Reviews for துணையெழுத்து
30 reviews total
user_6001
★ 4/5 Feb 02, 2026எஸ்.ராவின் அனுபவக் கட்டுரைகள் என்றுமே மனதுக்கு நெருக்கமாகவும் ஒரு புது பாடமாகவும் இருக்கும்.
user_6000
★ 4/5 Feb 02, 2026சிறுகதைகளின் தொகுப்பு. எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து நடையில் எளிமையும் ஆழமும் ஒருங்கே கலந்திருக்கும்.
user_5999
★ 5/5 Feb 02, 2026எஸ்.ராமகிருஷ்ணனின் பயண அனுபவங்களைப் படிப்பது மிகவும் இனிமையான உணர்வு. வாழ்வில் ஆழமற்றவை போல் தோன்றும் விஷயங்களைக் கூட அவர் புரிந்துகொள்ளும் விதம் பிரமிப்பூட்டுகிறது.
user_5998
★ 5/5 Feb 02, 2026எளிமையான எழுத்து, ஒரு சில பக்கங்கள் மட்டுமே நீளும் பத்திகள் சுவாரசியத்தைத் தாங்கிப்பிடிக்கின்றன. போரடிக்கும் போதெல்லாம் உடனே எடுத்து ஒரு பத்தியைப் படித்தால் புதிதாக ஒன்றையும் கற்றுக்கொள்ளலாம், ஆக்கப்பூர்வமாக நேரத்தையும் செலவிடலாம்.
user_5997
★ 4/5 Feb 02, 2026ஒரு தேசாந்திரியுடன் ஊர்கள், மக்கள், இயற்கை, மனங்கள், வரலாறு என ஒரு குறுகிய பயணம்.
ஸ்திரீபார்ட் கட்டுரையின் முடிவில் ஒரு கருத்து வேறுபாடு: "காமாட்சிநாதனை காமாட்சியாய் வளர்த்த அவன் தாத்தாவிற்கும், அரக்கு நிற சேலையைக் கட்டி வந்தபோது அவனை வீட்டிற்குள் அழைத்து வந்து அழகு பார்த்த ஊர் பெண்களுக்கும் தாங்கள் செய்தது தவறென்று தெரியவே இல்லை."
user_5996
★ 5/5 Feb 02, 2026இதில் இருக்கும் கட்டுரைகள் எஸ்.ரா சந்தித்த விதவிதமான மனிதர்கள் பற்றிய நினைவுகள். ஒரு சிறிய சம்பவத்தை எடுத்துக்கொண்டு வாழ்வின் இனிமையை உணர்த்துவதில் எஸ்.ரா தனித்துவமான எழுத்தாளர்.
கால ஓட்டத்தில் எத்தனையோ மனிதர்கள் எல்லோர் வாழ்விலும் வந்து செல்வார்கள், பிறகு அவர்கள் வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்சுவார்கள். அவர்களை நினைவாக மெல்ல அசைபோட வைக்கும் புத்தகம் இது.
user_5995
★ 4/5 Feb 02, 2026எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு.
தீவிர எழுத்து சிற்றிதழ்களுக்கு மட்டும் என்ற நிலையைக் கொஞ்சம் மாற்றியதில் ஆனந்த விகடனுக்கும் பங்கிருக்கிறது. அந்த வகையில் தேசாந்திரி, துணையெழுத்து தொடர்களின் வழியாக எஸ்.ராவின் எழுத்தை பரந்த வாசகர் வட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. புனைவிலும் கட்டுரைகளிலும் ஒருசேர மிளிரும் சில எழுத்தாளர்களில் எஸ்.ராவும் ஒருவர்.
user_5994
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் எஸ்.ராமகிருஷ்ணனின் இதுவரையிலான அனைத்து படைப்புகளையும் வாங்க வைத்துவிட்டது. விரைவில் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்ற ஆவல்.
user_5993
★ 4/5 Feb 02, 2026உங்களை உள்நோக்கிச் சிந்திக்க வைக்கும், ஆழமாக யோசிக்க வைக்கும் நல்ல புத்தகம். உள்ளத்தின் ஆழத்தைத் தொடுகிறது.
user_5992
★ 4/5 Feb 02, 2026பல கதாபாத்திரங்களை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறார், மனித வாழ்வின் நுட்பங்களை அழகாக வெளிப்படுத்துகிறார்.