Reviews for காடு
29 reviews total
user_6041
★ 5/5 Feb 02, 2026காடு - ஓர் இலக்கிய அனுபவம்! ஜெயமோகனின் இந்த நாவல் வெறும் புத்தகமல்ல, காட்டின் ஆன்மாவை நேரடியாக உணரவைக்கும் ஒரு தனித்துவமான படைப்பு.
user_6040
★ 5/5 Feb 02, 2026முதல் சில பக்கங்களைப் படிக்கும்போது சலிப்பாக இருக்கும் என நினைத்தேன்... ஆனால் நான் தவறாக நினைத்தேன். நீண்ட காலம் நினைவில் நிற்கும் புத்தகம் இது. நகரவாசிகளான நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத ஓர் அனுபவம். காடும், நீலியும், குட்டப்பனும் கிரிக்கு கிடைத்த வரம்.
user_6039
★ 4/5 Feb 02, 2026ஒரு கிளாசிக் நாவல். கிரி, குட்டப்பன், நீலி ஆகியோரின் கதைப்போக்கு அருமை.
கிரியும் நீலியும் முதல் முறை சந்திக்கும் காட்சி, கிரி முதல் முறை காட்டை ஆராயும் அனுபவம், கடைசியாக காட்டுக்குச் செல்லும் தருணம் - இவை மறக்க முடியாத காட்சிகள். காதலும் காமமும் வெவ்வேறு பாதையில் பயணிக்கின்றன என்பதை முடிவில் உணர்த்துகிறது.
user_6038
★ 4/5 Feb 02, 2026நீலியை ஒரு மனுஷியாக என்னால் பார்க்க முடியவில்லை. நீலியையும் காடாகவே பார்க்கிறேன். நீலியின் மீது கிரி கொண்ட காதல் காட்டின் மீது ஏற்பட்டதன் இன்னொரு வெளிப்பாடாகவே பார்க்கிறேன். நீலியையும் காட்டையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
இறுதியில் மனித உணர்ச்சிகளின் புரிந்துகொள்ள முடியாத தன்மையை புதிர்போல சொல்லி முடித்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
user_6037
★ 5/5 Feb 02, 2026காடு - ஆன்மாவைக் கிழிக்கும் ஒரு நாவல். உள்ளத்தைப் பிடித்து மறைந்துபோன மனிதத்தை கடத்திச் செல்லும் ஒரு சக்தி.
ஜெயமோகன் காட்டைப் பற்றி எழுதவில்லை, காடே நம் முன் வந்து நிற்கிறது. அதன் நிசப்தம், அதன் கொடுமை, அதன் சுத்தமான அன்பு என எதையும் அலங்கரித்து மிகைப்படுத்தாமல், நம் உள்ளத்தில் அச்சமூட்டும் அழகாய் பதிகிறது.
பாத்திரங்கள் பேசுவதில்லை, அவற்றின் காயங்கள் தான் கதையைச் சொல்கின்றன. இந்த நாவல் காட்டைப் பற்றி அல்ல, காடாகிவிட்ட மனித இதயத்தைப் பற்றி.
படித்துவிட்டால், சில புத்தகங்கள் மறந்து விடும். ஆனால் சில, ஒரு நிழலாய் ஒரு வாழ்நாளே தங்கும். நீலி, வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள்!
user_6036
★ 4/5 Feb 02, 2026இலக்கிய சுவை தளும்பத் தளும்ப உங்கள் முன் இருக்கும் நூறு ஆண்டு பழமையான ஒயின் பாட்டில் இந்த நாவல். ஒரே மடக்காக குடித்து மட்டையாவதும், ருசித்து ருசித்து குடித்து இலக்கிய போதை ஏற்றிக்கொள்வதும் உங்கள் ரசனையை பொறுத்து இருக்கிறது.
தன்னுடைய மூர்க்கத்தனமான காதல் நிச்சயம் தோல்வியில்தான் முடியும் என்று கிரிதரன் ஒருமுறை யோசிப்பான். எவ்வளவு உண்மையான வலி நிறைந்த வார்த்தைகள்.
நாவலில் சுவாரஸ்யம் இல்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை. குரிசு, சினேகம்மை, குட்டப்பன், ரெசாலம், அய்யர், மேரி, பாதிரி, இரட்டையர்கள் - ஒவ்வொருவருக்கும் தனக்கென ஒரு சித்தாந்தம். கீறகாதனின் தலையை பாடம் செய்து ஹாலில் மாட்டியிருப்பதை பார்க்கும்போது கோபம் வருகிறது.
இறந்து போன நீலியைத் தேடி அலையும் கிரிதரனை பார்த்து மனம் கனத்து விம்மி அழுது, கண்ணீரை துடைத்தபடி புத்தகத்தை மூடிவைக்கத் தோன்றும்.
user_6035
★ 5/5 Feb 02, 2026கிரிதரனுடன் சேர்ந்து சில காலம் காட்டில் வாழ்ந்த உணர்வை நமக்கு கடத்துகிறது காடு நாவல். ஊரில் வாழ்ந்த ஒரு இளைஞனுக்கு முதல் முறையாக காடு தரும் தனிமையும் அனுபவமும் காதலும் அவர்களின் வித்தியாசமான வாழ்க்கை முறையுமே நாவலின் பிரதான களம். அதன் பிறகான அவன் வாழ்க்கையும் இடையிடையே முன்னும் பின்னுமாக விரிகிறது.
கிரி எங்கே சென்றாலும் எதைப் பார்த்தாலும் நாமும் அவனுடன் அதே அனுபவத்தை பெறுகிறோம். அபாரமான எழுத்துநடை. மிக நுணுக்கமான, விரிவான அதே சமயம் சிறிதும் அலுப்புத்தட்டாத விவரிப்புகள். கதாநாயகனை விட குட்டப்பன், குரிசு, ரெசாலம், அய்யர் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
நாவலின் மற்றொரு சிறப்பு பல காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் முன்னும் பின்னுமாக மிக இயல்பாக சொல்லப்பட்டு முழுமை பெறுவது. நல்லதொரு அனுபவத்தை தரும் மிக அற்புதமான நாவல்.
user_6034
★ 5/5 Feb 02, 2026ஜெயமோகனின் காடு வெறும் வாசிப்பு அனுபவமாக மட்டுமின்றி, ஒரு ஆத்மார்த்தமான பயணமாகவும், மனதை உருக்கி உணர்வுகளைத் தட்டி எழுப்பும் மாற்றமாகவும் அமைந்துவிட்டது. இயற்கையின் ஆழமான தொடுதலையும், மனித வாழ்வின் நுட்பமான உணர்வுகளையும் உணர வைத்து, மனதைப் பிணைத்த ஒரு மாய அனுபவமாக மாறியது.
கிரியின் வாழ்க்கைப் பயணம் நேர்க்கோட்டில் பயணிக்காமல், கனவுகளின் மெல்லிய திரை வழியே, நினைவுகளின் துண்டுகளாகவும், சுயநினைவின் அலைவுகளாகவும் நம்மை அழைத்துச் செல்கிறது.
குட்டப்பன் என் மனதில் ஆழமாகப் பதிந்தவன். அவனது இயற்கையோடு இணைந்த பார்வை, வாழ்க்கையை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஏற்று அனுபவிக்கும் தன்மை என் இதயத்தைத் தொட்டன. அவன் ஒரு பாத்திரம் மட்டுமல்ல; இயற்கையின் ஒரு குரல், வாழ்க்கையின் தூய்மையான வெளிப்பாடு.
காடு வெறும் பின்னணியல்ல; அது ஒரு உயிர்ப்புள்ள, பேசும் பாத்திரம். நீலியின் குரலும், கிரியுடனான காதலும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
காடு வாசிக்கப்பட வேண்டிய நூல் மட்டுமின்றி அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு கலைப் படைப்பு. ஜெயமோகனின் மொழி, காட்டின் மணத்தையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் ஒருசேர நமக்கு உணர்த்துகிறது.
user_6033
★ 5/5 Feb 02, 2026காடு! இந்த ஒரு சொல்லில் ஒரு மாபெரும் இலக்கிய அனுபவமே அடங்கியிருக்கிறது. ஜெயமோகனின் சிறந்த படைப்புகளில் ஒன்று.
user_6032
★ 5/5 Feb 02, 2026அருமையான எழுத்துநடை. ஆரம்பத்தில் மொழி வழக்கம் புரிவதற்கு சிறிது நேரம் ஆகும், ஆனால் பழகிவிட்டால் அற்புதமான அனுபவம். கதையின் முடிவு இன்னும் சில விஷயங்களை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.