Reviews for குற்றப் பரம்பரை

30 reviews total

user_5722

★ 5/5 Feb 02, 2026

திருட்டைக் குலத் தொழிலாகக் கொண்ட கொம்பூதி கிராமம், வேயன்னா என்ற தலைவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

தன் கிராமத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்த பெரும்பச்சேரி கிராமத்தைத் தீண்டாமையின் கொடுமையிலிருந்து மீட்க கொம்பூதி கிராமம் உதவ செய்யும் அதிரடியால் ஆதிக்க பெருநாழி கிராமம் அவதிப்படுகிறது.

கொம்பூதி கிராமத்தைக் கட்டுப்படுத்த பெருநாழி கிராமத்தில் கச்சேரி அமைத்து ரேகைச் சட்டத்தை அமல்படுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் முயற்சி செய்கிறது. இரண்டு அதிகாரிகள் எடுத்த முயற்சி கொடூரமான தோல்வியாக மாற, மூன்றாவதாக வேயன்னாவின் தொலைந்த மகன் சேது கச்சேரி பொறுப்பை ஏற்று கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

சேது வேயன்னாவிடம் களவு செய்யக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் களவைத் தடுக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெருநாழி கிராமத்தைச் சேர்ந்த பச்சைமுத்து சதி செய்து கொம்பூதி கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி, அதன் விளைவால் சேதுவின் தலைமையில் கிராம மக்களைக் கொன்று குவிக்கிறது பிரிட்டிஷ் அரசாங்கம். வேயன்னா செத்து மடிவதுடன் கதை முடிகிறது.

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாகப் போகும் கதையில் சேதுவின் வருகைக்குப் பிறகு சிறிது தொய்வு ஏற்படுகிறது. மற்றபடி விறுவிறுப்பான கதை.

கதையில் வரும் கிழட்டு போலீஸ் கொம்பூதிக்கு பயந்திருப்பதும், மறுபுறம் சதிக்கு பயந்து உதவி செய்வதும் சுவாரசியமான கதாபாத்திரம்.

வேயன்னா மற்றும் கூழாணிக்கெழவி கதாபாத்திரம் வரும் இடம் எல்லாம் மெய்சிலிர்த்துப் போவது உறுதி.

நான் படித்த சிறந்த நாவல் பட்டியலில் இடம்பெறும் புத்தகம் இந்தக் குற்றப் பரம்பரை.

user_5721

★ 4/5 Feb 02, 2026

குலத்திற்குக் கீழடிபணிவதா என்ற கேள்வியை எழுப்பும் கதை. கதையில் ஒளிந்திருக்கும் உண்மைகள் சரியாக வெளிவருகின்றன.

user_5720

★ 5/5 Feb 02, 2026

ஒரு திரைப்படம் பார்த்து முடித்த உணர்வு. வெவ்வேறு கதைக்களங்கள் மற்றும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் இறுதியில் ஒரு புள்ளியில் வந்து ஒன்றிணையும். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன, இருந்தும் இன்னும் கொம்பூதி மக்களின் நினைவுகளிலிருந்து வெளிவர முடியவில்லை.

கொம்பூதி மக்களிடம் சூழ்ச்சி இல்லை, சூது இல்லை. இவர்கள் சக மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. தீண்டாமையை அறவே போற்றுவதில்லை. அப்படிப்பட்ட மக்களுக்கும், இவர்களிடம் அன்னோன்னியமாய் பழகி வந்த வேம்பச்சேரி மக்களுக்கும் இடையே சாதிக் கலவரத்தை உண்டு பண்ணி அதில் குளிர் காய்ந்தது யாரு? அதுதான் கதை.

கதையில் வரும் வேயன்னா கொம்பூதியை மட்டும் அல்ல கதையையும் இறுதி வரை தாங்கிப் பிடிக்கிறார். தீண்டாமையைப் பற்றி வேயன்னா கூறும் அனைத்து வார்த்தைகளும் அழுத்தமானவை மற்றும் ஆழமானவை.

user_5719

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் குறிப்பிட்ட இன மக்களைப் பற்றியும் அவர்களை அடக்க ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைப் பின்னணியாகவும், தலைப்பாகவும் கொண்டு அம்மக்களுக்குள்ளாகவே ஒரு ஆழமான கதையை நகர்த்திச் செல்கிறது. கதையின் முன்னோடி வேயன்னா. வேயன்னா மற்றும் அவரின் இரு மைந்தர்கள், மகள் மற்றும் அவரின் கூட்டம் இதைக் கொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் படிப்பதற்கான ஆவலைத் தூண்டியவர்கள் இயக்குனர் பாலா மற்றும் பாரதிராஜா. இந்தக் கதையைப் படமாக்குவதில் இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையே, இந்தக் கதையில் என்ன அப்படி இருக்குனு படிக்கத் தூண்டியது.

குற்றப்பரம்பரை சட்டம் என்பது தென் தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களில் அமல்படுத்தப்பட்ட சட்டமாகும். இந்தக் கதையின் களம் இராமநாதபுரம். வேயன்னாவும் அவர் கூட்டமும் ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பித்து, பெரு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு பின்பு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரால் காப்பாற்றப்பட்டு பெருநாழியில் குடியமர்த்துவதில் ஆரம்பிக்கும் கதை, ஒவ்வொரு பக்கமும் விறுவிறுவென நகரும்.

களவையே தொழிலாகக் கொண்ட கூட்டத்தின் தலைவனாக வேயன்னா. களவை அடியோடு அழிக்க நினைக்கும் ஆங்கிலேயர்கள், அவர்களுக்கு உதவும் சில ஊர்களும், மனிதர்களும் மற்றும் இவர்களுக்குள்ளான கதையைக் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர். இடையில் வஜ்ராயினி மற்றும் நாகமுனி என இரண்டு பாத்திரத்தைக் கொண்டு நகரும் கதையின் ஒரு பகுதி, கதையின் பின்னடைவு என்றுதான் சொல்லவேண்டும். அதைத் தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களும் கண்டிப்பாக நினைவில் நிற்பவையே.

புத்தகம் படிக்க ஆரம்பித்த நாளிலிருந்து, தொடர்ச்சியாக தினமும் இதற்கென நேரம் ஒதுக்கி படிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 7 நாட்களில் படித்துவிட்டேன். படித்து முடிக்கும் வரை, படிக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கதைக் களத்தின் ஏதோ ஓர் மூலையில் நின்றுகொண்டு கதை நிகழ்வைப் பார்ப்பது போல் உணர்வீர்கள்.

user_5718

★ 2/5 Feb 02, 2026

புகழ்பெற்ற தமிழ் இயக்குனர்கள் பாலாவும் பாரதிராஜாவும் இந்தக் கதையை படமாக்கப் போட்டி போட்டதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காவல் கோட்டம் படித்த பிறகு இந்த நாவலைப் படிக்க, பெரும் ஏமாற்றமே.

user_5717

★ 4/5 Feb 02, 2026

இந்தியாவை ஆங்கிலேயத் துரைகள் ஆண்டு கொண்டிருந்த காலம் அது. அறமும் வீரமும் முகவரியாகக் கொண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் சாதி, குல வேறுபாடு பார்க்கும், சூழ்ச்சி எண்ணம் கொண்ட செழிப்பான பக்கத்து ஊர் மக்கள்.

காலத்தின் உந்துதலால் கொம்பூதி ஊரில் குடியான மக்களின் வீரமும், வாழ்வு முறையும், அறமும் வியப்பூட்டும். மற்றொரு பக்கம் பெருநாழிக்காரர்களின் வஞ்சகமும், சூழ்ச்சியும், சுயலாபத்திற்கான செயல்களும் மனிதத்தின் மீதான நம்பிக்கையை உலுக்கிப் பார்க்கும்.

அன்றைய காலம் தொட்டு, இயலாதவனின் உரிமை பறிக்கப்படுதலும், பணம் படைத்தோர் செயற்கையான பரிவை உண்டாக்கி தன்னைச் சார்ந்து வாழும் சூழ்நிலையை உருவாக்குதலும், குடிநீரில் கழிவுகளைக் கலத்தலும், பணபலம் கொண்டோருக்காக இயங்கும் அதிகாரக் கூட்டமும் என இத்தனை அவலமும் இன்னமும் நடந்து கொண்டிருப்பது வேதனை.

கதையைச் சுவாரசியமாக நகர்த்தி, வாசிப்பவர்களை இறுக கைக்கோர்த்து இட்டுச் செல்லும் வேல ராமமூர்த்தி கடைசி பத்து பக்கத்தில் வேகத்தைக் கூட்டிப் போட்ட முடிச்சுகளைக் கலையும் அந்த விறுவிறுப்பு அவருக்கான தனிச்சிறப்பு எனலாம்.

user_5716

★ 5/5 Feb 02, 2026

என்ன ஒரு எழுத்து! வேல ராமமூர்த்தியின் நடிப்பு அபாரம் என்று நினைத்திருந்தேன், ஆனால் அவரது எழுத்து அதைவிட மிகவும் சிறப்பானது. பல்வேறு கதைக்கோடுகளில் நகரும் கதை இறுதியில் ஒன்றாகக் கலக்கும் விதம் அற்புதம்.

user_5715

★ 5/5 Feb 02, 2026

ரெண்டு சாதிகளையும் மோதவிட நடக்கிற சதிக்கு, யாரும் எப்போதும் பலியாகக் கூடாது.

வேயன்னா என்னும் கதாபாத்திரம் இந்த நாவலின் பெயரைக் கேட்கும் போதெல்லாம் வந்து போகும், ஆழ் மனதில் ஏதோ ஒரு தேடலை விதைத்து விட்டுச் செல்கிறது அந்தக் கதாபாத்திரம். கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்.

user_5714

★ 2/5 Feb 02, 2026

புகழ்பெற்ற தமிழ் இயக்குனர்கள் பாலாவும் பாரதிராஜாவும் இந்தக் கதையை படமாக்க போட்டி போட்டதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. வில்லயுதம் கதாபாத்திரம் தேவையற்றது என்று தோன்றியது, அவரது வஜ்ராயினி கதைக்கோடு பொருத்தமில்லாமல் இருந்தது. மோசமான புத்தகம் அல்ல, ஆனால் சிறந்த படைப்பு என்றும் சொல்ல முடியாது.

user_5713

★ 5/5 Feb 02, 2026

ரெண்டு சாதிகளையும் மோதவிட நடக்குற சதிக்கு, யாரும் எப்போதும் பலியாகக் கூடாது.

என்ன ஒரு அற்புதமான கதைசொல்லல்! கதையின் ஆழமும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் மிகவும் சிறப்பானவை. சமகால தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்.