மரபுகள் பற்றிய விவரணைகள் என பலவும் ஆசிரியரின் பெரும் உழைப்பைக் காட்டுகின்றன. ஆனால் நாவல் ஒட்டு மொத்தமாக அனைத்து தகவல்களையும், கருத்தியல் சாத்தியக் கூறுகளையும் கலந்து கட்டிப் பூசி மொழுகப்பட்ட ஒன்றாகத் தெரிகிறதே ஒழிய பார்த்து பார்த்துச் செதுக்கியதாகத் தெரியவில்லை. வாசிப்பனுபவ கட்டுரையை முழுமையாக வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.

user_6198

★ 5/5
எது எங்குமுள்ளதோ, எது எங்குமில்லாததோ, எது எல்லாமானதோ, எது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதோ, அது வணங்கப்படுவதாக என்று வசந்தன் துதித்ததும் அவனுடைய கைத்தாளம் “ஓம் ஓம் ஓம்” என்று முழங்கியது.Definitely a good read! It about a life cycle … very disturbing and provoking

user_6197

★ 3/5
There was a lot of talk about this book, especially in the literary circles. While the writing style is good, the plot is not always engaging. The book is split into 3 parts. The second part is the densest of all. The language is a mixture of tamil and tamilized sanskrit. I couldn't shake the feeling that the predominant intention of the author was to exhibit all the knowledge he had gathered on different branches of Hindu (and Buddhist) philosophy. By the time I got through the initial chapters of the second part, finishing the book felt more like a chore than anything else. I am definitely not the target audience for this book.

user_6196

★ 5/5
An epic triumph that shows epics need not only be read but can still be written. Vishnupuram is an epic, that presents a slice of life, in this vibrant ancient culture, at any point in time. It's not a book one just reads, but a magnificent vision - Dharisanam, to use the author's lingo - of a long lost glorious past and a not-so-different present, and even future, all rolled into one. It'll most certainly show a mirror to the reader at some random page, which will shake the being so hard that one has to remind oneself that it's an imaginary tale in a book. Or is it a tale within a tale, which is a million tales mixed in the blender of history, resulting in a delightful yet perplexing epic tale, that makes one wonder if it's possible to roam around the ruins of Vishnupuram... and discover oneself, as a replica of a being that lived along the shores hit by reddish waves of sona and longed to know something, that we're still trying to know. It's a leap of faith that questions all kinds of faiths. It's an exploration that digs up amazing aspects of this once-great nation from the ruins of a magnificent mythical city, which may very well be relevant for a current national mission such as SkillIndia. It's a rueful reflection of why we are what we are and why we may never be what we aspire to be. It's a potent reminder of the possibility of Pralaya (ultimate natural destruction of everything in existence) that humans will unleash upon themselves, if we repeatedly use history (and pre-history) as a mere reference to a laundry list of events on a linear time line and fail to learn the life lesson 'what goes around, comes around' in the Kala Chakra (wheel of time). It's a rude awakening for the seekers of Truth (of the spiritual kind) that all the scriptures that are supposed to guide one along the path to realisation are quite possibly some other human being's subjective interpretation of something s/he may've simply heard / learned from some other human being. It's an assurance to aspiring authors (yours truly included) that one can dare to explore unchartered terrains in the vast literary space, without being worried about who will like or dislike the outcome, which could turn out to be a genre by itself. If all the aforesaid are a bit overwhelming, simply go ahead and read Vishnupuram, keeping aside all your preconceived notions about anything. You'll be a different person (if and) when you complete it. It's that good. Pranam to Jeyamohan.

user_6195

★ 4/5
விஷ்ணுபுரம் என்பது வெறும் புதினமல்ல, அது ஒரு அனுபவம். இதனை வாசிக்கும் போதே நம்முள் ஏதோ ஒன்று மாறிவிடுகிறது. உலகத்தை, நம்பிக்கையை, மனிதனை, கடவுளை இவை அனைத்தையும் புதிதாய் பார்க்க வைக்கும் ஆழமான ஒரு பயணம் இது. இது எளிய வாசிப்பு அல்ல; இதன் ஆழம் ஒரு பெருங்கடல் போல. எனவே வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் தான் இதனை முழுமையாக அனுபவிக்க முடியும். குறிப்பாக இரண்டாம் பாகம் முழுவதும் ஆன்மீக வாதங்களால் நிரம்பியதால், அது சிலருக்கு சற்று கடினமாய் தோன்றலாம். ஆனால் மனதை திறந்தபடியே வாசிக்கிறோம் என்றால், இது தரும் சிந்தனையின் பரப்பை எதுவும் சமமாக்க முடியாது. முதல் பாகம் விஷ்ணுபுரம் என்னும் மாநகரின் தோற்றம், அதன் மக்கள், பார்ப்பன மரபுகள், அவர்களின் பொய்யான நம்பிக்கைகள், சுயநலம், மறைமுகக் கொடுமைகள் அனைத்தையும் நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. ஆரம்பத்தில் கடவுள் பற்றிய சிந்தனைகள், பார்ப்பன மத வழக்குகள், அவற்றில் வாழும் மனிதர்கள் என கதைச் சூழல் சற்று கனமாகவே இருக்கும். ஆனால் அங்கு பிங்களன், திருவடி, சங்கர்ஷணன் போன்ற கதாபாத்திரங்கள் உருவெடுக்கும்போது வாசிப்பு ஒரு புதிய ஓட்டத்தை எடுக்கிறது. சங்கர்ஷணனின் தன்மையும், சில தாசிகளின் நிலைகளும் இந்தப் பாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டாம் பாகம் முற்றிலும் சிந்தனைக்குரியது. ஆன்மீக வாதங்கள், கடவுள், மனிதன், ஞானம் என்றெல்லாம் விரியும் இந்தப் பகுதி சிலருக்கு சலிப்பைத் தரலாம், ஆனால் அதேசமயம் சிலருக்கு அது உள்நிலை வெளிச்சத்தை தரும். குறிப்பாக ஒரு சித்தனும் அவனது சீடனுமான சிறுவனின் உரையாடல்கள் மெய்ப்பொருள் நிறைந்தவை. அந்த சித்தனின் பாடல்கள் தமிழர் சித்த ஞானத்தின் நரம்பிலிருந்து எழுந்தவை போல தோன்றும். இறுதியில் புத்ததுறவி பேசும் பகுதி முழுக்க ஒரு தத்துவ அனுபவம். அந்த வார்த்தைகள் நம் மனதில் பதிந்து நிற்கும். யார் வென்றார்கள், என்ன வென்றது என்பதல்ல முக்கியம்; சிந்தனை தான் இங்கு மெய்ப்பொருள். மூன்றாம் பாகம் ஒரு மாறுபட்ட உலகம். விஷ்ணுபுரத்தின் அழிவைச் சொல்லும், அதேசமயம் மனிதனின் நினைவின் பரிமாணத்தைப் பேசும் பாகம். சில நூற்றாண்டுகள் கடந்து சென்று நாமே அந்த நகரின் வரலாற்றை பார்க்கிறோம் போல தோன்றும். முதல் பாகத்தில் நடந்த நிகழ்வுகள் இங்கு புராணங்களாக மாறி மக்களின் வாயில் பிதற்றல்களாக மாறியிருக்கும். உண்மை எவ்வாறு மாறி பொய்யாக உருவெடுக்கிறது என்பதைப் பார்க்கும் போது அது சிரிப்பையும் துயரத்தையும் ஒரே நேரத்தில் தருகிறது. புதினத்தின் இறுதி பகுதி விஷ்ணுபுரத்தின் உண்மை தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு வடமாநில பார்ப்பனனின் சூழ்ச்சியில் உருவான அந்த மாய நகரத்தின் தோற்றம், ஒரு பழங்குடி மனிதனின் வழியாக வெளிச்சத்துக்கு வருவது அதிர்ச்சியூட்டும். அதில்தான் கதை ஒரு முழுமையான வட்டத்தை முடிக்கிறது. விஷ்ணுபுரம் வாசிப்பது என்பது ஒரு நகரத்தின் தோற்றமும் அழிவும் மட்டுமல்ல; அது நம் மனத்தின் பயணமுமாகும். கடவுளையும், மனிதனையும், நம்பிக்கையையும், உண்மையையும் புதிய கோணத்தில் காண வைக்கும் இந்தப் புதினம் நிச்சயம் தமிழ்மொழியில் தோன்றிய மிக ஆழமான சிந்தனைக்குரிய படைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு புதினம் அல்ல, ஒரு வாழ்வியல் தத்துவம். ஒரு மன அனுபவத்தின் காவியம்.

user_6194

★ 4/5
பொதுவாக புத்தக வாசிப்பிற்குப் பிறகு அதைப் பற்றிய விமர்சனத்தை இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம். ஆனால் இம்முறை விமர்சனத்தை முன்வைக்காமல், நாவல் பற்றிய எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். பிரபஞ்சம் என்பது ஒரு அதிர்வு. அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம் ஒரு கற்பனை நகரம், இதற்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. மகாவிஷ்ணு ஒருமுறைத் திரும்பிப் படுப்பது ஒரு யுகம் என்று ஐதீகங்கள் குறிப்பிடுகிறது. காலத்தின் சுழற்சியான யுகம் தொடங்கி அழிவது - இந்நாவலின் மூலம். பல விவரிக்க முடியாத கற்பனைகளையும் தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம். விஷ்ணுபுரம் மிகவும் சவால் நிறைந்த மற்றும் நன்கு கவனித்து வாசிக்கப்பட வேண்டிய நாவல். இதுபோன்ற கதைக்களத்திற்குள் நான் பிரயாணித்துச் சென்றது இதுவே முதல் முறை, இதுவே ஒரு புது அனுபவமாக இருந்தது. இலக்கியத்தைப் பற்றிய புரிதலில்லாத எனைப் போன்ற சாதாரண வாசகர்களுக்கு இந்நாவல் சிரமமாகத் தோன்றும். மானுடர்களின் ஞானத் தேடல், வாழ்வியல் பற்றிய தத்துவங்கள், அவற்றைப் பற்றிய தருக்கங்கள், ஐதீகம், சமய சிந்தனை, சமணம், பெளத்தம், வைஷ்ணவம் என்ற பல்வேறு வட்டத்திற்குள் நம்மை இழுத்துச் சென்று, அதைப் பற்றிய புரிதலையும் ஆராய்ச்சியையும் வாசகர்களாகிய நம்மிடமே விட்டுச் செல்கிறது. கஜபிருஷ்ட மலை, வராகபிருஷ்ட மலை, சோனா நதி, ஹரிதுங்கா மலை பற்றியக் கற்பனையும் அவற்றின் விவரிப்பும் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதுபோன்ற கற்பனை விவரிப்பை இதற்கு முன் எந்தவொரு புத்தகத்திலும் கண்டதில்லை. மானுட உளவியல், சிற்ப சாஸ்திரங்கள், மிருக வைத்தியம், தாந்திரிகம் மற்றும் பழங்குடிகளின் சம்பிரதாயங்களை விளக்கமாக அளித்துள்ளார். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியரின் உழைப்பு நன்கு தெரிகிறது. வாசிப்பின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை சரியான புரிதலின்றி, பல நேரங்களில் குழப்பமாகவும் வெற்றிடமாகவும் தோன்றியது. முழு புத்தகத்தையும் வாசித்துவிட முடியமா என்ற வினா தொடர்ந்து எழுந்த வண்ணமிருந்தது. குறிப்பாக கெளஸ்துப பகுதியில் வரும் ஞானசபை தர்க்க நிகழ்வுகளைப் ��ுரிந்துகொள்வதில் சிரமம் அதிகமிருந்தது. ஒவ்வொரு பகுதிகளையும் கடந்து செல்லும் போதும், மறுவாசிப்பு அவசியம் என்பதைத் தெளிவாக உணர்ந்தேன். எனது வாசிப்பில் அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட நாவல் இதுவாகத் தானிருக்கும். நூற்றிற்கும் மேற்பட்ட கதைமாந்தர்களை உள்ளடக்கியது, அதில் வந்து செல்லும் சில கதைமாந்தர்களின் பயணம் நம்மில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயப்பாடு இல்லை. நமக்கு அதிகம் பரிட்சயமில்லாத புதிய சொற்கள் புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இவை தமிழ்ச் சொற்களா அல்லது சமஸ்கிருதச் சொற்களா என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. அதே சமயம் ஆசிரியரின் நுண்ணிய விவரிப்புகளையும், வர்ணனைகளையும் கற்பனை செய்து கொள்வதிலேயே அதிக நேரம் செலவானது. அவற்றின் முழுமையான விவரிப்பை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. வாசிப்பிற்குப் பின் இணையத்தில் உலவும் போது, விஷ்ணுபுர நாவலை படிக்கத் தொடங்குவது எப்படி என்பதை ஜெ.மோ பின்வரும் இணைப்பில் தொகுத்துள்ளார். () வாசிப்பு அனுபவத்தில் ஒரு பகுதியை மட்டுமே இங்கு தொகுத்துள்ளேன். மீண்டுமொரு முறை இன்னும் சற்று கவனமாக வாசித்து, எண்ணவோட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

user_6193

★ 4/5
‘மரணம் நெருங்க நெருங்க சகல பிரமைகளும் உதிர்கின்றன. சகல மாயைகளும் விலகுகின்றன. ஞானியும் பேதையும் பாவியும் புனிதனும் அப்போது ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள்.’ ‘விஷ்ணுபுரம்’ நாவலிருந்து எழுதியவர் ‘ஜெயமோகன்’. ஒரு கற்பனையான நகரம். அங்கு ஒரு மலைவாழ் மக்கள் தங்கள் மூதாதை நினைவாக ஒரு பெரும் கற்சிலையை எழுப்பி அதற்கு வருடம் தோறும் தங்களையே பலி கொடுத்து வழிபடுகிறார்கள். பின் வட நாட்டில் இருந்து ஒரு வைதிகன் வந்து, அவர்களுடைய வழிபாடு தவறு என்றும், அது விஷ்ணு சிலை தான் என்றும் நிறுவி. கோவில் கட்டி தன்னுடைய ஞான மரபை அந்த நகரின் விதிமுறை ஆக்கி ஆள்கிறான். ஒரு ஆயிரம் வருடம் கழித்து ஒரு பௌத்தன் வந்து அந்த நகரின் ஞான சபையில் தர்க்கம் புரிந்து, அங்குள்ள அனைவரையும் வென்று நகரை கைப்பற்றுகிறான். பின் அங்கு புத்தம் பரப்பப்படுகிறது. இன்னொரு ஆயிரம் வருடம் கழிந்து, மீண்டும் அங்கு வைதிக மதமே ஆட்சி செய்கிறது. அப்போது அந்த ஞான சபையில் ஒரு காவியம் இயற்றப்படுகிறது. அந்நகரின் தோற்றம் வடநாட்டில் இருந்து வந்த வைதிகனின் புள்ளியில் இருந்து வந்த கதைகளை சொல்கிறது. இன்னொரு ஆயிரம் வருடம் கழித்து நகரம் பெரும் மாற்றாங்களை காண்கிறது. ஒரு சிறிய கிராமம் போன்று சுருங்குகிறது. அப்போது ஒரு பெரும் வெள்ளம் வந்து மொத்த நகரும் அழிகிறது. “அதான் நீயே, எல்லா Spoilerம் சொல்லிட்டியே அப்புறம் எதுக்கு இந்த நாவல் படிக்கணும்?” என்று கேட்டால், இந்த நாவலின் அழகே மேலே சொன்ன எந்த கதைக்கும் நம்பகத் தன்மை இல்லை என்பது தான். மேலே சொன்ன அத்தனை கருத்துக்களும் கதை மாந்தர்கள் சொன்ன கதைகள். ஆனால், அந்த கதையில் வருபவர்களுக்கே எதுவும் உறுதியாக தெரியாது. எல்லாமும் யாரோ சொன்னதாகவோ, எங்கோ படித்ததாகவோ இருக்கும். உதாரணமாக, ஒரு பெண் விருப்பமில்லா திருமணத்தை எதிர்த்து தற்கொலை செய்து கொள்வாள். இது மிக சாதாரண மனித உணர்ச்சி, ஆனால், ஒரு ஆயிரம் வருடம் கழித்து, அது ஒரு சாமி கதையாக மாற்றப்படும். அவள் கடவுளாக மாற்றப்படுவாள். ஒரு மிகப் பெரிய புத்திசாலி சாமானியனாகவும், ஒரு அரைகுறை மகா புத்திசாலியாகவும் நினைக்கப்படுவான். காலம் அனைத்தையும் மாற்றும். அனைத்தும் அதன் காலம் முடியும் போது இல்லாமல் போகும் என்பதன் நீட்டிய வடிவம் தான் இந்த நாவல். கொஞ்சம் கடினமான நடை. நிறையா சமஸ்கிருத வார்த்தைகள். படிப்பதற்கு கடினமான ஒன்று. இரண்டாம் பாகத்தில் முழுக்க வேத, ஞான விவாதங்கள். ஆனால், வாசகனின் மனதை முதல் பாகமே போதுமான அளவு செட் செய்து விடுவதால் அது ஒரு குறையாக தெரிவதில்லை. இந்த நாவலின் இன்னுமொரு அழகியல் என்னவென்றால் இந்த நாவலைப் பற்றி இதன் கதை மாந்தர்களே விவாதித்துக் கொள்வார்கள். எதற்கும் இந்த நாவலை படிக்கும் முன் ‘சு.வெங்கடேசன்’ எழுதிய ‘காவல் கோட்டம்’ படிப்பது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.

user_6192

★ 4/5
ரப்பர் முதலில் வெளிவந்திருந்தாலும், ஜெ.மோ முதலில் எழுத ஆரம்பித்தது விஷ்ணுபுரத்தைத் தான். இதை எழுதி முடிக்க அவர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதிலிருந்தே அதன் கனதியை நாம் உணர முடிகிறது. இதைச் சாதாரணமான ஒரு வரலாற்று நாவலாகவோ அல்லது ஒரு புனைவாகவோ நினைத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பிப்பீர்கள் ஆனால், இதன் கனதியே ஏதும் அறியமுடியாத ஒரு சூனியத்துக்குள் உங்களைத் தள்ளிவிடும். ஆக, விஷ்ணுபுரத்தில் பயணிக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்களை அதற்குத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். சிலபல தயார்படுத்தல்களின் பின்னரே நான் இதை வாசிக்க ஆரம்பித்திருந்தாலும் கூட, சில இடங்களில் சில குழப்பங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டேன் என்பதே உண்மை. மேலும் இன் நூலின் மூன்று பகுதிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட நூற்றைம்பதுக்கு மேற்பட்ட மனித கதாபாத்திரங்கள் வருகின்றன. தவிர யானைகள், குதிரைகள், பசுக்கள் என்று விலங்குப் பாத்திரங்கள் வேறு. எனவே கொஞ்சம் ஞாபக சக்தியும் உங்களுக்கு இருந்தால் இன்னும் வரவேற்கத்தக்கது. இதை முன்னுரையிலே ஜெயமோகன் அவர்களே குறிப்பிடுகின்றார். இந்த நூற்றிச்சொச்ச பாத்திரங்கள், அவை சார் களங்களின் விபரிப்புகள் மூலமாக, "விஷ்ணுபுரம் என்பது ஒரு புனைவு அல்ல. முன்னொரு காலத்தில் உண்மையில் நிகழ்ந்தது" என்பது மாதிரியான ஒரு மனநிலையை எம்முள் இலகுவாக ஏற்படுத்திவிடுகிறார் ஜெ.மோ. பத்து வருடங்களுக்குப் பிறகு இன்னும் கொஞ்சம் பக்குவம், இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்ட பிறகு மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்.
Shelves
Religion book Classics Fiction Novels Fantasy Jeyamohan

More like this


இலக்கியத்தின் நுழைவாயிலில் [Ilakkiyathin Nuzhaivaayilil]

Author: Jeyamohan

இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொ…

4.18/5 · 400+ ratings

கொற்றவை [Kotravai]

Author: Jeyamohan

A historical fiction.An interesting perspective and historical imaginations of Lemuria, the lost/forgotten tamil land and its culture that dates b…

4.18/5 · 400+ ratings

தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]

Author: Jeyamohan

இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை…

4.18/5 · 400+ ratings

தன்மீட்சி

Author: Jeyamohan

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.18/5 · 400+ ratings

Karuvachi Kaaviyam

Author: Vairamuthu

Karuvaachi Kaviyam

4.18/5 · 400+ ratings

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.18/5 · 400+ ratings

பனி மனிதன்

Author: Jeyamohan

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.18/5 · 400+ ratings

ஊமைச்செந்நாய்

Author: Jeyamohan

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகி…

4.18/5 · 400+ ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

4.18/5 · 400+ ratings

படையல் [Padaiyal]

Author: Jeyamohan

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாம…

4.18/5 · 400+ ratings

ஏழாம் உலகம்

Author: Jeyamohan

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.18/5 · 400+ ratings

ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.18/5 · 400+ ratings